மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ செண்பகவள்ளி அம்மன் கோவில் 19 ஆம் ஆண்டு பால்குடம் விழா நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து இன்று காலை ஏராளமான பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வந்து நான்கு ரத வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பால் தயிர் வெண்ணெய் மஞ்சள் பொடி மா பொடி திரவியம் உள்ளிட்ட பல்வேறு வகையான விஷயங்கள் செய்யப்பட்டு சிறப்பு […]
Category: மாவட்ட செய்திகள்
சோழவந்தான் பகுதி கோவில்களில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் அதிகாலை முதல் பொதுமக்கள் அதிக அளவில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் செய்தார் செயல் அலுவலர் இளமதி பணியாளர்கள் பூபதி வசந்த் கவிதா ஆகியோர் ஏற்பாடுகளை […]
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்..
ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், தென்காசி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நகர்மன்ற தலைவர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தென்காசி கொடி மரத்திடலில் உலமா சபை மாவட்ட தலைவர் […]
நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கத் தடை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் […]
மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலய மக்கள் மேட்டுப்பாளையம் வீதிகள் வழியாக குருதோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். […]
பாப்பாபட்டியில் அய்யனார் குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் பாப்பாபட்டியில் உள்ள மந்தையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் வகையறாவுக்கு பாத்தியப்பட்ட பெரிய தேவர் பட்டம் சூட்டும் விழா பாப்பாபட்டி பத்து தேவர் தலைமையில் அய்யனார்குளம் இரண்டு தேவர் முன்னிலையில் தேவர் பட்டம் சூட்டும் விழா நடைபெற்றது. பெரிய தேவர் வகையறா பிரகாஷ் என்பவருக்கு தேவர் பட்டம் சூட்டப்பட்டது. பத்து தேவர் மாமன் மார்கள் நெற்றியில் திருநீறு வைத்து தேவர் பட்டத்தினை சூட்டினார்கள். பின்னர் அவருக்கு மாலை சால்வை அணிவித்து தங்களது வாழ்த்துக்களை […]
தேவகோட்டை – கே எம் எஸ் சிந்தனைச் சோலையின் 102 வது மாதக் கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம் நகர் அழகப்பா பூங்கா பின்புறம் அமைந்துள்ள பகத்சிங் மணி மண்டபத்தில் விடுதலை வீரர் கே எம் எஸ் சிந்தனை சோலையில் 102 வது மாதக் கூட்டம் முனைவர் ச ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது, தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது சிந்தனைச் சோலையின் நிறுவனர் தெய்வசிகாமணி வரவேற்புரை நிகழ்த்தினார் ,முனைவர் பெளலியன்ஸ் கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றினார் , நிகழ்ச்சிகளை சிந்தனை சோலை துணைச் செயலாளர் செல்வம் நன்றியுரை […]
சோழவந்தானில் தேமுதிக சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் தேமுதிக சார்பாக வட்ட பிள்ளையார் கோவிலில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. சோழவந்தான் பேரூர் செயலாளர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் தங்கராஜ், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் சோலை சசிகுமார், மாவட்ட அவைத் தலைவர் நல் கர்ணன் முன்னிலை வகித்தனர். மகளிர் அணி துணைச் செயலாளர் கண்ணம்மா, பூங்கொடி, பாண்டிச்செல்வி, சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நிர்வாகி தெய்வேந்திரன், முள்ளி பள்ளம் […]
அலங்காநல்லூர் அதிமுக மாவட்ட பிரதிநிதி முரளியின் தாயார மறைந்த 30 வது நாள் நினைவு நாளை யொட்டி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் நேரில் சென்று மரியாதை
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அலங்காநல்லூர் ஒன்றிய அலங்கா நல்லூர் பேரூர் கழக மாவட்டபிரதிநிதி அலங்கை முரளியின் தாயார் சரோஜா அம்மாள் கடந்த17.03.25 அன்று இயற்கை எய்தினார் முரளியின் தாயார் சரோஜாவின் 30 வது நாள் நினைவு நாளை ஒட்டிமாவட்ட பிரதிநிதி அலங்கை முரளியின் இல்லத்திற்கு வருகை தந்த சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் சரோஜாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார் பின்னர் மாவட்ட […]
கீழக்கரை ஜல்லிக்கட்டில்மாடு முட்டியதில் தலைமை காவலர் படுகாயம்
மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை குத்தியதில் மதுரை பெருங்குடி காவல் நிலைய தலைமை காவலர் சித்தையன் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஏற்கனவே கீழக்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக மாடுபிடி வீரர்கள் காளை உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் இன்று காலை தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு […]
சட்டமன்ற தேர்தலில் பெண்களின் ஒருவாக்குகள் கூட திமுகவுக்கு போட மாட்டோம் என்று உறுதிமொழி ஏற்க வேண்டும்.ஆர்.பி. உதயகுமார் பேச்சு
மதுரை மாவட்டம் வாடிப் பட்டி தாலூ கா அலங்காநல்லூர் ஒன்றியத்தில் தனிச்சியம், மேல சின்னம்பட்டி புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் அ.திமு.க. பூத் கமிட்டி கிளை கழக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், மாணிக்கம், கருப்பையா, மாநில நிர்வாகிகள் ராஜேஷ் கண்ணா, ராமகிருஷ்ணன், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர்.முன்னாள் ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். இந்த கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் […]
