திருவாடானை அருகே குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளான கிராம மக்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே ‘தேளூர் கிராமத்தில் 52 குடும்பங்கள் உள்ள குடியிருப்பு பகுதிக்கு கடந்த ஆறு வருடமாக குடிதண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லையென கூறப்படுகிறது. இது தொடர்பாக, பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்காத நிலையில், தற்போது பணம் செலவு செய்து விலை கொடுத்து குடிநீர் வாங்குவதாகவும் அப்படி வாங்கி குடிக்கும் தண்ணீரினால் […]
Category: மாவட்ட செய்திகள்
திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா நம்புதாளை அருகே ‘சம்பை’ கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரின் மனைவி ராணி (35) இவரது வீட்டிற்கு செல்ல பாதை இல்லை எனவும், தானும் தனது பிள்ளைகளும் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகாத் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கடைசியாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த நிலையில், மாவட்ட ஆட்சியர் திருவாடானை தாசில்தார் அலுவலகத்தை அணுகி தீர்வு பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக சொல்லப் படுகிறது. இதனையடுத்து, இன்று தாசில்தார் மூலம் தீர்வு […]
வாடிப்பட்டி அருகேகழிவு நீர் குழியில் விழுந்து சிறுவன் பலி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே ஆண்டிப்பட்டி நெருஞ்சி பட்டியை சேர்ந்தவர் சந்தன கருப்பு (வயது 30) இவரது மனைவி கிருஷ் ணவேணி 27 இவர்களுக்கு கேசவ ன் (4) ரோஷன் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர் கணவன் மனைவி இரு வரும் கட்டிட தொழி லாளர்கள். இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு வீட்டின் அருகில் விளை யாடிக் கொண்டிருந் தனர். அப்போ து அந்த பகுதியில் உள்ள சின்டெக் ஸ் தொட்டி கழிவு நீர் […]
கல்வி இன்டர்நேஷனல் பள்ளியில் Mobicip இணைந்து நடைபெற்ற வேலைவாய்ப்பு இயக்கம் – 12 மாணவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்
கல்வி குழுமத்தின், கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளியில், அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான Mobicip உடன் இணைந்து வேலைவாய்ப்பு இயக்கம் (Placement Drive) நடைபெற்றது. இந்த நிகழ்வில் 12 மாணவர்கள் Mobicip நிறுவனத்திலிருந்து நேரடியாக தேர்வு செய்யப்பட்டு, உடனடியாக வேலைவாய்ப்பு ஆணை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. Senthilkumar தலைமையேற்று நடத்தினார். Mobicip நிறுவனத்தின் Founder & CEO திரு. Suren Ramasubbu மற்றும் Co-founder & CTO Pradeep Adhipathi ஆகியோர், […]
சோழவந்தான் அருகே மேலக்காலில் தாழ்வாக சென்ற மின்வயர்கள்ஒரே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் பொதுமக்களின் நலன் கருதி மின்சார துறை அதிகாரிகள் உடனடியாக தாழ்வாக செல்லும் மின் வயர்களை உயர்வான பகுதிகளுக்கு மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தனர் இதுகுறித்து செய்தி கடந்த வியாழக்கிழமை பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளிவந்திருந்தது இந்த நிலையில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்த கீழமாத்தூர் மின்வாரிய […]
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோயிலில் முதல் பிரதிஷ்டை தின விழா .!
