ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

ஊட்டி, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.. ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்- சென்னை உயர் நீதிமன்றம். மே 7 முதல் ஜூன் 30-ம் தேதி வரை இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. உள்ளூர் மக்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறை குறித்து இந்தியா முழுவதும் விளம்பரம்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.

பத்திரிகையாளர்கள், பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்ட தடையா..? முறைப்படுத்துமா சென்னை பெரு நகர காவல்துறை.? “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கோரிக்கை..

WJUT WORKING JOURNALISTS UNION OF TAMILNADU பத்திரிகையாளர்கள், பயன்படுத்தும் வாகனங்களில் PRESS, MEDIA, ஊடகம் என்று ஸ்டிக்கர் ஒட்ட தடையா..? முறைப்படுத்துமா சென்னை பெரு நகர காவல்துறை.? “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்” கோரிக்கை.. இது சம்பந்தமாக “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ், மாநிலப் பொதுச்செயலாளர் பா. பிரதீப்குமார், மாநில பொருளாளர் இரா.ராம்ஜி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; சென்னை பெரு நகர போக்குவரத்து காவல் துறை கடந்த 27-04-2024 அன்று […]

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.

பலத்த காற்றில் தடுமாறிய ஹெலிகாப்டர்! பெரும் விபத்தில் இருந்து தப்பினார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. பீகாரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து தப்பியது; ஹெலிகாப்டர் லேசாக தடுமாறிய நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். பலத்த காற்றால் தடுமாறிய ஹெலிகாப்டரை மீண்டும் கட்டுக்குள் கொண்டு வந்ததால் விபத்து தவிர்ப்பு.

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு..

தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு.. தென்காசி மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா ஞாயிற்றுக் கிழமை பழைய குற்றாலம் சாலையில் உள்ள கே ஆர் டைகர் ரிசாட்சில் நடைபெற்றது. இதில், கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வசந்தம் கன்ஸ்ட்ரக்ஷன் பொறியாளர் பாலசுப்பிரமணியன் மாவட்ட தலைவராகவும், மேலகரம் பொறியாளர் கீதம் கன்ஸ்ட்ரக்ஷன் சங்கரநாராயணன் மாவட்ட செயலாளராகவும், ஆலங்குளம் சஞ்சய் பில்டர்ஸ் சிவகுருநாதன் பொருளாளராகவும் பதவி ஏற்றனர். இவர்களுடன் உடனடி […]

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு  கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பகவதி அம்மாள் தீர்ப்பு அளித்தார். நிர்மலா தேவி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுவிடுத்துள்ளனர். முன்னாள் பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. […]

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை! தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை! தேர்தல் விதிமுறை காரணங்களால் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு.. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க கொடைக்கானல் செல்வதால் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.00 மணிக்கு புறப்பட்டு தற்போது மதுரை விமான நிலையத்திற்கு 10.10 மணிக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து இங்கிருந்து சாலை மார்க்கமாக நிலக்கோட்டை, வத்தலகுண்டு வழியாக கொடைக்கானல் செல்கிறார். முதல்வர் வருகையை முன்னிட்டு மதுரை விமான நிலையம் முதல் கொடைக்கானல் வரை […]

முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒட்டப்பட்ட போஸ்டர்! வத்தலக்குண்டு மற்றும் நிலக்கோட்டை பகுதிகளில் பரபரப்பு..

நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில்  தமிழக முதல்வர் கொடைக்கானல் வருவதை ஒட்டி அவரது கவனத்திற்கு கொண்டு செல்ல ஒரு பரபரப்பான போஸ்ட்ர் நிலக்கோட்டை தாலுகா பகுதியில் பிரமலைக்கள்ளர் கூட்டமைப்பு சார்பாக ஒட்டப்பட்டுள்ளது. போஸ்டரில் எழுதியுள்ள வாசகங்கள், தமிழக அரசே! தமிழக அரசே! தூண்டாதே! தூண்டாதே! கள்ளரின மக்களை போராடத் தூண்டாதே! எதேச்சதிகாரப் போக்குடன் செயல்படும் கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குநர் அதிகாரத் தோரனையில் கள்ளர் கல்விக் கழகம் மற்றும் கள்ளர் காமன்பண்டு நிலங்களை தமிழக அரசின் பள்ளிக் […]

நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை..

நிலக்கோட்டை பகுதிகளில் குப்பை மேடுகளில் அடிக்கடி பற்றி எரியும் “தீ” குப்பைகளை கொட்டவும், அகற்றவும், பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கைகள் எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள காவல் நிலையத்தில், நிலக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குற்றவழக்குகளில் பிடிக்கப்பட்ட கார்,வேன்,இருசக்கர வாகனங்கள் மாட்டுவண்டி என ஏராளமான வாகனங்கள் வத்தலக்குண்டு மதுரை சாலையில் காவல் நிலையம் எதிர்புறம் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட பகுதியின் பின்புறம் […]

இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..

இராமநாதபுரத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி முடித்து வீடு திரும்பிய மருத்துவர் வசந்த கிருஷ்ணன் என்பவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த வசந்த கிருஷ்ணனின் மனைவி மூன்று மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், அவரது இழப்பு குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு..

பழனியில் முருகன் கோவிலில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் ரோப் சேவை நிறுத்தம்! கோவில் நிர்வாகம் அறிவிப்பு.. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் படி பாதை ,மின் இழுவை ரயில், ரோப்கார் சேவை மூலமாக மலை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் ரோப்கார் சேவை மாதத்திற்கு ஒரு நாளும் ,ஆண்டிற்கு ஒரு மாதமும், பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டு பராமரிப்பு […]

இராமநாதபுரத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி ! மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு !!

