இராமநாதபுரம் மாவட்ட அளவில் 94.89% மாணவர்கள் தேர்ச்சி !

இராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6302 மாணவர்களும், 7247 மாணவிகளும் என மொத்தம் 13,549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 5850 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92.83% தேர்ச்சி அடைந்துள்ளனர். 7007 மாணவிகள் தேர்ச்சி பெற்று 96.69% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 94.89% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 19 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் […]

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்,  ஓர் பார்வை..

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்,  ஓர் பார்வை.. மாவட்டம்  தேர்ச்சி விகிதம்! திருப்பூர் – 97.45% ஈரோடு – 97.42% சிவகங்கை – 97.42% அரியலூர் – 97.25% கோவை  – 96.97% விருதுநகர்  – 96.64% திருநெல்வேலி – 96.44% பெரம்பலூர் – 96.44% தூத்துக்குடி  – 96.39% நாமக்கல் – 96.10% தென்காசி – 96.07% கரூர் – 95.90% திருச்சி – 95.74% கன்னியாகுமரி […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா மே 9ல் மவ்லிது ஷரீப் ஆரம்பம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடக்கமாகி உள்ளனார் .இந்த தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் திருவிழா பெரும் விமர்சியாக நடைபெற்று வரும். இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழாவில் முதல் நிகழ்ச்சியாக மே 9ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் இருந்து தர்ஹா ஹக்தார்களால் மவ்லிது ஷரீப் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான அமைதிப் பேச்சு வார்த்தை கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறும் இதனைத் தொடர்ந்து இந்த வருடத்தின் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 9ல் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சந்தனக்கூடு திருவிழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறாமல் இருப்பதற்கும் அமைதியான வழியில் திருவிழாவை நடத்துவதற்கு வருவாய் கோட்டாட்சியர் […]

லஞ்சம் வாங்கிய நில அளவைத் துறை பொறியாளர் கைது ! லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி !!

இராமநாதபுரம் ஓம்சக்தி நகர் பகுதியை சேர்ந்த அட்டோ ஓட்டுனர் திருநாவுக்கரசு என்பவரின் மனைவி தாமரைச் செல்விக்கு என்மனம் கொண்டான் கிராமத்தில் பூர்வீக சொத்தில் இருந்து சுமார் 8.5 செண்ட நிலம் பாகபத்திரமாக பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கு பட்டா உட்பிரிவு செய்ய இ-சேவை மூலமாக மனு செய்து இராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தை பலமுறை நாடியுள்ளார். மேலும் நிலத்தை அளவீடு செய்து அதன் அறிக்கையை நில அளவீட்டாளர் அளந்து கணினி மூலம் பதிவேற்றம் செய்ய சம்பந்தபட்ட பகுதி […]

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயி மகள். பொறியாளராக ஆவேன் என, பேட்டி…

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில், திண்டுக்கல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த பட்டிவீரன்பட்டி விவசாயி மகள். பொறியாளராக ஆவேன் என, பேட்டி… திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி., மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பட்டிவீரன்பட்டி ஹைஸ் ஸ்கூல் ரோட்டைச் சேர்ந்த விவசாயி, மகேஸ்வரன் (44) பிரீத்தா (42) தம்பதியரின் மகள் தன்யஸ்ரீ என்பவர் இப்பள்ளியில் எல்.கே.ஜி., முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து வருகிறார். இந்நிலையில், இன்று திங்கள்கிழமை வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு […]

பழனியில் பேன்சி கடைக்காரர் மகள் அப்சரா 592 மதிப்பெண் பெற்று சாதனை! நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார்.