கணபதி ஹோமம் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு ஸ்ரீ வல்லபை ஐயப்பன் ஆலயம் முதல் பிரதிஷ்டை தின விழா ராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரம் ஸ்ரீவல்லபை ஐயப்பன் ஆலயத்தில் கடந்த 13.03.2005ம் தேதி அன்று சபரிமலை தலைமை குருக்கள் மகா ஸ்ரீ கண்டரு ராஜீவரரு அவர்கள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, அதே மார்ச் 13ல் பிரதிஷ்டை தின விழா நாளில் காலை கணபதி ஹோமம், அஷ்டபிஷேகம் செய்யப்பட்டு சிறப்புடன் பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களின் பஜனை கோஷம் மற்றும் […]
சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது
தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்தும் விலைவாசி உயர்வை கண்டித்தும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழழகன் தலைமை தாங்கினார் அமைப்புச் செயலாளர் மகேந்திரன் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் முன்னாள் எம்எல்ஏஎம்.வி கருப்பையா முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா அம்மா பேரவை வெற்றிவேல் துரை தன்ராஜ் […]
அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுவதால் மாணவர்கள் அச்சம் பள்ளியை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவிற்கு உட்பட்ட ‘பனையடியேந்தல்’ ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் இருநூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப்பள்ளி கடந்த 03-11-2021 அன்று 1.62 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பள்ளிக்கட்டிடம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தரமற்ற முறையில் இந்த கட்டிடப் பணி நடந்துள்ளதால் அவ்வப்போ கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்து மாணவ மாணவிகள் காயம் அடைந்து வருகின்றனர். புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளி கட்டிடத்தின் […]
மேலக்கால் ஊராட்சியில் தாழ்வாக செல்லும் மின்வயர்களால் விபத்து ஏற்படும் அபாயம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின் வயர்கள் தாழ்வாக செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் தெற்கு தெரு விக்கிரமங்கலம் செல்லும் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் வீடுகளின் அருகிலேயே மிகவும் தாழ்வாக மின்வையர்கள் செல்கிறது இது குறித்து மின்வாரிய அலுவலர்கள் ஊராட்சி நிர்வாகம் ஆகியோரிடம் பலமுறை எடுத்துச் சொல்லியும் மின்வயர்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை இதன் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது மேலும் […]
பேராபத்தில் விவசாயம்; விவசாயிகளை காக்க துரை வைகோ எம்.பி வலியுறுத்தல்..
தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில், வறட்சி, பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை வெள்ள பாதிப்பு, வேளாண் விளைப் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் காட்டுப் பன்றிகளின் பெரும் அட்டூழியத்தால் மொத்தமாக விவசாயம் முடிக்கப்பட்டு விடும் அபாயத்தில் உள்ளது. இந்நிலையில், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை அழித்து வரும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு […]
காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர் திருவிழா.!
கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாதர் கோவிலில் தேர்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் உள்ள வைணவ தலங்களில் மிகவும் புகழ் பெற்றது காரமடையில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவிலாகும். பழமை வாய்ந்த இந்த கோவிலில் மாசிமக திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில் உள்ள காரமடை அரங்கநாத சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இக்கோயிலுக்கு வருகை […]
மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பில் தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் முகாம்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி தொழில் உரிமம் கட்டணம் புதுப்பித்தல் மற்றும் புதிய உரிமம் பெறுதல் தொடர்பான சிறப்பு முகாம் சங்கர் நகர் பகுதி குடிநீர் மேல்நிலைத் தொட்டி காவலர் குடியிருப்பு அரையில் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் நடைபெறுகிறது இம்முகாமில் புதிய சொத்து வரியை அனிபா பெற்றுக்கொண்டார், நடைபெறும் முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் சீனிவாசன், காயத்ரி, சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர் மற்றும் மகாராஜா, வருவாய் உதவியாளர் கார்த்திக் மற்றும் மேட்டுப்பாளையம் நகராட்சி பணியாளர்கள் உடன் […]
இலஞ்சி பி.எட் கல்லூரியில் மகளிர் தின விழா..
இலஞ்சி டி.எஸ். டேனியல் பி.எட் கல்லூரியில் நடந்த மகளிர் தின விழாவில், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானு ப்ரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசு மற்றும் விருதுகளை வழங்கினார். தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா நடந்தது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். முதல்வர் (பொ) கலா வென்சிலா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஷீலா நவரோசி வரவேற்றார். தென்காசி மாவட்ட தீயணைப்பு […]
ஒன்றிய அமைச்சரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்..
