சென்னையில் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்குதல் நடத்தியதை கண்டித்தும் மற்றும் திருச்சியில் வழக்கறிஞர் அழகேசன் தாக்கப்பட்டதை கண்டித்தும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தொடர் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த மூன்று நாட்களாக நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் என்று நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.மேலும் வழக்கறிஞர் சங்க தலைவர் வீர பிரபாகரன் தலைமையில் வழக்கறிஞர்கள் உசிலம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து உசிலம்பட்டி தேவர் சிலை அருகே தமிழகத்தில் வழக்கறிஞர் தாக்கப்படுவதை […]
Category: மாவட்ட செய்திகள்
குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம்
சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கூறி பத்துக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி கணேசபுரம் பொம்மபன் பட்டி அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளது சுமார் 4,000 மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் கருப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை எனக் கூறி பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலையில் […]
சோழவந்தான் சனீஸ்வரன் கோவிலில் ஐப்பசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் ஐப்பசி மாத விசாகத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது முன்னதாக பல்வேறு திரவியங்களால் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூஜைகள் செய்தார் இதில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சனீஸ்வர பகவானை வழிபட்டு சென்றனர்
சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் மழையால் சேதமடைந்த சாலை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் பேருந்து நிறுத்தப் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கும் பள்ளி மற்றும் அருகில் வைகை ஆற்று மேம்பாலம் மற்றும் முக்கியமான ஆன்மீக தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் கூடும் இடமான சாலையின் நடுவில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் உயிர் சேதம் […]
தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் 80 ம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு வைப்பவத்துடன் விழா துவங்கியது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள புராண சிறப்புமிக்க பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமய ஸ்ரீ சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் 80 ம் ஆண்டு கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டு வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது இத் திருக்கோவிலில் தனி சன்னதி கொண்டு முருகப்பெருமான் பாலதண்டாயுதபாணியாக அருள்பாலிக்கு வருகிறார் ஆண்டு தோறும் கந்த சஷ்டி பெருவிழா பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்த ஆண்டுக்கான விழா முருகப்பெருமானுக்கு காப்பு […]
கனமழையால் 1000 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கிய நெற்பெயர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் தொடர் கன மழையால் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நீரில் மூழ்கிய நெல் பயிர்கள் வேதனையுடன் விவசாயிகள்…. தமிழ்நாடு அரசு காப்பீடு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை.துரை மாவட்டம் சோழவந்தான் பகுதி மதுரை மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக அழைக்கப்படுகிறது இங்கே முல்லை பெரியார் பாசனம் மூலம் நெல் பயிர்கள் சுமார் 20000 ஏக்கருக்கு மேல் பயிரிடப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த ஒரு வார காலமாக தொடர்ந்து விடாது மழை […]
நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காதால் 5000 மூடை நெல் மழைநீரில் நனைந்து சேதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்காததால் 5000 மூடைகளுக்கு மேல் கொள்முதல் நிலையங்களில் தேங்கி அழுகி வீணாகும் நிழல்கள் மழைநீரில் நனைந்த நெல்கலை உலர்த்தி காய போடும் விவசாயிகளின் பரிதாப நிலை பல இடங்களில் நெல் முளைத்து காணப்படுவதால் போதிய விலை கிடைக்க வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை அரசு உடனடியாக கொள்முதல் நிலையங்களை திறந்து நெல்களை குடோன்களுக்கு எடுத்துச் செல்ல அரசுக்கு கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் அதிக அளவில் […]
