தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்..

தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 11.03.2025 அன்று பரவலான கனமழை எச்சரிக்கையாக ஆரஞ்ச் எச்சரிக்கை (ORANGE ALERT) இந்திய வானிலை மையத்தினால் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே மேற்குறிப்பிட்ட நாளில் நீர்நிலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளின் அருகில் வசிக்கும் பொது மக்கள், கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கேட்டுக் கொண்டுள்ளார்.   கனமழை காலங்களில், பொது மக்கள் நீர்நிலைகள் மற்றும் ஆற்றில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும், இடி […]

சோழவந்தானில் பொது மருத்துவ முகாம்

சோழவந்தான் காமராஜர் நடுநிலைப் பள்ளியில் தமிழக முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம்,சாஜர் அறக்கட்டளை, மதுரை ராக்ஸ் மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடத்தினர். முகாமிற்கு சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் தலைமையேற்று முகாமினை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லதாகண்ணன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வக்கீல் சத்திய பிரகாஷ், கவுன்சிலர் கொத்தாலம் என்ற செந்தில்வேல், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர், முகாமில் மருத்துவ குழுவினர் இருதய வீக்கம்,இருதய […]

மன்னாடிமங்கலத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு. பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகும் அவலம்

சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலத்தில் நடுரோட்டில் ஆறாக ஓடும் குடிநீர் சாலையோரத்தில் தோண்டப்பட்ட பள்ளம் மற்றும் முகூர்த்த நாளான இன்றுஅதிக வாகனங்கள் செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் அருகில் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அதிக அளவு மணல் அள்ளிச் செல்லும் வாகனங்களால் அடிக்கடி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை மெயின் ரோட்டில் குருபகவான் கோவில் செல்லும் சாலை மன்னாடிமங்கலத்தில் இருந்து செல்லம்பட்டி ஒன்றிய பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக […]

தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்.!

  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம் ,பாதிரகுடி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.  இம்மருத்துவ முகாமில் பெண்கள் நலன் தன்னார்வலர்கள் ராகினி மற்றும் பரமேஸ்வரி மாறனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக சர்க்கரை மற்றும் ரத்த கொதிப்பின் அளவை சரி பார்த்து மருத்துவ உதவி தேவைப்படுவார்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதாரத்தை அணுகுமாறு […]

விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தின பொதுக்கூட்டம்.!

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் முன்னேற்றம் குறித்து பொதுக்கூட்டம் மற்றும் இப்தார் நிகழ்ச்சி விம் மாவட்ட தலைவி ரம்ஜான் பேகம் தலைமை தாங்கினார்.நகர் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தேவிபட்டினம் நகர் தலைவர் சமீரா வரவேற்புரை நிகழ்த்தினார். நஸ்ரின் ஆலீமா தொகுத்து வழங்கினார். சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த தமிழ் மாநில தலைவர் பாத்திமா கனி சிறப்புரை ஆற்றினர். மண்டல தலைவி கதீஜா பிவி கருத்துரை வழங்கினார். இறுதியாக […]

மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் மகளிர் தின விழா .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நஞ்சையா லிங்கம்மாள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா மற்றும் பெண் ஆளுமைகளுக்கான பாராட்டு விழாவும் நடைபெற்றது விழாவுக்கு கல்லூரி நிர்வாக இணை அறங்காவலர்  ஞானசேகரன் தலைமை வகித்தார். அறங்காவலர்கள் ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளிங்கிரி. தம்பு.  சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  சிறப்பு விருந்தினர்களாகவும் விருது பெறுபவர்களாகவும் மேட்டுப்பாளையம் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி. சவிதா மருத்துவமனை மருத்துவர் சசித்திரா தாமோதரன். தொழிலதிபர்அகிலா பாஸ்கர். பாடகர் ஸ்ரீநிதா. […]

தேசிய மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்வு.!

