சோழவந்தானில் முன்னாள் தமிழக முதல்வர் மு கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி பேரூர் மூன்றாவது வார்டு ரயில்வே பாலம் அருகில் சோலை ராம்குமார் தலைமையில் மு கருணாநிதியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இனிப்புகள் வழங்கப்பட்டது. திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் முன்னாள் அவைத் தலைவர் வேதநாயகம், முன்னாள் தொமுச செயலாளர் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது திருவிழா நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கொடியேற்றத்துக்கு முன்பாக சிறப்பு யாகம் நடைபெற்றது அர்ச்சகர் சண்முகம் பூஜைகள் செய்தார் அதனைத் தொடர்ந்து கொடியேற்றத்திற்கான பூஜை பொருட்களுடன் சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்தனர் பின்னர் கோவிலில் உள் பிரகாரத்தில் […]
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி முள்ளிப்ள்ளம் கிளைக் கழகம் சார்பாக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய முள்ளிப்பள்ளம் திமுக கிளைக் கழகம் சார்பாக முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் மு கருணாநிதியின் பிறந்தநாளை ஒட்டி அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது இனிப்புகள் வழங்கப்பட்டது. கிளைச் செயலாளர் கேபிள் ராஜா தலைமை வகித்தார். மகளிர் அணி சந்தான லட்சுமி முன்னிலை வகித்தார். இளங்கோவன், காமாட்சி ,பாஸ்கரன், ராஜமாணிக்கம், முத்துராமலிங்கம் மார்நாடு, தெய்வம், சங்கர் ,காளிமுத்து, யாகூப் கான், வண்டிக்காரராசு, ஆனந்தன், சக்திவேல், லீலாவதி, பாண்டி […]
வாடிப்பட்டி வார சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ.75 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் செவ்வாய்க்கிழமை தோறும் வார சந்தை நடைபெறுவது வழக்கம் இந்த வாரம் பக்ரீத் பண்டிகையையொட்டி ரூ. 75லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையானது. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகில் செவ்வாய்க்கிழமை தனியார் வாரச்சந்தை உள்ளது. இந்த சந்தையில் ஆடு,மாடு,கோழி மற்றும் காய்கறிகள் விற்கப்படுகிறது. இந்த சந்தைக்கு மதுரை,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 […]
வாடிப்பட்டி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் பரபரப்பு குற்றச்சாட்டு.மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
தமிழகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவி காலம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்த நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் நாச்சிகுளம் கருப்பட்டி இரும்பாடி காடுபட்டி திருவாலவாயநல்லூர் ரிஷபம் கட்டக்குளம் ராமையன்பட்டி கச்சை கட்டி விராலிப்பட்டி குட்லாடம்பட்டி உள்ளிட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் தங்களது பதவி காலம் வரை ஊராட்சிகளின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்த பணத்தை வழங்க கோரி வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி கிருஷ்ணவேணியிடம் கடிதம் மூலமாகவும் […]
முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழா . செம்மொழி நாள் விழா.
உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 101வது பிறந்தநாள் விழா மற்றும் செம்மொழி நாள் விழாவாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே கலைஞர் திரு உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் ஒன்றிய திமுக கழகத்தின் சார்பாக கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்ட […]
வீரவநல்லூர் நூலகத்தில் பாராட்டு விழா..