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு காப்பு கட்டி விரதத்தை துவக்கிய பக்தர்கள்
மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு மூல நாதர் சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டுபக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூல நாத சுவாமி திருக்கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்தசஷ்டி பெருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கி மகாபூர்ணாதியுடன் நிறைவுற்ற யாகசாலை பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தேவசேனா முருகப்பெருமானுக்கு விசேஷ பூஜைகள் பால் தயிர் […]
சோழவந்தான் அருகே கருப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறை மீது மரம் விழுந்ததில் விடுமுறை தினம் என்பதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் தகவல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர் இந்த பள்ளியின் அருகே கால்வாய் ஒன்று ஆபத்தான நிலையில் செல்வதாக ஏற்கனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்திருந்தனர் மழைக்காலங்களில் கால்வாய் முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதும் அருகில் உள்ள சுற்று சுவர் ஈரப்பதம் அதிகமாகி சிறிது சிறிதாக பெயர்ந்து விழுவதும் ஆகையால் சுற்றுச்சுவரை அகலப்படுத்த வேண்டும் மேலும் கால்வாயை அகலப்படுத்தி […]
வாடிப்பட்டி அருகேகார் மீது மரம் விழுந்து விபத்து. தீயணைப்புத் துறையின் தாமதத்தால் போக்குவரத்து பாதிப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளமாக தேங்கி நிற்கிறது. மேலும் கண்மாய், குளங்களுக்கு அதிக அளவு நீர் வரத்து வர தொடங்கியுள்ளது. தொடர் மழையால் மாலை 4 மணிக்கு பாலமேட்டை சேர்ந்த கால்நடை மருத்துவர் தங்கபாண்டியன் என்பவர் பாலமேட்டில் இருந்து காரில் புறப்பட்டு வாடிப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார். – அந்த கார் எல்லையூர் பிரிவை தாண்டி வந்த போது திடீரென்று எதிர்பாராத விதமாக […]
வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது இந்நிலையில், 16, 17, 18 ஆகிய 3 நாட்கள் பரவலாக பலத்த மழை பெய்தது. மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித் தலைவருடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய உணவு, […]
சோழவந்தானில் சனி பிரதோஷ விழா
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை வடகரையில் விசாக நட்சத்திரத்திற்குரிய திருத்தலமான அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது விழாவையொட்டி சக்கரத்தாழ்வார் யோக நரசிம்மர் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணை நெய் திரவியம் மஞ்சள் பொடி மா பொடி உள்ளிட்ட பல்வேறு […]
அலங்காநல்லூர் அருகே தண்டலை ஊராட்சியில் தனியார் மதுபானக்கூடம் திறக்க கிராம மக்கள் எதிர்ப்பு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தண்டலை ஊராட்சியில் போன்ஸ் ரிக்ரியேசன் கிளப் என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அலங்காநல்லூர் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தண்டலை பகுதியில் எந்த ஒரு மதுபான கடையும் இல்லாத சூழ்நிலையில் தற்போது போன்ஸ் என்ற பெயரில் மதுபான கூடம் வருவது இந்த பகுதியில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எனவே அதனை உடனடியாக கருத்து நிறுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் தனியார் மதுபான கூடம் அமைக்க வழங்கப்பட்ட […]
பொதுமக்களிடம் பிரதம மந்திரி மின் திட்ட அனுபவம் குறித்து கேட்டறிந்த மின்வாரிய செயற்பொறியாளர்
மதுரை மாவட்டம் சமயநல்லூர் உட்கோட்டம் தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜெயலட்சுமி கூடல் நகர் பகுதியில் பிரதம மந்திரியின் சூரிய ஒளி மின் திட்ட அனுபவம் குறித்து பயனாளிகளிடம் கேட்டறிந்தார் மேலும் நுகர்வோர்களிடம் சோலார் மின் இணைப்பு வழங்குவதில் உள்ள முன்னுரிமைகளை பற்றி தகவல் தெரிவித்தார் தொடர்ந்து மின் நுகர்வோர் மற்றும் மின்வாரிய பணியாளர்கள் இடையே ஒரு சிறிய கலந்துரையாடலை நிகழ்த்தினார் மின் பயனாளிகளுக்கு ஆவண செய்வதாக உறுதி அளித்தார். தொடர்ந்து எந்த ஒரு தகவலுக்கும் தன்னை […]
