மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 2023 ஆண்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் பல்வேறு திருட்டுகளில் ஈடுபட்டு வந்த அச்சம்பட்டியைச் சேர்ந்த மணி மகன் விஜய்(26) என்பவரை அலங்காநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், ஏட்டு வெங்கடேசன் ஆகியோர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு வாடிப்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி செல்லையா குற்றவாளி விஜய்க்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் […]
Category: மாவட்ட செய்திகள்
கொடிமங்கலத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம்
கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டுகூடுதல் பள்ளி கட்டிடம் முன்னாள் அமைச்சர்செல்லூர்ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் மதுரை மாவட்டம் மேற்கு தொகுதிக்குட்பட்ட கொடிமங்கலத்தில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் இரண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவ மாணவிகளின் பயன்பாட்டிற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் K.ராஜு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் திரவியம் பரவை பேரூர் செயலாளர் ராஜா கொடிமங்கலம் கிளைச் செயலாளர் கருப்பண்ணன் இளைஞரணி […]
கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
சோழவந்தான் சிஎஸ்ஐ பள்ளியில் இலவச நோட்டு மற்றும் எழுதுபொருள் வழங்கும் விழா நடைபெற்றது அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளியில் இலவச நோட்டுகள் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கும் விழா நடந்தது. இவ்விழாவிற்கு பள்ளியின் தாளாளர் அருள்திரு எபினேசர் துரைராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதி பெருமாள் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ராபின்சன் செல்வகுமார் வரவேற்றார். பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் சுமார் 25 ஆயிரம்ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் மற்றும் […]
வாடிப்பட்டியில் தனியார் பள்ளியில் ஆர்டிஇ மூலம் சேர்ந்த குழந்தைக்கு கூடுதல் கட்டணம் கட்ட கோரி பள்ளி வாகனத்தை அனுப்ப மறுக்கும் நிர்வாகம், பெற்றோர்கள் கதறல்
மதுரை வாடிப்பட்டியில் உள்ள தனியார்(நம் வித்யா மந்திர்) பள்ளியில் சித்தாலங்குடியை சேர்ந்த அஜித் மற்றும் பவித்ரா தம்பதியின் மகளான முஹிஷா கடந்த கல்வி ஆண்டில் மத்திய மாநில அரசின் ஆர்டிஈ திட்டம் மூலம் எல்கேஜி வகுப்பில் சேர்ந்தார். பெற்றோர் இருவரும் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து வருவதால் தங்களது குழந்தையினை பள்ளி வாகனத்தில் அனுப்பி வந்தனர். கடந்த ஆண்டு அரசு நிர்ணயம் செய்ததை விட கூடுதல் கட்டணம் கட்டிய அவர்கள் இந்த ஆண்டு யுகேஜி வகுப்பு சென்று அவருக்கு […]
தாமோதரன் பட்டியில் ஆபத்தான முறையில் நாடக மேடையில் கல்வி கற்கும் மாணவர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தாமோதரன்பட்டியில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்தப் பள்ளியில் தாமோதரன் பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயின்று வருகின்றனர் இந்த நிலையில் பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட வேண்டும் என வாடிப்பட்டி யூனியன் அதிகாரிகள் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பள்ளியை இடித்துவிட்டு பள்ளியில் படித்த 30க்கும் மேற்பட்ட குழந்தைகளை அருகில் உள்ள […]
அடிப்படை வசதிகளை செய்து தர கோரி உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர் மன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டம், ஆணையாளர் இளவரசன், நகர் மன்ற துணை தலைவர் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது., இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் கலந்து கொண்ட நிலையில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது., இக்கூட்டத்தில் வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து தருவதில்லை என திமுக நகர் மன்ற உறுப்பினர்களே கடும் வாக்குவாததில் ஈடுபட்டனர்., மேலும் உசிலம்பட்டி புதிய பேருந்து […]
மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு பாராட்டு விழா
