மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆலங்கொட்டாரம் அரசு பள்ளி மைதானத்தில் கடந்த 23ஆம் தேதி மாலை மின்னொளியில் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்றது. சோழவந்தான் கூடை பந்தாட்ட கழக சேர்மன் தொழிலதிபர் டாக்டர் எம். மருதுபாண்டியன் போட்டியினை துவக்கி வைத்தார். இதில் சென்னை கோவை மதுரை திண்டுக்கல் சிவகங்கை தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் 10 மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றனர். மூன்று நாட்களாக நடைபெற்ற போட்டியில் சென்னை வி .கே […]
Category: மாவட்ட செய்திகள்
ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக்கூட்டம்..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தவ்ஹீத் ஜமாத் கிளைகளின் சார்பாக ஒன்றிய அரசின் வக்ஃப் வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் கடையநல்லூர் காயிதே மில்லத் திடலில் மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் செயலாளர் ஜலாலுதீன், பொருளாளர் சாதிக், துணைத் தலைவர் அப்துல் பாசித், துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், புளியங்குடி பிலால் வடகரை சையது அலி, அப்துல் பாசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தவ்ஹீத் ஜமாத் […]
உடன்காட்டுப்பட்டியில் முதலமைச்சர் பிறந்த நாளை ஒட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டியில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார். செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் வரவேற்றார். இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை […]
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சந்தை திடல் தேவர் மகாலில் மதுரை மாவட்டம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் உசிலம்பட்டி ஒன்றிய ஐந்தாவது மாநாடு நடைபெற்றது.
பட்டாசு வெடித்ததில் சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்ததில் ஒருவர் காயம்
மதுரைசெக்கானூரணி தேவர் சிலை அருகே சின்னத்திரை நடிகை வீட்டின் மேல் முகப்பு இடிந்து விழுந்தில் ஒருவர் படுகாயம் மராமத்து பணிக்காக மேல் மாடியில் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் சுப நிகழ்ச்சிக்கு ஊர்வலமாக சென்றவர்கள் பட்டாசு வெடித்ததில் அதிர்வு ஏற்பட்டு கட்டடத்தின் மேல் பகுதி இடிந்து விழுந்ததாக பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு மதுரை மாவட்டம் செக்கானூரணி தேவர் சிலை அருகே குடியிருந்து வருபவர் சின்னத்திரை நடிகை சந்திரசேகரி இவரது கணவர். கணேசன் இவர்களின் வீட்டின் […]
உசிலம்பட்டி அருகே ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் கார் மோதி பலி.
உசிலம்பட்டி தேனி மெயின் ரோட்டில் குஞ்சாம்பட்டியில் தேனியில் இருந்து வந்த கார் பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸிலிருந்து இறங்கி ரோட்டை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் மீது கார் மோதியது. இதில் மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர்கள் சம்பவ இடத்தில் பலி. மூன்று பேர் படுகாயம் அடைந்தனர்.ஜோதிகா வயது 20 லட்சுமி வயது 55 பாண்டிச்செல்வி வயது28 குழந்தை பிரகலாதன் வயது 2 மற்றும் ஜெயபாண்டி கருப்பாயி வயது 65 […]
தேவகோட்டை நகர சிவன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்.!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகர சிவன் கோவிலில் வைகாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடை பெற்றது. வைகாசி மாதத்தில் வரும் வளர் பிறை பிரதோஷத்தில் நந்தீஸ்வரரை வழிபட்டால் மகிழ்ச்சி , செழிப்பும் பெருகும் என்ற ஐதீகத்தால், சிவன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரச் சிவன் கோயிலில் இன்று வைகாச மாத வளர் பிறை பிரதோஷத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள நந்திகேஸ்வரருக்கு பல்வேறு மஞ்சள், சந்தனம்,பால், […]
இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி .!
இராமநாதபுரம் மன்னர் குமரன் சேதுபதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி இராமநாதபுரம் சேதுபதி மன்னர்களின் வழித்தோன்றலான மன்னர் என்.குமரன் சேதுபதியின் மூன்றாம் ஆண்டு நினைவு கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது இதில் 18 அணிகள் 216 வீரர்கள் பங்கேற்றனர் இந்த விளையாட்டானது மூன்று நாட்களாக நடைபெற்று இறுதிப்போட்டியில் பெரியபட்டினம் அணியும் இராமநாதபுரம் சேதுபதி அணியும் விளையாடின இதில் பெரிய பட்டிண அணி இரண்டு கோள்கள் அடித்து வெற்றி பெற்றது வெற்றி பெற்ற அணி பெரியபட்டிணம் முதல் […]
சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா பிரதோஷம் நடைபெற்றது. விழாவையொட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமியும் அம்பாளும் பிரியாவிடையுடன் ரிஷப வாகனத்தில் திருக்கோவில் சுற்றி வலம் வந்தனர் அப்போது பக்தர்கள் ஓம் நமச்சிவாய நமச்சிவாயா என்று வலம் வந்தனர். தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் […]
கோவையின் சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம்.!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வருகின்ற 23.05.2025 முதல் 27.05.2025 வரை மழைப்பொழிவு அதிக அளவு இருக்கும் எனவும், சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின்படி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நகராட்சியின் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பேரிடர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ள தயார் நிலையில் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் பேரிடர் மேலாண்மை பணிக்கென மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் சிறப்பு தொலைப்பேசி எண். 04254 222151 கொண்ட நிவாரண உதவி […]
போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்…
‘போட்டியே இல்லாம’ தேர்வான பெருநாழி நாடார் உறவின்முறை நிர்வாகிகள்… ராமநாதபுரம் மாவட்டம்,கமுதி தாலுகா பெருநாழியில் செயல்பட்டு வரும் சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கத்திற்கான புதிய நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சத்திரிய இந்து நாடார் உறவின்முறை சங்கம் (பதிவு எண் – 137/2021) கல்விச் சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இன்று (மே 24, 2025) நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில், புதிய தலைவராக K. பாலமுருகன், செயலாளராக P. முத்துக்குமார், மற்றும் பொருளாளராக A. ஜெகதீஸ்குமார் ஆகியோர் போட்டியின்றி […]
