மதுரை மாவட்டம் சோழவந்தான் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் தங்கமயில் ஜுவல்லரி மதுரை 24 மனை தெலுங்கு செட்டியார் உறவின்முறை சங்கம் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் காவல் ஆய்வாளர் ஆனந்தகுமார் ,சார்பு ஆய்வாளர்கள் முருகேசன், ரவிச்சந்திரன் ஆகியோர், சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் மற்றும் இலவச கண் பரிசோதனை, செய்யப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. உறவின்முறை தலைவர் மாரியப்பன், செயலாளர் […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில்திருக்கல்யாண வைபவம்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்தடைந்தனர். தொடர்ந்து மாப்பிள்ளை பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது,கோயில் அர்ச்சகர் பார்த்தசாரதி மற்றும் பட்டர்கள் யாக வேள்வி நடத்தி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் ஜெயராமன், […]
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா.!
முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 வது ஆண்டு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூக்கத்தில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து உடற்கல்வி இயக்குநர் […]
நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் உதகமண்டலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் அதன்பின்னர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சிறப்புரையாற்ற உள்ளார் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
முதலமைச்சர் உடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள் .!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கு குஞ்சப்பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் தனது பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் […]
ராமேஸ்வரத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!
இந்தியப் பிரதமர் வருகின்ற ஏப்ரல் 06, 2025 அன்று இராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் (NH) செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால் இராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்கள் குறித்த நேரத்தில் அனுமதி கிடையாது என்றும் இராமேஸ்வரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவசர சேவைகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் […]
விக்கிரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 113 ஆம் நூற்றாண்டு விழா
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 113ஆம்நூற்றாண்டு விழா நடைபெற்றது விழாவிற்கு முன்னால் மாணவர் சட்ட ஆலோசகர் ஜெகதீசன் தலைமை தாங்கினார் செல்லம்பட்டி முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் கவிதா ராஜா விக்கிரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் கலியுக நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நூற்றாண்டு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் கணேசன் மற்றும் வட்டார கல்வி அலுவலர் ரெங்கநாயகி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருவிளக்கு பூஜை நேற்று இரவு கோவில் வளாகத்தில் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர் அனைவருக்கும் எண்ணெய் திரி தாம்பூல.பை மற்றும்பட்டு துணி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டதுபின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது […]
சோழவந்தான் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வடக்கு தெரு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர்
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சோழவந்தான் வடக்கு வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சீர்வரிசை எடுத்து வந்தனர். இந்த சீர்வரிசை சங்கத்திலிருந்து புறப்பட்டு கடைவீதி, தெற்கு ரத வீதி, மேலரத வீதி, வடக்கு வீதி வழியாக வந்து கோவிலில் வந்து அடைந்தது. இதை உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன், செயலாளர் சிவராஜன், பொருளாளர் சிங்கராஜ், துணைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, திருநாவுக்கரசு மற்றும் வார்டு கவுன்சிலர்கள் […]
மேலக்கால் ஆதிதிராவிடர் மயானத்தில் மின் மோட்டார் பழுதால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் மேலக்கால் ஊராட்சியில் ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயானத்தில் மின்மோட்டாரில் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த 10 நாட்களுக்கு மேலாக தண்ணீர் வராததால் இறந்தவர்களுக்காக இறுதி சடங்கு செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் மேலக்கால் ஊராட்சிக்கு உட்பட்ட மேலக்கால் கிராமத்தில் ஆதிதிராவிடர் மக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர் இவர்களுக்காக மேலக் கால் மதுரை செல்லும் சாலையில் மயானம் உள்ளது இந்த மயானத்தில் உள்ள மின் மோட்டார் பழுதாகி 10 […]
சோழவந்தானில் திமுக சார்பில்பிகே. மூக்கையா தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிகே.மூக்கையா தேவரின் 103 ஆவதுபிறந்தநாளை முன்னிட்டு சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது சோழவந்தான் பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் லதா கண்ணன் பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் பேரூர் துணை செயலாளர் கொத்தாளம் […]
சோழவந்தான் அருகே ஊத்துக்குளியில் சாலையில் தோண்டிய பள்ளங்களை மூடாததால் பொதுமக்கள் அவதி
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே ஊத்துக்குளி கிராமத்தில் சாலையின் இருபுறங்களிலும் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளங்களை சரிவர மூடாதால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக சாலையின் இருபுறத்திலும் மழை நீர் தேங்கி சேரும் சகதியமாக காணப்பட்டது இதில் அந்த வழியாக வந்த கதிர் அடிக்கும் இயந்திரம் மாட்டிக் கொண்டதால் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் வேலைக்கு செல்வோர் மிகுந்த சிரமத்தில் இருந்ததாக கூறப்படுகிறது […]
வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் சென்ரிங் காண்ட்ராக்டர் சம்பவ இடத்தில் பலி போலீசார் விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கொண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மொட்டையாண்டி மகன் பழனி குமார் வயது 40 இவர் சென்ட்ரிங் கட்டட வேலை பார்த்து வருகிறார் இன்று காலை வேலை விஷயமாக இரு சக்கர வாகனத்தில்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தன்ச்சியம் பிரிவு தனியார் சித்தா மருத்துவமனை அருகில் மதுரை திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி வந்த ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் சென்ட்ரிங் காண்ட்ராக்டர் பழனிக்குமார் […]
சோழவந்தான் அருகே இரும்பாடி வைகை ஆற்றுக்குச் செல்ல பாதை வசதி வேண்டும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை
மதுரை மாவட்டம்இரும்பாடி வைகை ஆற்றிக்கு செல்லும் பாதையானது பொதுமக்கள் செல்லக்கூடிய வகையில் போதிய இடவசதியுடன் இருந்த நிலையில் இரும்பாடி மன்னாடி மங்கலம் வைகை ஆற்று பாலம் கட்டி முடித்த பின்பு இரும்பாடி வைகை ஆற்றிற்கு செல்வதற்கான பாதையின் அகலத்தை சிறியதாக்கி வைகை ஆற்றுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுகுறிப்பாக இரும்பாடி சின்ன இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கரட்டுப்பட்டி மட்டப்பாறை சாலாச்சிபுரம் ஆகிய கிராமங்களில் திருவிழா நடத்துபவர்கள் கரகம் எடுப்பதற்கும் முளைப்பாரி கரைப்பதற்கும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் […]
பாலகிருஷ்ணாபுரம் மாயாண்டி கோவில் பங்குனி திருவிழா 500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்தி கடன்
சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சி பாலகிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள மாயாண்டி கோவில் பங்குனி திருவிழாவில்500க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு மூன்று கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்று வைகை ஆற்றில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மதுரை மாவட்டம்சோழவந்தான் அருகே கருப்பட்டி அடுத்துள்ள இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாயாண்டி சுவாமி, முனியாண்டி சுவாமி, பகவதிஅம்மன், காளியம்மன், பட்டத்தரசிஅம்மன், சோனைசாமி கோயில் பங்குனி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு […]
மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு நன்றி தெரிவித்த ஐக்கிய ஜமாஅத்.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காவலர்களுக்கு மேட்டுப்பாளையம் ஐக்கிய ஜமாஅத் பேரவை நிர்வாகிகள் நன்றி தெரிவித்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அமைந்துள்ள 24 பள்ளிவாசல்கள் ஒருங்கிணைந்து உதகை செல்லும் சாலையில் அமைந்துள்ள ஈதுகா மைதானத்திற்கு ஊர்வலமாக செல்வது வழக்கம் இந்த ஆண்டும் சிறப்பு தொழுகைக்காக ஊர்வலமாக இஸ்லாமியர்களுக்கு எவ்வித வாகன நெரிசலும் ஏற்படாத வண்ணம் மற்றும் தொழுகை முடிந்து அனைவரும் கலைந்து செல்லும் வரை எவ்வித வாகனங்களும் அவ்வழியாக வரவில்லை இதனால் தொழுகைக்காக செல்லும் பொழுதும் தொழுகை முடிந்து […]
இ பாஸ் முறையை கண்டித்து உதகையில் ஒருநாள் கடையடைப்புப் போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் இ பாஸ் முறையை கண்டித்து நீலகிரி மாவட்டம் பகுதியில் வணிகா் சங்கங்கள் சாா்பில் வியாபாரிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் நீலகிரியில் இ-பாஸ் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டித்து, உதகையில் இன்று ஒருநாள் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுவதால், உணவு கிடைக்காமல் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர் நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கோடையில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஊட்டிக்கு செல்லும் வாகனங்கள் வாரநாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வாரம் இறுதி […]
நீலகிரி மாவட்ட ஆட்சியர் இ.பாஸ் ஆய்வு
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கல்லார் சோதனை சாவடி பகுதியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர்லட்சுமி பவ்யா தண்ணீரு இ.பாஸ் ஆய்வு மேற்கொண்ட போது நெகிழி ஒழிப்பு ஆய்வு செய்தார் வாகன சோதனையின் போது நெகிழி தண்ணீர் கேன்கள், குளிர்பான கேன்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக 97 குடி தண்ணீர் மின் இயங்கி இயந்திரங்கள் அமைத்துள்ளோம் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிதண்ணீர் நெகிழி கலன்கள் மற்றும் […]
சோழவந்தானில் நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள எம் வி எம் திருமண மஹாலில் வாடிப்பட்டி வட்டார நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு அடகு கடை சங்க தலைவர் தொழிலதிபர் மருது பாண்டியன் தலைமை தாங்கினார் செயலாளர் காளீஸ்வரன் முன்னிலை வகித்தார் பொருளாளர் முத்துக்குமரன் நகைமாளிகை இருளப்பன் என்ற ராஜா வரவேற்புரை ஆற்றினார் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் 2025 .26 ஆம் ஆண்டில் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா. காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
.மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது பூமேட்டு கிராமத்தைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைகையாற்றுக்கு சென்று பூஜைகள் செய்து ஊர்வலமாக வந்தனர் பின்னர் உச்சி மாகாளியம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை தீபாராதனை நடைபெற்றது பின்னர் பால்குடம் அக்னி சட்டி எடுக்கும் பொதுமக்கள் முளைப்பாரி எடுக்கும் தாய்மார்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர் ,முளைப்பாரி பதியமிடல் நடைபெற்றது. […]
You must be logged in to post a comment.