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணி நிரந்தர தூய்மை பணியாளர்களாக 30 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பணி நிறைவு பெறும் பணியாளர்களுக்கு மேட்டுப்பாளையம் நகராட்சி சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது பணி நிறைவு ஓய்வு பெற்ற கமலா,செம்பா, ரங்கம்மாள், இந்திராணி, பல்லாக்காள், லோகிதாஸ், லிங்கம்மாள் ஆகியோரை சிஐடியு தூய்மை பணியாளர்கள் சங்கம் இணைப்பு மேட்டுப்பாளையம் தாலுகா சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பாக சான்றிதழ் கொடுத்து சந்தனமாலை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர் நிகழ்ச்சியில் சிஐடியு மேட்டுப்பாளையம் […]
அலங்காநல்லூரில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் 10க்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் ஏலம் விடாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டி கடந்த ஜனவரி மாதம் அமைச்சர்கள் நேரு மற்றும் மூர்த்தி ஆகியோர் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்த நிலையில் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 16 வணிக வளாகங்கள் ஏலம் விடாத நிலையில் ஒரு கடைக்கு ரூபாய் 5000 வீதம் மாதம் ரூபாய் ஒரு லட்சம் வரை அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் பேருந்து நிலையம் திறந்து 6 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை பல […]
புதுப்பட்டியில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஊராட்சி செயலாளர் மீது பொதுமக்கள் பரபரப்பு புகார்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர்அருகே அழகாபுரி ஊராட்சியில் கழிவுநீர் தேங்குவத அலங்காநல்லூர் அருகே அழகாபுரி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பட்டியின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி தெருக்களில் ஆறாக ஓடுவதாகவும் குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலப்பதால் குடிநீரை குடிக்கும் பொதுமக்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய அவல நிலை ஏற்படுவதாகவும் இது குறித்து அழகாபுரி ஊராட்சி செயலாளரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் அழகாபுரி ஊராட்சியில் […]
சேதமடைந்த பிரதான சாலை. நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட அலிகார் சாலை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இந்த சாலை வழியாக பெத்தாதவன் கோட்டை, நோக்கன்கோட்டை, பெரியார் நகர் இருதயபுரம் போன்ற கிராமங்களுக்கு செல்கின்றனர். ஆனால் இச்சாலை மிகவும் சேதம் அடைந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. அலிகார் சாலை குட்லுர் நகர் அருகில் உள்ள பாலம் முறையாக அமைக்கப்படாமல் மணல்மேடாக இருப்பதால் அப்பகுதி மிகவும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. கண்ணா பெட்டிக்கடை அருகில் ஒரு பள்ளமும், அன்சாரி மளிகை கடை […]
தேவகோட்டை கண்டதேவி சொர்ண முத்தீஸ்வரர் கோவில் தேர் திருவிழாவுக்கு கொடி ஏற்றத்துடன் தொடங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவி கிராமம் உள்ளது. இங்கு இராமயணகால சரித்திர புகழ் வாய்ந்த ஸ்ரீ பெரியநாயகி அம்பிகா சமேத சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவில் உள்ளது. சிவகங்கை தேவஸ்தானம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்டதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் பழங்காலம் தொட்டேதேரோட்டத்திருவிழா வெகு விமரிசையாக நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதம் காப்புக்கட்டி 9நாள் திருவிழா நடைபெறும். காப்புக்கட்டிய நாள் முதல் தினமும் மண்டகப்படி நடக்கும். 8ம் திருநாள் ஆனி மாதம் கேட்டை நட்சத்திர நாளில் […]
திருவேடகம் விவேகானந்தர் கல்லூரி அருகே உள்ள சதுர்வேத கணபதி கோவில் மண்டல அபிஷேக விழா.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி திருவேடகம் விவேகானந்தா கல்லூரி அருகில் அமைந்துள்ள அருள்மிகு சதுர்வேத கணபதி கோவில் கும்பாபிஷேகம் கடந்த வைகாசி மாதம் இரண்டாம் தேதி நடைபெற்ற நிலையில் கோவிலின் முன்பு மண்டல அபிஷேகம் இன்று காலை நடைபெற்றது கோவில் முன்பு யாக வேள்வி நடைபெற்று நந்தி பகவானுக்கு பூஜைகள் நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சதுர்வேத கணபதிக்கு அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம் தீபாராதனை காட்டப்பட்டது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது இதில் திருவேடகம் தச்சம்பத்து மேலக்கால் […]
தாரப்பட்டியில் நல்ல குடி தண்ணீர் சாக்கடை வசதிமகளிர் உரிமைத் தொகை கேட்டு அமைச்சர் மூர்த்தியின் காரை மறித்த பெண்கள்
மதுரை தாராபட்டி கீழ மாத்தூர் துவரி மான் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறைஅமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில்மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்பிய அமைச்சர் மூர்த்தியின் காரை வழிமறித்த பெண்கள் 4 அரை ஆண்டுகளாக நல்ல தண்ணீர் வரவில்லை, சாக்கடை வசதி செய்து தரவில்லை மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என […]
