ஒருவர் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை இணைப்பதா? மக்களை சுரண்டக்கூடாது!- டாக்டர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்.. தமிழ்நாட்டில் ஒருவரின் பெயரில் ஒரே வளாகத்தில் ஒன்றிற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால் அவற்றை ஒன்றாக இணைக்க முடிவு செய்திருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம், அத்தகைய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது. ஒருவரின் பெயரில் எத்தனை மின் இணைப்புகள் இருந்தாலும் அவை இணைக்கப்படாது; அவற்றுக்கான இலவச மின்சாரம் நிறுத்தப்படாது என்று வாக்குறுதி அளித்திருந்த தமிழக […]
Category: மாவட்ட செய்திகள்
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்த தேதிகளையொட்டி வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்!- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்..
தமிழகத்தில் வாரயிறுதி நாட்களையொட்டி, வரும் 17ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை இயக்கு உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- 17/05/2024 (வெள்ளிக்கிழமை) 18/05/2024 (சனிக்கிழமை) மற்றும் 19/05/2024 (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்தம் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் […]
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம்..
சேலம் ஏற்காட்டில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்டத் தலைவர்கள்,பொதுச் செயலாளர்கள் கூட்டம்.. எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள் பொதுச் செயலாளர்கள் கூட்டம் சேலம் ஏற்காட்டில் இன்று (மே.14) நடைபெற்றது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே, அகில இந்திய செயற்குழு உறுப்பினர்கள் தெகலான் பாகவி, முஹம்மது பாரூக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக […]
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது..
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் (எல்டிடிஇ) மீதான தடையை இந்திய உள்துறை அமைப்பு மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.. கடந்த 1991 மே 21ஆம் தேதி முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியா தடை விதித்தது. அத்தடை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், கடந்த 2019ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீட்டித்திருந்த நிலையில், இப்போது மீண்டும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “விடுதலைப் […]
கேரளாவில் அடிச்சு வெளுக்க போகும் “கன” மழை! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..
கேரளாவில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2 மாவட்டமங்களுக்கு அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும் 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படிக், இன்று (மே 14) இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் உள்ள பட்டினம்திட்டா மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம்,எர்ணாகுளம், மாலப்புரம், கோழிக்கோடு, வயநாடு […]
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதல்வருக்கு நன்றி..
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றி.. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற்று வரும் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலைமச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். “காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது (குறள் -102) என்னும் வள்ளுவன் வாக்கிற்கிணங்க, தகுந்த சமயத்தில் செய்த உதவி சிறிதாக இருந்தாலும் அது உலகத்தை விட பெரிதாக மதிக்கப்படும். மகளிருக்கு சொத்துரிமையும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி […]
நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை..
நிதியுதவி கிடைக்காமல் 2 லட்சம் தாய்மார்கள் அவதி!மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!- டாக்டர். ராமதாஸ் அறிக்கை.. தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது. மகப்பேறு […]
யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைதை தொடர்ந்து, அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை..
பெண் காவலர்களை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை கைது செய்த கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சவுக்கு சங்கர் கைதை தொடர்ந்து, அவரது பேட்டியை ஒளிபரப்பு செய்த தனியார் யூடியூப் சேனலின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் மீது கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, பெலிக்ஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனக்கு முன் ஜாமீன் வழங்க மனு அளித்திருந்தார். ஆனால் மனு மீதான […]
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..
தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு (2024) எனும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி.. தமிழ்நாடு முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், 12 ஆம் வகுப்பு முடித்த மாணாக்கர்களுக்கு உயர்கல்வி பயில கல்லூரி கனவு (2024) எனும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance), தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல்கிஷோர் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் 843 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், 12 ஆம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகளுக்கு உயர் […]
தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ குட்டியப்பா..
பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்த கடையநல்லூர் எம்எல்ஏ.. கடையநல்லூர் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பண்பொழி திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தார். அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடியாரின் 70வது பிறந்ததினத்தை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவிலில் மாவட்ட கழகம் சார்பில் எம்எல்ஏ கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா தலைமையில், கழக மகளிரணி துணைச் செயலாளர் வி.எம்.ராஜலட்சுமி மற்றும் முன்னாள் எம்பி முருகேசன் […]
சமயநல்லூர் அருகே மின்சாரம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு !
மதுரை ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த தனியார் மில் தொழிலாளி திரவியம் இவர் தனது நிறுவனத்தின் குப்பைக் கழிவுகளை ஏற்றி கொண்டு சமயநல்லூர் அருகே தேனூர் பகுதியில் உள்ளதனியார் அப்பார்ட்மெண்ட் பகுதிகளில் கொட்ட வந்த போது அங்கிருந்த மின்விளக்கு இல்லாத மின்கம்பத்தில் தவறுதலாக கை வைத்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சமயநல்லூர் போலீசார் இறந்த உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் […]
மதுரை பாலமேடு அருகே கல்குவாரியில் உள்ள நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழப்பு !
