சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.

சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்; கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இன்று […]

107 டிகிரி கொளுத்திய வெயில்! சிறிது நேரத்தில் கொட்டிய ஆலங்கட்டி மழை! மகிழ்ச்சியில் வேலூர் மக்கள்..

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டாரத்தில் ஆலங்கட்டியுடன் பெய்த கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி. வேலூர் மாவட்டத்தில் இன்று 107 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவான நிலையில் பேரணாம்பட்டு, குடியாத்தம் சுற்றுவட்டாரங்களில் ஆலங்கட்டியுடன் மழை பெய்து சற்று வெப்பம் தணிந்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்..

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்; முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.. கனிமவளங்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என அம்பை தொகுதி முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், ஊட்டி கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு வாகனங்களை கட்டுப்படுத்தவும் போக்குவரத்தை முறைப்படுத்தவும் இன்று முதல் தமிழக அரசு இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்தி இருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதேபோல் தமிழகத்தில் இருந்து தென்காசி, நெல்லை, குமரி, கோவை […]

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று   22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது..

தமிழ்நாட்டில் கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில் இன்று   22 மாவட்டங்களில் 100°F தாண்டி வெப்பம் பதிவாகி உள்ளது. நாளுக்கு நாள் வெப்பத்தின் அளவு தமிழ்நாடு உள்பட நாட்டின் பல இடங்களில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில், இந்தியாவில் இன்றைய தினம் பீகார், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஜார்க்கண்ட், ஒடிசா, தெலங்கானா, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் […]

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்..

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை: தினசரி ரூ.5 லட்சம் தங்கத்துகள்கள் வெளியேற்றம்.. அண்டார்டிகா: எரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. முழுக்க பனி பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும், அண்டார்டிகாவிலும் நெருப்பை கக்கும் 138 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றுள் 8 எரிமலைகள் அவ்வப்போது லாவா குழம்பை வெளியேற்றி உயிர்ப்புடன் இருப்பவை. அதில் ஒன்றுதான் ரோஸ் தீவில் உள்ள மவுண்ட் எரிமலை. 1972ம் […]

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு..

10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு.. தமிழ்நாட்டில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இதில் சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் பல்வேறு பாடங்களில் மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை. அதன்படி மாநிலம் முழுவதும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுதவில்லை. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து […]

வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது!!

உலகில் மிகப்பெரிய ரயில் வழித்தடங்களை கொண்டுள்ள இந்தியாவில், அதிக வருவாய் ஈட்டும் முதல் பத்து ரயில் நிலையங்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நாடு முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ளன. பயணிகள் ரயில்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணங்களும், சரக்கு ரயில்கள் மூலம் கோடிக்கணக்கான சரக்குகளும் அனுப்பப்பட்டு வருமானங்கள் ஈட்டப்பட்டு வருகின்றன. நாட்டில் இருக்கும் துறைகளில் அதிக வருமானம் அளிக்கும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயில்வேக்கு என […]

ராமேஸ்வரம் திருக்கோயிலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு !

இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் இன்று  ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு செய்தார் . ஆய்வில் முகப்பு சீட்டு இல்லாத பாக்கெட்டுகள் அப்புறபடுத்தப்பட்டது. மேலும் முறையான பேக்கிங் தேதி, காலாவதி தேதி உணவு பாதுகாப்பு உரிமம் கண்டிப்பாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு தயார் செய்யும் இடத்தில் […]

ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை!- இன்று முதல் அமலுக்கு வருகிறது விதிமுறைகள்..

ஊடகம், வழக்கறிஞர், மருத்துவர் என துறை சார்ந்தவர்கள் தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள தடையில்லை என போக்குவரத்து போலீஸார் தெரிவித்துள்ளனர். அண்மை காலமாக தனியார் வாகனங்களில் பத்திரிகை, தலைமைச் செயலகம், மின்சாரத் துறை, காவல் துறை, மாநகராட்சி, வழக்கறிஞர், உயர் நீதிமன்றம், மருத்துவர், தீயணைப்புதுறை, காவல்துறை, முப்படை போன்ற துறைகள், நிறுவனங்களின் பெயர்கள் எழுதப்பட்டு வருவதுஅதிகரித்து வருகிறது. இதுகுறித்துபோக்குவரத்து போலீஸார் ஆய்வு செய்தபோது பலர் தங்கள்வாகனங்களில் ஒட்டியிருக்கும் ஸ்டிக்கர்களுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது. […]

கல்லூரியில் சேர்க்கைக்கு தயாராயிருக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு! “கீழை நியூஸ்” வழங்கும் அழகான ஆலோசனைகள்! “நன்றி”, ஆசிரியர் மூ.சாகுல் ஹமீது ..

இந்த 2024-25 கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வேண்டும் என்று உள்ளவர்கள் கீழ்கண்ட விசயங்களை முதலில் சரிசெய்து வைத்து கொள்வது கடைசி நேர அலைச்சலையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும்.  2024ஆண்டுக்கான +2 தேர்வு முடிவுகள் மே மாதம் 06 ஆம் தேதி வரவுள்ளது என்பதனை அறிவோம். மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 10 ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 4 ம் எடுத்து வைத்துக் கொள்ளவும். மேலும் […]

9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்..