சோழவந்தான் பேரூராட்சி 13வது வார்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என வார்டு கவுன்சிலர் பரபரப்பு புகார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளது சுமார் 30,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர் இதில் பேரூராட்சியின் 13 வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர் வள்ளி மயில் இவர் பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநிலத் துணைத் தலைவர் மணி முத்தையாவின் மனைவி ஆவார் இவர் இன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக தனது வார்டில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை குறிப்பாக 13-வது […]
இ. கோட்டைப் பட்டியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சேடபட்டி ஊராட்சி ஒன்றியம் இ. கோட்டைப்பட்டியில் அதிமுக கழக அம்மா பேரவை சார்பில் 100 திருக்கோவில் சிறப்பு பிரார்த்தனையோடு 100 இடங்களில் அன்னதானம் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் தொடங்கி வைத்து வழங்கினார். மதுரை மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் கழக நிரந்தர பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 ஆம் ஆண்டு மீண்டும் அம்மா […]
முதல்நாளிலே பழுதாகி நின்ற பேட்டரி காரர்கள்
கோவில் பாப்பா குடியில் ஊராட்சி பயன்பாட்டிற்கு பேட்டரி கார்களை கொடியசைத்து துவக்கி வைத்த முதல் நாளிலே பழுதாகி நின்ற அவலம்,பழுதாகி நின்ற பேட்டரி கார்களை தள்ளி சென்ற பணியாளர்கள் மதுரை மாவட்டம் கோவில் பாப்பா குடியில் புதிய தார் சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அமைச்சர் மூர்த்தி வந்திருந்த நிலையில் பொதுமக்கள் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாகவும் கழிவுநீர் கால்வாய் தேங்கி துர்நாற்றம் வீசுவதாகவும் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் […]
தந்தை சொத்தில் பங்கு தர மறுத்து வரும் சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கும் காவல்துறையைக் கண்டித்து பெண் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு .
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்துள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த அய்யாத்துரை – வனப்பேச்சி தம்பதிக்கு சிவசக்தி என்ற பெண் குழந்தையும், முத்துப்பாண்டி, வரதராஜன் என்ற இரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.,
அடிக்கடி மின்தடை அமைச்சரை முற்றுகையிட்ட மக்கள்
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக கூறி அமைச்சர் மூர்த்தியை முற்றுவகையிட்ட பொதுமக்களால் பரபரப்பு மதுரை மாவட்டம் கோவில்பாப்பாகுடி பகுதியில் சுமார் 7 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வருகை தந்த பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தியை அந்த பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது கோவில் பாப்பாகுடியின் பல்வேறு பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையில் கலந்து கொள்வதற்காக […]
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் அஞ்சாவது வட்ட கிளை மாநாடு நடைபெற்றது
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டக் கிளை தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 5ஆவது வட்டக் கிளை மாநாடு முத்துசாமி நினைவரங்கம் அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் உசிலம்பட்டி வட்டக்கிளை இணைச் செயலாளர் கே பழனி தலைமையில் இணைச் செயலாளர்கள் ஆசைத்தம்பி, அக்கினி, பாண்டி ஆகியோர் முன்னிலையில் செயற்குழு உறுப்பினர் அய்யங்காளை வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாவட்ட பொருளாளர் ஜெயராமன் வட்டக்கிளை செயலாளர் […]
திருச்செந்தூர் கோவில் பணி; கனிமொழி எம்.பி ஆய்வு..
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு இறுதி கட்டப் பணிகளை கனிமொழி எம்.பி நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு நன்னீராட்டு விழா வருகின்ற ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருக் கோயில் வளாகத்தில் நடைபெற்று வரும் திருப்பணிகள், யாகசாலை அமைக்கும் பணிகள், பக்தர்கள் பாதுகாப்பான முறையில் சுவாமி தரிசனம் செய்வதற்கு ஏதுவாக தடுப்பு அமைக்கும் பணிகள், பக்தர்கள் வாகன நிறுத்துமிடம் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், […]
You must be logged in to post a comment.