.மதுரை மாவட்டம், பாலமேடு அருகே ராஜக்கால்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்சந்திரசேகர் (23).கூலி தொழிலாளி. இவரை காணவில்லை என குடும்பத்தார் தேடிய நிலையில், அப்பகுதியில் உள்ள கல்குவாரியில் குளம் போல் தேங்கியிருந்த நீரில் மிதந்ந நிலையில் இறந்து கிடந்தார். தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று சந்திரசேகரின் சடலத்தை மீட்டு உடற் கூறாய்வுக்காக வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்திரசேகர் கல்குவாரி பள்ளத்திற்கு எதற்காக வந்தார் என்றும், இறப்புக்கான காரணம் குறித்து அவரது குடும்பத்தினர் மற்றும் அப் பகுதியை […]
பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி குறித்து செய்முறை விளக்கம் ! விவசாயிகள் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியப்பட்டிணம் கிராமத்தில் வெற்றிலை கொடியில் வரும் பூச்சி மேலாண்மை குறித்து மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவி சுவாதி கிருஷ்ணன் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கத்தை வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் மஞ்சள் மற்றும் நீல நிறப் பொறித்த பூச்சிகள் குறித்து விளக்கம் அளித்து அதன் செய்முறையை பற்றியும் அதன் பயன்களையும் விளக்கினார். எந்தெந்த பூச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டு மென்ற தகவல்களையும் எடுத்துக் கூறினார். இந்நிகழ்வில் […]
4-ம் கட்ட தேர்தல் நிறைவு: மாலை 5 மணி நிலவரப்படி 62.31 சதவீத வாக்குப்பதிவு..
பாராளுமன்றத்துக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 102 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 19-ம் தேதியும், 2-ம் கட்டமாக 88 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 26-ம் தேதியும் வாக்குப்பதிவு நடந்தது.மூன்றாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.இதற்கிடையே, 4-வது கட்டமாக 96 பாராளுமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெற்றது.இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 […]
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்..
அண்ணாமலை மீது வழக்கு தொடர அனுமதி பிறப்பிக்கவில்லை! கவர்னர் மாளிகை விளக்கம்.. தமிழ்நாடு கவர்னர் அவர்களால் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கில் வழக்குப்பதிவு செய்ய அனுமதி அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகைக்கு கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்களிடம் இருந்து பரபரப்பு கேள்விகள் எழுப்பப்பட்டு வரும் சூழ்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு எதிரான கிரிமினல் வழக்கு குறித்து தமிழ்நாடு கவர்னர் மாளிகை எந்த ஒரு […]
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்..
ஊட்டியை சுற்றிப் பார்க்க ‘நூறு ரூபாய்’ போதும்! போக்குவரத்து கழகத்தின் சூப்பர் திட்டம்.. ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது. கோடைக்காலம் தொடங்கினால், ஊட்டியைச் சுற்றுலாப் பயணிகள் ஆக்கிரமித்துவிடுவது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், ஊட்டியைக் குறைந்தச் செலவில் சுற்றிப் பார்க்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமானது ‘சிறப்புச் சுற்றுப் பேருந்துகளை’ இயக்கி வருகின்றது. […]
தஞ்சாவூரில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் !
தஞ்சாவூர் ராஜப்பா நகர் 1ஆம் தெரு அலுவலகத்தில் சத்யா நடை பயிற்சி சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கௌரவ தலைவர் செல்வம் தலைமை தாங்கினார், தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். செயலாளர் ஜெயக்குமார் வரவேற்பு உரை ஆற்றினார் .துணைத் தலைவர்கள் கண்ணாடி குமார், லயன் ஜெயபால் ,ராஜன், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன் ,ராஜசேகரன், முரளி, சுப்பிரமணியன், சுகுமார், நாகராஜன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர் .மாவட்ட பொருளாளர் பார்த்தசாரதி நன்றியுரை கூறினார் .கூட்டத்தில் சத்தியா […]
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி சுமையா பானு, தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை..
பழனியில் மாற்றுத்திறனாளி மாணவி தேசிய சட்டப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை.. திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளி மாணவியான சுமையா பானு ஒரு கண் பார்வை கொண்டவர், மேலும் கை விரல்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தவாறு அமையப்பெற்றவர். தன்னம்பிக்கை மிக்க மாணவியான சுமையா பானு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் போது உதவியாளர் இன்றி தானே தேர்வை எழுதினார். தேர்வில் […]
எனது கையை உடைத்தது இவர் தான்:கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்..
எனது கையை உடைத்தது இவர் தான்: கோவை சிறையில் நான் கொல்லப்படுவேன்: கூச்சலிட்ட சவுக்கு சங்கர்.. பெண் காவல் துறையினரையும், காவல்துறை உயர் அதிகாரிகளையும் அவதூறாக பேசிய டி யூபர் சவுக்கு சங்கர் மீது கோவை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை மாநகர சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் சுகன்யா அளித்த புகாரில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீது தேனி […]
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா…
Kilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் நேற்று 12.05.2024 மாலை 6 மணி அளவில் KRPA club தலைவர் நைனா முகமது லாபிக் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த சச்சின் சுரேஷ் RRPC President, கணேஷ் ஹேமா THPA Club Thanjavur, கிருஷ்ணகுமார் THPA PresidKilakarai Royal Pigeon Association சார்பாக முதலாம் ஆண்டு ஹோமர் புறா பரிசளிப்பு விழா ஹனி மஹாலில் […]