தமிழகம் முழுவதும் அதிமுக மறைந்தமுன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் அதிமுகவினர் அவர்திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக மதுரை சிந்தாமணி பகுதியில்அதிமுக கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் எம்ஜிஆர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். மதுரை சிந்தாமணி 89 ஆவது வார்டுவட்டச் செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஏற்பாட்டில் 108 வது மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் திருவுருவப்படத்தை […]
Category: மாவட்ட செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா..
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகில் முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் -ன் 108 வது பிறந்தநாள் விழா நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர், இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரமேஷ், உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.பழனிவேல் தியாகராஜன் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தங்க தமிழ்ச்செல்வன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி திமுக கட்சி நிர்வாகிகள் […]
தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..
தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், […]
தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார். மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் […]
சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு, மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
சிவகங்கை மாவட்டம்ஜல்லிக்கட்டு / மஞ்சுவிரட்டு நிகழ்விற்கு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் உரிமையாளர்கள் விவரங்கள் மற்றும் மாடுபிடி வீரர்கள் தங்களது விவரங்களை sivaganga.nic.in என்ற இணையதளத்தில், குறிப்பிட்ட தேதிகளில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தகவல்.சிவகங்கை மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு சனவரி முதல் மே ஆம் மாதம் வரை ஜல்லிக்கட்டு/ மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் கட்டமாக 16.01.2025 அன்று சிராவயல் ஜல்லிக்கட்டு /மஞ்சுவிரட்டு நிகழ்வும் 18.01.2025 அன்று […]
மதுரை ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் பொங்கல் போனஸ் தராததால் போராட்டம்.இலவசமாக செல்லும் வாகனங்கள்
மதுரை டு ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பசேத்தியில் அருகே அமைந்துள்ளது திருப்பாசேத்தி சுங்கச்சாவடி இங்கு பணி புரியும் ஊழியர்களுக்கு தீபாவளி பாண்டிகையின் போது போனஸ் கொடுக்கப்பட்டுள்ளது அப்பொழுதுபாதி போனஸ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மீதியை பொங்கல் பண்டிகையின் போது மீதி போனஸ் வாங்கி கொள்ளுங்கள் என்று கூறவே அவர்களும் சரி என்று கூறி இருந்துள்ளார்கள் ஆனால் தற்போது பொங்கல் பண்டிகைக்கு போனஸ் வழங்காததால் ஊழியர்கள் யாரும் சுங்கச்சாவடியில் பணி செய்யாமல் நான்கு மணி முதல் தற்போது வரை […]
புதுமடம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.!
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் அலங்கரித்து வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் சரண்யா தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார். அதனைத் […]
இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!
இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]
பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் வைகோ அறிக்கை.!
.திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிரிவினையாக கட்சி வேறுபாடு […]
கல்வியின் தரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி.!
திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி […]
பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர் .!
தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு […]
தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்வரிசையுடன் பொங்கல் பரிசு.!
தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் . தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]
தஞ்சாவூரில் நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் விழா.!
விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர். […]
மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணி அடிக்கல் நாட்டு விழா.!
மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் நகராட்சி […]
பாப்பாகுடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் பாவை பவுண்டேசன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் கலாச்சார போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் சேவை மையம் ஒருங்கிணைந்த நிர்வாகி மோகனப்பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாவை பவுண்டேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபுதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.
இதயா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் இதயா மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணமேரி தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்துமேரி , அருட்சகோதரி மேரிசந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வழக்கறிஞர் சென்னம்மாள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய குறித்தும் சட்டங்கள் பற்றியும் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்
தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் .!
மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையிலும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கரும்மான முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஐஸ்டின்பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஸ்டார் குரு அவர்களால் நலத்திட்ட […]
தஞ்சாவூரில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .!
தஞ்சாவூரில், சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் பேரணி .புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் மாபெரும் பேரணி தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக தஞ்சை பனகல் பில்டிங் சென்றடைந்தது. அங்கு நடைபெற்ற கூட்டத்தில், திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 309 ன் படி புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய […]
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்டம்.!
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,செங்கிப்பட்டி கிராமத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் ட்ரஸ்டின் சார்பாக சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மூலம் நடத்தப்படும் இலவச கற்கை மையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் விழாவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் பொங்கல் மற்றும் கரும்பு வழங்கப்பட்டது. பொங்கல் கொண்டாட்டத்தை சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அந்தோணி ராஜ் ஏற்பாடு செய்திருந்தார்.
You must be logged in to post a comment.