சென்னையில் இருந்து மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணம்..

சுபமுகூர்த்த நாள் மற்றும் வார இறுதி நாளை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு பயணிகள் சிரமமின்றி செல்லும் வகையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை வழக்கமான பஸ்களுடன் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.அதன்படி நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) 1,618 பஸ்களில் 84 ஆயிரத்து 936 பயணிகளும் நேற்று (சனிக்கிழமை) 1,753 பஸ்களில் 91 ஆயிரத்து 156 பயணிகள் என மொத்தம் 3,771 பஸ்களில் சுமார் 1 லட்சத்து 76 ஆயிரம் […]

சவூதி அரேபியா மற்றும் தாய்லாந்துக்கு தமிழகத்தில் இருந்து விமான சேவைகள் அதிகரிப்பு! விமான பயணிகள் மகிழ்ச்சி..

பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தாய்லாந்துக்கும் சவுதி அரேபியாவுக்கும் தமிழகத்தில் இருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்பட உள்ளன. முன்னதாக சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டு தலைநகர் பேங்காக் நகருக்கும் பின்னர் அங்கிருந்து சென்னைக்கும் இரண்டு விமானச் சேவைகளை புதிதாகத் தொடங்கியது ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ நிறுவனம். கடந்த 15ஆம் தேதி முதல் இப்புதிய சேவை தொடங்கப்பட்ட நிலையில், வாரத்தில் நான்கு நாள்களுக்கு இச்சேவை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’ நிறுவனம், சென்னையில் […]

ஐபிஎல் கிரிக்கெட்! சென்னை அணியை வெளியேற்றியது பெங்களூரு..

சனிக்கிழமை மாலை பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ஓட்டங்களுக்கு மேல் வெற்றிபெற்றால் மட்டுமே அடுத்தச் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழலில் முதலில் பந்தடித்தது. தொடக்கம் முதலே அதிரடிகாட்டிய பெங்களூரு விரைவாக ஓட்டங்கள் குவித்தது. இருப்பினும் 3 ஓவர்களுக்குப் பிறகு மழை பெய்ததால் ஆட்டம் தாமதமானது. மழை சிறிது நேரத்தில் ஓய்ந்தது. அதன் பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. விராத் […]

முடக்க முயலும் நெருக்கடிகளால் சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு..

முடக்க முயலும் நெருக்கடிகளால் சவுக்கு ஊடகத்தின் செயல்பாடுகளை இன்றிலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலில் பெண் போலீசார் குறித்து அவதூறு பேசியதாக சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு மே 4ம் தேதி தேனியில் வைத்து கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல திருச்சி, சென்னையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும் காவல் துறையினர் சவுக்கு சங்கரை கைது செய்தனர். இவர் மீது 7 வழக்குகள் பதிவு […]

கையூட்டு கொடுத்தால் மட்டுமே மக்களுக்கு சான்றிதழ்கள் கிடைக்கின்றன.- டாக்டர் ராமதாஸ் காட்டம்..

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் மக்களுக்குத் தேவையான சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசின் சேவைகளைப் பெற மிக அதிக அளவில் கையூட்டு வழங்க வேண்டியிருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். வாக்களித்த மக்களுக்கு பொதுச்சேவை வழங்கும் அடிப்படைக் கடமையை நிறைவேற்றுவதில் கூட தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதைத் தான் பொதுமக்களின் குற்றச்சாட்டு உறுதி செய்திருக்கிறது. தமிழக மக்களுக்குத் தேவையான சாதிச் சான்று, பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வசிப்பிட சான்றிதழ், வருவாய் சான்றிதழ், […]

ஜெயக்குமார் வழக்கில் கூடுதல் காவல் துறையை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்!- செல்வப் பெருந்தகை பேட்டி..

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-சாதி, மதம், மொழி அரசியல் செய்யகூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால், மோடி அரசு கல வர அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதனை தடுக்கா மல் தேர்தல் ஆணையம் தொடர்ந்து வேடிக்கை பார்ப்பது அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது.ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் பா.ஜ.க தலைவர்களுக்கு பயம் வருகிறது. அரசியலுக்காக அயோத்தியில் ராமர் கோவிலை மோடி கட்டினார். எங்களுக்கு எல்லா […]

ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, உட்பட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்..

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. […]

தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த கோடை மழையும், அதனை ஒட்டி உள்ள தகவல்களும்!-ஓர் முழு பார்வை..

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை மழை வெளுத்து வாங்கியுள்ளது. இதனால் பெய்த மழையால் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து மீண்டும் மழை பெய்தது. நள்ளிரவில் 2 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது. பேச்சிப்பாறை அணை பகுதியில் மிக பலத்த மழை பெய்தது. அங்கு 103 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. குமரி மாவட்டத்தின் […]

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று பாஜக பிரமுகர்கள் அதிரடி கைது!- வேலூர் மாவட்டத்தில் பரபரப்பு..

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியை சேர்ந்தவர் கிளி என்கிற சதீஷ் (34). இவர் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவராக உள்ளார். இந்நிலையில் இவர் பள்ளிகொண்டா அடுத்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்டு வழிப்பறியில் ஈடுபட்டதாக விஜய் பள்ளிகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி இளைஞர் அணி தலைவர் கிளி என்கிற […]

சுற்றுலா பயணிகள் கவனிக்கவும்! தொடர் மழை எதிரொலி! ஊட்டி மலை ரெயில் சேவை இரண்டு நாட்கள் ரத்து..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு அழகிய மலைரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த மலை ரெயிலில் பயணம் செய்யும் போது இயற்கை எழில்மிகு காட்சிகள், வனவிலங்குகள், மலைமுகடுகளை தழுவி செல்லும் மேக கூட்டங்கள், அருவிகள், நீரோடைகள் உள்ளிட்ட பல இயற்கை காட்சிகளை பார்த்து ரசிக்கலாம். மலைப்பாதையில் ஊர்ந்து செல்லும் இந்த ரெயிலில் பயணிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவை, […]

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..

