“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மொபைல் செயலி துவக்கம்..

தமிழ்நாடு அரசால் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய அலைபேசி செயலி (Mobile App) தொடங்கப்பட்டு உள்ளது. இச்செயலியை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் துவங்கி வைத்து அதன் இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தினார். இது பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு […]

மூளைச்சாவில் உயிரிழந்து உடல் உறுப்புக்களை தானம் வழங்கிய வாலிபரின் உடலுக்கு அரசு மரியாதை

சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட நரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசிபாண்டி மகன் தங்கப்பாண்டி வயது 27 இவர் 2 நாட்களுக்கு முன்பாக நண்பர்களுடன் காரில் திருச்சி பகுதியிலுள்ள கோவிலுக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பும் வழியில் கார் கதவு திறந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம்பட்டு தங்கப்பாண்டி சம்பவ இடத்திலே இறந்தார் இவர் உடல் உறுப்பு தானம் செய்ததால் மதியம் கிராமத்தில் நல்லடக்கம் செய்யும் பொழுது உசிலம்பட்டி கோட்டாட்சியர் சண்முக வடிவேல் தாசில்தார் பாலகிருஷ்ணன் […]

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுத்தில் உள்ள மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகத்தில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு இராமநாதபுரம் மாவட்ட மீன்வளத் துறை உதவி இயக்குனர்கள், கோபிநாத், ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகுத்தனர். அலுவலகத்தின் முன்பகுதியில் தமிழர் திருநாளாம் தைபெங்கல் திருநாளை முன்னிட்டு செங்கரும்புகள் கட்டி வைத்து சமத்துவ பொங்கலிட்டு பால் பொங்கியது போல் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும் என கூறி ஒருவருக்கு ஒருவர் தங்களின் […]

பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி கோவிலின் கட்டுமான பணிகளை உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் ஆய்வு – தஞ்சை பெரிய கோவிலுக்கு இணையான கட்டமைப்பு என பெருமிதம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எஸ்.போத்தம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த சீலக்காரியம்மன், சங்கிலி கருப்பசாமி திருக்கோவில்., பிரசித்தி பெற்ற இக்கோவிலின் புரணமைப்பு மற்றும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது., இந்த கட்டுமான பணிகளை இன்று உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் நேரில் ஆய்வு செய்தார்., கோவிலின் உள்கட்டமைப்பு, சங்கிலி கருப்பசாமி சிலை, அர்த்த மண்டபம் உள்ளிட்டவற்றின் வேலைப்பாடுகளை கண்டு வியந்த எம்எல்ஏ அய்யப்பன், இந்த கட்டமைப்புகளை காணும் போது தஞ்சை பெரிய கோவிலில் உள்ள சிற்ப […]

செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா

செங்கம்  அரசு அலுவலர்கள் சமத்துவப் பொங்கல் வைத்து, ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் கூறி  உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். திருவண்ணாமலை அடுத்த செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அலுவலக வளாகத்தில் ரங்கோலி கோலமிட்டு, கரும்புகள், வாழைக்கன்றுகள் மற்றும் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் பாரம்பரிய முறைப்படி புடவை அணிந்து வந்து பெண் அலுவலர்கள் குலவையிட்டபடி, பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி ஏலக்காய் உள்ளிட்டவற்றை கொண்டு பொங்கல் வைத்தனர். இதைத்தொடர்ந்து குத்து விளக்கேற்றி […]

அண்டம் பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் வட்டம் அண்டம்பள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக பள்ளி வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது தலைமை ஆசிரியர் முனைவர் மு. பிரசன்னா தலைமை தாங்கினார் உதவி தலைமை ஆசிரியர் பார்த்தசாரதி அனைவரும் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக பள்ளி மேலாண்மை குழு தலைவர் வெங்கடேசன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் லோகநாதன் கலந்து கொண்டனர். விழாவில் நாட்டு நலப்பணி இளம் சிறார் செஞ்சிலுவை சங்கம் பள்ளி […]

ரயில்வே துறையை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயில்வே துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவண சமுத்திரம் மஸ்ஜிர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால், செயலாளர் காசியார், பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் […]

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக சமூகவலைதளங்களில் விழிப்புணர்வு..

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், போலி லிங்குகள் மூலம் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை கொள்ளையடிப்பது அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘போலியாக வரும் Link-குகளை கிளிக் செய்வதற்கு முன் பல முறை சிந்தித்துப் பாருங்கள்’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது.

புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியை மண்டல தலைவர் முகேஷ் சர்மா கொடியை அசைத்து துவக்கி வைத்தார். வீடியோ..