பழனியில் பேன்சி கடைக்காரர் மகள் அப்சரா 592 மதிப்பெண் பெற்று சாதனை! நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு பெற்றுள்ளார். பழனி நெய்க்காரப்பட்டி கிராமத்தில் செயல்படும் பி.ஆர்.ஜி மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்ற மாணவி அப்சரா நான்கு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றும், மொத்தமாக 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் 96 மதிப்பெண்களும் பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி பயன்பாடு ஆகிய நான்கு பாட பிரிவுகளில் நூற்றுக்கு நூறு […]

கட்டணமா கேட்கிறீங்க! காரை விட்டு ஏத்தும் வாகன ஓட்டிகள்! அலறி துடிக்கும் சுங்க சாவடி ஊழியர்கள்..

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வாகனம், காரை வைத்து ஏற்றி கொல்ல முயலும் காட்சிகள் மற்றும் ஊழியர்களை ஆபாசமாக பேசி அடிப்பது உள்ளிட்ட பல்வேறு வீடியோ காட்சிகள் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி பதிவு எண் இல்லாத கார்களும், வேறு மாவட்டத்தில் இருந்து வரக்கூடிய கார்களும், சுங்க வரி கட்டணம் செலுத்தாமல் செல்வது வாடிக்கையாகி வருவதால், சுங்கச்சாவடி ஊழியர்கள் தங்களது உயிருக்கு பாதுகாப்பின்றி […]

ராமநாதபுரத்தில் நிலம் மோசடி செய்த நபர் மீது நடிகை கௌதமி குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் !

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே சுவத்தான் என்ற பகுதியில் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடி பகுதியைச் சேர்ந்த அழகப்பன் என்பவர் நடிகை கௌதமிடம் ரூபாய் 3 கோடி பணம் பெற்றுள்ளதாகவும். இந்நிலையில் சுமார் 64 ஏக்கர் நிலம் ரூ 57 லட்சம் மதிப்பில் மட்டும் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் , அந்த நிலமும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இடத்தை போலியாக ஆவணம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்ததாகவும் தெரிய வந்துள்ளது . எனவே நிலத்தை போலியாக வாங்கிக் கொடுத்தது பணத்தை […]

கொளுத்தும் வெயில்! குடிநீர் பிரச்சினை குறித்தும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை..

தமிழ்நாட்டில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து அனலாகி வருகிறது. வெயிலின் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதி அடைந்து வரும் நிலையில் குடிநீர் பிரச்சினையும் ஆங்காங்கே உருவாக தொடங்கிவிட்டது.ஏரி-குளங்கள் உள் ளிட்ட நீர் வழங்கும் ஆதாரங்கள் மிக வேகமாக வறண்டு வருவதால் குடிநீர் பிரச்சினை குறித்தும் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாகவும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளார்.சென்னை தலைமைச் […]

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில் முதலிடம்..

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது! இந்த வருடமும் மாணவிகளே அதிக அளவில்  முதலிடம்.. தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார்; tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை அறியலாம். மாணவர்கள் பதிவு செய்துள்ள மொபைல் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படுகிறது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இயக்குநர் சேதுராமன் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலமாகவும் வெளியிடப்படுகிறது அரசு பள்ளிகளில் தேர்ச்சி விதிகம் […]

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்..

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்! தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை வசதி மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதனிடையே பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு […]

ராமநாதபுரத்தில் கொளுத்தும் வெயிலில் நீண்ட வரிசையில் நீட் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ! நடுரோட்டில் அமர்ந்திருந்த பெற்றோர்கள்!!   

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்களில் சுமார் 2229 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர் இந்த நிலையில் ராமநாதபுரம் சையது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் சுமார் 900 பேர் மையத்தில் தேர்வு எழுதுகின்றனர் . தற்போது கொளுத்துகின்ற அக்னி நட்சத்திரம் வெயில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாணவ மாணவிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு மையத்தின் வெளிப்பகுதியில் சாமியானா பந்தல் போதுமான அளவுக்கு போடப்படவில்லை அதனால் மாணவ மாணவிகள் வெயிலில் நீண்ட […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது‌! முடிவுகளை இணையதளங்களில் பார்வையிடலாம்..

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகிறது‌! முடிவுகளை இணையதளங்களில் பார்வையிடலாம்.. மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்; EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்

நிலக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்! போக்சோ சட்டத்தில் கைது..

