தமிழக பெண் போலீசாரை தவறாக விமர்சித்ததாக யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த பேட்டியை ஒளிபரப்பு செய்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை சேர்ந்த பெலிக்ஸ் ஜெரால்டு கடந்த 10-ந்தேதி டெல்லியில் திருச்சி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் ரெயில் மூலம் அழைத்து வந்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.இந்த நிலையில் போலீஸ் தரப்பில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி நீதிபதி ஒரு […]
Category: மாநில செய்திகள்
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது- போக்குவரத்து துறை திட்ட வட்டம்..
காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க முடியாது- போக்குவரத்து துறை திட்ட வட்டம்.. காவலர்கள் கட்டணமின்றி பேருந்தில் பயணிக்க அனுமதி இல்லை. வாரண்ட் இருந்தால் மட்டுமே காவல் துறையினர் பேருந்தில் கட்டணமின்றி பயணிக்க முடியும். மற்ற நேரத்தில் காவலர்கள் டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். தூத்துக்குடி சென்ற பேருந்தில் காவலர் பயணச் சீட்டு எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த நிலையில், காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை. -போக்குவரத்துத்துறை.
குழந்தையின் பாலினத்தை அறிவித்த யூடியூபர் இர்பான்: கடுமையாக எச்சரித்து நடவடிக்கை எடுத்த தமிழக அரசு..
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- யூடியூபர் இர்பான் என்பவர் தான் துபாய் சென்றபோது தனது மனைவியின் கருவில் உள்ள சிசுவின் பாலினத்தை (பெண்) என்று ஸ்கேன் பரிசோதனை செய்து தெரிந்து கொண்டுள்ளார். அதனை குடும்ப நிகழ்ச்சி ஒன்றின்போது அங்கு கூடி இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வினை வீடியோவாக எடுத்து 19.05.2024 அன்று தனது யூடியூப் சேனலின் மூலம் வெளியிட்டுள்ளார். அதனை இதுவரை பல பார்வையாளர்கள் உலகம் முழுவதும் பார்த்தும் பகிர்ந்தும் […]
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு! இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி ‘அக்னி நட்சத்திரம்’ எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழை பதிவாகியுள்ளது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் […]
ஏன் இந்தியாவில் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் கூறுவது குற்றமாக்கப்பட்டது?- டாக்டர் ஃபரூக் அப்துல்லா..
கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தைக் பிறப்பதற்கு முன்பு கண்டறிந்து கூறுவது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாகும். தண்டனைக்குரிய குற்றமென்றால் இந்தக் குற்றத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டும் நபர்கள் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று அவர்கள் தான் நிரூபிக்க வேண்டும். தவறினால் குற்றமிழைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குறிப்பாக ஸ்கேன் செய்யும் மருத்துவர்கள் தங்களது ஸ்கேன் உபகரணங்களை முறையாக பதிவு செய்து சரியான நேரத்தில் புதுப்பித்து வர வேண்டும். ஸ்கேன் செய்யும் போது நிரப்பப்பட வேண்டிய பாரங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும். அதிக […]
இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை பொதுமக்களுக்கு வேண்டுகோள் !
இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் 6 உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள், 7 அதிகாரிகள் மற்றும் லஞ்சம் வாங்க உறுதுணையாக இருந்த 3 புரோக்கர்கள் உட்பட. பல்வேறு துறைகளில் பணிபுரியும் அதிகாரிகள் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 17 நபர்கள் ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அதனை தொடர்ந்து புகார்களை கொடுத்த பொதுமக்களின் குறைகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தி உடனே சரிசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தனது […]
உச்சிப்புள்ளி அருகே விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா, சாலை வலசை கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கு பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் பயறு வளர்ச்சி ஊக்கிகளை கொண்டுள்ள ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டு முறையை பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பயிர் வளர்ச்சி ஊக்கள் ஏழு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஆக்சின், சைட்டோகைனின், ஜிப்ரலின், அப்சிசிக் அமிலம், பாலிஅமைன்கள், ஆன்டிக்மைட்டாடிக் மற்றும் ஆன்ட்டிஜிபர்லின் ஆகியவை ஆகும். ஆக்சின் (Axin) தாவரங்களில் […]
கோடை விடுமுறையையொட்டி நெல்லை-பெங்களூரு இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கம்..
