தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குப்பதிவு! மாவட்ட வாரியாக எத்தனை சதவிகிதம்..!

தமிழகத்தில் 39 தொகுதிகளில் இன்று காலை ஏழு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 100 சதவீத வாக்குப்பதிவை இலக்காக கொண்டுள்ள தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டனர்.காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக வாக்களித்தனர். நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாக்குப்பதிவில் சற்று மந்தம் ஏற்பட்டது. அதன்பின் வாக்குப்பதிவு செய்ய மக்கள் அதிக அளவில் திரண்ட வண்ணம் உள்ளனர்.இந்நிலையில், இரவு 7 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 72.09 […]

மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்..

மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்.. நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் […]

பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு..

பரந்தூரில் தொடரும் தேர்தல் புறக்கணிப்பால் பரபரப்பு.. காஞ்சிபுரம் அருகே பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரும் தேர்தல் புறக்கணிப்பு ஸ்ரீ பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏகனாபுரம், நாகப்பட்டு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை அரசு ஊழியர்கள் 13 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். ஏகனாபுரம் கிராமத்தில் 1400 வாக்காளர்கள் உள்ள நிலையில், இதுவரை ஒரு வாக்காளர் கூட வாக்களிக்கவில்லை. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு […]

இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு! சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்..

 இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வாக்குபதிவு சட்டமன்ற தொகுதி வாரியாக பிற்பகல் 03: மணி நிலவரம்.. அறந்தாங்கி : 53.35 சதவீதம். பரமக்குடி (தனி ) : 53.29 சதவீதம். திருவாடனை : 51.37 சதவீதம். இராமநாதபுரம் : 48.35 சதவீதம். முதுகுளத்தூர் : 51.28 சதவீதம். திருச்சுழி : 59.94 சதவீதம். சராசரி : 52.46 சதவீதம்

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு..

அரியலூர் மாவட்டம் நரசிங்க பாளையம் வாக்குச்சாவடி அருகே, விசிக – பாஜகவினர் மோதலால் பரபரப்பு.. இருகட்சி நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதலில் இருவரின் மண்டை உடைப்பு. மோதல் காரணமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தம் – போலீஸ் குவிப்பு. பதற்றமான வாக்குச்சாவடி என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு. வாக்குப்பதிவு மையத்திற்குள் பிரசாரம் செய்ததாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டு.

பாராளுமன்ற தேர்தல்: 102 தொகுதிகளில் 3 மணி நிலவரப்படி 49.9 சதவீத வாக்குகள் பதிவு..

மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதமும், 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி 39.9 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், பிற்பகல் 3 மணி நிலவரப்படி […]

ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25 வாக்கு சதவீதம் பதிவு ! வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஜெயபெருமாள்  ! ! 

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.  அதன்படி  இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.  இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும்  புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை  […]

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் இயக்கம்..

பாராளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளுக்கான தேர்தல் நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆயிரக்கணக்கான பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்கி வருகிறது.இந்நிலையில், தேர்தலை […]

நாளை (19/04/2024) மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..

நாளை மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் வரிசை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.. வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முன்பே வாக்குச்சாவடியின் வரிசை நிலையை https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் மூலம் அறிந்துகொள்ளலாம்

மதுரை ஒத்தக்கடையில் போலி மருத்துவர் கைது !

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை காவல் நிலைய சரகம், யா.ஒத்தக்கடை மிராஸ் காம்ப்ளக்ஸில் உள்ள லட்சுமி கிளினிக்கில், சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து அபிஜித் பிஸ்வாஷ் (40)த/பெ அம்பிக் பிசஷ்வாஷ் என்பவர் பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே முடித்துவிட்டு எவ்வித கல்வித் தகுதியும் இல்லாமல் ஆங்கில மருத்துவம் செய்ததாக தகவல் தெரிய வந்துள்ளது. இதில், இன்று காலை 12.30 மணிக்கு யா.ஒத்தக்கடை காவல் நிலையத்தில் சுகாதார துறை சார்பில் ஒப்படைத்துள்ளனர். […]

பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி !

சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் மதுரை- ஆனையூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையமும் இணைந்து நடத்திய பச்சிளம் குழந்தைகளின் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆனையூரில் உள்ள சுகாதார மையத்தில் நடத்தப்பட்டது இதில் நிகழ்ச்சியின் ஆரம்பமாக மதுரை சில்ட்ரன் டிரஸ்ட் இன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மதுரை மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற […]

போராட்டத்தை கைவிட்ட ஆணைகுடி கிராம மக்கள் ! தேர்தலில் வாக்களிப்பதாக உத்தரவாதம் !!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலையொட்டி தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவிப்பு தொடர்ந்து இன்று கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் நேரடியாக கிராமங்களுக்கு சென்று கிராம பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து இருதரப்பின் பேச்சு வார்த்தையில் சுமுகமான தீர்வு ஏற்பட்டதால் போராட்டங்களை கைவிட்டனர். மேலும் பாராளுமன்ற தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிப்போம் என்று தெரிவித்தனர் […]

உச்சிப்புள்ளியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனி ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் தீவிர வாக்கு சேகரிப்பு !

இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளர் நவாஸ் கனியை ஆதரித்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் உச்சிப்புளி பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார் மேலும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக […]

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு !

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடும் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். இன்னும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசமாக ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் அதி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக மண்டபம் ஒன்றிய செயலாளர் டி ஜி எஸ் அழகர்சாமி பிஜேபி ஆத்மா கார்த்தி பிஜேபி முருகன் […]

கீழக்கரையில் கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் புதிய உதயம் !

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடற்கரை பீச் பார்க் லைட்ஹவுஸ் அருகில் கீழக்கரை இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் புதிதாக உருவாக்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம் கே இ உமர் கலந்து கொண்டு பேசுகையில் . இன்றைய காலகட்டத்தில் போதை பொருள் பழக்கம் அதிகரித்து வருவதாகவும் கீழக்கரையில் இதன் மூலம் குற்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபடுவதாக தெரிகிறது. கீழக்கரை […]

ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் வீதி வீதியாக சென்று ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பு !

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளராக கே.நவாஸ்கனிக்கு ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம் தலைமையில் திமுக கட்சியினர் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து ஏணி சின்னத்திற்கு ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தனர். ராமநாதபுரம் நகராட்சி அலுவலகம் பின்புறம் வண்டிக்கார் தெரு , வெத்தல கார தெரு , சவேரியார் தெரு கொண்ட இடங்களில் வாக்கு சேகரித்தனர். அப்பகுதி பொதுமக்கள் ஆதரவை தெரிவித்தனர்.

ஆணைகுடி கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் ஆணைகுடி கிராமத்தில் உப்பளம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் கிராம பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடக்க இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் கருப்புக் கொடி போராட்டத்தை நடத்தியதால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது . கிராம பொதுமக்கள் தெரிவிக்கையில் உப்பளம் அமைப்பதற்கு பலமுறை போராடியும்அனைத்து பணிகளையும் தொடங்கி வரும் நிலையில் பலமுறை போராட்டம் நடத்தி வருகின்றோம் ஆனால் மாவட்ட ஆட்சியர் எங்கள் கோரிக்கையை ஏற்க வில்லையென்றும் […]

ராமநாதபுரம் அரசு பேருந்தில் பயணம் செய்த பயனிடம் 10 லட்சம் பணம் பறிமுதல்

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுப்பதற்கு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே குஞ்சார் வலசை சோதனை சாவடியில் பறக்கும் படை அதிகாரி ராமமூர்த்தி தலைமையில் தீவிர சோதனை ஈடுபட்ட போது திருச்சியில் இருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்தில் அழகன் குளம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் கணக்கில் வராத 10 […]

இராமநாதபுரத்தில் எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாள் விழா !

இராமநாதபுரத்தில் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய, மாநில எஸ்சி.எஸ்டி அரசு ஊழியர்கள் மற்றும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை பாரதரத்னா பாபாசாகிப் டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் அவர்களின் 134 வது பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலாளர் சேக்கிழார் ஆகியோர் தலைமையில் டாக்டர் அம்பேத்கார் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து வருகை புரிந்த பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் பாலச்சந்திரன்,மாவட்ட […]

நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு..

நம் நாட்டின் பன்முகத்தன்மை குறித்து பிரதமர் மோடி புரிந்துகொள்ளவில்லை: நீலகிரியில் ராகுல் காந்தி பேச்சு.. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மைசூருவில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ராகுல் காந்தி பந்தலூர் அருகே தரையிறங்கினார். அப்போது ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து நீலகிரி தொகுதிக்குட்பட்ட கூடலூரில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!