9 ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்.. வரும் கல்வியாண்டு 10ம் வகுப்பில் கலைஞர் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுகிறது கலைஞர் கருணாநிதியின் சிறப்புகளை 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம். கவிதை கலைஞர், […]

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்..

சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் மே தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.. தென்காசியில் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உடை மற்றும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மே தினத்தை முன்னிட்டு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், நலத்திட்ட உதவிகள், தண்ணீர் பந்தல் திறப்பு மற்றும் இலவச மரக்கன்றுகள் வழங்குதல் உள்ளிட்ட முப்பெரும் நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது. சமூக நல்லிணக்க கூட்டமைப்பு தென்காசி பொறுப்பாளர் முகமது அலி தலைமையில் […]

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டிய பீடித் தொழிலாளி மகள் இன்பா..

ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று இளைஞர்களுக்கு வழிகாட்டிய பீடித் தொழிலாளி மகள் இன்பா.. தென்காசி மாவட்டத்தில் பீடித்தொழிலாளி மகள் இன்பா ஒன்றிய அரசின் குடிமைப் பணி தேர்வில் மூன்றாம் முறையாகக் கலந்து கொண்டு விடாமுயற்சியால் வெற்றி பெற்று, இளைஞர்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறார். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வுகள் அறிவிப்பு கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, விண்ணப்பித்தவர்களுக்கான முதல்நிலைத் […]

பேர்ஸ்டோ அதிரடியால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னைக்கு எதிராக பஞ்சாப் வெற்றி..

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. சென்னை அணிக்கு துவக்க வீரர்களான கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். இவருடன் களமிறங்கிய ரஹானே 29 ரன்களை குவித்தார். அடுத்து வந்த ஷிவம் துபே ரன் ஏதும் அடிக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி […]

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமது ராஜினாமா கடிதத்தை  ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்..

மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் தமது ராஜினாமா கடிதத்தை  ஆளுநருக்கு அனுப்பியுள்ளதாக தகவல்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை துணைவேந்தராக இருந்த குமார் தமது பதவியை ராஜினாமா செய்ததாக,கடந்த 29ஆம் தேதி ஆளுநருக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அதை ஆளுநர் ஏற்கவில்லை என்றும் ராஜினாமாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தராக குமார் பொறுப்பேற்ற பின் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன 136 ஊழியர்கள் பணி நீக்கம் […]

தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு..

தமிழகத்தில் 18 இடங்களில் சதமடித்த வெயில்! மக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு.. கரூர் பரமத்தி – 111°F வேலூர் – 111°F ஈரோடு – 110°F திருச்சி – 110°F திருத்தணி – 109°F தருமபுரி – 107°F சேலம் – 107°F மதுரை நகரம் – 107°F மதுரை விமான நிலையம் – 107°F திருப்பத்தூர் – 107°F நாமக்கல் – 106°F தஞ்சாவூர் – 106°F மீனம்பாக்கம் – 105°F கடலூர் – […]

ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு! முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கவலை..

ஆசிய நாடுகள் வெப்ப அலையால் கடும் பாதிப்பு! முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கவலை.. வெப்ப அலையால் ஆசிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். உ.பி, மேற்குவங்கம், தமிழகம், பீஹார், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கொளுத்தும் வெயிலால் வெப்ப அலை வீசி வருகிறது. சாலைகளில் வெயில் அனலாக தகித்ததால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் நகரின் பல்வேறு முக்கிய […]

கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்..

கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக, ’ரத்தம் உறைதல்’ ஏற்படலாம் என்ற தகவல் வெளியாகி, உலகம் முழுவதும் தற்போது பரவலகப் பேசப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கோவிஷீல்டு செலுத்திக் கொண்ட மக்களிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவிஷீல்டு தடுப்பூசியால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மருத்துவக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விஷால் திவாரி என்ற வழக்குரைஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி […]

செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்..

செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பாக மே தின விழா கொண்டாட்டம்.. திருவண்ணாமலை அடுத்த செங்கம் நகர இரண்டு சக்கர வாகன பழுது நீக்குவோர் நல சங்கத்தின் சார்பில் மே தின விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் சையத் பாரூக் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் முன்னதாக செயலாளர் ஜெகதீசன் அனைவரையும் வரவேற்று பேசினார் மே தின விழாவை முன்னிட்டு செங்கம் வட்டார வளர்ச்சி  அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதி […]

சுரண்டையில் பீடி தொழிலாளர் மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் சுரண்டை பீடி தொழிலாளர் நல மருத்துவமனை சார்பில் மே தின விழா மற்றும் தூய்மை இயக்க இருவார விழா துவக்க நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கு சுரண்டை சிவகுருநாதபுரம் இந்து நாடார்கள் உறவின் முறை கமிட்டி நாட்டாமை தங்கையா நாடார் தலைமை வகித்தார். கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எஸ்கேடி ஜெயபால், மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் ஏகேஎஸ்டி சேர்மச்செல்வன், கவுன்சிலர் உஷா பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உறைவிட மருத்துவர் அஞ்சலி வரவேற்று தொழிலாளர் தினம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!