மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் குருவித்துறை காடுபட்டி முள்ளிப்பள்ளம் தென்கரை உள்ளிட்ட கிளைக் கழகங்களில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பூத் கமிட்டியில் கலந்து கொண்ட சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார் இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகளிர் […]
Category: மாவட்ட செய்திகள்
காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..
தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் […]
விக்கிரமங்கலம் டாஸ்மாக்கில் வாடிக்கையாளரை தாக்கிய விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலத்தில் கீழப்பட்டி செல்லும் சாலையில் மலையூர் கிராமத்தில் அரசு மதுபானக் கடை உள்ளது இந்த கடையில் விற்பனைக்கு வரும் மதுபானங்களை தனியாருக்கு மொத்தமாக விற்பதாகவும் மது பிரியர்கள் விரும்பி கேட்கும் மதுபானங்கள் இருந்தாலும் அதை தர மறுப்பதாகவும் விற்பனையாளர் பவுன் என்பவர் மீது தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தது இந்த நிலையில் நேற்று இரவு விக்கிரமங்கலத்தை சேர்ந்த மோகன் என்பவர் மது வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடைக்கு சென்று உள்ளார் […]
வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கனரக வாகனம் மோதி விபத்து.கால்கள் துண்டான நிலையில் இறந்தவரின் உடலை 16 கிலோ மீட்டர் இழுத்து சென்ற அவலம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடுகபட்டியைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் சூரிய பிரகாஷ் (30) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வாடிப்பட்டியில் இருந்து வடுகபட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டிபட்டி பெட்ரோல் பங்க் அருகே ஹரியானாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி இடது புறம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மோட்டார் சைக்கிள் சிக்கியது. அதை உணராமல் லாரி டிரைவர் லாரியை 16 கிலோமீட்டர் வரை ஓட்டிக்கொண்டு சென்றார். இதை பின்னால் […]
அலங்காநல்லூரில் தீரன் சின்னமலை சிலைக்கு அதிமுக சார்பில் மரியாதை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஐயப்பன் கோவில் முன்பு உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன் மாவட்ட விவசாய அணி இனைச் செயலாளர் வாவிடமருதூர் ஆர்.பி. குமார் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் கல்லணை மனோகரன் […]
விக்கிரமங்கலம் அரசு கள்ளர் பள்ளியில் 100 நாள் சவால் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறன், கணித அடிப்படைத் திறன் ஆய்வு
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட விக்கிரமங்கலத்தில் உள்ள அரசு கள்ளர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாள் சவால் ஆய்வு நடைபெற்றது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகள் 100% தமிழ் ஆங்கிலம் வாசிப்பு திறமை கணிதம் கணக்கிடும் திறமை ஆகியவற்றை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் .இதன் பேரில் அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கக்கூடிய மாணவ மாணவிகள் தமிழ் ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கணித திறன் ஆகியவற்றில் 100% கற்றிருக்க […]
வாடிப்பட்டியில்சாலையோரத்தின் இருபுற ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் மாவட்ட உரிமையியல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தொடங்கி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கிடங்கு வரை உள்ள நகர்புற சாலையில் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பு இருப்பதாக போடிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த தனிநபர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில்வாடிப்பட்டியில் சாலையின் இருபுறமும் தேசிய நெடுஞ்சாலை தறையினர் கடந்த மாதம் அளவீடு செய்தனர்.அதில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த கடைகள் தாழ்வாரங்கள் சிமெண்ட் தரைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள்அகற்றிட கடந்த வாரம் […]
உசிலம்பட்டி நகர மன்ற கவுன்சிலர் கூட்டம்
உசிலம்பட்டி நகராட்சி ஆணையளர் மீது நகர் மன்ற உறுப்பினர்கள் சரமாரி குற்றச்சாட்டு – அடிப்படை பணிகளுக்கு கூட நிதி ஒதுக்குவதில்லை என வாக்குவாததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.,
சோழவந்தான் அருகே இரும்பாடி அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவில் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் திருக்கோவிலின் 54 ஆம் ஆண்டு பங்குனி பொங்கல் திருவிழா நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் பக்தர்கள் பொதுமக்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அக்னி சட்டி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி மற்றும் பக்தர்கள் அழகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவருக்கு பூக்களால் அலங்காரம் செய்துசிறப்பு அபிஷேகம் தீபாராதனை […]