தமிழகத்தில் கோடை விடுமுறையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு விடுமுறையை கழிப்பதற்காக சென்று வருகின்றனர்.இதனையொட்டி அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தென்னக ரெயில்வே சார்பிலும் பல்வேறு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நெல்லையில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது. 06045 மற்றும் 06046 ஆகிய எண்களுடன் இயங்கும் இந்த சிறப்பு ரெயில் 2 ஏசி பெட்டிகள், 10 பொதுப் பெட்டிகள் உள்பட 18 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது.வாரந்தோறும் […]
தமிழ்நாட்டு மக்களை நேர்மையற்றவர்கள் என்று கூறுவது, தமிழ்நாட்டை அவமதிப்பது அல்லவா?. தமிழர்கள் மீது மோடிக்கு இத்தனை காழ்ப்பும் வெறுப்பும் ஏன்?- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி..
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை, கோட்பாடுகள், செயல்திட்டங்கள் மீது ஆக்கப்பூர்வமான விமர்சனங்களையும் தங்களது ஆட்சியின் சாதனைகளையும் முன்வைத்து வாக்கு சேகரிப்பதில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி, வெறுப்புப் பேச்சுகளின் மூலம் மக்களிடையே பகை உணர்வையும் மாநிலங்களுக்கு இடையே குரோதத்தையும் தூண்டி வருவது நாட்டுக்கு நல்லதல்ல. முன்னதாக, உத்தரபிரதேச மக்களை இழித்தும், பழித்தும் தென்னிந்தியர்கள் பேசுவதாகத் தமிழ்நாட்டு மக்கள் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இருந்தார். […]
கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கும் , பொதுமக்களுக்கும் எஸ்டிபிஐ கட்சி முன்னாள் தொகுதி பொருளாளர் வேண்டுகோள் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் ராமநாதபுரம் முன்னாள் தொகுதி பொருளாளர் கீழை அஸ்ரப் வேண்டுகோள் விடுத்துள்ளார் அவர் கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை நகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வீடியோ காட்சிகள் வெளியிட்டது. அதனை கீழக்கரை மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் தெரிவித்தனர். அதேபோல் வீடியோ காட்சியாக மட்டும் இல்லாமல் தினந்தோறும் கீழக்கரை நகராட்சி நிர்வாக அதிகாரிகள் நேரடியாக கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் […]
ஈரான் அதிபர் மறைவையொட்டி இந்தியா முழுவதும் துக்கம் அனுசரிப்பு! அரைக்கம்பத்தில் பறக்கும் தேசிய கொடிகள்..
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் எல்லை அருகே உள்ள அணைகள் திறப்பு விழா நிகழ்வுக்கு சென்றிருந்தார். இந்த நிகழ்வுகளில் பங்கேற்றுவிட்டு திரும்பும் போது ரைசியின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது.ஈரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் என்ன ஆனது என பல மணிநேரம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஆளில்லா டிரோன்கள் மூலம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியான் உள்ளிட்ட […]
படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்..
படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா! கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தீவிரம்.. ஆறு பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் அறிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தீபக் ராஜா வை கொலை செய்த கொலையாளிகளை பிடிப்பதற்காக திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் 4 தனிப்படையும் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாநகர பாளையங்கோட்டை உதவி ஆணையர் பிரதீப் தலைமையில் கொலையாளிகள் பற்றிய விசாரணையும் கொலையாளிகளை […]
ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்..
ஈரான் நாட்டின் இடைக்கால அதிபராக முகமது மொக்பர் நியமனம்.. மேற்காசிய நாடான ஈரானின் அதிபர் இப்ராஹிம் ரைசி, அஜர்பைஜான் நாட்டின் ஹராஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையை திறக்கும் நிகழ்ச்சிக்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்றார். அந்நாட்டு பயணத்தை முடித்துவிட்டு இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் திரும்பிக்கொண்டிருந்தார். அவருடன் ஈரான் வெளியுறவு அமைச்சா் ஹொசைன் அமிரப்டோலாஹியன், மாகாண ஆளுநா் மற்றும் அதிகாரிகளும் உடன் பயணித்தனர். அப்போது, அசர்பைஜானை ஒட்டியுள்ள ஈரானின் ஜல்பா நகரில் அவர் பயணித்த ஹெலிகாப்டர் […]
கேரள மாநிலத்தை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி முறைகேடாகத் தடுப்பணைகளைக் கட்டிவருவது அப்பட்டமான நதிநீர் சட்ட விதிமீறலாகும்!- சீமான் ‘சீற்றம்’..