நிலக்கோட்டை அருகே நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர்! போக்சோ சட்டத்தில் கைது.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நான்கு வயது சிறுமியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர் இதில் விருவீடு பகுதியைச் சேர்ந்த சீனித்தேவர் மகன் பிச்சை […]

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத  வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்..

கைகளை இழந்தும் நம்பிக்கையை இழக்காத  வாலிபர், தன் விடாமுயற்சியால், தமிழகத்தின் முதல் நபராக கார் ஓட்டுவதற்கான லைசென்ஸ் பெற்றுள்ளார்.. சென்னை வியாசர்பாடி பெரியார் நகரைச் சேர்ந்தவர் தான்சென், 31. இவர், 10 வயதை நெருங்கிய போது, மின்சார விபத்தில் சிக்கி, மூட்டுக்கு கீழ் தன் இரண்டு கைகளையும் இழந்தார். தொடர் முயற்சியால், இன்ஜினியரிங் முடித்தார். தொடர்ந்து பி.எல்., முடித்து எம்.எல்., படித்து வருகிறார். தற்போது திருமணமாகி ஒன்றரை வயதில் மகள் உள்ளார். பிறரை சார்ந்து வாழ விரும்பாத […]

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை..

கடையம் அருகே கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு; மர்ம நபர்கள் கைவரிசை.. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள, முதலியார்பட்டி பிரதான சாலையில், பக்கீர் மைதீன் (56) என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அதே சாலையில் மஸ்த் செப்பல் என்ற பெயரில் தமீம் அன்சாரி என்பவர் செருப்பு கடை வைத்துள்ளார். இந்த இரண்டு கடைகளையும் வழக்கம்போல் காலையில் திறக்கும் போது பூட்டு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த பணம், செல்போன் […]

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு..

நெல்லையில் மமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு.. நெல்லையில் ரயில்வே மேம்பாலத்தை திறக்கக்கோரி மமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மஹாராஜா நகர் உழவர் சந்தைப் பகுதி சாலையில், தினந்தோறும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக நெடுஞ்சாலைத் துறையும் ரயில்வே துறையும் இணைந்து சுமார் 26 கோடியே 30 லட்சத்தில் நெல்லை திருச்செந்தூர் ரயில்வே மார்க்கத்தில் கடந்த 2016 ல் […]

கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் விவசாய நிலங்களைச் சேதப்படுத்திக் கொண்டிருக்கும் காட்டுமாடுகளைக் கட்டுப்படுத்தும் முறையை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதியாண்டு படிக்கும் மாணவி வீ. தாமரைச்செல்வி தலைமையில் ஹெர்போலிவ் என்னும் மருந்து குறித்த செய்முறை விளக்கம் நடைபெற்றது. மேலும் மாணவி தாமரைச்செல்வி கூறுகையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் சான்றிதழ் அளிக்கப்பட்ட ஹெர்போலிவ் என்னும் மருந்தினை தெளிப்பதினால் காட்டு விலங்குகளான காட்டு மாடு எருமை காட்டுப்பன்றி போன்ற விலங்குகள் […]

இராமேஸ்வரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு !

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்காக நீர், மோர், தர்பூசனி பழம் உட்பட தாகம் தீர்க்கும் வகையில் பந்தல் திறக்கப்பட்டு வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவரணி தலைவர் தளபதி தமீம், பரமக்குடி நகர் நிர்வாகிகள் அர்ஜீன், துரை மருது, பார்த்திபன், சுரேஷ், இராமேஸ்வரம் நகர்தலைவர் கோவிந்தராஜ் நகர்செயலாளர் கோபிசாரதி நகர் பொருளாளர் கோபிகிருஷ்ணா இளைஞரணி பொருளாளர் ஸ்டீபன் , நகர் இளைஞரணி செயலாளர் ராஜிவ்(எ)நாகேஸ்வரன் நகர் இணை […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!