தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம் ,பூதலூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பெண்களுக்கான ஊட்டச்சத்து வழங்கும் நிகழ்ச்சி சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்டின் சார்பாக நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு பூதலூர் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் செல்லப்பன் பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமை தாங்கினர் . பாளையப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் , செவிலியர் மற்றும் மருந்தாளுநர் ஆகியோர் கலந்து […]
Category: மாவட்ட செய்திகள்
ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]
வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]
வெளிப்பட்டணம் ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டணம் தாயுமானவர் சுவாமி கோவில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ சக்தி பகவதி அம்மன் ஆலயம் இங்கு ஸ்ரீ மகா கணபதி, பாலமுருகன், உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு இன்று கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஆலயத்தின் முன் அமைந்துள்ள குண்டத்தில் அக்னி வார்த்து யாகசாலை நடைபெற்று பூர்ணாகுதியும் சமர்ப்பிக்கப்பட்டது பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை மங்கள வாத்தியங்கள் முழங்க தலையில் சுமந்தவாறு கோவிலை வலம் வந்து வானில் கருடன் வட்டமிட்டபடியே விமான […]
மதுரையில் துணை முதலமைச்சரை வரவேற்ற திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ
ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரை விமான நிலையம் வந்தபோது திருமங்கலம் முன்னாள் எம்எல்ஏ முத்துராமலிங்கம் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்தார் இதில் திமுகவின் முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் உடன் இருந்தனர்
சோழவந்தான் அருகே தனியார் பள்ளியில் இந்திய மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகளை உருவாக்கும் அமெரிக்க இரட்டைய பட்ட திட்டம்
கல்வித் துறையில் புதிய முன்னேற்றமாக, கல்வி குழும பள்ளிகள் மற்றும் அகாடமிகா இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் (Academica International Studies, USA) இணைந்து அமெரிக்க இரட்டைய பட்ட திட்டத்தை (American Dual Diploma Program) அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 14 மாநிலங்களில் 205 பள்ளிகள், 15 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை பங்காளித்துவத்தில் கொண்டு செல்லும் அகாடமிகா, உலகளவில் 55 நாடுகளில் 50,000 மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி வருகிறது. இந்த புதிய திட்டத்தின் மூலம், இந்திய மாணவர்கள், இந்திய உயர்நிலை […]
தஞ்சையில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடை பயிற்சி.
தஞ்சையில் தொடர்ந்து நடைபெறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சி… இன்று காலை நடைபெற்ற நடைபயிற்சியில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் துவங்கப்பட்ட நடப்போம் நலம்பெறுவோம் என்கின்ற 8 கிலோ மீட்டர் தூரம் ஆரோக்கிய நடைபயிற்சி திட்டத்தினை தொடரும் வகையில், மாதந்தோறும் முதல் ஞாயிறன்று 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைபயிற்சியை தஞ்சை சத்தியா விளையாட்டு திடல் நடைபயிற்சியாளர் சங்கம் சார்பில் நடைபெற்று வருகிறது . அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற […]
சோழவந்தான் பேருந்துக்காக மூன்று மணி நேரம் காத்திருந்த பயணிகள்.போக்குவரத்து துறையின் தொடரும் அலட்சியம்
மதுரை மாவட்டம் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் காத்திருந்த அவலம் அரங்கேறியது முகூர்த்த நாள் மற்றும் விடுமுறை நாள் என்பதால் மக்கள் பல்வேறு பணிகளுக்கு வெளியூருக்கு சென்று வரும் நிலையில் திருமங்கலம் மற்றும் செக்கானூரணியில் இருந்து சோழவந்தான் மற்றும் அதன் சுற்று பகுதிகளுக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் செக்கானூரணி பேருந்து நிலையத்தில் இரண்டாம் தேதி காலை 10 மணி முதல் ஒரு மணி வரை பேருந்துக்காக வெயிலில் […]
லஞ்சம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவது நாட்டை அந்நிய நாட்டுக்கு காட்டி கொடுப்பதற்கு சமம் காங் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி ஆவேசம்.!
தேவகோட்டையில் தியாகி கே.எம்.சுப்பையா 107 வது பிறந்த நாள் விழா, தியாகிகள் தின விழா கே.எம். எஸ். சிந்தனைச் சோலை தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடந்தது. நிறுவுநர் தெய்வசிகாமணி வரவேற்றார். செயலாளர் துரை தமிழ்ச்செல்வன் அறிக்கை வாசித்தார். இவ்விழாவில் கே.எம்.எஸ். படத்தை திறந்து வைத்து காங். ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி பேசுகையில், இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை முத்து இவ்விழாவில் பங்கேற்று உள்ளார். பாராட்டுக்கள். இஸ்ரோ விஞ்ஞானிகள் பல கண்டுபிடிப்புகள் செய்து அதில் […]
ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி முதலாம் ஆண்டு விளையாட்டு விழா :சர்வதேச, தேசிய, பல்கலை. போட்டிகளில் வென்ற மாணவியருக்கு டிஐஜி பரிசு வழங்கினார்.!
இராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரியில் முதலாம் ஆண்டு விளையாட்டு விழா இன்று நடந்தது. கல்லூரி நிறுவனர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். நேபாள் நாட்டில் 2024 ஜூன் 16 முதல் ஜூன் 20 வரை நடந்த டென்னிஸ் பந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தனி நபர் கோப்பை வென்ற ராமநாதபுரம் வேலு மனோகரன் கலை, அறிவியல் மகளிர் கல்லூரி மாணவியர் ரக்ஷ்யா தேவி ( சிறந்த பந்து வீச்சாளர்), நவீனா (சிறந்த விக்கெட் […]
சோழவந்தான் அருகே அதிவேகமாக இயக்கிய தற்காலிக ஓட்டுனர்.அரசு பேருந்து கட்டுப்பாட்டு இழந்து 10 அடி பள்ளத்தில் விழுந்ததில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள திருவேடகம் பகுதி பள்ளிவாசல் அருகே சோழவந்தான் அரசு பேருந்து பணிமனையில் பேருந்து தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து ஓட்டுநர் இயக்கி வந்தார் நாச்சிகுளம் கிராமத்தில் இருந்து மதுரை அண்ணா நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து நிலை தடுமாறி வைகை ஆற்றுக்கரையில் உள்ள 10 அடி பள்ளத்தில் தென்னை மரத்தின் மீது பலமாக மோதியது இதில் அரசு பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர் […]
சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் புதிய சார் பதிவாளர் அலுவலக புதிய கட்டிடம் பூமி பூஜை. வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்பு
சோழவந்தானில் 1.67 கோடி மதிப்பில் சார்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா பழைய சார் பதிவாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார் ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் சி பி ஆர் சரவணன் பிற்பட்டோர் நலத்துறை […]
தஞ்சாவூரில் மகாத்மா காந்தி நினைவு தினம்.!
தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை தஞ்சை மாநகரம் சார்பில், தஞ்சை மாநகராட்சி வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநிலச் செயலாளர் பி.செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் என்.குருசாமி, மாநகரத் தலைவர் ஹெச்.அப்துல் நசீர், மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகிகள் இரா.புண்ணியமூர்த்தி, மக்கள் ஒற்றுமை மேடை ப.சத்தியநாதன், […]
கல்லூரி மாணவியின் கல்லூரி கட்டணத்தை செலுத்திய தஞ்சை ஜோதி அறக்கட்டளை.!
மகள் படித்து பட்டம் பெற வீட்டில் இருக்கும் கடைசி பொருளான மறைந்த கணவர் நினைவாக வைத்திருந்த தாலியை விற்று கல்விக்கட்டணம் செலுத்த முயன்ற ஏழைத்தாய் . அடகு கடைக்காரர் மூலம் கேள்விப்பட்டு கல்லூரி கல்விக்கட்டணம் உள்ளிட்டவற்றை முழுமையாக செலுத்தி தாயின் தாலியை மீட்ட சமூக ஆர்வலர் . நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் கிரமத்தை சேர்ந்தவர் முருகதாஸ் – பெரியநாயகி தம்பதிகள் . இவர்களுக்கு ரோகிணி,துர்காதேவி என்ற இரு மகள்கள் உள்ளனர் . முருகதாஸ் அன்றாடம் கூலி வேலைக்கு […]
ராமேஸ்வரத்தில் 2 ஆண்டுகளுக்கு பின் சென்ற பயணிகள் இல்லாத ரயில் .!
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலில் ரூ.545 கோடி மதிப்பில் கட்டி முடித்த செங்குத்து தூக்கு புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. இந்நிலையில் பாம்பன் பழைய ரயில் பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராமேஸ்வரத்திற்கு 2022 டிச 23 முதல் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் வரும் அனைத்து ரயில்களும் பயணிகளை மண்டபம் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்ய மதுரை ரயில் நிலையத்திற்கு கடந்த 2 […]
திருவாடானை வட்டச்சட்ட பணிகள் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி .! நீதி அரசர்கள் பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும், வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி […]
மேட்டுப்பாளையம்தலைமை அஞ்சல் நிலையத்தில்அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது […]
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் .!
ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊருக்குள் செயல்படும் அந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரின் குடும்பம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் கோயிலுக்கு செல்வோருக்கும் இடையராக இருந்து வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் மதுபான கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று வரை அந்த டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றவில்லை […]
தினைதுறை சார்பில் தொழில் முனைவோருக்கு தொடக்க வாய்ப்புகள் குறித்த பயிற்சி முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டத்தில் முகமது சதக் ஹமிது கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மனையியல் துறை நடத்திய தினை துறையின் தொழில் முனைவோருக்கு தொடக்க வாய்ப்புகள் குறித்த பயிலரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மீரா தலைமை வகித்தார். சென்னை இயற்கை ஆர்வலர், . சீதா லட்சுமி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் தினை பயன்படுத்தி எவ்வாறு தொழில் செய்வது என்றும் அதன் நுணுக்கங்கள் மற்றும் விதிமுறைகளை எடுத்துரைத்தார். கீழக்கரை, நுகர்வோர் நலச் சங்கம் தலைவர், செய்யது […]
பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல்; கனிமொழி எம்.பி பேச்சு..
“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு […]
You must be logged in to post a comment.