சோழவந்தானில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் வெங்கடேசன் எம் எல் ஏ தொடங்கி வைத்தார்
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு நீர் மோர் சர்பத் இளநீர் தர்பூசணி பப்பாளி வெள்ளரி போன்ற கோடை கால குளிர்பானங்கள் பழங்கள் பொது மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை தொடங்கி வைத்தார் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் பேரூராட்சித் தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் பேரூர் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாத சுவாமி சிவாலயத்தில் பங்குனி மாத பிரதோஷ விழா பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசுவாமி ஆலயத்தில் பங்குனி மாத வளர்பிறை பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு பால் தயிர் வெண்ணெய் நெய் உள்ளிட்ட அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் திருக்கோவிலுக்குள் வலம் வந்தனர். சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாக அதிகாரி, எம் விஎம் குழும தலைவர் மணி முத்தையா, கலைவாணி பள்ளி நிர்வாகி வள்ளி […]
சோழவந்தான் பேரூராட்சி 6வது வார்டு பகுதியில் ஒரு வாரமாக குப்பைகள் அல்லாததால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம்பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இந்த நிலையில் பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர் ஒரு வாரத்திற்கு மேல் அள்ளப்படாத நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக குப்பைகளில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசும் அவலம் ஏற்பட்டு வருகிறது பேரூராட்சிக்கு உட்பட்ட 6வது வார்டு சங்கங்கோட்டை பகுதியில் பேரூராட்சி கழிப்பறை […]
வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.!
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றுக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை திருப்புல்லாணி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பற்றி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நடத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்களையும், அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும் பற்றி எடுத்துரைத்தனர் விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கு, தங்களுடைய ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் […]
சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை..!
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மாநில அளவிலான செயற்குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருட காலங்களாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தவறிவிட்டதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.இதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. […]
சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் பேரூர் திமுக சார்பில் உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார்சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ்கே ஜெயராமன் பொதுக்குழுஉறுப்பினர் ஸ்ரீதர் துணைத் தலைவர் லதா கண்ணன் பிற்பட்டோர் நலவாரிய உறுப்பினர் பேட்டை பெரியசாமி பொருளாளர் எஸ் எம் பாண்டியன் வார்டு கவுன்சிலர்கள் கொத்தாலம் செந்தில் வேல் சிவா கௌதம ராஜா முத்து செல்வி சதீஷ் தொமுச செயலாளர் […]
சோழவந்தான் அருகே பொம்மன் பட்டி காளியம்மன் கோவில் உற்சவ விழா
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ கருப்பண்ணசாமி ஸ்ரீ முனியாண்டி சாமி கன்னிமார் தெய்வம் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் சக்தி கரகம் எடுத்து வந்தனர் நேற்று இரவு கிராமத்தின் அருகில் உள்ள ஆற்றப்பகுதியில் இருந்து சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர் பின்னர் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆராதனை நடைபெற்றது இதில்பொம்ம்ன் பட்டி கிராமத்தைச் […]
சோழவந்தான் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டி புதுப்பட்டி தென்கரை ஊத்துக்குளி முள்ளிப்பள்ளம் ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாகபெய்து வரும் கனமழை காரணமாக 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடவு செய்திருந்த நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது இந்தப் பகுதிகளில் தென்கரை கண்மாய் பாசனம் மூலமும், வைகை பாசனம் மூலமும், நடவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூல்கிசேதம் அடைந்த தில் விவசாயிகள் பலத்த நஷ்டம் அடைந்துள்ளனர் இது குறித்து சோழவந்தான் வெங்கடேசன் எம் […]
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது இதனைத் தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றதுபூமேட்டு தெரு கிராமத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து சோழவந்தானின் நான்கு ரத வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி வைத்து கும்மி பாட்டு பாடினர் அர்ச்சகர் சண்முகவேல் பூஜைகள் […]
You must be logged in to post a comment.