பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல்; கனிமொழி எம்.பி பேச்சு..

“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி  மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு […]

பொதுமக்கள் சாலை மறியல் எதிரொலி. அதிகாரிகள் உடனடி நடவடிக்கை

வாடிப்பட்டி அருகே நகரி பகுதியில் 3 மாதங்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி நேற்று காலை மதுரை திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர் இந்த நிலையில் உடனடியாக குடி நீர் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் ஒரு மணி நேரம் நடைபெற்ற பஸ் மறியல் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது இந்த நிலையில் நேற்று மாலை முதல் அலங்காநல்லூர் யூனியன் தனி அலுவலர் அய்யங் கோட்டை ஊராட்சி […]

பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!

அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கண்டித்து பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தை யாரும் ஆrக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த காலங்களில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் யாரும் ஆக்கிரமிக்காத அளவில் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது […]

பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் தமிழிலும் இருக்க வேண்டும் – நடிகர் விஜய் சேதுபதி

மதுரை தமுக்கம் மைதானத்தில் வருமான வரித்துறை சார்பில் வரி செலுத்துவோர் மையம் இன்று துவங்கி மூன்று நாட்கள் நடைபெறும் நிலையில் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் பேசுகையில்,”பான் கார்டு விண்ணப்பிக்கும் இணையதளம் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளது.தமிழில் இருந்தால் பார்த்து புரிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.ஏதாவது பிரச்சினை வரும்போது தான் என்ன என்று தெரிந்து கொள்கிறோம்.அதுபற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரிகின்ற மொழியில் இருந்தால் […]

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்.!  அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் .!!

திருச்சியில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்.!  அடிக்கல் நாட்டிய துணை முதலமைச்சர் .!!  திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் மறுவாழ்வு முகாம் அருகில் ரூ 33.29 கோடியில் திருச்சி கிழக்குத் தொகுதி கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய கட்டுமான பணி திருச்சி – புதுக்கோட்டை சாலை கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ரூ 33.29 கோடியில் கட்டப்பட உள்ளது. இந்த புதிய கட்டுமான பணி அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் துணை […]

உசிலம்பட்டியில் ரூ.20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் ,அவரது உதவியாளரை கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார்

உசிலம்பட்டியில் பாக பிரிவினை பத்திர பதிவிற்காக 20 ஆயிரம் லஞ்சம் பெற்ற சார் பதிவாளர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றன., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றி வருபவர் ஷீயாவுதீன்., இவர் செட்டியபட்டியைச் சேர்ந்த மலைராஜன் என்பவரது தாத்தா பெயரில் உள்ள 4 சென்ட் இடத்தை பாக பிரிவினை செய்து சகோதரர்களான 4 பேருக்கு பத்திர பதிவு செய்ய சார் […]

வங்கியில் போலி நகை அடகு வைத்து மோசடி. நகை மதிப்பீட்டாளர் கைது

சேலம் மாவட்டம், கெங்கவல்லியில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் ஆத்தூரைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரது மகன் பாலச்சந்தர் (45), நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கியில், பிற வங்கியின் நகை மதிப்பீட்டாளர் வங்கியில் வைக்கப்பட்டுள்ள நகைகளை ஆய்வு மேற்கொண்டார். அப்போது வங்கியில் கூடமலையைச் சேர்ந்த சேகர் மற்றும் பழனிச்சாமி ஆகியோரது வங்கிக் கணக்கில் 84 சவரன் போலி நகைகள் வைக்கப்பட்டு அதன் மூலம் 41 லட்சம் ரூபாய் […]

தாய்க்கு மணிமண்டபம் கட்டிய மகன்கள்.! ராமநாதபுரத்தில் மனம் நெகிழவைத்த சம்பவம்..!!

  ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாத்தியின் மூன்று மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்கள் தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் […]

வேலூர் இப்ராஹிமை கைது செய்ய வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பியை அவதூறு பேசிய பாஜகவைச் சேர்ந்த வேலூர் இப்ராஹிமை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பா அலுவலகத்தில் முஸ்லிம் ஐக்கிய ஐமாத் மாவட்ட தலைவர் எம் எஸ் ஏ ஷாஜஹான், பொதுச்செயலாளர் ஏ.ஜெய்னுல் ஆலம், பொருளாளர் பக்ருல் அமீன், துணை தலைவர் டி.எம். அப்துல் முத்தலிபு, மாவட்ட செயலாளர்கள் ஐ. அஷரப் அலி, எம். முஹமது இலியாஸ் […]

அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை முத்து லட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துராஜா அனைவரையும் வரவேற்றார்.  பள்ளி மேலாண்மை குழு தலைவி ஃபரீதா அப்துல் காதர், தென் பொதிகை […]

குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய தியாகி.!

திருச்சி DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியேற்றிய தியாகி. திருச்சியில் ஒத்த கடை அருகே அமைந்துள்ள பிரபலமான DJ ஆட்டோமொபைல் ஷோரூமில் 76வது ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு ஷோரூம் முன்பு தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்விற்கு D J ஆட்டோமொபைல் ஷோரூமின் உரிமையாளரும் சமூக ஆர்வலருமான DJ வெங்கடேஷ் துரை தலைமை வகித்தார். DJ ஷோரூமின் HR மேலாளர் விஜய் முன்னிலையில் தேசிய கொடியை சுதந்திர போராட்ட தியாகியும் DJ […]

திருப்பரங்குன்றம் ஊராட்சி மற்றும் திருப்புவனம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் .!

