மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் எண்ணெய் திரி தாம்பூல.பை மற்றும்பட்டு துணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டதுபின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வடக்கு தெரு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இந்த சீர்வரிசை சங்கத்திலிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கோவிலில் வந்து அடைந்தது. இதை உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, திருநாவுக்கரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் […]
மேலக்கால் ஆதிதிராவிடர் மயானத்தில் மின் மோட்டார் பழுதால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்தில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் இவர்களுக்காக மேலக் கால் மதுரை செல்லும் சாலையில் மயானம் உள்ளது இந்த மயானத்தில் உள்ள மின் மோட்டார் பழுதாகி 10 […]
சோழவந்தானில் திமுக சார்பில்பிகே. மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிகே.மூக்கையா தேவரின் 103 ஆவதுபிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் துணை செயலாளர் கொத்தாளம் […]
சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் தோண்டிய பள்ளங்களை மூடாததால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலையின் இருபுறத்திலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்பட்டது இதில் அந்த வழியாக வந்த கதிர் அடிக்கும் இயந்திரம் மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது […]
வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் சென்ரிங் காண்ட்ராக்டர் சம்பவ இடத்தில் பலி போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் பழனி குமார் வயது 40 இவர் சென்ட்ரிங் கட்டட வேலை பார்த்து வருகிறார் இன்று காலை வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தன்ச்சியம் பிரிவு தனியார் சித்தா மருத்துவமனை அருகில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பழனிக்குமார் […]
சோழவந்தான் அருகே இரும்பாடி வைகை ஆற்றுக்குச் செல்ல பாதை வசதி வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
மதுரை மாவட்டம்இரும்பாடி வைகை ஆற்றிக்கு செல்லும் பாதையானது பொதுமக்கள் செல்லக்கூடிய வகையில் போதிய இடவசதியுடன் இருந்த நிலையில் இரும்பாடி மன்னாடி மங்கலம் வைகை ஆற்று பாலம் கட்டி முடித்த பின்பு இரும்பாடி வைகை ஆற்றிற்கு செல்வதற்கான பாதையின் அகலத்தை சிறியதாக்கி வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுகுறிப்பாக இரும்பாடி சின்ன இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கரட்டுப்பட்டி மட்டப்பாறை சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களில் திருவிழா நடத்துபவர்கள் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் […]
பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன்
சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில்500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சுவாமி, முனியாண்டி சுவாமி, பகவதிஅம்மன், காளியம்மன், பட்டத்தரசிஅம்மன், சோனைசாமி கோயில் பங்குனி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு […]
மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய ஜமாஅத்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 24 பள்ளிவாசல்கள் ஒருங்கிணைந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் சிறப்பு தொழுகைக்காக ஊர்வலமாக இஸ்லாமியர்களுக்கு எவ்வித வாகன நெரிசலும் ஏற்படாத வண்ணம் மற்றும் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை எவ்வித வாகனங்களும் அவ்வழியாக வரவில்லை இதனால் தொழுகைக்காக செல்லும் பொழுதும் தொழுகை முடிந்து […]
இ பாஸ் முறையை கண்டித்து உதகையில் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் பகுதியில் வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரம் இறுதி […]
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இ.பாஸ் ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடி பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்லட்சுமி பவ்யா தண்ணீரு இ.பாஸ் ஆய்வு மேற்கொண்ட போது நெகிழி ஒழிப்பு ஆய்வு செய்தார் வாகன சோதனையின் போது நெகிழி தண்ணீர் கேன்கள், குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 97 குடி தண்ணீர் மின் இயங்கி இயந்திரங்கள் அமைத்துள்ளோம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் நெகிழி கலன்கள் மற்றும் […]
சோழவந்தானில் நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் திருமண மஹாலில் வாடிப்பட்டி வட்டார நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அடகு கடை சங்க தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் பொருளாளர் முத்துக்குமரன் நகைமாளிகை இருளப்பன் என்ற ராஜா வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 2025 .26 ஆம் ஆண்டில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா. காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
.மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் ,முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. […]
சோழவந்தானில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு வரவேற்பு
கோவை சின்னியம்பாளையத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் தியாகிகள் சுடர் வாகனத்திற்கு சோழவந்தானில் வரவேற்பு அளிக்கப்பட்டது சோழவந்தான் மாரியம்மன் கோவில் வேல்பாண்டி தலைமையில் நடைபெற்றது. இந்த பயணக் குழுவில் கோவை மாவட்ட செயலாளர் பத்மநாபன், டைபி மாநில செயலாளர் சிங்கார வேலன் , ஏ ஐ டி டபுள்யூ ஏ மாநில செயலாளர் ராதிகா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கந்தவேல் சின்னச்சாமி, பொன்ராஜ். கருப்புசாமி விவேக் உட்பட போக்குவரத்து கமிட்டி சேகர், கணேசன் ஏராளமானோர் பங்கேற்றனர். தியாகிகள் குறித்து […]
மேலக்கால் ஊராட்சியில் சாலையோரம் கொட்டப்பட்ட குப்பைகள் அகற்றப்பட்டது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் சாலை ஓரம் குப்பைகள் கொட்டுவதால் சுகாதார தேடுஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர் இந்த நிலையில் இது குறித்த செய்தி பத்திரிகைகளில் வந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்து சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை ஊராட்சி பணியாளர்கள் மூலம் அகற்றினர் ஊராட்சி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்
வாடிப்பட்டி அருகே கச்சை கட்டியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம்
வாடிப்பட்டி அருகேகச்சைகட்டி பகுதியில்,வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஹரிஷ் நிர்மல் குமார் அவர்களின் அறிவுரதலின் பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் மணிகண்டன், பூபன் சக்கரவர்த்தி, சதீஸ், புவனேஸ்வரன் ஆகியோர் கோழிக்கடை, பலசரக்குகடை, ஓட்டல்,காய்கறி கடை, மற்றும் டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். இதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். இது தொடர்பாக அனைத்து கடைகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சோழவந்தான் அருகே மேலக்கால் அருள்மிகு மண்டு கருப்பு , காளியம்மன் திருக்கோயில் பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம் அருள்மிகு மண்டு கருப்பு அருள்மிகு காளியம்மன் திருக்கோவில் 12வது ஆண்டு பங்குனி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கி திங்களன்று குத்து விளக்கு பூஜை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை வைகை ஆற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து திருக்கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. மாலை சக்தி கரகம் எடுத்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. புதன்கிழமை பொங்கல் வைத்து கிடா […]
மேட்டுப்பாளையத்தில் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா சி,ஐ,டி,யு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக வசதி இல்லாத மக்களுக்கு ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஃபித்ரா அரிசி 200 க்கு மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு மேட்டுப்பாளையம் சிஐடியு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பாக வழங்கப்பட்டது கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்களின் புனித ரமலான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த மாதத்தில், இஸ்லாமியர்கள் தங்களது கடமைகளில் ஒன்றான நோன்பு இருப்பது வழக்கமாகும் […]
தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
தந்தைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி .! ஊருக்கே அறுசுவையுடன் உணவு வழங்கி மகிழ்ந்த பிள்ளைகள் .!! ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தில் கருப்பையா வேலம்மாள் இவர்களது மூத்த பிள்ளையான சாத்தையா இவர் கடந்த 50 ஆண்டு காலமாக திராவிட முன்னேற்றக் கழக தீவிர பற்றாளராக இருந்து வந்தது மட்டுமின்றி அப்பகுதி சுற்று வட்டார மக்களுக்கு உரிமைக்குரலாய் இருந்து வந்துள்ளார் அதுமட்டுமல்லாமல் பாட்டு பாடுவது, கும்மியாட்டம், ஒயிலாட்டம்,கற்றுத் தருவது போன்ற பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக […]
சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் மூன்றுமாத கொடியேற்றம் விழா நடந்தது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மிகவும்பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றாகும்.இங்கு வருடந்தோறும் வைகாசி அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும் . இதைத்தொடர்ந்து 17 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும். இதற்கு முன்பாக பங்குனி மாத அமாவாசைக்குப் பின்னர் வரும் திங்கட்கிழமை சுற்றுப்புற கிராம பக்தர்களுக்கு திருவிழா நடத்துவதற்கு முன்பாக அறிவிப்பாக மூன்று மாத கொடியேற்று விழா நடைபெறும்.இதேபோல் இந்த ஆண்டு திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதற்கான 3மாத கொடியேற்று விழா […]
You must be logged in to post a comment.