சோழவந்தானில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழஙகப்பட்டது

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் தனது பிறந்தநாளை ஒட்டி வேலை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனா பென்சில் நோட்புக் உள்ளிட்டவைகள் மற்றும் கருணை இல்லங்களுக்கு உணவுகள் வழங்கினார் முன்னதாக சோழவந்தானில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர்அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வார்டு கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய […]

சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பெண்கள் உள்பட பொதுமக்கள் பால்குடம் மற்றும் பறவை காவடிஎடுத்து நேர்த்திக்கடன்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து பால்குடம் அக்னி சட்டி முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கிய நிலையில் நேற்று இரவு காளியம்மன் கோவில் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது கோவில் முன்பு நீண்ட வரிசையில் இருபுறமும் பெண்கள் திருவிளக்கு வைத்து விளக்கேற்றி காளியம்மனை […]

சோழவந்தானில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுப ஸ்ரீரியின் குடும்பத்திற்கு பள்ளி சார்பில் நேரில் சென்று ஆறுதல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த துளசி தேவி தவமணி இவர்களின் மகள் சுபஸ்ரீ சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை மதியம் தனது வீட்டு மாடியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கச் சென்றபோது மாடி அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]

58 கிராமம் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உசிலை தாலுகா 58 கிராம கால்வாய் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 58 கால்வாயில் தண்ணீர் திறக்கவும், நிரந்தர அரசாணை பெறவும், மதகின் உயரத்தை குறைக்கவும், கால்வாயில் தண்ணீர் திறக்கும் போது 250 கன அடிக்கு மேல் திறக்கவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் புதிய நிர்வாகிகளை இணைத்தும், சில நிர்வாகிகளின் பொறுப்புகளை மாற்றி அமைத்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதன்படி சங்கத்தின் புதிய தலைவராக . […]

அதிமுக பிரமுகருக்கு கலைஞர் கனவு திட்டத்தின் கீழ் வீடு வழங்க மறுக்கும் அதிகாரிகளால் சர்ச்சை

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் முன்னாள் வார்டு கவுன்சிலருக்கு வீடு வழங்க மறுக்கும் அதிகாரிகள் மாற்றுக் கட்சியை சேர்ந்தவர் என்பதால் நிராகரிக்கப்படும் தாகவும் தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து சிரமப்படுவதாக வேதனையுடன் கூறுகிறார் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் முள்ளிபள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் முள்ளை சக்தி இவர் முள்ளிபள்ளம் ஊராட்சியின் வார்டு கவுன்சிலர் ஆக கடந்த ஐந்து ஆண்டுகள் பதவி வகித்து […]

சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த பகுதியில் சுகாதாரப் பணிகள் குறித்து வெங்கடேசன் எம் எல் ஏ ஆய்வு

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியிருந்தனர் இதனை அடுத்து கிராமத்தில் முகாமிட்ட அதிகாரிகள் குடிநீர் மேல்நிலைத் தொட்டியை சுத்தம் செய்து கடந்த மூன்று நாட்களாக கிராமத்தில் முகாமிட்டு போர்வெல் பைப் மூலம் புதிய குடிநீர் வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்த பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த சோழவந்தான் வெங்கடேசன் எம் […]

சோழவந்தான் அருகே இரவு நேரத்தில் திடீரென பழுதாகி நின்ற அரசு பேருந்தால் பயணிகள் தவிப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் கிராமத்தில் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து சோழவந்தான் வழியாக விக்கிரமங்கலம் சென்ற 65 ஏ என்ற அரசு பேருந்து திடீரென இரவு 8 40 மணியளவில் பழுதாகி நின்றதால் தீபாவளி பர்ச்சேஸ் செய்து வந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்டோர் அரை மணி நேரத்திற்கு மேலாக வீட்டிற்கு செல்ல முடியாமல் சாலையில் காத்திருந்த அவல நிலை ஏற்பட்டது சோழவந்தான் பகுதியில் உள்ள அரசு பேருந்துகள் பராமரிக்கப்படாமல் இயக்குவதால் ஆங்காங்கே திடீரென பழுதடைந்த […]

தென்காசி மாவட்டத்தில் மழை தீவிரம்..

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடையும் என வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், குமரி கடலில் புதிய காற்று சுழற்சி உருவாகிறது. இந்த காற்று சுழற்சியின் காரணமாக இன்று முதல் தென் மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.   12.10.2025 இன்று நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, தேனி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும். நெல்லை, […]

உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் தீயணைப்பு மாநில ஆணையர் ஆணையின்படி தீயை அணைப்பது தொடர்பாக நிலைய அலுவலர் ஜீவா தலைமையில் மற்றும் தீயணைப்பு அலுவலக அலுவலர்கள் முன்னிலையில் பொதுமக்களுக்கு தீயை அணைப்பது பற்றி வாங்க கற்றுக் கொள்ளலாம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.,இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தீயை எப்படி அணைக்க வேண்டும், மழைக்காலங்களில் பேரிடர் காலங்களில் பொதுமக்களை எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற நிகழ்ச்சி அனைத்தையும் எடுத்துக் காட்டினார்.,இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் […]

மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

மதுரை சோழவந்தானில் வீட்டின் மேல் மாடியில் காய போட்டு இருந்த துணியை எடுக்க சென்றபோது உயர் அழுத்த மின்சாரம் தாக்கி ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி சுபஸ்ரீ உயிரிழந்த பரிதாபம் மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியில் வசிப்பவர் துளசி இவரது மனைவி தேவி என்ற தவமணி இவருக்கு சுபஸ்ரீ உள்பட நான்கு பெண் குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறது இதில் சுபஸ்ரீ அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு […]