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் கிளை நூலக வாசகர் வட்டம் மற்றும் அம்பாசமுத்திரம் கிழக்கு சுழற்கழகம் இணைந்து +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா வாசகர் வட்ட தலைவர் ஆதம் இல்யாஸ் தலைமையில் நடந்தது. வாசகர் வட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் வரவேற்றார். இசக்கி சரவணன், அனந்தராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சுழற்கழக தலைவர் நவமணி எழுச்சி உரையாற்றி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். சுழற் கழக செயலாளர் (தேர்வு) பரமசிவன் […]
நாலாந்தர பேச்சு பேசுவதற்கு ஒரே மேடை போடுங்கள் நேருக்கு நேர் விவாதிக்க தயாராமுதல்வர் ஸ்டாலினுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் சவால்
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சரந்தாங்கி பாறைப்பட்டி கோடாங்கி பட்டி சேந்தமங்கலம் 66 மேட்டுப்பட்டி சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பூத் வாரியாக ஆய்வு மேற்கொண்டு ஆலோசனைகள் […]
பள்ளி மழலை குழந்தைகளுக்கு மலர் மாலை சூடி வரவேற்ற பள்ளி தலைமை ஆசிரியர்
உசிலம்பட்டியில் முதல் நாள், முதல் வகுப்பில் சேர்ந்த 100 க்கும் அதிகமான மழலைகளுக்கு மலர் மாலை சூடி, இனிப்பு வழங்கி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அமைந்துள்ள நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்றுவருகின்றனர்., விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் பள்ளி திறந்த சூழலில், இன்று புதிதாக முதல் வகுப்பில் நண்பகல் 12 மணிக்குள் 100 க்கும் அதிகமான மழலைகள் புதிதாக சேர்ந்துள்ளனர்.,புதிதாக சேர்ந்த இந்த […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா பக்தர்களின் நேர்ததி கடனுக்காக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காப்பு மஞ்சள் கயர்கள் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றுத்துடன் இன்று தொடங்க உள்ள நிலையில் கொடியேற்றம் தொடங்கியவுடன் ஆயிர கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் பால்குடம் அக்னி சட்டி பூக்குழி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவதற்காக காப்பு கட்டுவதற்கு கோவில் சார்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காப்பு மஞ்சள் கயிறுகள் கோவிலில் பணியாளர்கள் மூலம் தயார் செய்யப்பட்டு உள்ளது இரவு 7 மணிக்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றவுடன் இரவு முழுவதும் பக்தர்கள் காப்பு காட்டுவார்கள் […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதை ஒட்டி மின்னொளியில் ஜொலிக்கும் கோவில் வளாகம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றம் இன்று இரவு நடைபெறுவதை ஒட்டி கோவில் உள் பிரகாரம் வளாகம் கோவிலின் வெளிப்புறம் உள்ளிட்ட பகுதிகளில் மின்னொளி அமைக்கப்பட்டு இரவை பகலாக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர் மின்னொளி மற்றும் ஒலி ஒளி அமைப்பு ஏற்பாடுகளை பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவர் மணி முத்தையா வள்ளி மயில் தொழிலதிபர் டாக்டர் மருது பாண்டியன் குடும்பத்தினர் செய்துள்ளனர் இன்று […]
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு.!
CITU தொழிற்சங்க16 வது மாநில மாநாடு மற்றும் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது கோவையில் வருகின்ற 2025 நவம்பர் மாதம் 6.7.8.9. ஆகிய தேதிகளில் கோவையில் 42 ஆண்டுகளுக்கு பிறகு சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது இந்த மாநில மாநாடு வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் கோவையில் நடைபெற்றது இதில் சி பி ஐ எம் மாநில மாவட்ட நிர்வாகிகளும் சிஐடியு மாநில மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட சி ஐ டி யு […]
சமயநல்லூரில் பாஜக சார்பில் ஆபரேஷன் சிந்தூர்வெற்றி ஊர்வலம்
பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சமயநல்லூர் மண்டலின் சார்பாக மண்டல் தலைவர் அனுசியா முருகன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி முன்னிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாண்டி .ரவிசங்கர் மண்டல் பொதுச் செயலாளர் சரவணன் .சங்கர். முன்னால்ராணுவ பிரிவு பொறுப்பாளர்கள் அசோக்குமார் .ரமேஷ் .குமார் மூத்த நிர்வாகிகள் மதன்ராஜ் லோகநாதன் வீரபத்திரன் கருப்புசாமி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் சிவராமன் […]
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் அரசு வட்டார மருத்துவ மனை இயங்கி வருகிறது இந்த மருத்துவமனைக்கு திடீரென வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார் மருத்துவர்கள் வருகை பதிவேடு அரசு மருத்துவமனைக்கு வருகை தரும் பொது மக்கள் எவ்வாறு சிகிச்சை பெறுகின்றனர். எத்தனை பேர் தொடர் சிகிச்சைஎடுத்துக் கொள்கின்றனர் என மருத்துவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார் .சிகிச்சை பெற்று சென்றவர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து உடல் நலத்தை பார்த்துக் கொள்ளும் படி […]
ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம்விழா.!
