சோழவந்தான் ரயில்வே மேம்பால பகுதியில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையின் நடுவே முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயம் ஏற்பட்டு மருத்துவமனை செல்வது தொடர்கதையாக நடைபெற்று வருகிறது சில மாதங்களுக்கு முன்பு மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை அதிகாரிகள் தற்காலிகமாக சரி செய்து சென்றனர் ஆனால் அதன் அருகிலேயே தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் முழங்கால் அளவு பள்ளம் ஏற்பட்டுள்ளது இதனால் மேம்பாலத்தில் வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவம் […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் அருகே கருப்பட்டி நாச்சிகுளம் பகுதியில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம்ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது கருப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் ஜெகன் தலைமை தாங்கினார் ஒன்றிய செயலாளர் பால ராஜேந்திரன் வாடிப்பட்டி பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன் வாடிப்பட்டி பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக் நாச்சிகுளம் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தொடர்ந்து […]
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும்..
தமிழகத்தில் குளிர் அதிகரிக்கும் என தென்காசி மாவட்டத்தை சேர்ந்த வானிலை ஆராய்ச்சியாளர் வெதர் மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், வட இந்திய பகுதியில் இருந்து வீசும் வறண்ட வாடைக் காற்றானது தமிழகம் வரை ஊடுறுவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று இரவு முதல் குளிர் அதிகரிக்கும். தமிழகத்தின் வெப்ப நிலையானது இயல்பை விட 5°© வரை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் 15°©- 20°© வரை குறைந்தப்பட்ச வெப்பநிலை […]
திமுக சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் தலைமையில் இலவச மருத்துவ முகாம் ஆவுடையானூர் பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் கலை கதிரவன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பொறுப்பாளர் ஜே.கே.ரமேஷ் வரவேற்றார். மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் அன்பரசன் தொகுப்புரை ஆற்றினார். திமுக மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமினை தொடங்கி வைத்தார். […]
சைபர் கிரைம் ஆன்லைனில் மோசடி குறித்த விழிப்புணர்வு பேரணி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் சைபர் கிரைம் மற்றும் ஆன்லைன் மோசடி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.அரவிந்த் உத்தரவின் பேரில் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களிடையே சாலை விதிகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து காவல் துறையினர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், 09.12.2025 அன்று கடையநல்லூர் பகுதியில் தென்காசி மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் சோசியல் […]
கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு. ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகிய அவலம்!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வத்தலக்குண்டு ரோடு, பேரையூர் ரோடு பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது., இன்று இந்த சாலை விரிவாக்க பணிக்காக எஸ்.ஓ.ஆர். நகர் எதிரே சாலையோரம் பள்ளம் தோண்டிய போது, உசிலம்பட்டி நகராட்சி பகுதிக்கு ஆண்டிபட்டி கணவாய் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் வழங்கப்படும் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி, பள்ளத்தில் தேங்கியும், சாலையிலும் சென்றது., உடனடியாக குடிநீர் திறப்பு […]
உசிலம்பட்டியில் விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது-யை கண்டித்தும், உசிலம்பட்டி வட்டாச்சியரை கண்டித்தும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் துணை வட்டாச்சியர் தாணுமாலயன் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கைது செய்யப்பட்டதை கண்டித்து கண்டன கோசங்களை எழுப்பினர்., தொடர்ந்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தை உசிலம்பட்டி வட்டாச்சியர் பாலகிருஷணன் புறக்கணித்து வருவதாகவும், பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொள்ளாத நிலை நீடித்து வருவதாக குற்றம் சாட்டி விவசாயிகள் குறைதீர்க்கும் […]
