சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறத்தில் ஆக்கிரமிப்புகளைஅகற்ற வலியுறுத்தி விவசாய சங்கம் சார்பில் மறியல் செய்ய முயற்சி காவல்துறையினரின் சமரசத்தால் மரியல் தற்காலிகமாக ஒத்திவைப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கண்ணுடையாள்புறம் கிராமத்தில் மூணு கிலோ மீட்டர் தூரம் வரையுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வேல்பாண்டி தலைமையில் மறியல் செய்ய முயன்றனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காடுபட்டி காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மன்னாடிமங்கலம் ஊராட்சி நிர்வாகம் வருவாய் துறையினர் ஆகியோர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு உடனடியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தார் சாலை அமைக்க […]

உசிலம்பட்டியில் கிராம நிர்வாக அலுவலரை முறைகேடாக பணியமர்த்திய கோட்டாச்சியரை கண்டித்து விடிய விடிய கிராம நிர்வாக அலுவவவலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜீலை மாதம் வரை நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும். பின்; கஸ்தூரி என்பவரை நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக உசிலம்பட்டிவருவாய் கோட்டாச்சியர் சண்முக வடிவேல் பணி அமர்த்தியுள்ளார்.இந்நிலையில் மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்கு வந்த ரஞ்சனி, […]

திருவேடகத்தில் ஆடி அமாவாசை முன்னிட்டு கடும் போக்குவரத்து நெருக்கடி. 3 கிலோமீட்டர் தூரம் வரிசையில் நிற்கும் வாகனங்கள்

ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் வைகை ஆற்றில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர் இந்த நிலையில் காவல்துறையினர் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிலையில் போக்குவரத்தையும் சீர் செய்ய முடியாத நிலையில் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது குறிப்பாக திருவேடகத்திலிருந்து மேலக்கால் வைகை புதுக்காலம் வரை […]

மதுரை அலங்காநல்லூர் அருகே வாலிபர் அடித்துக் கொலை. தகாத உறவை கைவிட மறுத்ததால் கள்ளகாதலனை அடித்து கொன்று கணவர் போலீசில் சரண்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் கல்குவாரியில் பொக்லைன் இயந்திரம் ஆப்பரேட்டராக பணியாற்றிய யோகேஷ்வரன் (22) என்பதும்அதே கல்குவாரியில் பணியாற்றிய ராஜேஸ் (35) என்பவரின் மனைவியுடன் இறந்த யோகேஷ்வரன் இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழகி தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும்,மனைவி, யோகேஷ் இருவரையும் பலமுறை கண்டித்தும் […]

வருவாய் கோட்டாச்சியரை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டாமங்கலம் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றியவர் ரஞ்சனி, மகப்பேறு விடுப்பிற்காக கடந்த ஜனவரி மாதம் சென்றிருந்தாக கூறப்படுகிறது., கடந்த ஜூலை 1 ஆம் தேதி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடந்த கலந்தாய்வின் போது கூட நாட்டாமங்கலம் கிராமத்தை காலி இடமாக காட்டாமல் கூடுதல் பொறுப்பிலேயே ஒரு கிராம நிர்வாக அலுவலரை பணி அமர்ந்தி வைத்திருந்ததாகவும்., கலந்தாய்வு முடிந்து 5 ஆம் தேதி வெளியான உத்தரவில் வகுரணி கிராமத்தை தேர்வு செய்த கஸ்தூரி […]

வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் சி புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது

ன்னாள் அமைச்சருமான ஆர் பி உதயகுமார் ஆலோசனையின் பேரில்வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சி. புதூர் ஊராட்சியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் கலந்து கொண்டு அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினார் இளைஞர் பாசறை மாவட்ட இணைச் செயலாளர் மு.கா மணிமாறன் வரவேற்புரை ஆற்றினார் நிகழ்ச்சியில் விருகை தர்மர் விவசாய அணி மாவட்ட இணைச் செயலாளர் வாவிட […]

சோழவந்தானில் ஆபத்தான நிலையில் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள்

