மதுரையில் 7-வது சீனியர், 4-வது ஜூனியர் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா வலுதூக்கும் போட்டி காந்தி அருங்காட்சியகம் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மதுரை, சென்னை, கன்னியாகுமரி, திண்டுக்கல், சிவகங்கை, ராம நாதபுரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 130-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். வீரர்-வீராங்கனைகளின் உடல் எடைகளுக்கு ஏற்ப எவ்வளவு எடை தூக்கினார்களோ அவர்கள் வெற்றியாளர் ஆனார்கள். மேலும் முதல் மூன்று இடங்கள் பிடித்தவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் வெற்றி […]
Category: மாநில செய்திகள்
தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் .!
*தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது* தமிழக மஸ்ஜிதுகளின் ஐக்கிய ஜமாஅத் கூட்டமைப்பு மாநில பொதுகுழு கூட்டம் மதுரை வில்லாபுரம் ரய்யான் கன்வென்சன் ஹாலில் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் முகமது பஷீர் அவர்கள் தலைமை உரை ஆற்றினார் மற்றும் லியாகத் தலைவர்கள் வரவேற்புரையாற்றினார் மற்றும் முகமது பெய்க் சாஹிப் அவர்கள் தொகுப்பரை ஆற்றினார் மற்றும் காஜா முகைதீன், கான், கவி ஜாபர், அன்வர் சாஹிப், ஆலம் ஹாஜியார், ஜியாவுதீன் ஹாஜியார், […]
தென்காசி மாவட்டத்தில் வலுவான மழை; வெதர்மேன் ராஜா தகவல்..
தென்காசி மாவட்டத்தில் இடி மின்னல் மற்றும் தரைக் காற்றுடன் கூடிய வலுவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென்காசி வெதர்மேன் ராஜா அறிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் வலுவான மழையை சந்திக்கும். பிப்ரவரி 27, 28 மற்றும் மார்ச் 01 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பதிவாகும். சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. தென்காசி மாவட்டத்தில், சங்கரன் கோவில், […]
அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் .!
மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக அரசு பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவி தொகையை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வழங்கினார். மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்-ன் CSR (கார்ப்பரேட் சமூக பொருப்புணர்வு) நிகழ்ச்சி மதுரை விஷால் டி மால் & மேல மாசி வீதி மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கிளைகளின் சார்பாக மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் அரங்கில் நடைபெற்றது. இந்த […]
மதுரையில் பிஎம்சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா..
மதுரை திருமங்கலம் நான்கு வழி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் பி.எம்.சி மெகா பிஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை இந்திய சுதந்திர போராட்ட வீரர் வ.உ. சிதம்பரம் பிள்ளை பேரன் சிதம்பரம் துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். உடன் சிறப்பு விருந்தினர்கள் திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ராஜாக்கூர் சபி சிறப்புரையாற்றினார்கள். மேலும் மதுரை அரசு மருத்துவமனையில் 350 […]
ஆலங்குளம் ஒன்றியத்தில் மின்கல வாகனங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியனுக்கு உட்பட்ட 16 கிராம ஊராட்சிகளுக்கு சுகாதார பணிகள் சிறப்பாக மேற்கொள்ள ஏதுவாக மின்கல வாகனங்கள் வழங்கும் விழா ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் கல்யாண ராமசுப்பிர மணியன் முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் கலந்து கொண்டு மின் கலம் மூலம் இயங்கும் தூய்மைப் பணி வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில், கடங்கனேரி, காவலா குறிச்சி, மாயமான் குறிச்சி, […]
கீழக்கரையில் பாஜகவின் தெருமுனை கூட்டம்.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மத்திய அரசின் 2025 2026 பட்ஜெட் விளக்க தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் கீழக்கரை நகர் தலைவர் K.C.V. மாட முருகன் தலைமையில் முன்னாள் மாவட்ட தலைவர் தரணி R. முருகேசன் மற்றும் ஓபிசி அணி மாவட்ட தலைவர் T. பாரதி ராஜன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மக்களுக்கு மத்திய அரசு பட்ஜெட்டையை பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நகர் பொதுச் செயலாளர் கருங்கதாஸ் விளையாட்டுப் பிரிவு மாவட்டச் […]
மாற்றுத்திறன் படைத்தோருக்கு அரசு அடையாள அட்டைகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாமில், மாற்றுத் திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் ஆலங்குளம் வட்டார வள மையத்தில் நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமிற்கு ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வ மீனாட்சி, தென்காசி மாவட்ட மாற்றுத் […]
சிறுபான்மையினர் விரோத போக்குடன் செயல்படும் இராமநாதபுரம் நகராட்சி.! எஸ் டி பி ஐ கட்சியின் மாவட்ட தலைவர் கண்டனம்.!!
ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியில் சாலையோர வியாபாரிகள் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இது தொடர்பாக எஸ் டி பி ஐ கட்சியின் கிழக்கு மாவட்ட தலைவர் ரியாஸ்கான் வெளியிட்ட அறிக்கையில் ராமநாதபுரம் சின்னக் கடை பகுதியில் சாலை ஓரத்தில் வியாபாரம் செய்து வரும் சிறு வியாபாரிகளை ஒடுக்கும் நோக்கத்தோடு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையோர வியாபாரிகளின் காய்கறிகள் உள்ளிட்ட வியாபாரப் பொருட்களை நகராட்சி நிர்வாகம் குப்பை வண்டியில் ஏற்றி […]
கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் souq (An islamic Lifestyle) கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் அஷ்ஷேய்க். முபாரக் மதனி INTJ கீழக்கரை நகர் தலைவர் ஹாஜா அனீஸ் , 1வது வார்டு கவுன்சிலர் முகமது பாதுஷா , தமுமுக மாவட்ட தலைவர் சலிமுல்லாஹ் கான் , KECT தலைவர் மன்சூர் Committee Of Mif நிர்வாகிகள் மற்றும் MYFA நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ISOUQ நிறுவனத்தின் தலைவர் அஹமது மற்றும் நிர்வாகிகள் யாசின் அக்ரம் […]
விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சி.!
தஞ்சாவூர் மாவட்டம் ,பூதலூர் ஒன்றியம், மாறனேரி பஞ்சாயத்தில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக மண்புழு தயாரித்தல் குறித்த பயிற்சி மற்றும் மண்புழு தயாரிக்க உதவும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாறனேரி பஞ்சாயத்தின் கிராம நிர்வாக அலுவலர் அருள் மாணிக்கம் கலந்து கொண்டார் . விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சியை இயற்கை விவசாயி பசுபதி வழங்கினார் . 20 இயற்கை விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் உபகரணங்கள் வழங்கப்பட்டது. […]
பள்ளி மாணவ மாணவிகளுக்கு கலந்தாய்வு கருத்தரங்கம்.!
காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி பள்ளியின் மாணவ மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு பயிற்சி தேர்வுக்கான கலந்தாய்வு கருத்தரங்கம் பாவை அறக்கட்டளை சார்பாக நடைபெற்றது. இதில் மாவட்ட கல்வி ஆய்வாளர் மாரிமுத்து மற்றும் நேர்முக உதவியாளர் நடேசன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வித்திறன் பற்றியும் தேர்வு எழுதும் முறைகள் பற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர். கருத்தரங்கு பயிற்சியில் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் செந்தில் குமார் பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து […]
வேதாளையில் மின்னொளி கைப்பந்து போட்டி.!
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேதாளை தெற்கு தெரு ஜமாத், அல் பத்ரு இஸ்லாமிய இளைஞர் பேரவை சார்பில் 21 ஆம் ஆண்டு மின்னொளி கைப்பந்து போட்டி இரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. இப் போட்டியில் பல ஊர்களைச் சார்ந்த போட்டியாளர்கள் 64 அணிகளாக பங்கேற்றனர். பல கட்டங்களாக போட்டி நடைபெற்று இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற முத்தப்பா பிரியாணி அணியினர் முதல் பரிசு வென்றது. பரீத் ஓட்டல், ஜே டி காகா அணிகள் 3ம், 4ம் […]
தஞ்சையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா…
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க 26 வது அமைப்பு தின விழா தஞ்சையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்டத் தலைவர் கருப்பசாமி சங்க கொடியினை ஏற்றி வைத்தார். மாவட்டத்துணை தலைவர்கள் கனகராஜ், சண்முகம், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் கருணாகரன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் குணசேகரன் துவக்கவுரையாற்றினர். தமிழ்நாடு இரண்டு சக்கர மோட்டார் வாகன ஒட்டுனர் பாதுகாப்பு சங்க மாநிலதலைவர் பிரகலாதன் சிறப்புரையாற்றினார். மாவட்ட நிர்வாகிகள் ராஜரத்தினம் , கல்யாண சுந்தரம், சத்தியசீலன், ராஜன், சரவணபால்ராஜ், […]
நெல்லையில் இலச்சினை வெளியீட்டு விழா..