மதுரை தெப்பக்குளம் பகுதியில் மாநகராட்சி தெற்கு மண்டலம் 4 சார்பாக 18 வார்டுகளுக்கு ஒரு வாகனம் வீதம்18 தூய்மை பணி மேற்கொள்ளும் வாகனத்தை கொடியாசித்து தெற்கு மண்டல தலைவர் முகேஷ் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார். புகையில்லா போகி மற்றும் பசுமை பொங்கல் கொண்டாடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில் 42 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வி கார்மேகம், சுகாதார அலுவலர் கோபால், சுகாதார ஆய்வாளர்கள் அலாவுதீன், மாரிமுத்து, ராமநாதன், சரவணகுமார் மற்றும் அவர்லேண்ட் மேலாளர் […]

கடையநல்லூர் காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு..

கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் […]

திருச்சி மணப்பாறையில் சாரண சாரணியர் வைர விழா நடக்கும் இடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாரண சாரணியர் இயக்க வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெரும் திரளனி நடைபெறுவதை முன்னிட்டு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் மணப்பாறை சிப்காட் வளாகத்தில் விழாவினை சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அரசு அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

ஜனநாயக வழி நடைபயண நிகழ்வு.. அமைதியான முறையில் தீர்வு எட்டபட்டதால் கைவிடப்பட்டது..

கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்த சாலையை சீரமைப்பு செய்ய பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள் தொடர்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த பணி தாமதம் செய்யப்பட்ட வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறையிரை வலியுறுத்தி நாளை 11/01/25 சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து […]

மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல்..

திருவண்ணாமலை அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா ஜெயந்தி தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் உழவுக்கு உயிரூட்டு, உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற கோஷத்துடனும், தமிழ்நாடு தமிழர்கள் பெருகுக வளம் என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி மாணவ-மாணவிகள் ஊரின் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக வந்தனர். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் உடன் இருந்தனர்

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் பாரம்பரிய பொங்கல் விழா…

தஞ்சாவூர். ஜன.11.தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. செம “வைபாக” மாணவிகள் தொடர்ந்து அட்டகாசமாக நடனம் ஆடி கொண்டாடினர். தமிழர்களின் மிக முக்கியமான திருநாள் பொங்கல் பண்டிகையாகும். வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூரில் உள்ள குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் மாணவிகள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக சமத்துவ பொங்கல் […]

மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல்..

மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) துறை சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு மதுரை பொதுப்பணித்துறை வளாகத்தில் கட்டிடம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) மதுரை கோட்டம் தலைமை பொறியாளர் செல்வராஜ் அவர்கள் தலைமையிலும், கண்காணிப்பு பொறியாளர் அய்யாச்சாமி, துணை கண்காணிப்பு பொறியாளர் மதி மணி ஆகியோர் முன்னிலையிலும், சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், அலுவலக உதவியாளர்கள் என பலர் கலந்து […]

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா, நகர் மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற துணைத் தலைவர் ரமேஷ்,  திமுக நகரச் செயலாளர் பெரி பாலமுருகன், நகராட்சி ஆணையாளர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.

ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் ஜல் ஜல் மணிமாலை தயாரிப்பு தீவிரம்..

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு சீசன் துவங்க உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு காளைகளின் கழுத்தை அலங்கரிக்கும் மணிமாலை வாங்க ஜல்லிக்கட்டின் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருவதால் சலங்கை தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைக்களுக்கான வண்ணமிகு அலங்காரத்தோடும் சலங்கை சத்தத்துடன் மணி மாலை கலைநயத்துடன் தயாரிக்கப்பட்டு வருகிறது. கண்கவரும் வண்ண வண்ண உள்ளன் நூல்களைக் கொண்டும் சப்தம் மிகுந்த சலங்கைகள் கோர்க்கப்பட்ட தயாரிக்கப்படும் இந்த மணி மாலைகள் தைப்பொங்கலில் ஜல்லிக்கட்டு காளைகளின் […]

போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்.!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் ஸ்மைல் பவுண்டேஷன் இணைந்து போதை ஒழிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயச்சந்திரன் அனைவரையும் வரவேற்றார் போதை பழக்கத்தில் தாக்கங்கள் குறித்து சத்திரப்பட்டி சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுதன் விளக்க உரை ஆற்றினார் மாவட்ட நீதிபதி சேர்மன் திலகம் குழந்தைகள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் போதை […]

போதை இல்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் நட்சத்திர நண்பர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி..

மதுரை நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் குருசாமி, மதுரை மாநகர் காவல்துறை மதுவிலக்கு அமலாக்கத்துறை பிரிவு ஆய்வாளர் சேது மணி மாதவன், ரெட் கிராஸ் ஆகியோர் இணைந்து, அவர்கள் தலைமையிலும், மதுரை மாநகர் காவல்துறையே வடக்கு இணை ஆணையாளர் அனிதா, கலால் உதவி ஆணையாளர் ராஜகுரு, கலால் தாசில்தார் ஆனந்தி ஆகியோர் முன்னிலையிலும், போதையில்லா தமிழகம், விபத்தில்லா மதுரை என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி, மதுரை தமிழ் அன்னை சிலை […]

கீழக்கரையில் தொழில்நுட்ப திறன் மேம்பாடு பயிற்சி முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். . விழாவில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!