திருவாடானை அருகே ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் வைகாசி திருவிழா மதுக்குடம் பால்குட உற்சவம் விழா. பக்தர்கள் திரளாக பங்கேற்பு ராமதாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே அ.கீழக்கோட்டை கிராமத்தில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு ஒவ்வோர் நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடப்பது வழக்கமாகி வருகிறது. திருவிழாவான இன்று பக்தர்கள் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் கருப்பசாமி கையில் அரிவாளுடன் பிள்ளையார் கோவிலில் இருந்து கரகம், மதுக்குடம், சந்தன குடம், […]
திருவாடானை பெரிய கோவில் வைகாசி விசாகத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ள ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வரர் சிவன் கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் இனிதே துவங்கியது. முன்னதாக, அனுஞ்சை மற்றும் வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, சுவாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் காட்டப்பட்டன. பின்னர், கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். மாலை இந்திர விமானத்தில் ஐம்பெரும் கடவுள்களின் […]
ஊரணியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி பலியான பரிதாபம்..!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பெரியகீரமங்கலம் கிராமத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்தில், ஊரணியில் மூழ்கி ஒன்பது வயது ரோஷினி மற்றும் பதினொரு வயது பிரசன்னியா ஆகிய இரு சிறுமிகள் உயிரிழந்தனர். அருகருகே உள்ள வீடுகளில் வசிக்கும் இந்த இரண்டு சிறுமிகளும் குளிக்கச் சென்று வீடு திரும்பாததால், அவர்களது பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அவர்களைத் தேடத் தொடங்கினர். ஊரணியின் கரையில் குளிப்பதற்கான பொருட்கள் (வாளி, துண்டு, சோப்பு டப்பா, செருப்பு) கண்டெடுக்கப்பட்டதால், ஊரணிக்குள் தேடுதல் வேட்டை […]
என் மனம் கொண்டான் மற்றும் கோரவள்ளி கிராமங்களில் உழவரைத் தேடி வேளாண்மை முகாம்.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோரவள்ளி மற்றும் என் மனம் கொண்டான் கிராமத்தில் உழவரைத் தேடி வேளாண்மை என்ற திட்டத்தினை முதல்வர் காணொளி காட்சி வாயிலாக துவங்கி வைத்தார் . இம்முகாம் வேளாண்மை உதவி இயக்குனர் , தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. உச்சிப்புளி வட்டார வேளாண்மை அலுவலர் மோனிஷா வரவேற்புரை வழங்கினார். உழவரைத் தேடி வேளாண்மை என்ற பெயருக்கு ஏற்ப அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து அந்தந்த கிராமங்களில் மாதத்தின் இரண்டாம் […]
இரும்பாடி கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா
சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பசாமி கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு இளைஞர்கள் சார்பாக ஐந்தாம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது.சோழவந்தான் அருகே இரும்பாடி மாயாண்டி மந்தை கருப்பன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு மாயாண்டி மந்தை கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்றது அதனை தொடர்ந்து இரும்பாடி இளைஞர்கள் சார்பாக 5ஆம் ஆண்டு அன்னதானம் நடைபெற்றது முன்னதாக சாமி பெட்டி தூக்கி கிராமத்தின் வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது ஆங்காங்கே பொதுமக்கள் தேங்காய் உடைத்து வழிபாடு […]
உரிய விலை இல்லாததால் இலவசமாக விநியோகிக்கப்படும் தர்பூசணி பழங்கள். விவசாயிகள் வேதனை
கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியல் சுமார் 15 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் விலை இல்லாததால் நிலத்திலேயே அழிப்பு டிராக்டர் ஆட்டோ இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்கள் தர்பூசணி பழங்களை அள்ளிச் சென்றனர் கிலோ 5 ரூபாய்க்கு விற்பதால் ஏக்கருக்கு இரண்டு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக விவசாயிகள் வேதனை அரசு நிவாரணம் வழங்க கோரிக்கைமதுரை மாவட்டம் கருமாத்தூர் அருகே கேசவம்பட்டியில் ஜெயராமன் என்பவரது தோட்டத்தில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் தர்பூசணி பயிரிடப்பட்டு இருந்தது போதிய […]
You must be logged in to post a comment.