நெல்லை பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழாவிற்காக புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள சிறப்பு இலச்சினை (லோகோ) வெளியீட்டு விழா நெல்லையில் நடைபெற்றது. திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பொதிகைத் தமிழ்ச் சங்கத்தின் 10-வது ஆண்டு தொடக்க விழா வருகின்ற மார்ச் மாதம் 7-ஆம் நாள் அன்று பாளையங்கோட்டையில் வெகு விமரிசையாக நடக்க உள்ளது. விழாவில், சிறப்பு மலர் ஒன்று வெளியிடப்பட உள்ளது. இந்த விழாவிற்காக சிறப்பு இலட்சினை (லோகோ) ஒன்று […]
ராமநாதபுரத்தில் அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து.! 03 பேர் இறப்பு ஒருவர் காயம்..!!
இராமநாதபுரம் அடுத்த புத்தேந்தல் விளக்கு பகுதியில் அரசு ஏசி பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்தில் காரில் வந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பேருந்தும் மதுரையிலிருந்து ராமநாதபுரம் வந்த குவாலிஸ் காரும் ராமநாதபுரம் சேதுபதி கலைக்கல்லூரி அருகே நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதில் காரில் பயணம் செய்த விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக வந்த தனியார் […]
மதுரை ரேடியோ மிர்ச்சியின் (தனியார் பண்பலை) “லவ் மாங்க்” நிகழ்ச்சி.!
மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு, இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ […]
கீழக்கரையில் பட்டமளிப்பு விழா.!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் சின்னமாயாகுளம் அருகே அமைந்துள்ள இர்ஃபானுல் உலூம் எத்தீம்கானா & ஹிஃப்ளு மதரஸாவின் 10 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா & 19 ஆம் ஆண்டு விழா மதரஸா நிறுவனரும் வட்டார ஜமாத்து உலமா சபை தலைவருமான அப்பாஸ் அலி மன்பஈ தலைமையில் நடைபெற்றது. இராமநாதபுரம் மாவட்ட ஜமாஅத்துல் உலமாசபை கௌரவ தலைவர் அஹ்மது இப்றாஹீம் மிஸ்பாஹி ஃபாழில் ரஷாதி ஜாமிஆ அருவிய்யா தைக்கா முதல்வர் ஸலாஹுத்தீன் ஜமாலி ஃபாழில் உமரி உட்பட […]
அரசால் தடை செய்யப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான 4 கிலோ திமிங்கலத்தின் உமிழ் நீர் பறிமுதல்.! ஆறு பேர் கைது.!!
ராமநாதபுரம் அருகே போலிசார் நடத்திய வாகன சோதனையின் போது விற்பனைக்காக காரில் எடுத்து வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ் நீர் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காரில் வந்த ஆறு பேரை கைது மேல் விசாரணைக்காக வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ்க்கு மதுரையை சேர்ந்த சிலர் அரசால் தடை செய்யப்பட்ட திமிங்கலத்தின் உமிழ்நீரை ஆன்லைனில் விற்பனை செய்வதாகவும், அதனை ராமநாதபுரத்தை சேர்ந்த சிலர் வாங்க இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. இதையடுத்து சட்டவிரோதமாக […]
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல் .!
இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான 2 டன் உலர்ந்த இஞ்சி (சுக்கு) பறிமுதல்: ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை..! ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் ராமநாதபுரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா, உலர்ந்த இஞ்சி, பீடி இலை பண்டல்கள், வலி நிவாரணி மாத்திரைகள், பூச்சிக்கொல்லி மருந்து உள்ளிட்ட பொருட்கள் நாட்டு படகுகளில் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் ஒருங்கிணைந்த […]