76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சிலைமான், சாமநத்தம் ஊராட்சிகள், திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கொந்தகை காஞ்சிரங்குளம் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இக்கிரமசபை கூட்டங்களில் வரவு செலவு தணிக்கை அறிக்கை ஜல்ஜீவன் திட்டம் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞரின் கனவு இல்லம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில் திருப்பரங்குன்றம், திருப்புவனம் வட்டார […]

தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில்கொடியேற்றிய அமைச்சர்.!

தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் குடியரசு தின கொண்டாட்டம் கொடியேற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ். 76வது குடியரசுத் தின விழா இன்றைய தினம் சென்னையில் திருவல்லிக்கேணி அருகே காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழ்நாடு சாரண – சாரணியர் இயக்கத் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டார். அப்போது மூவர்ண கொடியை ஏற்றி வைத்து, […]

திருச்சி புங்கனூரில் கிராம சபை கூட்டத்தில் தங்கள் பகுதியை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று பொதுமக்கள் போராட்டம்.!

திருச்சியை அடுத்த புங்கனூரில் இன்று நடந்த கிராம சபை கூட்டத்தில் தாங்கள் வசிக்கும் புங்கனூர் கிராமத்தை மாநகராட்சியுடன் சேர்க்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அதிகாரிகளிடம் சொல்லிய போது அதை நிறைவேற்ற முடியாது என்று சொன்ன காரணத்தால் ஊர் பொதுமக்கள் அனைவரும் சாலை மறியல் செய்தார்கள் திருச்சி செய்தியாளர் H.பஷீர்

மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்கள் .!

*மதுரை மகாத்மா குளோபல் பள்ளியில் தமிழ்நாட்டின் சிறப்பம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆப் தமிழ்நாடு(BOT) அறிமுகம்* நாட்டின் பண்பாடு கலாச்சாரம் தொன்மையான வரலாற்று நினைவு சின்னங்கள் பராம்பரியங்களை போற்றும் வகையிலும் அனைவரிடத்திலும் கொண்டு சேர்க்கும் விதமாக தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தமிழ்நாட்டின் சிறப்பு அம்சங்களை கொண்டாடும் பெஸ்ட் ஆஃப் தமிழ்நாடு இருந்து வருகிறது. மேலும் இன்றைய பள்ளி / கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நாட்டின் கலாச்சாரம் பாரம்பரியத்தை நினைவு படுத்தும் விதமாக மதுரை கருப்பாயூரணி அருகே மகாத்மா […]

மதுரையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி .!

மதுரை பசுமலை மேல் நிலைப்பள்ளியில் தாளாளர் பெர்ணான்டஸ் ரத்தினராஜா அறிவுரையின்படி, பள்ளி தலைமையாசிரியை மேரி தலைமையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. தெற்கு போக்குவரத்து காவல்துறை சார்பில் போக்குவரத்து விதிகள் பற்றியும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பற்றியும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.பள்ளி உதவி தலைமையாசிரியர் ரிச்சர்ட் பி ராஜன் வரவேற்புரை வழங்கினார். போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன் உதவி ஆய்வாளர் செல்வகுமார் அறிவுரை வழங்கினார்.சாலை பாதுகாப்பு மன்றச் செயலாளர் தி.மோசஸ்ராஜன்.நன்றியுரை கூறினார்.நுகர்வோர் மன்றச் செயலாளர் பிரகாஷ், மற்றும் […]

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் […]

கீழ மாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் வாக்குவாதம் மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை

மதுரை மாவட்டம் கீழமாத்தூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கீழமாத்தூர் ஊராட்சி செயலாளருக்கு பதிலாக அவரது மனைவியை கொண்டு ஊராட்சி நிர்வாகத்தை நடத்துவதாகவும் கிராமசபை கூட்டத்தை ஊராட்சி செயலாளரின் மனைவி அறிக்கை வாசிப்பதாகவும் கூறி பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் மேலும் ஊராட்சியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராத நிலையில் இது குறித்து கேள்வி கேட்டால் அடியாட்களை கொண்டு மிரட்டுவதாகவும் […]

சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சியில் 4 மாதமாக 100 நாள் வேலைக்கு சம்பளம்வராததால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்து நிறுத்தம் அருகில் கூடியதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் இரும்பாடி ஊராட்சியில் பாலகிருஷ்ணாபுரம் சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இன்று காலை எட்டு முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பணிக்காக கருப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் கூடியிருந்தனர் அப்போது காலை ஒன்பது முப்பது மணி அளவில் 100 நாள் வேலை பார்க்கும் பொதுமக்கள் தங்களுக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை என்றும் ஆகையால் உடனடியாக மத்திய அரசு 100 நாள் வேலை பணியாளர்களுக்கு சம்பளம் […]

ராமநாதபுர மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.!

ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.!   இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார்.   ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!