ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டரங்கில் நகர மன்ற தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமையில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் 1 வது வார்டு உறுப்பினர் பாதுஷா கீழக்கரையில் வடக்கு தெரு டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து நெடுஞ்சாலை வரை 500 மீட்டர் புதிய சாலை அமைப்பதற்கு தில்லையேந்தல் பஞ்சாயத்து நிர்வாகம் புறக்கணித்து வருகிறது இதில் கீழக்கரை மக்கள் மற்றும் அவசர ஊர்திகள் செல்ல மிகுந்த சிரமப்பட்டு வருவதால் உடனடியாக நகராட்சி […]
Category: மாநில செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் ரூபாய் 96 லட்ச மதிப்பீட்டில் புதிய வாகன நிறுத்துமிடம்!- முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா தமிழ் கடவுள் முருகன் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. திருப்பரங்குன்றம் திருக்கோயில் பகுதியில் திருவிழா மற்றும்திருமண மூர்த்தங்கள் நடைபெறும் போது கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மூலம் கொண்டு […]
மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிறுத்தையையே சிக்க வைத்த சிறுவன்!- வைரல் வீடியோ..
மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மாலேகான் நகரில் கடந்த சில நாட்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.இந்நிலையில், மாலேகான் நகருக்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று நம்பூர் சாலையில் உள்ள திருமண மண்டப அலுவலகத்திற்குள் நுழைந்தது. அந்த அலுவலகத்தின் கதவு திறந்து இருந்ததால் வாசல் வழியாக சிறுத்தை உள்ளே நுழைந்த நிலையில், அங்கு அலுவலக கேபினில் மோகித் விஜய் அகிரே (13), என்ற சிறுவன் தனது செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தான்.அலுவலகத்திற்குள் நுழைந்த சிறுத்தை, கேபினில் இருந்த சிறுவனை […]
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு..
திமுக கூட்டணியில் விசிகவுக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய 2 தனி தொகுதிகள் ஒதுக்கீடு.. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கொமதேக, ஐயூஎம்எல், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. […]
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா..
இலஞ்சி டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்லூரியில் பரிசளிப்பு விழா.. தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் செங்கோட்டை அரசு நூலகம் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் ராஜகுமார் தலைமை வகித்தார். ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் அமிர்தம் செல்லத்துரை, அந்தோணி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் (பொ). தங்கம் வரவேற்றார். திருநெல்வேலி திருமண்டல உப தலைவர் ரெவ சுவாமிதாஸ் […]
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% அகவிலைப்படி உயர்வு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் மூலம் மத்திய அரசுப் பணியாளர்களுக்கான அகவிலைப்படி 46 விழுக்காட்டிலிருந்து 50% ஆக உயர்ந்திருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி நடப்பாண்டின் முதல் […]
பெண்களுக்கு மகளிர் தின பரிசு! அதிரடியாக அறிவித்த, பிரதமர் நரேந்திர மோடி..
சமையல் காஸ் விலை 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் அவரது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது; மகளிர் தினத்தில் சமையல் காஸ் விலையை மேலும் 100 ரூபாய் குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள குடும்பங்களின் நிதிச்சுமையை குறைக்கும். குடும்பங்களின் நல்வாழ்வுக்கு ஆதரவாக இருப்பதுடன் ஆரோக்கியம் உறுதி செய்வதுடன் பெண்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். பெண்கள் எளிதாக வாழ வழி செய்யவும் பெண்கள் அதிகாரம் உறுதி […]
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -3 கப்ளிசேட் உஸ்மானிய பேரரசு -8 (கி.பி 1299-1922) கி.பி 1362 ஆம் ஆண்டின் முன்பனிக்காலம். உஸ்மானிய படைகள் ஐரோப்பாவின் எத்திரின் நகருக்கு வெளியே தங்கள் கூடாரங்களை அமைத்தனர். சீனாவிலிருந்து மத்திய ஆசியப் பகுதிகளுக்கு வந்த லீ சுவான் பல நாடுகளை ஆய்வுசெய்து வரலாறுகளாக பதியும் வரலாற்று ஆய்வாளர். அவர் உஸ்மானிய கிலாபத் பகுதியில் ஆய்வு செய்தபோது மன்னர் முராத்தின் ஆட்சி சிறப்புகளை கேள்விப்பட்டு தலைநகர் புருஷா வந்து மன்னரை சந்தித்தார். இந்த […]
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்கள் மற்றும் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு; மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை..
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல் போன்கள் மற்றும் ஆன்லைனில் இழந்த பணம் மீட்பு; மாவட்ட எஸ்.பி. நடவடிக்கை.. தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் மற்றும் ஆன்லைன் மூலமாக இழந்த பணம் ஆகியவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் ஒப்படைத்தார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தனராஜ் கணேஷ் தலைமையில், காவல் ஆய்வாளர் வசந்தி, உதவி ஆய்வாளர் மற்றும் சைபர் கிரைம் […]
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவிப்பு..
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள்; மாவட்ட கலெக்டர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவிப்பு.. தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பொருட்டு எனது வாக்கு! எனது உரிமை! எனது கடமை! என்ற செயல்பாட்டின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்தில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் […]
ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல்..
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண்கள் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் பேப்பர் திருத்திய மாணவிகள்; புகைப்படம் வைரல். மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆண் ஆசிரியர்கள் ஓய்வு அறையில் அமர வைக்கப்பட்டு உதவி தலைமையாசிரியர் அறிவுறுத்தலின்படி பேப்பர் திருத்தும் காட்சி தற்போது வைரலாகி உள்ளது. திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் கர்ணன். கடந்த மாதம் நடந்த இடை தேர்வில் மாணவிகள் எழுதிய விடைத்தாள்களை தான் திருத்துவதற்கு […]
இந்தியா முழுவதும் போதைப்பொருள் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்டு விற்பனை ! சிபிஐ மாநில செயலாளர் போராட்டத்தில் பேட்டி !!
ராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் பேருந்து நிலையம் எதிரில் தமிழ்நாடு AITUC மீனவத் தொழிலாளர் சங்கம் சார்பில் மாநில செயலாளர் சி.ஆர்.செந்தில்வேல் தலைமையில் தமிழக மீனவர்களை பாதுகாக்க தவறிய ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை சிறை பிடிப்பது படகுகளை பறிமுதல் செய்வது படகோட்டிகளுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதிப்பது இரண்டாவது முறையாக எல்லை தாண்டும் மீனவர்களுக்கு இரண்டு வருடம் வரை சிறை தண்டனை விதிக்கும் […]
சட்டவிரோதமாக தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை பிடித்த ஐவர் ! ரூ.3 லட்சம் மதிப்பிலான 185 கிலோ கடல் அட்டை பறிமுதல் !!
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரைகளில் இருந்து கடல் அட்டை, கடல் குதிரை, திமிங்கலம் துடுப்பு உள்ளிட்ட சில அரியவகை கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க வனத்துறை தடை விதித்துள்ள நிலையில் கடல் அட்டைக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பும், தேவையும் இருப்பதால் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை சிலர் பிடித்து பதப்படுத்தி கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள பழனிவலசை கடற்கரை பகுதியில் வனத்துறையினர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விசைப்படகு […]
உச்சிப்புளியில் வேளாண்மைத்துறை சார்பில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை சார்பில் அரசு தென்னை நாற்றுப் பண்ணையில் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்பட்டது . இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துறையில் உள்ள அரசு நலத் திட்டங்கள் குறித்தும் விவசாயிகள் குழுவாக ஒன்றிணைந்து செயல்பட்டால் அரசு நலத்திட்டங்களை பெற்றிடலாம் எனவும் அறிவுறுத்தினார். பரமக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் முருகேசன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு தென்னை சாகுபடி குறித்து […]
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டம்.. தென்காசி மாவட்டம் வடகரை கீழ்பீடாகை பேரூராட்சி நிர்வாக அலுவலர் மாற்றத்தை கண்டித்து வடகரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர தலைவர் அப்துல் பாசித் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரும் 2 வது வார்டு கவுன்சிலருமான முத்து முஹம்மது என்ற அன்சாரி கண்டன உரையாற்றினார். நகர செயலாளர் சாஜித் ஒலி, மருத்துவ சேவை அணி மாவட்ட தலைவர் […]
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்..
தமிழ்நாடு காவல் துறை சைபர் கிரைம் சார்பில் ரீல் போட்டி; பொது மக்கள் மாணவ மாணவியர் பங்கேற்கலாம்.. பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவியர் தங்கள் படைப்பாற்றல் புதுமை மற்றும் எல்லையற்ற திறமை ஆகியவற்றை வெளிப்படுத்த தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு ரீல் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது. வழக்கமான கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிப்பாட்டின் எல்லைகளைத் தள்ளி, பங்கேற்பாளர்கள் தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். இந்தப் போட்டியில் எப்படி பங்கேற்பது? பங்கேற்பாளர்கள் 04.03.2024 முதல் 14.03.2024 […]
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது..
பெண் சிசுக்களை கருவிலேயே அழித்து வந்த செவிலியர் கைது.. கருவிலேயே அழிக்கப்படும் பெண் சிசுக்கள். அரசு பணியை உதறி தள்ளிவிட்டு செவிலியர் ஒருவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பெண் கரு கொலை மட்டுமே கருவிலேயே அழிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிவகங்கை மாவட்டம் பழையனூர் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கு ஏற்கனவே இருபெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் காயத்ரி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதைத் தொடர்ந்து வயிற்றில் இருப்பது பெண் குழந்தை தானா […]
ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள்..
பல்வேறு மாநிலங்களில் இருந்து ஈஷாவுக்கு பாத யாத்திரை வந்த பக்தர்கள்; 63 நாயன்மார்களுடன் ஆதியோகி தேர் பவனி மஹா சிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து நூற்றுக் கணக்கான சிவ பக்தர்கள் கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று (மார்ச் 6) பாத யாத்திரையாக வருகை தந்தனர். சென்னை, பெங்களூரு, நாகர்கோவில், பட்டுக்கோட்டை, பொள்ளாச்சி, கோவை ஆகிய 6 இடங்களில் இருந்து வெவ்வேறு தேதிகளில் புறப்பட்ட குழுவினர் ஆதியோகி திருமேனியுடன் […]
வேதாளை அல் அமீன் மழலையர் பள்ளியில் 30ம் ஆண்டு விழா !
ராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் உள்ள அல் அமீன் மழலையர் பள்ளியில் 30ம்ஆண்டு விழா ரஹ்மத்துல்லா ஆலிம் தலைமையில் முகமது மன்சூர் , அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பள்ளியின் மாணவ மாணவிகள் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் கிராத் ஓதி துவங்கினர். பள்ளியின் முதல்வர் ஜெசிமா பேகம் வரவேற்புரை வழங்கினார். பள்ளியில் ஆசிரியர் கனிமொழி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் உச்சிப்புளி சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் , ராமநாதபுரம் காவல் குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஆண்டனி சகாய சேகர் […]
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு அறிவிப்பு ! சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை !!
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் செய்தியின் வாயிலாக தெரிவிக்கையில் :- சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதாக தெரிகிறது. இதுபோன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதுபோன்ற வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவுவதை பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. […]