சோழவந்தான் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பேருந்துகளில் பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஆகையால் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பெற்றோர்கள் போக்குவரத்து கழகத்திற்கும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்கும்கோரிக்கை விடுத்துள்ளனர் சோழவந்தான் பகுதியிலுள்ள விவேகானந்தா மெட்ரிகுலேஷன் பள்ளி முள்ளி பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாச்சிகுளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி போன்ற பள்ளிகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் […]

விக்கிரமங்கலம் அருகே கோவில்பட்டியில் சாலையில் வீணாகும் குடிநீர்

விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கோவில்பட்டி மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையில் தோன்டிய பள்ளத்தை சரிவர மூடாததால் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி செல்வதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இந்த பகுதியில் குடிநீருக்காக பைப் லைன் கொண்டு செல்லும் பணிகளுக்காக சாலையில் தோண்டிய பள்ளங்களை சரிவர மூடாததால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீர் வீணாக செல்கிறது பைப் வேலைகள் முடிந்த பின்பு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை அதிகாரிகள் […]

கவணம்பட்டி ஊரணியை மீட்டெடுக்க வலியுறுத்தி உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளரிடம் மனு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சி மாவட்ட செயலாளர் முனியப்பன் மாவட்ட தலைவர் மணிவண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நகர்மன்ற துணைதலைவி தேன்மொழி மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன் இடம் கவண்டனபட்டி; ஊரணியில் சேரும் கழிவு நீர் மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றி ஊரணியை சுத்தப்படுத்த கோரிக்கை வைத்து மனு கொடுத்தனர். இம் மனுவில் நகராட்சி பகுதியில் 12 வார்டுகளுக்கு மேல்; சாக்கடை கழிவு நீர் கலந்து கவண்டன்பட்டியில் உள்ள் ஊரணியில் கலந்து தேங்குகின்றன ஊரணி […]

வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் சார்பில் கட்ட குளத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கட்டக் குளத்தில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி அன்னதானமும் வழங்கினார்முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் தமிழரசன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா விவசாய அணி […]

உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் – மது போதையில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை, ஆட்டோ ஓட்டுநர் அறிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், பந்தல் அமைக்கும் தொழிலாளியான இந்த இளைஞர், உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது அண்ணன் கார்த்திக் மகளை பார்க்க வந்துள்ளார்., இரவு நேரமானதால் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே தூங்கி கொண்டிருந்தாக கூறப்படுகிறது., இந்நிலையில் மருத்துவமனை முன்பு மது போதையில் தகாத வார்த்தையால் பேசிக் கொண்டிருந்த ஆட்டோ டிரைவர் மகாராஜனை, மது போதையில் இருந்த ராமகிருஷ்ணன் இளைஞர் தட்டிக் கேட்டதாகவும், இதனால் […]

சோழவந்தானில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிப்பு

சோழவந்தானில் நடிகர்திலகம் சிவாஜி கணேசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது சோழவந்தான் ஆர்சி தெருவில் உள்ள சலவைத் தொழிலாளி சுப்பிரமணி என்பவர் சிவாஜி கணேசன் திருவுருவப்படத்தை வைத்து மாலை அணிவித்து மரியாதை செய்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனை நினைவு கூறும் வகையில் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதேபோல் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் மின்வாரிய ஓய்வு பணியாளர் கணேசன் என்பவர் சிவாஜியின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் இதில் ரிஷபம் ஊராட்சி மன்ற முன்னாள் […]

கீழ பெருமாள் பட்டியில் வீட்டை அபகரித்தது தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்து கணவன் மனைவி தீக்குளிப்பு

விக்கிரமங்கலத்தை அடுத்த கீழ பெருமாள் பட்டியில் கணவன் மனைவி தீக்குளிப்பு..உறவினர் வீட்டை அபகரித்தது தொடர்பாக கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலத்தை அடுத்த கீழப்பெருமாள் பட்டியில் வசித்து வருபவர் மாயி இவரது மனைவி இருளாயி இவர்களுக்கு குழந்தை இல்லை இந்நிலையில் தங்களது சுய சம்பாத்தியத்தின் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் கீழ பெருமாள் பட்டியில் வீடு ஒன்றை கட்டியுள்ளனர். அதனை அவர்களின் உறவினர் ஒருவர் […]

ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் ஆர்பி உதயகுமார் வழங்கினார்

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் ராமையன்பட்டியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மு காளிதாஸ் தலைமை தாங்கினார் முன்னாள் அமைச்சரும் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர் பி உதயகுமார் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கி அன்னதானமும் வழங்கினார்முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் தமிழரசன் ஒன்றிய செயலாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் […]

உசிலம்பட்டியில் நகராட்சி பணியாளர்களின் அலட்சியத்தால் குடிநீர் குழாயில் உடைப்பு. பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணான அவலம்

உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய சம்பவம் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயத்தை உருவாக்கியுள்ளது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட 19 வது வார்டு பகுதியில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த பகுதி மக்களுக்கு தினசரி நகராட்சி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்து வரும் சூழலில், வழக்கம் போல இன்று காலை திறக்கப்பட கவணம் பட்டி ரோட்டில் […]

விவசாய நிலத்தில் ஆபத்தான முறையில் மின் வயர்கள்

சோழவந்தான் அருகே விவசாய நிலங்களில் ஆபத்தான நிலையில் மின்வயர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மன்னாடிமங்கலம் கண்மாய் பாசனத்துக்கு உட்பட்ட வெள்ளச்சந்து பகுதியில் தென்னந்தோப்புக்குள் ஆபத்தான நிலையில் மின் வயர்கள் விவசாய நிலங்களில் கீழே கிடப்பதால் விவசாய வேலைகளுக்கு செல்லும் கூலி தொழிலாளர்கள் மற்றும் விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு குறுக்கும் நெடுக்குமாக தென்னந்தோப்பிற்குள் மின்சார வயர்கள் […]

சோழவந்தான் அருகே முள்ளிபள்ளத்தில் வைகை ஆற்றிற்கு செல்ல தரைப்பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முள்ளி பள்ளம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள வைகை ஆற்று பகுதிக்கு செல்ல முள்ளிபள்ளத்தில் இருந்து பிரிந்து செல்லக்கூடிய நிலையூர் கால்வாயை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது நிலையூர் கால்வாயில் விவசாயத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் நேரத்தில் பொதுமக்கள் மிக ஆபத்தான நிலையில் கால்வாயை கடந்து வைகை ஆற்றுக்கு செல்லவும் வைகை ஆற்றின் மறுபுறம் உள்ள சோழவந்தான் பகுதிக்கு செல்லவும் […]

சோழவந்தான் அருகே குருவித்துறையில் திமுக சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பாக வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் தலைமை தாங்கினார் கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இதில் ஒன்றிய துணைச் செயலாளர்கள், மாவட்ட விவசாய பிரிவு வக்கீல் முருகன் , ரேகா வீரபாண்டி ,ரிஷபம் சிறுமணி, சோலை கேபிள் ராஜா ஊத்துக்குளி ராஜா நீலமேகம் மற்றும் […]

ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

சோழவந்தான் பகுதியில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்றது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு சோழவந்தான் பகுதிகளில் உள்ள முருகன் திருத்தலங்களில் சிறப்பு வழிபாடு அபிஷேகம் நடைபெற்று பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் உள்பிரகாரத்தில் வலது புறம் உள்ள முருக பெருமானுக்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு பால் தயிர் நெய் வெண்ணெய் சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சர்வ அலங்காரத்தில் முருக […]

வாடிப்பட்டியில் பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் காரணமாக பணிந்த அதிகாரிகள்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பொதுப் பாதையை ஆக்கிரமித்து கல்ஊண்டிய காவல்துறை அதிகாரியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது சாலை மறியலால் மதுரை திண்டுக்கல் சாலை வாடிப்பட்டி மெயின் ரோட்டில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர் மேலும் உடனடியாக ஆக்கிரமித்து ஊண்டிய கல்லை அகற்றாவிட்டால் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களின் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!