சோழவந்தான் அருகே தென்கரை புதூரில் இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர பட்டியலின மக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் தென்கரை ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் பட்டியலின மக்களின் மயானத்திற்கு செல்லும் பொதுமக்கள் இறுதி சடங்கு செய்யும் இடமான இடுகாடு பகுதியில் தனி நபர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதால் இறந்தவர்களுக்கு இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாகவும் ஆகையால் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து பட்டியலின மக்களின் இடுகாட்டு இடம் மற்றும் பாதையை மீட்டுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த கிராமத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட பட்டியலின […]
சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவி ஏற்பு விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரையில் பாஜகவின் வாடிப்பட்டி தெற்கு மண்டல் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற்றது வாடிப்பட்டி தெற்கு மண்டல தலைவராக முத்துப்பாண்டி பதவி ஏற்றார் இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் முன்னிலை வகித்தார் ..சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல்சாமி மாவட்ட பொதுச் செயலாளர்கோசா பெருமாள் மாவட்டச் செயலாளர் ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர் சோழவந்தான் மண்டல் தலைவர் கதிர்வேல் வாடிப்பட்டி வடக்கு […]
சோழவந்தான் அருகே திருவாலவாயநல்லூரில் ஆதிமுக சார்பில் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிறப்புரை
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக கிளைக் கழக பூத்கமிட்டி கூட்டம் திருவாயநல் லூரில் நடந்தது. ஒன்றிய செயலாளர் எம்.காளிதாஸ் தலைமை தாங்கினார் கூட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் பூத் கமிட்டி கிளைக் கழக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம் வி கருப்பையா மாணிக்கம், எஸ் எஸ் சரவணன், மாநில அம்மா பேரவை இணைச் […]
ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்கள்..
ஆதரவற்ற நிலையில் இறந்த மகமாயி பாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்களை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் மூலமாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கான கட்டணமில்லாத இல்லம், அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு […]
சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு தியாகி நாள் அனுசரிப்பு..
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவணபாபு உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா ஆலோசனைப் படியும் அனுசரிக்க பட்டது. நிகழ்ச்சியில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் கோவிலில் தினசரி அன்னதான துவக்கம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பொய்கை விநாயகர் கோவிலில் தினசரி அன்னதானத் துவக்கப்பட்டது. சோழவந்தான் திண்டுக்கல் சாலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் முற்காலத்தில் சோழ மன்னர்கள் ராணி மங்கம்மாள் காலத்தில் அன்னதானம் நடைபெற்று வந்தது. தற்போது ராணி மங்கம்மாள் சத்திரம் மேல்நிலைப் பள்ளியாக மாற்றமடைந்து உள்ளது. கோவில் சிதிலம்அடைந்ததன் காரணமாகவும் ஆக்கிரமிப்புகளாலும் சூழப்பட்டு அன்னதானம் நாளடைவில் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது இந்து சமய அறநிலைத்துறையின் மூலம் கோவில் கும்பாபிஷேகத்திற்காக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் […]
சோழவந்தானில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம் சோழவந்தானின் 18 வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் பேரூர் செயலாளர் முருகேசன் வரவேற்புரை ஆற்றினார் அமைப்புச் செயலாளர் மகேந்திரன்முன்னாள் எம்எல்ஏக்கள் எம்வி கருப்பையா மாணிக்கம் வாடிப்பட்டி முன்னாள் சேர்மன் ராஜேஷ் கண்ணா செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா ஆகியோர் முன்னிலை […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆவது ஆண்டு பால்குடம் நடைபெற்றது .திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்பு […]
சோழவந்தான் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை […]
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்..
ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், தென்காசி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நகர்மன்ற தலைவர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தென்காசி கொடி மரத்திடலில் உலமா சபை மாவட்ட தலைவர் […]
நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கத் தடை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் […]
You must be logged in to post a comment.