திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி அந்தரத்தில் பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி, நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்..

திருமங்கலம் அருகே பயங்கரம்: சாலையைக் கடக்க முயன்ற டூவீலர் மீது மோதி பறந்து சென்ற கார்:ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுமி உட்பட ஐந்து பேர் பலி நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்.. மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த கனகவேல் என்பவர் தளவாய்புரத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூ மிதி திருவிழாவில் பங்கேற்க குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு மனைவி மற்றும் குழந்தைகளுடன் தளவாய் புரத்திலிருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை கனகவேல் மகன் மணி […]

உசிலம்பட்டி அருகே அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்தைச் சார்ந்தது ஆரியபட்டி கிராமம்.இக்கிராமத்தில் உள்ள காலணிப் பகுதியில் 100க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.இந்தக் காலணிப்பகுதியில் சாக்கடை வசதி தண்ணீர் வசதி எரிமேடை மயானம் பொதுச்சாவடி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி இப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக் கொடுத்தும் செய்து தரப்படவில்லை எனக் கூறப்;;;படுகின்றது.இது தொடர்பாக சாலை மறியல் ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல கட்ட போராட்டங்களை நடத்தியும் பலனில்லை.இதனால் ஆத்திரமடைந்த […]

இந்த வாரம் முழுவதும் சுட்டெரிக்க போகும் வெயிலும், சுள்ளென்று பெய்யும் மழையும்..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.நாளை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.12-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், […]

தமிழகத்தில் வடமாநிலத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்!- சீமான்..

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கோவையில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-தமிழ் மொழிக்கு தேசிய அளவில் இதுவரை உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தமிழகத்துக்கு மத்திய அரசு செய்யும் துரோகமாகும். இந்த பிரச்சி னையில் தி.மு.க.வினருக்கும், எந்த கொள்கையும் இல்லை. தமிழகத்தில் வடமாநிலத்தினரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு ஏற்றதல்ல. இதேநிலை நீடித்தால் நாடே எதிர்பார்க்காத ஒரு புரட்சி உருவாகும்.சின்னத்தை முடக்கினாலும் நாம் […]

உசிலம்பட்டியில் சாக்கடை வசதி கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 5வது வார்டைச் சார்ந்தது இருளப்ப தேவர் தெரு. இத்தெருவில் சாக்கடை வசதி முறையாக பராமரிப்பு இன்று கிடப்பதால் அப்பகுதியில் தொற்றுநோய் ஏற்படுவதாகவும் உடனடியாக அதனை சரி செய்ய கொடுக்க வேண்டும் என வார்டு கவுன்சிலர் சந்திரனிடம் நகராட்சி அதிகாரிகளிடமும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று கீழப்புதூரில் மதுரை- தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் […]

தென்காசியில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், தென்காசி பாறையடி தெரு, காயிதே மில்லத் நகரில் வைத்து, நோன்பு பெருநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கிஸான் அணி மாநிலச் செயலாளர் தென்காசி முகம்மது அலி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, ஒன்பதாவது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நாகூர் மீரான், மின்சார வாரிய செயற்பொறியாளர் ரபீக் பின் உசைன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல துணைச் செயலாளர் சித்திக் […]

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு..

முதலியார் பட்டி பகுதியில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு.. கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டியில் காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் வீடு வீடாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். திமுக கிளைச் செயலாளர் நவாஸ்கான் தலைமையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சிக்கு, திமுக கடையம் வடக்கு ஒன்றிய செயலாளரும், கடையம் ஊராட்சி ஒன்றிய துணை தலைவருமான மகேஷ் மாயவன், ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக்குழு உறுப்பினர் […]

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி..

தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மகளிர் கல்லூரி அமைத்திட பாடுபடுவேன்; தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் வாக்குறுதி.. தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் கடையநல்லூர் நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க திமுக முன்னணி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுடன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது தென்காசியில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் நெல்லை ராணி அண்ணா கல்லூரியை போன்ற மகளிர் […]

புதுக்கோட்டையில் மூதாட்டியை கொன்று நகை கொள்ளை: கொள்ளையர்கள் அட்டூழியம்..

புதுக்கோட்டை அருகே பூங்குடி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி 58 வயது பெரியநாயகி இவர் நேற்று மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாட்டை அழைத்து வருவதற்காக வீட்டில் பின்புறம் உள்ள வயலுக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பெரிய நாயகி வராததால் சந்தேகம் அடைந்த அவளது மருமகள் 33 வயது முத்துலட்சுமி தேடிச்சென்றுள்ளார் அப்பொழுது வயலில் நெற்றியில் பலத்த காயத்துடன் பெரியநாயகி இறந்து கிடந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார் அவரது கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தாலிச் செயின் […]

வாகனங்களில் ஸ்டிக்கர்கள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி.. தென்காசி மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. 100 சதவீதம் வாக்களித்தல் மற்றும் நேர்மையாக வாக்களித்தல், ஆகியவற்றை வலியுறுத்தி ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதனை தொடர்ந்து 09.04.2024 அன்று கீழப்பாவூர் பேருந்து நிலையத்திலும், கீழப்பாவூரில் உள்ள தனியார் பேருந்துகள், கார் மற்றும் தனியார் ஆட்டோக்களில் தேர்தல் திருவிழா-தேசத்தில் […]

கீழக்கரை மூணாவது வார்டு பகுதியில் மின் விளக்கு எரியாமல் பொதுமக்கள் அவதி !  நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் !!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மூணாவது வார்டுக்கு உட்பட்ட சதக்கத்துல் ஜாரியா நடுநிலைப் பள்ளியில் எதிர்ப்புற சந்தில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அதிகமாக பயன்படுத்தக்கூடிய  பாதை உள்ளது . இப்பாதை இரவு நேரங்களில் இருளடைந்து   காணப்படுவதால் பெண்களும் குழந்தைகளும் அவ்வழியில் செல்வதற்கு அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் வயதானவர்கள் அவ்வழியில் பலமுறை விழுந்ததாகவும் சொல்லப்படுகிறது . நகர்மன்ற உறுப்பினர் கண்டும் காணாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.  அப்பகுதியில் நீண்ட காலமாக பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நிதியிலிருந்து சூரிய […]

காங்கேயம் அருகே பயங்கர விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி..