சோழவந்தான் அருகே துர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற இருந்த திருவிழா பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. டிஎஸ்பி கோட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த துர்க்கை அம்மன் கோவில் அமைந்துள்ளது இங்கு திருவிழா கொண்டாடுவதில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது. பெரும்பாலான மக்கள் பழைய நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று விரும்புகின்றனர். இந்நிலையில் சிலர் திருவிழா கொண்டாடும் நோக்கில் முன்னேற்பாடு பணிகளை செய்து வந்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது மேலும் அவர்கள் பழைய நடைமுறையை பின்பற்றி ஊரில் […]
சோழவந்தானில் அதிமுக சார்பில் மூத்த உறுப்பினர்கள் 1000 நபர்களுக்கு பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வழங்கினார்
அதிமுகபொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் மற்றும் அம்மா பேரவை சார்பில் தொடர்ந்து 100 திருக்கோயில்களில் எடப்பாடி பழனிச்சாமி பெயரில் சிறப்பு பிராத்தனை, 100 கிராமங்களில் மாபெரும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் அதிமுகவை சார்ந்த 1000 மூத்த முன்னணியினர்களுக்கு பாராட்டு விழா மற்றும் ஊக்கத்தொகை (பொற்கிழி) வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு சோழவந்தான் முன்னாள் சட்டமன்ற […]
நாய் கடித்து இரண்டு ஆடுகள் பலி:5 க்கும் மேற்பட்ட ஆடுகள் காயம்..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் அருகே உள்ள அண்ணாமலைநகரில், மணிமுத்து (65) என்பவருக்கு சொந்தமான ஆடுகளை நாய்கள் கடித்து குதறியதில் இரண்டு ஆடுகள் உயிரிழந்தன. மேலும், ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தன. இன்று காலை தனது ஆடுகளைக் கொட்டகையில் கட்டிவிட்டு வெளியே சென்றிருந்த மணிமுத்து திரும்பி வந்து பார்த்தபோது, நாய்கள் ஆடுகளைக் கடித்து குதறியதைக் கண்டார். அக்கம் பக்கத்தினர் விரட்டியடித்ததால் நாய்கள் ஓடிவிட்டன. காயமடைந்த ஆடுகளுக்கு ஆர்.எஸ். மங்கலம் அரசு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இப்பகுதியில் […]
ஆர். எஸ். மங்கலம் ஜமாபந்தி: தாமதமாக வந்த அதிகாரியால் மக்கள் அவதி..!
ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்று வந்த ஜமாபந்தி நிறைவு நாளான இன்று, வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தாமதமாக வந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். வருவாய் கோட்டாட்சியர் ராஜ மனோகரன் தலைமையில் ஜமாபந்தி நடந்து வரும் நிலையில், இறுதி நாளான இன்று அவர் வருவதற்கு மிகவும் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்த தாமதம் அப்பகுதியில் சலசலப்பை […]
திருவாடானையில் சட்ட விழிப்புணர்வு முகாம்.!
திருவாடானை அருகே உள்ள அச்சங்குடி ஊராட்சியில் திருவாடானை வட்ட சட்ட பணிகள் குழுவின் சார்பாக சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் – முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் அறிவுறுத்தலின் படியும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர்- சார்பு நீதிபதி சரவண பாபு ஆலோசனையின் பேரிலும் திருவாடானை வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவர் தலைவர் அன்டோனி ரிஷந்தேவ் உத்தரவின் பேரில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் […]
ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா .!
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆதியூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அந்த கிராமப் பொதுமக்களால் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீரை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருட பகவான் வானத்தை வட்டமிட கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. அதன்பிறகு […]
உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை.!
திருவாடானை அருகே உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் 100 கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று வழிபாடு. இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பழங்குளம் ஊராட்சி கீழ்ப்புலி ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவிலில் வைகாசி மாத கரகம் எடுப்பு உற்சவ திருவிழா முன்னிட்டு உலக நன்மை வேண்டி 4 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது, ஆண்டுதோறும் இக்கோவிலில் உற்சவ விழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்,இந்த ஆண்டும் நடைபெற்றது இதில் கோவில் நிர்வாகம் சார்பில் […]
சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அதிமுக மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை
அதிமுக மீட்பு குழு மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் ஆலோசனையின் பேரில்பாலமேடு அருகே சரந்தாங்கியில் உள்ள பெரும்பிடுக முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது ஒன்றிய செயலாளர் கல்லணை சேது சீனிவாசன் ஏற்பாட்டில் பாலமேடு நகர செயலாளர் இ.ப சேகர் அவைத்தலைவர் அய்யாவு நாயக்கர் வடக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சத்திர வெள்ளாளப்பட்டி நடராஜன் வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணைச் செயலாளர் அய்யாவு செட்டியார்பாலமேடு இளைஞரணி செயலாளர் […]
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாமுகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில் அதற்கான கொட்டகை முகூர்த்த கால் நடும் நிகழ்வு இன்று காலை 7 மணி அளவில் கோவில் முன்பு நடைபெற்றது முன்னதாக கோவிலில் இருந்து அர்ச்சகர் சண்முகவேல் பூஜை பொருட்களை கொண்டு வந்தார் தொடர்ந்து முகூர்த்த காலுக்கான பணிகள் நடைபெற்று முகூர்த்தக்கால் நடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே […]
You must be logged in to post a comment.