கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் […]
Category: மாவட்ட செய்திகள்
கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.!
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் […]
சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா திரளானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் கரையில் அமைந்துள்ள அருள்மிகு பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது பிரதோஷ விழாவை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் சந்தனம் இளநீர் உள்ளிட்ட 21 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று அபிஷேகங்கள் நடைபெற்றது அதனை தொடர்ந்து உற்சவர் கோவிலை சுற்றி வலம் வந்தார் அப்போது ஏராளமான பொதுமக்கள் பெண்கள் […]
கோவில் காலியிடத்தில் மற்றொரு தரப்பினர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் உசிலம்பட்டி டிஎஸ்பி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரிசன் தெருவில் ஆதிதிராவிடஎ மக்களுக்கு சொந்தமான உஜ்ஜியினி மகா காளியம்மன் கோவில்.இக்கோவிலில் வடக்கு தெரு மக்கள்; வழிபாடு செய்து வந்துள்ளனர்.தெற்கு தெரு மக்களும் தனியாக கோவில் கட்டி வழிபாடு செய்துள்ளனர்.இதில்; வடக்கு தெரு கோவில் அருகில் அரசு புறம்போக்கு காலியிடம் உள்ளது. இதில் வடக்கு தெரு மக்கள் பொங்கல் வைப்பது வழக்கம்.இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு தெற்குத் தெரு மக்கள் கோவில் காலியிடத்தில் கட்டிடம் கட்ட முயற்ச்சித்து இரு தரப்பினருக்கும் […]
சோழவந்தானில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா மரக்கன்று வழங்கி கொண்டாட்டம்.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் தமிழக வெற்றி கழகம் சார்பாக தலைவர் விஜயின் பிறந்தநாள் விழா சோழவந்தான் பேரூராட்சி பசும்பொன் நகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேரூர் நிர்வாகிஅன்பில் சுரேஷ் , ஒன்றிய நிர்வாகி ராஜேஷ் கண்ணா , வழக்கறிஞர் தியாகராஜன் ஆகியோர் வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டின் பேரில் மரக்கன்றுகளை வழங்கினர். அஜித் மற்றும் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
சோழவந்தானில் வங்கி முன்பு மழை நீர் தேங்குவதால் வாடிக்கையாளர்கள் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில்வே பீட்டா ரோடு பகுதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியின் முன்பு மழை நீர் தேங்குவதால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர் இந்த பகுதியில் தபால் நிலையம் மற்றும் வாடிப்பட்டியில் இருந்து வரும் பேருந்துகள் நிறுத்தும் இடமாகவும் பயன்படுத்தப்படுகிறது சிறிய மழை பெய்தாலே இங்குள்ள மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மழை நீர் தேங்கி சேரும் சகதியும் ஆக மாறிவிடுகிறது இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தபால் அலுவலகத்திற்கு […]
விக்கிரமங்கலம் அருகே நோய் பாதிப்பால் மல்லிகை பூக்கள் விளைச்சல் பாதிப்பு நிவாரணம் வழங்க கோரிக்கை
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் நரியம்பட்டி மேல பெருமாள் பட்டி கீழப்பெருமாள்பட்டி தெப்பத்துப்பட்டி அரசமரத்துப்பட்டி பாணா முப்பன்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் மல்லிகைப்பூ விவசாயம் நடைபெற்று வருகிறது நோய் தாக்குதல் காரணமாக மல்லிகை பூக்கள் அரும்பில் கருகி விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர் குறிப்பாக மல்லிகை பூக்கள் அரும்பு விட்டு பின்பு மலர்ந்து பயன் தரக்கூடிய நிலையில் அரும்பாகும் நிலையில் நோய் தாக்குவதால் அரும்புகள் கீழே உதிர்ந்து விளைச்சல் குறைவதாக விவசாயிகள் […]
டாஸ்மார்க் அமைக்க எதிர்ப்பு கிராம மக்கள் பீட்டர் சாலை மறியல்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே எரவார் பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட உசிலம்பட்டி விக்கிரமங்கலம் மெயின் ரோட்டில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பத்துக்கும் மேற்பட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது புதிதாக திறக்கப்பட முடிவு செய்துள்ள டாஸ்மாக் கடை முன்பு சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் 5 மணி நேரத்திற்கும் மேலாக வெயிலில் போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் செய்வதறியாது திகைத்தனர் மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகேஎரவார் பட்டி ஊராட்சியில் டாஸ்மாக் […]
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்!
திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக […]
திருவாடானை அருகே அரசு பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!
திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாம் ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் படி திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் […]
உசிலம்பட்டியில் இரண்டரை வயது பெண் குழந்தை பல்வேறு யோகாசனம் செய்யும் காட்சி
உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உசிலம்பட்டி அருகே உச்சப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கண்ணன்-ரீனா தம்பதியினர். இவர்களின் மகள் லோகிதா வயது 2½. இவருக்கு இவரது பாட்டி பழனியம்மாள் சிறு வயது முதலே யோகாசனம் கற்றுக் கொடுத்து வருகின்றார். இதனால் லோகிதா தான் பிறந்த ஆறாவது மாதத்திலேயே யோகாசனம் செய்து மத்திய அரசின் சான்றிதழை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .ஆறாவது மாதத்திலிருந்து […]
உசிலம்பட்டி பள்ளியில் யோகா தினத்தை முன்னிட்டு செய்முறை பயிற்சி மற்றும் விளக்கம் அளிக்கப்பட்டது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளியில்ஜூன் 21 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டுபிரம்மா குமாரிகள் தியான நிலையத்தின் சார்பாக யோகாவை பற்றிய விளக்கமும் செய்முறை பயிற்சியும் சரஸ்வதி அளித்தார்கள்.பள்ளியின் தலைமை ஆசிரியர் மதன் பிரபு வரவேற்று பேசினார்.சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நாடார் சரஸ்வதி தொடக்கப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.மாணவர்களுக்கு நினைவாற்றல் மனதை ஒருமைப்படுத்துவது பற்றி விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஹரிகெங்காராம் தலைமை வகித்தார். முனைவர் மு. சிவக்குமார் முன்னிலை வகித்தார். மாணவி கலைச் செல்வி வரவேற்றார். சிறப்பு விருந்தினர்களாக மருத்துவர் ராஜேஸ்வரி, குருக்கள்பட்டி மருத்துவ அலுவலர் விஷ்ணு, சேர்ந்தமரம் மருத்துவ அலுவலர் முகமது ஜாஃபர் அலி ஆகியோர் பங்கேற்று மலேரியா தடுக்கும் முறைகளை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மலேரியா அலுவலர், ராமலிங்கம் […]
காவலர்களின் கோரிக்கையை திமுக அரசு கண்டுகொள்ளவில்லை ஆர்பி உதயகுமார் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நாட்டார்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், அவர் மீண்டும் முதல்ராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு நாட்டார்பட்டியில் உள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வழிபாடு செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., காவல்துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு எஸ்.எஸ்.ஐ பதவி உயர்வு வழங்குவதில் 23 […]
திமுக கூட்டணி வெற்றி பெறும்; IUML தேசிய தலைவர் பேட்டி..
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன், மணிச்சுடர் சாகுல் ஹமீது இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள தென்காசி மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். அப்போது திருமண நிகழ்வை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், திமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டப் பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும், திமுக-முஸ்லிம் லீக் இடையே இருப்பது கொள்கை ரீதியான கூட்டணி எனவும் IUML தேசிய தலைவர் காதர் மொகிதீன் தெரிவித்தார். தென்காசி […]
அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, வெண்ணெய்-யை கையில் வைத்துக் கொண்டு நெய்க்கு அழையும் கதையாக உள்ளது., – கீழடி விவகாரம் தொடர்பாக திமுக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு கிராமத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாளை முன்னிட்டும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வலியுறுத்தி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, தும்மக்குண்டு கிராமத்தில் உள்ள வைரவசுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அன்னதானம், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்., தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்., கீழடி விவகாரம் குறித்து திமுக நடத்திய […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் தீர்த்தவாரி திருவிழாவட்ட பிள்ளையார் கோவில் பகுதி ஒருவழி பாதையாக மாற்றம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் திருவிழாவின் கடைசி நாள் திருவிழாவான தீர்த்தவாரி திருவிழா இன்று இரவு சோழவந்தான் வைகை ஆற்றில் நடைபெற உள்ளது இதற்காக வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன் குடும்பத்தினர் ஏற்பாட்டில் தீர்த்தவாரிக்கான இந்த பூஅலங்கார வேலைப்பாடுகள் மற்றும் வைகை ஆற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது காவல்துறை சார்பில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகளும் […]
சோழவந்தான் அருகே அரசு பேருந்தில் திடீர் புகை ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகே மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மன்னாடிமங்கலம் சென்ற அரசு பேருந்தில் புகை கிளம்பியது இதனால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர் உடனடியாக பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்த பயணிகளை அவசர அவசரமாக கீழே இறங்கச் செய்தனர் தொடர்ந்து பத்து நிமிடத்திற்கு மேலாக பேருந்தின் கீழே இருந்து புகை வந்த வண்ணம் இருந்தது பின்னர் பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக […]
சிறுவர் சிறுமிகளை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டல். 2 பேர் கைது. ஒருவர் தலைமறைவு
உசிலம்பட்டி அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் என 7 பேரை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியதாக இருவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த கிராம மக்கள், தப்பி ஓடிய ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உ.குளத்துப்பட்டியில் தோட்டத்து வீட்டில் வசிக்கும் 5 சிறுமிகள், 2 சிறுவர்கள் இன்று மாலை உள்ளூரில் உள்ள ஆரம்ப பள்ளிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது., […]
விளம்பர வெளிச்சத்தில் ஊருக்கு உழைக்கிற உதயநிதி என்று வேசம் போடுகிறார் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்
மதுரையில் முகாமிட்டுள்ள உதயநிதி, விளம்பர வெளிச்சத்தில் ஊருக்கு உழைக்கிற உதயநிதி என்று வேசம் போடுகிறார் – விளையாட்டுத்துறைக்கு அதிக கவணம் செலுத்தியது அதிமுக ஆட்சி காலத்தில் தான் – என உசிலம்பட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஈச்சம்பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று ஈச்சம்பட்டியில் உள்ள […]
You must be logged in to post a comment.