குளியல் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் திறப்பு விழா
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் 6வது வார்டில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று குளியல் தொட்டி மற்றும் சின்டெக்ஸ் தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. 6வது வார்டு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குளியல் தொட்டி அமைக்க வேண்டும் என்று பேரூராட்சியில் மனு அளிக்கப்பட்டு இருந்தது அந்த இடத்தை பார்வையிட்ட பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நிதி உதவி செய்து குளியல் தொட்டி அமைத்துக் கொடுத்தனர். பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பேரூராட்சி மன்ற தலைவர் பால்பாண்டியன் நிர்வாக அதிகாரி ஜெயலட்சுமி […]
உசிலம்பட்டி அருகே கிணற்றிலிருந்த மோட்டார் திருட்டு.மர்ம நபர்கள் கைவரிசை.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அய்யணார்குளம் கிராமம்.இக்கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி மகன் ரவீந்திரன்.விவசாயி.இவருக்கு சொந்தமான தோட்டம் அய்யணார்குளம் அருகே போடுவார்பட்டி கிராமத்தில் உள்ளது.இதில் வாழை மரங்கள் பயிரிட்டுள்ளார்.இந்நிலையில் ரவீந்திரன் காலையில் வழக்கம் போல தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது கிணற்றிலிருந்த மோட்டார் ஷாட்டர் மற்றும் மின் வயர்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.ஊரின் ஒதுக்குப்புறத்தில் உள்ள தோட்டம் என்பதால் இரவினில் மர்hமநபர்கள் மோட்டாரைத்திருடியது தெரிய வந்தது.உடனடியாக இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலிசார் […]
சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றது திருவிழாவில் சுமார் 600க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து மேலக்கால் கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக வந்து காளியம்மன் கோவிலை வந்தடைந்தனர் பின்னர் கோவில் முன்பு வைத்து கும்மி பாட்டு பாடினர் தொடர்ந்து காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது இன்று காலை கோவிலில் இருந்து வைகை ஆற்றிற்கு ஊர்வலமாக சென்று […]
சோழவந்தானில் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழஙகப்பட்டது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் வார்டு கவுன்சிலரும் தொழிலதிபருமான எம் கே ராஜேஷ் தனது பிறந்தநாளை ஒட்டி வேலை மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேனா பென்சில் நோட்புக் உள்ளிட்டவைகள் மற்றும் கருணை இல்லங்களுக்கு உணவுகள் வழங்கினார் முன்னதாக சோழவந்தானில் உள்ள அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழிலதிபர்கள் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர்அவருக்கு சால்வை அணிவித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். சோழவந்தான் பேரூர் திமுக செயலாளர் வார்டு கவுன்சிலர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய […]
சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழாவில் பெண்கள் உள்பட பொதுமக்கள் பால்குடம் மற்றும் பறவை காவடிஎடுத்து நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கல் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை செவ்வாய் சாட்டுதளுடன் தொடங்கியது தொடர்ந்து பால்குடம் அக்னி சட்டி முளைப்பாரி எடுக்கும் பக்தர்கள் காப்பு கட்டி தங்கள் விரதத்தை தொடங்கிய நிலையில் நேற்று இரவு காளியம்மன் கோவில் முன்பு 500க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது கோவில் முன்பு நீண்ட வரிசையில் இருபுறமும் பெண்கள் திருவிளக்கு வைத்து விளக்கேற்றி காளியம்மனை […]
சோழவந்தானில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சுப ஸ்ரீரியின் குடும்பத்திற்கு பள்ளி சார்பில் நேரில் சென்று ஆறுதல்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி 5வது வார்டு வைத்தியநாதபுரம் பகுதியை சேர்ந்த துளசி தேவி தவமணி இவர்களின் மகள் சுபஸ்ரீ சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்த வந்த நிலையில் பள்ளி விடுமுறை நாளான கடந்த சனிக்கிழமை மதியம் தனது வீட்டு மாடியில் காய போட்டு இருந்த துணிகளை எடுக்கச் சென்றபோது மாடி அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த சம்பவம் பெரும் […]
You must be logged in to post a comment.