10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ல் தொடங்கி ஏப்ரல் 8-ந்தேதி வரை நிறைவடைந்தது.இந்த தேர்வை 12,616 பள்ளிகளில் இருந்து 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர்.இதற்காக, மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. பொதுத் தேர்வுக்கான அறை கண்காணிப்பாளர் பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். ஏப்ரல் 12-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே10ம் தேதி வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் […]
Category: மாவட்ட செய்திகள்
ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திரு விழா..
சுரண்டை ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா.. தென்காசி மாவட்டம் சுரண்டையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ அழகுபார்வதி அம்மன் கோவில் திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடந்தது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாள் மண்டகப்படி ஜமீன்தாரால் நடத்தப்பட்டது. 2ஆம் நாள் மண்டகப்படி தேவர் சமுதாயத்திற்கும், 3ஆம் நாள் மண்டகப்படி செட்டியார், பிள்ளைமார் சமூகத்தினர் சார்பிலும், 4ஆம் நாள் மண்டகப்படி நாடார் சமுதாயமும், 5ஆம் நாள் மண்டகப்படி […]
வீடியோ வெளியிட்ட யூட்யூபர் சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்..
கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி, வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தாண்டு நடைபெறும் மக்களவை தேர்தலிலும் அதே தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் நவாஸ் கனி போட்டியிட்டார். தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் நவாஸ் […]
நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரேதத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம்!-விசிக மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்;கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு..
நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் கூலி தொழிலாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்! பிரேதத்தை வாங்க மறுத்து இரண்டாவது நாளாக உறவினர்கள் போராட்டம்!-விசிக மாநில நிர்வாகிகள் சந்தித்து ஆறுதல்;கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களில் 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டின் முன்பு படுத்து உறங்கிய கூலி தொழிலாளியை மர்ம கும்ப கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி சாய்த்தது. இந்த சம்பவம் தொடர்பாக நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் […]
ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் போராட்டம்! உள் நாடு, வெளிநாடு விமான சேவைகள் கடும் பாதிப்பு! பரிதவிக்கும் பயணிகள்..
மத்திய அரசுக்கு சொந்தமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கியது. இந்த நடவடிக்கையின் போது ஏற்கனவே பணியில் இருந்த ஊழியர்களுக்கும் புதிய ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. நேர்காணலில் நன்றாக செயல்பட்டபோதும் குறைவான நிலையில் ஊதியம் உள்ள பணியில் அமர்த்தப்படுவதாகவும், போனஸ் உள்ளிட்டவற்றில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் 300க்கும் மேற்பட்டோர் இன்று ஒரேநாளில் மருத்துவ விடுப்பு எடுத்துள்ளனர். இதனால் ஏர் இந்தியா விமான […]
மதுரை வெளக்கல் குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரியும் தீ! சாலையெங்கும் புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்..
மதுரை வெளக்கல் குப்பை கிடங்கில் திடீரென பற்றி எரியும் தீ! சாலையெங்கும் புகைமண்டலமாக காட்சி அளிப்பதால் விபத்து ஏற்படும் அபாயம்.. மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான வெளக்கல் குப்பை கிடங்கு பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகள் கொட்டப் பட்டு வருகிறது. அவற்றிலிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து எடுக்கப்படுகிறது. மக்காத குப்பைகளை மதுரை மாநகராட்சி குழிதோண்டி அதன் மேல் மண் போட்டு மூடி […]
சவுக்கு சங்கர் மீது அடுத்தடுத்து பாயும் வழக்குகள்!குண்டாஸ் வழக்கு போடப்படுமா..??
தமிழகத்தின் பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து தேனி விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர்.மேலும் சவுக்கு சங்கரின் அவதூறு கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவி மூ.சூரிய லட்சுமி தெரிவிக்கையில் :- விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி […]
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு..
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இரும்பாலான மேம்பாலத்தின் மேல் திடீர் பள்ளம் – விஜய் வசந்த் எம்.பி ஆய்வு.. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வழியாக செல்லும் திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்திற்கு தீர்வு காணும் வகையில் குழித்துறையிலிருந்து பம்மம் வரை 2018 – ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்க்காக ரூ.222 கோடி செலவில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது வரை இந்த பாலத்தை மக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தின் […]
கொளுத்தும் கோடை வெயில்! மக்களே குடை எடுத்துட்டு போங்க! 14 மாவட்டங்களில் கொட்டப் போகும் மழை..
கோடை வெயில் துவங்கியதிலிருந்து தமிழகத்திலிருந்து கடந்த சில தினங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கல் நேரங்களில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை 14 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் […]
அசைக்கவே முடியாதா.? 5 வது முறையாக ரஷ்யா அதிபராக பதவி ஏற்றார் விளாடிமிர் புதின்…
ரஷ்யாவில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதினின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ரஷ்ய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த மார்ச் 15 ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில், ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தேசிய சுதந்திர ஜனநாயகக் கட்சி, புதிய மக்கள் கட்சி […]
ராமநாதபுரம் அமாவாசை முன்னிட்டு வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் பெருமான் ஆலயத்தில் புனித நீர் வைத்து சிறப்பு வழிபாடு !
ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு ஆலய வளாகப் பகுதியில் உள்ள கிணற்றில் புனித நீர் எடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது ஒவ்வொரு அமாவாசை அன்று புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்து ஆன்மீக பக்தர்களுக்கு வழங்கினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகவே ஆன்மீக முறைப்படி தீர்த்த கிணற்றுக்கு ஈஸ்வர சரவணன் முன்னிலையில் வழுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் அருளொளி மன்றத்தினர் […]
விறுவிறுப்பாக நடைபெற்ற 3-ம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவு..
உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.இந்நிலையில், இன்று மாலை 6 மணியோடு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 60.19 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.மாநில வாரியாக விவரங்கள்:அசாம்: 74.86 சதவீதம் பீகார்: 56.01 சதவீதம் சத்தீஸ்கர்: […]
தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் முதலிடம் பெற்ற ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைபள்ளி; கல்வியாளர்கள் பாராட்டு.. தென்காசி மாவட்டத்தில் +2 பொதுத்தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எம்.பத்ரி நாராயணன் 600க்கு 592 மதிப்பெண்கள் பெற்று இப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதிய 131 மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி 100 சதவீத […]
24 மணி நேரமும் மும்முனையில் இயங்கக்கூடிய பிரத்தியேகமான மின் பாதையின் வாயிலாக தடையில்லா சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது!- அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை..
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. நிதி, மனிதவள மேலாண்மைத்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கை.. கடந்த ஆட்சி காலத்தில், தமிழ்நாட்டின் டெல்டாப் பகுதியில் 12 மணி நேரமும், பிற பகுதிகளில் 9 மணி நேரமும் மட்டும் தான் மும்முனை மின்சாரம் என்று இருந்த நிலையினை மாற்றி, உழவர்களின் நலனை எப்பொழுதும் முதன்மையாக கருதக்கூடிய இந்த அரசு கடந்த 2021-ல் பதவியேற்றது முதல், விவசாயத்திற்கான மும்முனை மின்சாரம், […]
நிலக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை.! உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி சார்பில், திடீர் சாலை மறியலால். பதட்டம், பரபரப்பு, போலீஸ் குவிப்பு..
நிலக்கோட்டை அருகே, கூலித்தொழிலாளி கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை.! உறவினர்கள் மற்றும் தமிழ் புலிகள் கட்சி சார்பில், திடீர் சாலை மறியலால். பதட்டம், பரபரப்பு, போலீஸ் குவிப்பு.. நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் வீட்டில் வாசல் முன்பாக படுத்து உறங்கிய வரை வெட்டி படுகொலை செய்தவர்களை கைது செய்ய கோரி பட்டியலினத்தைச் சேர்ந்த நடுபட்டி கிராம மக்கள் நிலக்கோட்டை பிரதான சாலையில் மறியல் .. பதட்டம் பரபரப்பு போலீஸ் குவிப்பு. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே நடுப்பட்டியில் இன்று […]
தேர்ச்சி பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கீழக்கரை சமூக ஆர்வலர் வாழ்த்து !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 105 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 99 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத் முன்னாள் துணைத் தலைவரும் சமூக ஆர்வலருமான முகம்மது அஜிஹர் கூறுகையில் :- கீழக்கரை கிழக்குத் தெரு முஸ்லிம் ஜமாத்துக்கு கீழ் இயங்கி வரும் ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப் பள்ளியில் 13 மாணவ மாணவிகள் 500/600 ம் நான்கு மாணவ […]
கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழப்பு: வேதனை அளிக்கிறது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், இராஜாக்கமங்கலம் கிராமம், லெமூர் கடற்கரையில், இன்று காலை சுமார் 10 மணியளவில் திருச்சி தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் கால் நனைப்பதற்காக கடலில் இறங்கியபோது, கடல் அலை அதிகமாக இருந்ததால் எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் நெய்வேலியைச் சேர்ந்த காயத்திரி (25), கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதர்ஷித் (வயது 23), திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரவின்சாம் (வயது 23), […]
இராமநாதபுரம் மாவட்ட அளவில் 94.89% மாணவர்கள் தேர்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 6302 மாணவர்களும், 7247 மாணவிகளும் என மொத்தம் 13,549 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று தேர்வு முடிவுகள் வெளியிட்ட முடிவின்படி 5850 மாணவர்கள் தேர்ச்சி பெற்று 92.83% தேர்ச்சி அடைந்துள்ளனர். 7007 மாணவிகள் தேர்ச்சி பெற்று 96.69% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஆக மொத்தம் மாவட்ட அளவில் 94.89% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 19 பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு உதவிபெறும் […]
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம், ஓர் பார்வை..
12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம், ஓர் பார்வை.. மாவட்டம் தேர்ச்சி விகிதம்! திருப்பூர் – 97.45% ஈரோடு – 97.42% சிவகங்கை – 97.42% அரியலூர் – 97.25% கோவை – 96.97% விருதுநகர் – 96.64% திருநெல்வேலி – 96.44% பெரம்பலூர் – 96.44% தூத்துக்குடி – 96.39% நாமக்கல் – 96.10% தென்காசி – 96.07% கரூர் – 95.90% திருச்சி – 95.74% கன்னியாகுமரி […]