உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வர் பழனிச்சாமி பிறந்தநாள் விழா

உசிலம்பட்டி அருகே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு – 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சார்பில் 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது., இதன் ஒரு பகுதியாக இன்று உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் […]

பள்ளி அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக் கேடு ஏற்படும் அபாயம்

சோழவந்தான் பேட்டை 1வது வார்டில் சுகாதாரக் கேடுபள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் துரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமம் 1வது வார்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி அருகில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுகாதார கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இந்த பகுதியில் சோழவந்தான் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியும் அருகில் இருப்பதால் கழிவுநீரில் […]

சோழவந்தான் அருகே பூர்வீக இடத்தில் இருந்து வெளியேறச் சொல்லி மிரட்டுவதாக காவல்துறை மீது முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பரபரப்பு புகார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ஜெயா தேவி சின்னமருது இவர் தனது மாமனாருக்கு பாத்தியப்பட்ட இடத்தில் போலியாக பட்டா மாறுதல் செய்து காவல்துறை உதவியுடன் தனது உறவினர்கள் பெயர் மாற்றம் செய்திருப்பதாகவும் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தாங்கள் குடியிருந்து வரும் இடத்தை ஒரு வாரத்திற்குள் காலி செய்யச் சொல்லி காவல்துறையினர் மிரட்டுவதாகவும் மாவட்ட எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் […]

சோழவந்தான் அருகேஇடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் குழந்தைகள் கல்வி கற்கும் அவலம்

மதுரை சோழவந்தான் அருகே ஆபத்தான நிலையில் இடிந்து விழும் நிலையில் உள்ள நாடக மேடையில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி கற்கும் அவலம் ஆறு மாதங்களுக்கும் மேலாக கண்டுகொள்ளாத கல்வித் துறை அதிகாரிகள்உயிர்ப்பலி ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தாமோதரன் பட்டி கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கான ஆரம்ப பள்ளி இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த நிலையில் பள்ளியின் கட்டிடங்கள் பழைய கட்டிடமாக […]

கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..

தென்காசி மாவட்டத்தில் பூக்கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கின் குற்றவாளி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் கடந்த 16.06.2025 அன்று பூ கடை உரிமையாளரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான ஊத்துமலை முருகையா என்பவரின் மகன் கார்த்திக் பிரபாகரன் (35) கைது செய்யப்பட்டார்.   இந்நிலையில், கொலை குற்றவாளி பிரபாகரன் மீது பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட […]

மாதாந்திர மின் பராமரிப்பு பணி; ஜூலை.19 மின் தடை..

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள உப மின் நிலையங்களில் வரும் 19.07.2025 சனிக் கிழமை கிழமை அன்று மாதந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி, பின்வரும் பகுதிகளில் 19.07.2025 அன்று மின்சார விநியோகம் நிறுத்தப்படும்.   திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற் பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கங்கை கொண்டான், மற்றும் வன்னிக் கோனந்தல் உப […]

தென்பொதிகை வியாபாரிகள் நலசங்கத்தின் ஆலோசனை கூட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில் தென் பொதிகை வியாபாரிகள் நலச் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. சங்க செயலாளர் நவாஸ்கான் வரவேற்பு உரையுடன் துவங்கிய இந்த கூட்டத்தில், வியாபாரிகள் நல வாரியத்தில் உறுப்பினராக அனைத்து வியாபாரிகளும் பதிவு செய்து கொள்ள ஏதுவாக, சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் இலவச பதிவு முகாமில் கலந்து கொண்டு, அனைத்து வியாபாரிகளும் உறுப்பினர்களாக பதிவு செய்து பயன் பெற வேண்டும் […]

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளம் இளங்காளியம்மன் கோவில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு இளங்காளியம்மன் கோவில் ஆணி பெருந் திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் சாற்றுதளுடன் தொடங்கியது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தரப்பினர் சார்பாக மண்டகப்படிகள் மற்றும் அன்னதானம் நிலைமாலை செலுத்துதல் சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முளைப்பாரி திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் தொடர்ந்து […]

100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி பெற்று கொடுத்தவர் முன்னாள் முதல்வர்- ஆர்பி உதயகுமார் பேச்சு

100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதி பெற்றுக் கொடுத்தவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆர் பி உதயகுமார் பேச்சு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, , கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ நீதிபதி […]

46 கோடி மதிப்பீட்டில் துவரிமான் – கீழமாத்தூர் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் புதிய மேம்பால கட்டுமான பணிகளை சு. வெங்கடேசன் எம்பி துவக்கி வைத்தார்.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முயற்சியில் ரூ.46 கோடியில் மதுரை துவரிமான் – கீழ மாத்தூர் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான துவரிமான் – கீழ மாத்தூர்நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த புதிய மேம்பால கட்டுமான பணிகளை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்தார். சு. வெங்கடேசன் எம். பி. பேசியதாவது, மதுரை மாவட்டம் துவரிமான் – கீழமாத்தூர் மற்றும் இந்த பகுதி மக்களின் […]

சோழவந்தான் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் இல்ல விழா ஆர் பி உதயகுமார் நேரில் வாழ்த்து

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 12 வது வார்டில் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ரேகா ராமச்சந்திரன் இவரது இல்ல காதணி விழா சோழவந்தான் தனியார் மஹாலில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் ராமச்சந்திரன் ரேகா தம்பதிகளின் குழந்தை செல்வங்களை வாழ்த்தினார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் […]