நிலக்கோட்டை அருகே எச்சரிக்கையை மீறி பேரணையில் குளிக்கும் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்! உயிர் பலிகள் ஏற்படும் முன் தடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.. தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள பேரணை வழியாக மதுரைக்கு செல்கிறது. இதனால் நிலக்கோட்டை வட்டார பொதுப்பணித்துறையினர் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் பேரணையில், ஆற்றில், குளிக்கவோ இறங்கவோ தடை விதிக்கப்பட்ட நிலையில் வெளியூரிலிருந்து […]

பழனி பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை தட்டி தூக்கிய  போலீசார்..

பழனி பேருந்து நிலையத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு திருடர்களை தட்டி தூக்கிய  போலீசார்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில் பழனி பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளிடம் குறி வைத்து பிக்பாக்கெட் திருடர்கள் வழிப்பறியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அடிக்கடி பழனி காவல் நிலையத்திற்கு பக்தர்கள் புகார் கொடுத்த வண்ணம் இருந்த நிலையில் டிஎஸ்பி தனஞ்ஜெயன் உத்தரவின் பேரில் நகர காவல் ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் பேருந்து நிலையம் […]

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்..

போக்குவரத்து துறையில் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்.. போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 1300 காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 30ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் அறிவித்துள்ளது. மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் விடுதியில் வைத்து தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு சங்கம் […]

நெல்லையில் அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்..

நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பன்னாட்டு அருங்காட்சியக நாள் கொண்டாட்டம்; நினைவு பரிசுகள் வழங்கல்.. மே 18ஆம் தேதி பன்னாட்டு அருங்காட்சியக நாளாக சர்வதேச அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாளை முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. முதல் நிகழ்வாக சிவராம் கலைக் கூடத்தை சார்ந்த இருபது மாணவர்கள் 20 சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களை வரைந்து அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாக வழங்கினர். இந்நிகழ்வில் நெல்லை மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி வந்திருந்த அனைவரையும் […]

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்..

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்; பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்.. தென்காசி மாவட்டத்திற்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு (19.05.2024 மற்றும் 20.05.2024) சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து. மாவட்ட நிர்வாகத்தால் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அவசர கால செயல்பாட்டு மையம் (24 X 7) செயல்பட்டு வருகிறது. அவசர கால உதவி மைய எண் 1077 மற்றும் தொலைபேசி […]

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முக்கிய அறிவிப்பு..

தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் முக்கிய அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்திற்கு மே-19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் அதீத கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், சென்னை வானிலை மையம் தென்காசி மாவட்டம் முழுவதும் 19.05.2024 மற்றும் 20.05.2024 ஆகிய இரண்டு தினங்கள் சிவப்பு நிற (Red Alert) எச்சரிக்கையும் மற்றும் 21.05.2024, 2205.2024 ஆகிய நாட்களுக்கு […]

ஏர்வாடி தர்ஹா சந்தனக்ககூடு திருவிழா தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு திருவிழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம் அதே போல் இந்த வருடமும் 850ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா வருகின்ற மே 19ல் முதல் நிகழ்ச்சியாக கொடியேற்றம் நிகழ்ச்சி துவங்க இருப்பதால் அனைத்து மாநிலங்களிலிருந்து மாவட்டங்களிலிருந்தும் யாத்திரைகள் வருவது தொடர்பாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையில் கீழக்கரை வட்டாச்சியர் பழனிக்குமார் முன்னிலையில் […]

தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி- 2 நாட்களுக்கு ரெட் அலர்ட்

தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 22ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தொடர்ந்து அது வடகிழக்கு திசையில் நகர்ந்த 24ம் தேதி வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.18, 21, 22 ஆகிய 3 தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு […]

பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு பொய்ப் பரப்புரை  பொழுதொரு வெறுப்பு விதை எனப் பிரதமர் மோடி பேசி வருகிறார். பிரதமரின் பொறுப்பற்ற பேச்சுகளையும் – அதனைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தின் அமைதியையும் நாட்டு மக்கள் அதிர்ச்சியோடும் வேதனையோடும் பார்த்து வருகிறார்கள். பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப்பட்ட  ஒடுக்கப்பட்ட பட்டியலினப் பழங்குடியின மக்களின் வாழ்வில் ஒளியேற்ற […]

குற்றால வெள்ளப் பெருக்கினால் நிகழும் மரணங்கள்: உடனடி தடுப்பு நடவடிக்கைகள் தேவை; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..

குற்றால வெள்ளப் பெருக்கினால் நிகழும் மரணங்கள்: உடனடி தடுப்பு நடவடிக்கைகள் தேவை; டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.. குற்றால வெள்ளப் பெருக்கினால் அண்மைக காலமாக நிகழும் மரணங்களை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும் என டாக்டர் கிருஷ்ணசாயி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டு 17 வயது அஸ்வின் என்ற சிறுவன் இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய சம்பவம் ஆகும். குற்றாலத்தில் உள்ள பழைய அருவி, பிரதான அருவி […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!