காங்கேயம் அருகே ஓலப்பாளையத்தில் அரசு பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சம்பவத்தில் காங்கேயம் அரசு மருத்துவமனையில் இறந்த 5 பேர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்பு அவருடைய சொந்த ஊரான திருப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. திருப்பூர், நல்லிக்கவுண்டர் நகர், புது நகர் 7வது வீதியை சேர்ந்த சந்திரசேகரன் சித்ரா தம்பதியினர் தங்களது 60வது திருமண விழவிற்கு மகன்கள் சசிதரன் 30, இளவரசன் 26 மற்றும் மருமகள் […]

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்..

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சானுக்கு கிளி ஜோசியம் பார்த்தவரை வனத்துறையினர் கைது செய்தனர்.. கிளியை அடைத்து வைத்து ஜோசியம் பார்த்ததாக வனத்துறையினர் நடவடிக்கை. கடலூர் தென்னம்பாக்கம் பகுதியில், 2 நாட்களுக்கு முன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்தார். கிளி ஜோசியத்தில், அழகுமுத்து அய்யனார் படம் வந்ததால், வெற்றி பெறுவீர்கள் என கூறிய கிளி ஜோசியக்காரர். தங்கர் பச்சான் கிளி ஜோசியம் பார்த்த வீடியோ வைரலான நிலையில், ஜோசியரை கைது செய்த […]

அதிகாலையில் கோர விபத்து; பேருந்து லாரி மீது மோதியதில் நடத்துனர் உயிரிழந்த சோகம்..

கடையநல்லூர் அருகே அதிகாலையில் கோர விபத்து; அரசு பேருந்து லாரி மீது மோதி நடத்துனர் உயிரிழந்த சோகம்.. கடையநல்லூர் அருகே அரசு பேருந்து நினாறு கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் நடத்துனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மற்றும் இடைகால் இடையே சையது காட்டன் மில்ஸ் அருகில் அதிகாலை நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானது. திருப்பூரில் […]

நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம், பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்! சீமான் சீற்றம்..

சேலம் கோட்டை மைதானத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தர்மபுரி, சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் சீமான் பேசியதாவது; கிரகணம் வரும்போது சூரியனை பார்த்தால் கண் கெட்டுப்போகும். சூரியனுக்கு ஓட்டு போட்டால் நாடே கெட்டு போகும்.நாட்டை காப்பாற்ற ராணுவத்தில் சேர வேண்டாம். பாஜகவிற்கு ஓட்டு போடாமல் இருந்தால் போதும்.இந்திய நாட்டை பாஜக தான் ஆள வேண்டும் […]

கீழக்கரையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி வழங்கும் நிகழ்ச்சி !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் சித்திக் ரினாஃப் ஹஸ்ஸ் ஃபௌண்டேஷன் சார்பாக ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு வீட்டில் உபயோகம் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னால் நகர்மன்ற உறுபினர் மற்றும் தெற்குத்தெரு ஜாமாத் முன்னால் செயலாளர் லாஹிதுகான் , முன்னால் நகர்மன்ற உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலருமான ஆனா மூனா காதர் சாகிப் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நெய்னா அசாருதீன் ஹபீப் மரைக்கா ஆகியோர் கலந்து கொண்டு […]

பாலியல் புகார் எதிரொலி; திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்து உத்தரவு..

திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக செயலாளர் பொறுப்பில் இருந்து மகுடீஸ்வரன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாலியல் தொல்லை புகாரில் திண்டுக்கல் மாவட்ட பாஜக செயலாளர் மகுடீஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. பழனி அருகே சாமிநாதபுரம் கிராமத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத் திட்ட பொறுப்பாளராக உள்ள பெண்ணிடம், மதுபோதையில் பாலியல் தொந்தரவு அளித்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மகுடீஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர். இவரது மனைவி செல்வராணி […]

பழனி அருகே  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

பழனி அருகே  பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த பா.ஜ.க மாவட்ட செயலாளர்! பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் செயல்பட்டு வரும் அரசு நடுநிலை பள்ளியில் பள்ளியில் 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக கலை செல்வி (38) என்ற பெண் பணியாற்றி வருகின்றார். […]

தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த.ம. மு.க. தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்..

தென்காசி மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் த ம மு க தலைவர் ஜான் பாண்டியனை ஆதரித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரச்சாரம்.. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவு ஏற்று ஜான் பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய இங்கு வந்துள்ளேன். இப்பகுதியில் முக்கிய தலைவரான ஜான்பாண்டியன் வெற்றி பெற்றால், உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவார். தேசிய ஜனநாயக கூட்டணி பாரத நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது. இண்டியா கூட்டணி, […]

பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு..

பெண்கள் நினைத்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்! ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி பேச்சு.. மதுரை அடுத்துள்ள பூவந்தி சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியின் 25 ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் எஸ். அண்ணாமலை தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் விசுமதி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி தாளாளர் மற்றும் செயலாளர் அசோக் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ஆனந்த ஜோதி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!