ரேஷனில் போடும் அரிசியை எறும்பு கூட திங்காது. உசிலம்பட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர், எம் பியை பார்த்து சரமாரியாக குற்றச்சாட்டை அடுக்கிய இளைஞர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானத்து பஞ்சாயத்துக்கு உட்பட்ட பெருமாள் கோவில்பட்டி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் ,தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது மைக்கை வாங்கிய சீமானூத்து பஞ்சாயத்துக்குட்பட்ட நல்லிவீரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனசேகரன் என்பவர் எழுந்து, எங்களது கிராமத்தில் நியாய விலை கடையில் போடும் ரேஷன் அரிசி யாரும் சாப்பிட முடியாது. […]

சோழவந்தான் அருகே அமச்சியாபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேரில் விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அமச்சியாபுரம் கிராமத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாக பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் சோதனை செய்யப்பட்டது உறுதி செய்யப்படவே சுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன் எம் எல் ஏ ஆலோசனையின் பேரில் மாவட்ட செயலாளர்கள் சித்திக், […]

சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க நான் தமிழர் கட்சி சார்பில் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் நேற்று முன்தினம் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் கூறியதன் அடிப்படையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு நேரில் சென்று குடிநீர் தொட்டி உள்ளிட்ட கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர் பின்னர் மலம் கலந்திருந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு குடிநீர் தொட்டி இருந்த பகுதி மற்றும் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் சுத்தம் செய்தனர் இந்த […]

சோழவந்தான் விக்கிரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்போர் கடும் பாதிப்பு மானியம் வழங்கி வாழ்வை மீட்டெடுக்க அரசு உதவ வேண்டுமென கோரிக்கை

மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் சுமார் 300க்கும் மேற்பட்ட பண்ணைகள் அமைத்து கறிக்கோழி குஞ்சுகளை வாங்கி வளர்த்து அதன் மூலம் தங்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி வந்தனர் தற்போது விலைவாசி உயர்வால் கறிக்கோழி பண்ணையாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் இருப்பதாக மதுரையின் பல்வேறு பகுதிகளில் கறிக்கோழி வளர்ப்பவர்கள் வேதனையை தெரிவிக்கின்றனர் அரசு மானியம் வழங்கிய தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர் இது குறித்து பண்ணை உரிமையாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் பால்பாண்டி […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம். முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் நேரில் ஆய்வு

மதுரை சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கட்சி நிர்வாகிகளுடன் பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களின் குறைகளை கேட்டறிந்தார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும் போது மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியில் மலம் கலந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்த சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் கழகபொதுச் செயலாளர் வருங்கால முதலமைச்சர் […]

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில்மலம் கலந்த குடிநீர் மேல்நிலை தொட்டியை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பார்வையிட்டார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் கடந்த சனிக்கிழமை மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர்ருமான ஆர் பி உதயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு அங்கிருந்த பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார் இந்த நிகழ்ச்சியில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம். இதுவரை கிராமத்திற்கு வந்து விசாரணை செய்யாத எம்எல்ஏவுக்கு மக்கள் கடும் கண்டனம்

நாலரைஆண்டுகளாக தொகுதிக்கு வராத எம்எல்ஏவுக்கு கிராம மக்கள் கடும் கண்டனம்,வாக்கு கேட்டு கிராமத்திற்கு வரக்கூடாது என எச்சரிக்கை மதுரை சோழவந்தான் தொகுதி கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரம் கிராமத்தில் மலம் கலந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த பொதுமக்கள் வெங்கடேசன் எம் எல் ஏ மீது சரமாரி குற்றச்சாட்டு கூறியுள்ளனர் எம் எல் ஏ யார் என்றே தெரியாது என்றும் அவரைப் பார்த்து நாலு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதாகவும் கழிப்பறை வசதி குடிநீர் வசதி பேருந்து வசதி உள்ளிட்ட […]

கருப்பட்டி ஊராட்சியில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பு – பட்டியல் சமூக மக்கள் அவதி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்பி விசாரணை

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி, வாடிப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் இந்த கிராமத்தில், குடிநீரில் துர்நாற்றம் வீசியதை அடுத்து, சிலர் மேல்நிலை தொட்டியைச் சரிபார்த்தபோது அதில் மலம் கலந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது குறித்து ஊராட்சி செயலாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் […]

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார்

மேலக்கால் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர்கள் மூலம் பல லட்சம் ரூபாய் முறை கேடுகள் நடப்பதாக புகார் மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்ய கோரிக்கை மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் மேலக்கால் கச்சிராயிருப்புகீழ மட்டையான் பொட்டல்பட்டி சிவநாதபுரம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய சுமார் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இவர்களில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு […]

சோழவந்தான் அருகே குடிநீர் தொட்டியில் மலம் கலந்து இருப்பதாக புகார்

சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாக பொதுமக்கள் புகார் மதுரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்கு உட்பட்ட வாடிப்பட்டி ஒன்றியம் கருப்பட்டி ஊராட்சி அமச்சியாபுரம் கிராமத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்திருப்பதாக அமச்சியாபுரம் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் சுகாதாரத் துறையினர் நேரில் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!