தேசிய மகளிர் தின விழாவை முன்னிட்டு காரைக்குடி அரசுபொது தலைமை மருத்துவமனையில் பாவை அறக்கட்டளை சார்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி வட்டார மருத்துவ அலுவலர்  மரு.அருள் தாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் காரைக்குடி மூத்த வழக்கறிஞர் செந்தமிழ் செல்வி கலந்து கொண்டு சமுதாயத்தில் பெண்கள் சந்திக்க கூடிய சவால்கள் பற்றியும் பெண்களுக்கான உரிமைகள் பற்றியும்  உரை ஆற்றினார். மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளை துரிதப்படுத்துவோம் என்னும் கருத்தை வலியுறத்தும் விதமாக மனிதசங்கிலி அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்வினை […]

தேவகோட்டையில் வெறிநாய் கடித்து அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 8 பேர் காயம் .!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மற்றும் நடந்து சென்றவர்களை வெறி நாய் ஒன்று தொடர்ச்சியாக காலில் கடித்து விட்டு தப்பி ஓடியது . இதில் தேவகோட்டை நகராட்சி அதிமுக கவுன்சிலர் முத்தழகு (55) வினோத்குமார் (19) அர்ஜுனன் (55)அன்பரசன் (52) வீரசேகரன் (43) நிகேதன் (23) பகுருதீன் (60) விஜயா (38) உள்ளிட்ட 8 பேர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாலையில் […]

தேவகோட்டையில் சர்வதேச மகளிர் தின விழிப்புணர் நிகழ்ச்சி.!

தேவகோட்டை அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி சார்பாக சர்வதேச மகளிர் தின விழிப்புணர் ஊர்வலம் நடைபெற்றது. பள்ளி முதல்வர் அம்பிகா வரவேற்றார். சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ.செந்தில்நாதன் தலைமை உரையாற்றி பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். தேவகோட்டை செயின்மேரிஸ் மேல்நிலைப்பள்ளியில் இருந்து தியாகிகள் பூங்கா வரை ஊர்வலம் சென்றது. மகளிர் நலன்,குழந்தைகள் நலன், மாணவ மாணவிகள் நலன் குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்தியும் கோஷமிட்டும் ஊர்வலம் சென்றனர். தேவகோட்டை நகர்மன்றத்தலைவர் சுந்தரலிங்கம் […]

மதுரை அழகர் கோவில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் தமிழகத்தின் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார் இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் மலை அடிவாரத்தில் உள்ள 18 ம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு இன்று காலை 11 மணியளவில் வருகை தந்த சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவரது கணவர் விசாகன் ஆகியோர் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர் அங்கு கோவில் சார்பில் அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது ரஜினிகாந்தின் மகள் […]

காரமடை கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா.!

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி கண்ணார்பாளையம் அரசு தொடக்கப்பள்ளி ஆண்டு விழா இந்த ஆண்டும் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது  விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பாடல் பட்டிமன்றம் கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் பல்வேறு போட்டிகளும் காலை முதல் மாலை வரை நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கப்பட்டது  இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலரும் சிக்காரம்பாளையம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான ஞானசேகரன் கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொண்ட மாணவ […]

தகர சீட்டு கொட்டகையில் இயங்கி வரும் அரசு பள்ளிக்கு விடிவு காலம் எப்போது?

கோடைகால வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தகர சீட்டு கொட்டகையில் இயங்கி வரும் அரசுப் பள்ளிக்கு விடிவு காலம் எப்போது? என்ற கேள்வி சமூக நல ஆர்வலர்களால் எழுப்பப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் சுமார் 650 மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் சீட்டு கொட்டகைகளிலும், மரத்தின் நிழலிலும் மாணவர்கள் கல்வி பயின்று […]

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா மகளிர் விளையாட்டு போட்டி நடத்தி உற்சாகம்..