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள சிலந்தி ஆற்றின் குறுக்கே அம்மாநில அரசு தடுப்பணை கட்டிவருகின்ற செய்தியறிந்து தமிழக வேளாண் பெருங்குடி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டி அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்க கேரள அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது.தமிழ்நாட்டின் கரூர், திருப்பூர் மாவட்டங்களின் நீர்த்தேவையை நிறைவு செய்யும் அமராவதி ஆறு, காவிரி ஆற்றின் நீர் வரத்தை அதிகரிக்கும் முக்கிய […]
கள்ள மவுனம் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை!- அமைச்சர் துரை முருகன் அறிக்கை..
கேரள, கர்நாடக அரசுகள் காவிரி வடிநிலத்தில் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைக் கண்காணிக்க வேண்டும் எனக் காவிரி நீர்மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் ஏற்கனவே தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்கிறது நீர்வளத்துறை அமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். “கள்ள மவுனம்” எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த […]
‘கோகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி வீரலட்சுமி புகார்..
கோகைன்’ போதைப் பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் நடிகர் விஜய் , தனுஷ் , நடிகை திரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்ட திரைப் பிரபலங்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி கைது செய்ய வேண்டுமென உள்துறை செயலாளர் அலுவலகத்தில் தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமி புகார்.. நடிகர் விஜய் நடத்திய கேளிக்கை நிகழ்ச்சியில் போதைப் பொருளான ‘கோக்கைன் ‘ பரிமாறப்பட்டு அவற்றை தனுஷ் , த்ரிஷா , ஆண்ட்ரியா உள்ளிட்டோர் அருந்தியாதாக பின்னணிப் பாடகி சுசித்ரா கூறிய குற்றச்சாட்டு குறித்து விசாரணை […]
திண்டுக்கல் அருகே ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்திய 6 வாலிபர்களை அதிரடியாக கைது செய்த மது விலக்கு போலீசார்..
திண்டுக்கல் அருகே ஆட்டோவில் 30 கிலோ கஞ்சா கடத்திய 6 வாலிபர்களை அதிரடியாக கைது செய்த மது விலக்கு போலீசார்.. திண்டுக்கல் மதுவிலக்கு போலீஸ் டி.எஸ்.பி.சுந்தரபாண்டியன் மேற்பார்வையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் திண்டுக்கல் வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த திண்டுக்கல் பாறை மேட்டு தெருவை சேர்ந்த சுப்பிரமணி(48) மதுபாலன்(31), நாகல் நகர் மதன்குமார்(31), ரவுண்ட் ரோடு விநாயகர் […]
விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு முறை பற்றிய நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலை வலசை கிராமத்தில் தேனீ வளர்ப்பு முறைகள் பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவி அ. ஆஷிகா விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார். இதில் தேனீ வளர்ப்பிற்கு குறைந்த நேரம், குறைந்த பணம் மற்றும் கட்டமைப்பு போன்றவை மூலதனமாக தேவைப்படுகிறது. குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில் தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது எளிதாகும். தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு […]
5ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்- வாக்குப்பதிவு நிறைவு..
பாராளுமன்ற தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப்பதிவு 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது.5-ம் கட்டமாக இன்று நடைபெற்ற தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் 7, பீகாா், ஒடிசாவில் தலா 5, ஜார்க்கண்டில் 3, ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா ஒரு தொகுதி அடங்கி உள்ளன. இந்த தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு […]
மதுரையில் தலைகுப்புற கவிழ்ந்த கார்..
மதுரையில் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார் சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழுந்து விபத்து.. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையம் செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த கார், சென்டர் மீடியத்தில் மோதி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை பொன்மேனி பகுதியைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தனியார் டாக்ஸி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வழக்கம் போல் பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது ஆரப்பாளையம் பேருந்து நிலையம் சாலையில் […]