பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி.

பத்தாண்டு கால பிரதமர் மோடியின் சிறப்பான ஆட்சியில் சிறுபான்மையினர் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை-ஓபிஎஸ் பேட்டி. மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். மனம் உருகி சுவாமி தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறுகையில்: சுயேச்சையாக போட்டியிட்டு உள்ளீர்கள் வெற்றி வாய்ப்புகள் எப்படி உள்ளது என்ற கேள்விக்கு: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அனைத்து பிரிவை சேர்ந்த […]

மறுபடியும் மறுபடியும் தோற்கும் சிஎஸ்கே! அசத்திய லக்னோ..

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் குவித்தது. ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் […]

வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது எப்படி! மருத்துவர்கள் கூறுவது என்ன..

இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, காலை 8 மணிக்கே வெயில் சுட்டெரிப்பதால், வீடுகளில் இருந்து வெளியே செல்வதற்கு அனைவரும் அச்சப்படுகின்றனர். மதிய நேரங்களில் அனல் காற்று வீசுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்துடன் செல்கின்றனர். வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது குறித்தும், ஆரோக்கியமாக பராமரிப்பது குறித்தும் மருத்துவர்கள் கூறியதாவது: புவி வெப்பமடைதல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு பருவநிலை […]

தமிழகம் முழுவதும் 15 இடங்களில் சதம் அடித்த வெயில்! சென்னையில் இன்று 100 டிகிரி வெயில் கொளுத்தியது…

தமிழகம் முழுவதும் இன்று 15 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக சேலத்தில் 107 டிகிரி வெயில் கொளுத்தியது. சென்னையில் 100 டிகிரி வெப்பமும், கோவையில் 102 டிகிரி வெப்பமும் பதிவானதுவேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார் இந்தியாவில் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது.வெயிலின் […]

நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்..

நிலக்கோட்டையில் சொத்தை எழுதி வாங்கிவிட்டு தந்தையை ஏமாற்றி நடுத்தெருவில் விட்ட மகன்! சொத்தை மீட்டு தரக்கோரி முதியவர் தாசில்தாரிடம் புகார்.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை முதல் வார்டு பகுதியை சேர்ந்தவர் மலைச்சாமி ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலைச்சாமி தனக்கு சொந்தமான வீட்டை தனது மகன் விஜய கண்ணனுக்கு தானமாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு ஆடு மேய்ப்பு தொழிலுக்கும் செல்ல முடியாத மலைச்சாமி வீட்டிலேயே […]

தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..

தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு.. தமிழக கேரள எல்லைப் பகுதியில் தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவலை தடுக்கும் விதமாக தென்காசி மாவட்டம் தமிழக-கேரள எல்லை பகுதியான புளியரை சோதனை சாவடியில் கண்காணிப்பு மற்றும் தடுப்பு பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் […]

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி..

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: ராஜேஷ் தாஸுக்கு சிறை தண்டனை உறுதி.. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கு: 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய ராஜேஷ் தாஸ் மனுவை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்.. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கீழமை நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரியும் சரணடைவதில் இருந்து விலக்குகோரியும் ராஜேஷ் தாஸ் மனு தாக்கல் செய்திருந்தார் […]

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு..

கள்ள ரூபாய் நோட்டு வழக்கு; குற்றவாளிகளுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பு.. வீ.கே.புதூரில் கள்ள ரூபாய் நோட்டு வழக்கின் 6 குற்றவாளிக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தென்காசி கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம், வீ.கே.புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காவல் துறையினர் வாகன சோதனையின் போது கள்ள ரூபாய் நோட்டு வைத்திருத்த வழக்கில் பின்வரும் 06 நபர்களை அப்போதைய […]

குளத்தூரில் பச்சைப் பட்டுடுத்தி ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! 

 இராமநாதபுரம் அருகே உள்ள குளத்தூரில் மிகவும் பழமையான புனிதம் வாய்ந்த ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலயத்தில் கடந்த 9 நாளுக்கு முன்பு, காப்பு கட்டுதல் மற்றும் கொடி ஏற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, ஆலயத்தில் பல்வேறு தீபாராதனைகள் விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தன. இன்று அதிகாலை  கோயிலில் இருந்து புறப்பட்ட ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் குதிரை வாகனத்தில் பச்சை பட்டுடுத்தி நகரின் முக்கிய வீதி  வழியாக வலம் வந்து வைகை ஆற்றில் சரியாக […]

பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு! வாட்டி வதைக்கும் வெயில்!மரத்திலேயே வதங்கி உதிர்வதால் விவசாயிகள் கவலை..

பழனியில் மாங்காய் விளைச்சல் கடுமையாக பாதிப்பு!  வெயிலின் தாக்கத்தால் மரத்திலேயே காய்ந்து உதிர்வதால் விவசாயிகள் கவலை..  திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான ஆயக்குடி, கோம்பைபட்டி, கணக்கண்பட்டி, பாலசமுத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் விவசாயிகள் மாங்காய் விவசாயத்தில்.ஈடுபட்டு வருகின்றனர. வருடத்திற்க்கு ஒருமுறை பங்குனி, சித்திரை மாதங்களில் மாங்காய் விளைச்சல் கிடைக்கும். இந்த ஆண்டு பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான வெயில் வாட்டிவதைத்து வருகிறது. வெயிலின் தாக்கத்தால் பழனியில் மாங்காய் விளைச்சல் முற்றிலுமாக பாதித்துள்ளது. மாமரங்களில் […]

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு..