தென்காசியில் ஒன்றிய கல்வி அமைச்சரை கண்டித்து, கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் கல்விக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ. 2,000 கோடி நிதியை வழங்காமல், ஒன்றிய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றால் தான் நிதி வழங்குவோம் என பேசி வருகிறார். ஒன்றிய அமைச்சரின் இந்த பேச்சை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினர். அதற்கு தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு எம்.பி-க்களை அவமதிக்கும் வகையில் […]
மதுரை சிக்கந்தர் சாவடி பகுதியில் இளைஞர் கத்தியால் குத்தி கொலை போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் சிக்கந்தர் சாவடியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் கமலேஷ் என்ற எம்பிஏ பட்டதாரி இளைஞர் கோவையில் டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் வேலை பார்த்து வருகிறார்* இந்த நிலையில் நேற்று மதுரை வந்த இளைஞர் இன்று மாலை சிக்கந்தர் சாவடி அலங்காநல்லூர் மெயின்ரோட்டில் நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த போது தகராறு ஏற்பட்டதில் சாலையின் நடுவே கமலேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞரை ஆம்புலன்சு மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வரும் […]
தென் மாவட்ட பகுதிகளில் மழை மேலும் தீவிரமடைகிறது
நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை தீவிரமடைய உள்ளது என தென்காசி வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், குமரி கடலில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. தூத்துக்குடி, நெல்லை, இராமநாதபுரம், தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் இன்று இரவு முழுவதும் விடிய விடிய […]
சோழவந்தானில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா
சோழவந்தானில் அரசு உதவி பெறும் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் 71வது ஆண்டு விழா நடந்தது பள்ளி தாளாளர் மார்ட்டின் ஜோசப் தலைமை தாங்கினார். சமயநல்லூர் உதவி பங்குத்தந்தை ராஜா முன்னிலை வகித்தார். ஜெயராணி ஆசிரியை வரவேற்றார். தலைமை ஆசிரியை சாந்திஅமலா ஜோஸ்பின்ஆண்டறிக்கை வாசித்தார். சோழவந்தான் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், வட்டார கல்வி அலுவலர்கள் ஷாஜகான், அகிலத்து இளவரசி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் சபரி முத்து, ஜான்சேவியர், மரியஅந்தோணி ஆகியோர் பரிசு வழங்கினார்கள். முன்னாள் ஆசிரியர்கள் அந்தோணிராஜ், ராஜா, […]
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம்அரசு பள்ளி நூற்றாண்டு விழா வெங்கடேசன் எம் எல் ஏ பங்கேற்று சிறப்புரை
சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி நூற்றாண்டு விழா விளையாட்டுப் போட்டி ஆண்டு விழா நடந்தது. சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ விழாவிற்கு தலைமையேற்று குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மதசார்பற்ற ஜனதா தளகட்சி நிர்வாகி செல்லப்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஜெயக்கொடி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வக்கீல் முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரேகாவீரபாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி வரவேற்றார். ஆசிரியை […]
புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.!
புது மடத்தில் அரசு நிலத்தை தனிநபர் சொந்தமாக்க முயற்சி.! தொழுகை விடாமல் இடையூறு செய்வதால் ஜமாத்தார்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு .!! ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் கிராம மக்கள் மஸ்ஜிதே நூர் ஜமாத் நிர்வாகத்திற்கு உட்பட்டு சுமார் 500க்கும் மேற்பட்டோர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அந்த கிராம மக்கள் மீனவத் தொழில் செய்து வருகின்றனர் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருப்பதால் பெருநாள் தொழுகை தொழுவதற்கு போதுமான இடவசதி இல்லாத நிலையில் அரசுக்கு சொந்தமான நிலத்தின் 33 […]
தேவகோட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பாக மாவட்ட தலைவர் குமரேசன் தலைமையில் ஊழியர்களுக்கு எதிராக செயல்படுதல், சத்துணவு ஊழியர்களை ஒருமையில் பேசுதல், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன் – ஐ கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் பல்வேறு சங்கத்தின் மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள், வட்டார தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க உறுப்பினர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.