சோனியா காந்தி பிறந்தநாள் விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் சோனியா காந்தி 79 பிறந்த நாள் விழா உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சியின் சார்பாக நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி தலைவர் டி. சரவணகுமார் தலைமையில் மாநில பொதுக்குழு உறுப்பினர் எம். மகேந்திரன் முன்னிலையில் […]
திமுகவிடமிருந்து பறிபோகின்றதா சோழவந்தான் தொகுதி?.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியை திமுகவிடம் கேட்டு காங்கிரஸ் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் தொகுதியை விட்டுக் கொடுக்க திமுக தயாராகி வருகிறதா என பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே பரவலாக பேசப்பட்டு வருகிறது மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மேலூர் மதுரை மேற்கு திருப்பரங்குன்றம் திருமங்கலம் உசிலம்பட்டி என ஐந்து தொகுதிகளில் அதிமுகவும் மதுரை கிழக்கு மத்தி வடக்கு மற்றும் சோழவந்தான் ஆகிய நான்கு தொகுதிகளில் திமுகவும் மதுரை […]
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கும் உணவை மாணவ மாணவிகள் நிழலில் அமர்ந்து உணவருந்த ஏதுவாக அமைக்கப்பட்ட மேற்கூரை திறப்பு விழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியான நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது., சுமார் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வரும் இந்த துவக்கப்பள்ளியில் காலை உணவை ஓர் இடத்தில் அமர்ந்து உணவருந்த நிழல் இல்லாத நிலையை அறிந்த மதுரையைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவன தலைவர் குருசாமி, சுமார் 2 லட்சம் மதிப்பீட்டில் […]
சோழவந்தானில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை பசுமாடு பத்திரமாக மீட்பு
மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார் இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது சினை மாட்டினை சோழவந்தான் பேரூராட்சி மயான பகுதி அருகில் வைகை ஆற்று பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற போது மயானம் அருகே தேங்கி இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் கால்வாயில் விழுந்த பசுமாடு உயிர் பிழைப்பதற்காக கழிவுநீரில் […]
சோழவந்தான் பேருந்து நிலைய சர்வீஸ் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு செல்லும் சர்வீஸ் சாலையின் நடுவே போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் சர்வீஸ் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய வாகனங்கள் செல்ல முடியாமல் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் நிறுத்தி பொதுமக்கள் மற்றும் பயணிகளை ஏற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது மேலும் இரவு நேரங்களில் பேருந்து நிலையத்திற்கு வரும் இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மின்கம்பத்தில் […]
உசிலம்பட்டி அருகே கோவிலில் நள்ளிரவில் பெரிய கடிகாரத்தை திருடும் மர்ம நபர். சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கொக்குடையான்பட்டி கிராமம்.இக் கிராமத்து அருகில் உள்ளது தோப்பு கருப்புசாமி கோவில்.வத்தலக்குண்டு உசிலம்பட்டி சாலையில் இக்கோவில் அமைந்துள்ளதால் காவல் தெய்வமான தோப்பு கருப்பசாமியை டிரைவர்கள் ,நடந்து செல்வோர் உட்பட அனைவரும் இக்கடவுளை வணங்குவதால் கோயில் எப்பொழுதும் திறந்து காணப்படும். கோவில் பூசாரி வாரம் ஒரு முறை மட்டும் கோவிலுக்கு பூஜைக்கு வருவார் என கூறப்படுகின்றது. இந்நிலையில் கோவில் பூசாரி ஆறுமுகம் வழக்கம் போல் கோவிலுக்கு வந்த போது கோவில் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த […]
டிரஸ்ட் மூதாளர் பேணலகத்தில் இருபெரும்விழா
வெங்காடம்பட்டி டிரஸ்ட் குழந்தைகள் மற்றும் மூதாளர் இல்லத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் இந்தோ-இத்தாலியன் கௌரவ விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இத்தாலி நாட்டவர் பங்கேற்று விருதுகள் வழங்கினர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெங்காடம் பட்டியில் டிரஸ்ட் மூதாளர் பேணலகம் இயங்கி வருகிறது. இங்கு வி.ஜி.பி சார்பில் 190-வது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சமூக பணிகளில் உள்ளவர்கள் பலர் கெளரவிக்கப் பட்டனர். டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற இருபெரும் விழாவில், சமூகத்தில் […]