சோழவந்தான் அருகே ஐயப்ப நாயக்கன்பட்டியில் காமராஜர் திருஉருவ சிலைக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஐயப்ப நாயக்கன்பட்டியில் அமைந்துள்ள கர்மவீரர் காமராஜர் முழு திரு உருவச்சிலைக்கு பாலாபிஷேகம் செய்து நோட் புத்தகங்கள் வழங்கி அவரது பிறந்தநாளை நாடார் உறவின் முறை சங்கத்தினர், நாடார் இளைஞர் பேரவை நிர்வாகிகள் கொண்டாடினர். நாட்டாமைக்காரர்கள் பால்பாண்டி ,ராம் பிரபு ,காமாட்சி பிரபு தலைவர் மனோகரன் பாலகிருஷ்ணன், செயலாளர் வேல்முருகன்,, பொருளாளர் சின்னு காளை, துணை தலைவர் கந்தசாமி துணை செயலாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்து கொண்டனர் முன்னதாக குருவித்துறை ஐயப்ப […]

சோழவந்தான் பகுதியில்17ஆம் தேதி வியாழக்கிழமை மின்தடை

சோழவந்தான் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடப்பதால் 17ந்தேதி வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது இதனால் சோழவந்தான், தச்சம்பத்து வாட்டர் பம்பிங் ஸ்டேஷன், இரும்பாடி,மீனாட்சி நகர் ,ஜெயராம் டெக்ஸ், விஜயலட்சுமி பேக்டரி, மவுண்ட் லிட்ரா ஸ்கூல், மேலக்கால், தாராப்பட்டி கச்சிராயிருப்பு, கீழ மட்டையான்,மேல மட்டையான், நாராயணபுரம், தேனூர், திருவேடகம், தச்சம்பத்து,மேலக்கால் பாலம், தென்கரை, ஊத்துக்குளி முள்ளி பள்ளம், மன்னாடிமங்கலம், அய்யப்ப நாயக்கன்பட்டி, தாமோதரன் […]

காமராஜர் 123 வது பிறந்தநாள் விழா

மதுரை மாவட்டம்உசிலம்பட்டி வண்ணாரப் பேட்டை நாடார் புது தெருவில் காமராஜர் பிறந்தநாள் விழா உசிலம்பட்டி நட்டாத்தி நாடார்கள் உறவின்முறைக்கு பாத்தியமான நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளி பரிபாலன சபை சங்க தலைவர் பி. பிரசாத் கண்ணன் ஏற்பாட்டில் அன்னதானம் – இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது . இந்நிகழ்ச்சிக்கு பள்ளி பரிபாலான சபை செயலாளர் எஸ். எம். எஸ். ஆர் நடராஜன் தலைமையில் அன்னதான நிகழ்ச்சியை அ.இ. அதிமுக நகரத் தலைவர் பூமா ராஜா […]

முதல்வர் ஸ்டாலினுக்கு bye bye.. சொல்லும் நேரம் வந்துவிட்டது -ஆர்.பி உதயகுமார் பேச்சு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, புன்னூர் அய்யன், பாப்பம்மாள் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., நான்கு ஆண்டுகளாக மக்களின் குறை தீர்க்காமல் தூங்கி கொண்டிருந்த திமுக அரசு தற்போது […]

சோழவந்தானில் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் எம்.வி.எம் கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவப்படத்திற்கு பள்ளி தாளாளர் எம்.வி. எம் மருது பாண்டியன், பள்ளி நிர்வாகி வள்ளிமயில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முதல்வர் தீபா ராகினி வரவேற்றார். பேச்சு கவிதை கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா பரிசுகள் […]

காமராஜர் பிறந்த நாள்,கல்வி வளர்ச்சி நாள் விழா!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகரவை தொடக்கப் பள்ளியில் கர்மவீரர் காமராசர் பிறந்த நாள் விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது .இவ்விழாவிற்கு நகர்மன்றத் தலைவர் திருமதி மெஹரிபா பர்வின் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் கல்வி வளர்ச்சி நாள், காமராசர் பற்றி பேசினார்கள்.மாணவ மாணவிகள் காமராசர்பற்றி பாடலைப் பாடினார்கள்.இந்நிகழ்ச்சியில் காரமடை வட்டாரகல்வி அலுவலர் தமிழ்ச் செல்வி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் பள்ளியின் கல்வியாளர் முன்னாள் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள்பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் […]

சோழவந்தானில் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் காமராஜர் பிறந்த நாள் விழா அவரது முழு திருவுருவச்சிலைக்குமாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை வகித்தார் .பேரூராட்சி சேர்மன் எஸ் எஸ் கே ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதில் நிர்வாகிகள் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், துணைத் தலைவர் கண்ணன் பிற்படுத்தப்பட்டோர் நல உறுப்பினர் பேட்டை பெரியசாமி, , கொத்தாளம் செந்தில், […]

சோழவந்தானில்காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள காமராஜரின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சிகள் மற்றும் தனியார் அமைப்புகள் பள்ளி நிர்வாகங்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் சோழவந்தான் நாடார் உறவின்முறை சார்பாக அவரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் ஞானசேகரன் செயலாளர் மாரியப்பன் பொருளாளர் ஜெயபாண்டி துணைத் தலைவர் சண்முக பாண்டியராஜா துணை செயலாளர் பாலாஜி மற்றும் செயற்குழு […]

சோழவந்தானில் காமராஜரின் திருவுருவட்சிலைக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை

கர்மவீரர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் மாலை அணிவித்து மரியாதை செய்தார் இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் வாடிப்பட்டி யூனியன் முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் துரை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!