தமிழ்நாடு, மேற்கு வங்கம், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை தென்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம்  அறிவிப்பு.. இதுவே தமிழ்நாட்டில் குறிப்பாக வட தமிழக மாவட்டங்களில் இந்த வெப்ப அலை தாக்கம் அதிகரித்திருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. இதன்படி ஏப்ரல் 22 முதல் 26 வரையிலான 5 தினங்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இயல்பைவிட ஓரிரு டிகிரி வெப்பநிலை […]

8 திருடர்களும்! மதுரை சித்திரைத் திருவிழாவும்! ரூம் போட்டு யோசித்தும் பிரயோஜனம் இல்லை! அலேக்காக அமுக்கிய போலீசார்..

மதுரை சித்திரைத் திருவிழா கூட்ட நெரிசலில் பக்தர்களிடம் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் உட்பட 8 பேர் கைது.. மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள கட்ராபாளையத்தில் தனியார் விடுதியில் சுற்றுலா வந்ததாக கூறி மத்திய பிரதேசத்தை சேர்ந்த எட்டு பேர் கொண்ட கும்பல் கடந்த 20ஆம் தேதி 2 அறை எடுத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை அவர்கள் தங்கி இருந்த அறையிலிருந்து தண்ணீர் கேட்டதாகவும் அந்த நேரத்தில் ரூம்பாய் […]

வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் உலக புவி தினத்தை முன்னிட்டு கிராம மக்களிடத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தாமரைச்செல்வி, சிந்துபிரியா, சுகந்தி, சுமதி, தமிழ்ச்செல்வி, சூரியலட்சுமி, சுவாதி, வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் பற்றி கிராம விவசாயிகளிடம் எடுத்துக் கூறியது பின்வருமாறு: காலநிலை அழுத்தத்தை சமாளிக்க சகிப்புத்தன்மை கொண்ட […]

ஒரே வருடத்தில் 1,12,47,630 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைத்த காவேரி கூக்குரல்..

ஒரே வருடத்தில் 1,12,47,630 மரக்கன்றுகள் நட்டு உலக சாதனை படைத்த காவேரி கூக்குரல்.. சுற்றுச்சூழல் வரலாற்றில் மீண்டும் ஒரு சாதனையாக, காவேரி கூக்குரல் இயக்கம் தமிழ்நாடு முழுவதும் 1.12 கோடி மரக்கன்றுகளை விவசாய நிலங்களில் நட்டு உலக சாதனை படைத்துள்ளது. இதையடுத்து, இவ்வியக்கத்தின் மூலம் இதுவரை நடப்பட்ட மரக்கன்றுகளின் மொத்த எண்ணிக்கை 10.9 கோடியாக உயர்ந்துள்ளது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் விடாமுயற்சியால், ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான கடந்த நிதியாண்டில் 48,748 விவசாயிகள் மற்றும் […]

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்..!

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: விசாரணைக்கு ஆஜராக 10 நாள் அவகாசம் கேட்டு நயினார் நாகேந்திரன் கடிதம்..! நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 பேர் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது தெரியவந்தது. பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை லோக்சபா தொகுதி வேட்பாளரும் எம்.எல்.ஏவுமான நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு […]

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு..! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்..

தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட ஏகனாபுரம் கிராம மக்கள் மீது வழக்கு பதிவு..! – எஸ்டிபிஐ கட்சி கண்டனம்.. இது தொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 13 கிராம பகுதிகளின் குடியிருப்புகள் விளைநிலங்களை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம்  அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்காக தங்களின் விவசாய நிலங்கள் […]

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால பயிற்சி முகாம்..

நெல்லை அருங்காட்சியகத்தில் கோடை கால சிறப்பு பயிற்சி முகாம் துவக்கம்.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால சிறப்பு பயிற்சி முகாம் துவங்கியது. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை காலத்தினை பள்ளி மாணவ மாணவிகள் பயனுள்ள வகையில் கழிக்கும் விதமாக பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடக்க திட்டமிடப்பட்டிருந்தன. அப்பயிற்சி முகாமினை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி துவங்கி வைத்தார். இந்நிகழ்வில் கவிஞர் சுப்பையா முன்னிலை வகித்தார். இன்றைய தினம் ஓவிய பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இப்பயிற்சியினை கலை […]

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி இன்று முதல் மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம். எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் […]

பழனியில் கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த நிலையில் இடையூறாக இருந்த தாய் மாமனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராம்குமார் இவரது மனைவி மீனா கடந்த சில வருடங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மீனாவின் தாய் மாமாவான ஜெகதீஸ்வரன் வீட்டில் வசித்து வருவதால் மீண்டும் குடும்பம் நடத்த முடியவில்லை எண்ணிய ராம்குமார். இன்று காலை விவசாய தோட்டத்திற்கு சென்று கொண்டு திரும்பிக் கொண்டிருந்த ஜெகதீஸ்வரனை வழிமறித்த ராம்குமார் மற்றும் அவரது நண்பருடன் சேர்ந்து அரிவாளில் சரமாரியாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியதில் நிலை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!