வாடிப்பட்டி அருகேசொக்கப்பனை நெருப்பில் சிவன் நடனம் காட்சியால் பரபரப்பு
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி அஞ்சு குழி கண்மாய் சாலையில் உள்ள லலிதாம்பிகேஸ்வரர் உடனுறை லலிதாம்பிகேஸ்வரி ஆலயத்தில் புதிதாக கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கோயில் முன்பாக கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சொக்கப் பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அதில் வைகோலால் செய்யப்பட்ட சொக்கப்பனையை கோயில் நிர்வாகி அருணாச்சலபாண்டியன் கொளுத்தினார். அப்போது தீ கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது அந்த எரியும் நெருப்பில் சிவன் நடனம் ஆடுவது போல் காட்சி தெரிந்தது. இதை கண்ட […]
சோழவந்தான் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் முன்னால் எம்பி விஸ்வநாதன் பேட்டி
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே ஊர் சேரியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆலாத்தூர் ரவிச்சந்திரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி விஸ்வநாதன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் கூறியதாவது. இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர்க்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்போதெல்லாம் அண்ணல் அம்பேத்கர் வகுத்த சட்ட புத்தகம் துணை நிற்கும். 2001 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு […]
எம்எல்ஏ நிகழ்ச்சியை சொந்த கட்சியினரே புறக்கணிக்கும் பரிதாபம்
சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏ வெங்கடேசனுக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சியில் 20க்கும் குறைவானவர்கள் கலந்து கொண்ட பரிதாபம் மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக எம்எல்ஏவான வெங்கடேசன் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு பல்வேறு பகுதிகளில் எந்த ஒரு புதிய திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது குறிப்பாக […]
பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதியில் தேங்கிய கழிவுநீர். அதே மக்களைக் கொண்டு சுத்தம் செய்ய வைத்த அவலம்.
சோழவந்தான்வைத்தியநாதபுரத்தில் பட்டியல் இனமக்கள் வசிக்கும் பகுதியில் கழிவுநீர் தேங்கி இருந்த சம்பவம்அதே பகுதி பட்டியலின மக்களை வைத்து கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்ய வைத்த அவலம் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பல மாதங்களாக தேங்கி கிடந்த கழிவுநீரில் பட்டியலின மக்கள் இறங்கி சுத்தம் செய்ததால் தொற்று நோய்கள் பரவும் அபாயம் இருப்பதாக பட்டியலின மக்களின் குடும்பத்தார்கள் பரபரப்பு குற்றச்சாட்டு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நேரில் ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பகுதி […]
கலைஞர் இல்ல கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம்
தேனூர் அருகே கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வந்த 195 வீடுகளின் கட்டுமான பணிகள் திடீர் நிறுத்தம் மாற்றுத்திறனாளிகள் திருநங்கைகள் வேதனை மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்டதேனூர் ஊராட்சி கட்டப்புலி நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக சுமார் 400க்கும்மேற்பட்ட வீடுகள் கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் கட்டுவதற்காக தமிழக அரசு சார்பில் திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 195 வீடுகளுக்கான கட்டுமான பணிகளுக்கான அமைச்சர் மூர்த்தி தலைமையில் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் […]
உடல் நலம் குன்றி சுற்றித் திரிந்த யானை பத்திரமாக மீட்பு..
தென்காசி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக உடல்நலம் குன்றி சுற்றித் திரிந்த 35 வயது உடைய காட்டு யானையை, வனத்துறையினர் தீவிர சிகிச்சைக்குப் பின் மீட்டுள்ளனர். தென்காசி மாவட்டம், சிவகிரி வனச்சரகப் பகுதிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நடமாடி ஓர் இடத்தில் படுத்துக் கொண்டிருந்த இந்த யானையைக் கண்காணிக்க, சிவகிரி வனச்சரகத்தின் கீழ் ஒரு தனிக் குழு அமைக்கப்பட்டது. அத்துடன் யானையின் சாணம் சேகாரம் செய்யப்பட்டு பரிசோதனைக்காக கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு […]
You must be logged in to post a comment.