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் பவர் நர்சரி பள்ளியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்களை அழைத்து மகளிர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. கதை கவிதை கட்டுரை பேச்சுப்போட்டி நடத்தியது சுவாரஸ்யமாக இருந்தது. போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடன நாட்டிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது. முதல்வர் ரஜினிகாந்த் தலைமை வகித்தார். துணை முதல்வர் ஜெனகை மாரி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் முத்துராமலிங்கம் […]

சோழவந்தானில் தொமுச சார்பில் அமைச்சர் மூர்த்தியிடம் கோரிக்கை மனு

சோழவந்தான் அருகே தென்கரையில் மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் மூர்த்தியிடம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை தொமுச சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது மனுவில் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் மழைக்காலங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு சேரும் சகதியுமாக மாறிவிடுவதால் போக்குவரத்து தொழிலாளர்கள் பணி செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனைக்கு சிமெண்ட் தரைதளம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு கொடுத்தனர். அருகில் வெங்கடேசன் எம் எல் […]

தென் மாவட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், தெற்கு வங்க கடலில் உருவாகும் காற்று சுழற்சி தென் இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரி கடலை நோக்கி நகரும் என்பதால் மார்ச் 11 முதல் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.   மார்ச் 11 ஆம் தேதி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி […]

சோழவந்தான் அருகே தாராப்பட்டி அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா

சோழவந்தான் அருகே தாராப்பட்டியில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றனர் குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்று பேசி அசத்தினர் முன்னதாகதிருக்குறள் போட்டி கட்டுரை கவிதை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் பள்ளி தலைமை ஆசிரியை கலைச்செல்வி ஆசிரியைகள் ரேவதி லட்சுமி வசந்தி ஆகியோர்களுக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவி ராஜேஸ்வரி […]

கீழக்கரை வடக்குத்தெரு நாசா சங்கத்தின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வடக்குத்தெரு சமூக நல அமைப்பான நாசா சங்கத்தின் சார்பில் இஃப்தார் சந்திப்பு நிகழ்ச்சி நாசா மர்கஸில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் வடக்குத்தெரு மக்களின் வளர்ச்சி குறித்தும் , சமூக முன்னேற்றங்கள் குறித்தும் நாசா சங்கத்தின் பணிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக மக்கள் பணியாற்றிட நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து உங்களுடைய ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்பட்டது.

சோழவந்தான் அருகே தென்கரையில் திமுக விவசாய அணி சார்பாக 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை வடக்கு மாவட்டம் விவசாய அணி சார்பாக சோழவந்தான் அருகே தென்கரையில் 7.2 லட்சம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன் வரவேற்புரை ஆற்றினார் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ முன்னில வகித்தார் நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி […]

பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தேர்வு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், முத்தாண்டிபட்டி தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர்களுக்கு பரீட்சை அட்டை ,பேனா, பென்சில் ,லப்பர், ஸ்கேல் வழங்கப்பட்டது .நிகழ்ச்சிக்கு தூய பீட்டர் பவுல் உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை சகோதரி ஜெப தலைமை தாங்கினார்கள். ஆசிரியர் ,ஆசிரியைகள் கலந்து கொண்டனர் ,இந்நிகழ்ச்சியில் 250 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பரிட்சை அட்டை பேனா, பென்சில் […]

ஆன்லைனில் பிரபலங்கள் பெயரில் போலி விளம்பரம்; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..

ஆன்லைனில் முதலீடு செய்ய பிரபலங்கள் பெயரில் செய்யப்படும் கவர்ச்சிகரமான போலி விளம்பரம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் நடைபெறும் விளம்பர மோசடிகள் குறித்து சென்னை இணையவழிக் குற்றப் பிரிவு, தலைமையகம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பற்றிய செய்திக் குறிப்பில், தொழில் நுட்பம் உலகின் அனைத்து மக்களுக்கும் அதிநவீன வாழ்க்கையை வழங்கி உள்ளது. இருப்பினும், அளவுக்கு அதிகமான எதுவும் தீங்கு விளைவிக்கும் AI மற்றும் IoT ஆகியவற்றின் வருகை நாம் வாழும் முறையை மாற்றியமைத்து அதன் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!