இராமநாதபுரம் தனியார் பொறியியல் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் பள்ளி கல்வித்துறை இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் -2024-க்கான “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையேற்று உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில். உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி என்பது 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு மாணவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்க தேவையான கல்வியை தேர்வு செய்ய வேண்டும் என்பதே இந்த […]

கனரக வாகனங்களை மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்; தென் பொதிகை வியாபாரிகள் சங்கம் வலியுறுத்தல்..

கேரளாவிற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும்; தென்பொதிகை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்.. கேரள மாநிலத்திற்கு கனிமங்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க வேண்டும் என தென்பொதிகை வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில், கடையம் அருகேஉள்ள முதலியார் பட்டியில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க துணைத்தலைவர் பழக்கடை சுலைமான், […]

ராமேஸ்வரம் அருகே சட்ட விரோதமான மதுபாட்டில் கடத்தல் ! மாவட்ட எஸ்பி எச்சரிக்கை !!

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் தனியார் பயணிகள் பேருந்துகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வந்த புகார் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி இராமேஸ்வரம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்பொழுது கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த தனியார் பேருந்தை சோதனை செய்த போது அதிலிருந்து 144 மதுபான பாக்கெட்கள் கைப்பற்றப்பட்டது குற்ற செயலில் ஈடுபட்ட சிவகங்கையை சார்ந்த வாகன ஓட்டுநர் சக்தி […]

திருப்பாலைக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் ! பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு !!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வறட்சியின் காரணமாக கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றி வருவதால் குடிப்பதற்காக தண்ணி தேடி நேற்று அதிகாலை 11 வயது உள்ள ஒரு புள்ளிமான் திருப்பாலைக்குடி கடற்கரைக்கு தண்ணீர் தேடி வந்துள்ளது. மானை கண்ட சமூக ஆர்வலர் பஸருல் ஹக் மற்றும் நண்பர்கள் மானை பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ஊருக்குள் வந்த மானை சிறுவர்களும் பாெதுமக்களும் ஆர்வமாக பார்த்து சென்றனர்.

ராமநாதபுரத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகார்கள் ஆய்வு !

ராமநாதபுரம் அரண்மனை சுற்றியுள்ள கடைகள் மற்றும் பவுண்ட் கடை தெரு இடங்களில் உள்ள மாம்பழகுடன்கள் போன்றவைகளை மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் தலைமையில் உணவு பாதுகாப்ப அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் உள்ளதா என்று சோதனை செய்யப்பட்டது. இதில் சந்தேகத்தின் அடிப்படையில் இருந்த மாம்பழங்களையும் வாழைப்பழங்களையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மாதிரிக்காக எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பினர். அதனை தொடர்ந்து அதிகாரிகள் கூறுகையில் :நுகர்வோர்கள் மாம்பழங்களை வாங்கும் போது […]

வேளாண் கல்லூரி  மாணவிகளால் நடத்தப்பட்ட பள்ளி மாணாக்கர்களின் பேரணி !

இராமநாதபுர மாவட்டம் உச்சிபுளி அருகிலுள்ள இரட்டையூரணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உழைப்பாளர் தினத்தை (மே 1) முன்னிட்டு “நாளைய சமுதாயம் விண்தொடும் விவசாயம்”  என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களோடு இணைந்து   விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் பாரம்பரிய விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு விவசாயத்தை மேம்படுத்த  தொழில்நுட்பத்தை துணையெடு  என்னும் கரகோசம் எழுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான அபிநயா , ஐஸ்வர்யா, ஆனி ஹிங்கிஸ், ஆர்த்தி ஸ்ரீ, ஆஷிகா,தனுஷ்யா, திவ்யதர்ஷினி, எழிலரசி […]

பட்டையை கிளப்பிய சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்றைய இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரரான ரஹானே 9 ரன்களை எடுத்து ஆரம்பத்திலேயே ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இவரை தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் ஆடிய கேப்டன் […]

உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை..

உங்க வாகனங்களில் இந்த ஸ்டிக்கர் இருக்கா.? வெளியான புதிய சட்டம்!போலீசார் எச்சரிக்கை.. அரசு அலுவலக ஊழியர்கள் சிலர் தங்களுடைய சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் , பணியாற்றும் துறையின் பெயரை ஸ்டிக்கராக ஒட்டியிருப்பதை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் தனியார் வாகனங்களில் அத்தகைய ‘ஸ்டிக்கர்’களை ஒட்டுவதற்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ‘சொந்த வாகனங்களின் நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள் அல்லது வேறு ஏதேனும் சின்னங்கள் வடிவில் தங்களது துறை […]

மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை..

மதுரையில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முயன்ற இளைஞர்களால் பரபரப்பு; காவல் துறையினர் விசாரணை.. உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரையில் அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் தை திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் கோவில் திருவிழாக்கள் சமயங்களில் ஜல்லிக்கட்டு போட்டியினை முறையாக காவல்துறையினரிடம் அனுமதி பெற்று நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மதுரை பழங்காநத்தம் பகுதியை சேர்ந்த சூர்யா என்பவர் நினைவாக ஜல்லிக்கட்டு […]

முகநூல் காதல் விபரீதம்! முகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த கொடூரன். ராஜபாளையத்தில் பரபரப்பு..

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முத்துக்கொத்தனார் தெருவை சேர்ந்தவர்கள் பெருமாள்சாமி- ஜோதி தம்பதியினர், இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் பாண்டிச்செல்வி தனியார் ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார் இவருக்கும் மதுரையைச் சேர்ந்த குணசேகர் என்பவருக்கும் முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு காதலாக மாறி இருவரும் தொலைபேசி மூலமாகவும் அவ்வப்போது நேரிலும் சந்திப்பதுமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 20 தினங்களுக்கு முன்பு குணசேகரன் பாண்டிச்செல்வியை சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகவும் அதற்கு […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!