கடலில் படகுகளைப் பயன்படுத்தி நடத்தப்படும் ஒரு வகை பந்தயப் போட்டியான இப்போட்டியில், பாய்மரங்களின் உதவியுடன் படகுகளை இயக்கி, ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய வீரர்கள் போட்டியிடுவர். இப்போட்டி பல இடங்களில், குறிப்பாக மீனவ கிராமங்களில் கோயில் திருவிழாக்கள், ஆடி பொங்கல் போன்ற விழாக்களின் போது நடத்தப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே முள்ளிமுனை கடற்கரை மாரியம்மன் கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடந்தது. இந்தப்போட்டியில் 24 படகுகள் கலந்து கொண்டன. ஒரு […]
Category: மாநில செய்திகள்
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா
உத்தரகோசமங்கையில் சித்திரை பெருவிழா சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த பக்தர்கள் விண்ணைப் பிளந்த நமச்சிவாயா கோசத்தோடு வடமிலுத்து நெகிழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம், திருஉத்தரகோசமங்கையில் மிகப் பழமையான மங்களேஸ்வரி உடனுரை மங்களநாதர் கோயில் உள்ளது. இங்கள்ள நடராஜர் சந்நிதியில் விலை மதிப்பற்ற ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு மார்கழி மாதத்தில் ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக்கூடிய சந்தனம் காப்பு படி களைதல், அபிஷேகம், சந்தனம் காப்பிடுதல் மற்றும் ஆருத்ரா தரிசனம் பிரசித்தி பெற்றது ஆண்டுக்கு ஒரு முறை […]
வீர மரணமடைந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக்கிற்கு அதிமுக சார்பில் வீரவணக்கம்: போரில் வெற்றி பெறவும் சிறப்பு வழிபாடு..!
நேற்று, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, ஆந்திர பிரதேச மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த எல்லை பாதுகாப்புப்படை வீரர் முரளி நாயக் வீர மரணம் அடைந்தார் அவருக்கு, ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் மருதுபாண்டியன் ஏற்பாட்டில் வீரவணக்கம் செய்து அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜவர்மன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் […]
மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் பெரியபட்டினம் அணியினருக்கு முதல் பரிசு..
இராமநாதபுரத்தில் மல்லி கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்தின் சார்பாக லிமிட்லெஸ் டர்ஃப் மைதானத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட அளவிலான ஐவர் கால்பந்து போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 30 அணிகள் பங்கு பெற்றன. இதில் முதல் பரிசினை பெரியபட்டினம் A அணியினரும் இரண்டாவது பரிசினை குப்பன் வலசை அணியினரும் மூன்றாவது பரிசினை கீழக்கரை அணியினரும் நான்காவது பரிசினை பெரியபட்டினம் B பெற்றனர். சிறந்த கோல் கீப்பருக்கான விருதினை PFC A அணியின் மசூத் குப்பன் வலசை அணியின் மாசானம் ஆகியோர் […]
கீழக்கரையில் சிசிடிவி கேமராக்கள் வழங்கிய செல்வந்தர்கள் .! சார்பு ஆய்வாளர் வேண்டுகோள்.!!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வீர கணேஷ் நகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் அமைத்து வருவதாகவும் கூடுதலாக கேமராக்கள் தேவைப்படுவதால் தங்கள் முன் வருமாறு தொழிலதிபர்களிடம் கோரிக்கை வைத்தார். அதனைத் தொடர்ந்து கீழக்கரை தெற்கு தெரு ஜமாத் மஸ்ஜித் பரிபாலான கமிட்டியின் தலைவரும் தொழிலதிபருமான உமர் களஞ்சியம் மற்றும் ராமநாதபுரம் டுடேஸ் புட்வேர் உரிமையாளரும் தொழிலதிபருமான காசிம் ஆகியோர் சிசிடிவி கேமராக்கள் வழங்கினர். இதனை அகமது அதில் முஹம்மது பிலால் அப்துல்லாஹ் ஆகியோர் […]
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு மத நல்லிணக்க திருவிழா.! கொடியேற்றத்துடன் துவக்கம்.!!
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் உலக பிரசித்தி பெற்ற மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்ஹாவில் வருடம் தோறும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா பெரும் விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடத்தின் 851ம் ஆண்டின் சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க விழா முதல் நிகழ்ச்சியாக ஏப் 29-ல் தொடங்குகிறது இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு இறை […]
திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா
திருவாடானை பிடாரி அம்மன் கோவில் பூக்குழி உற்சவ விழா அதிவிமரிசையாக நடந்தது..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் இராமநாதபுரம தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி என்ற பிடாரி அம்மன் பூக்குழி உற்சவ விழாவையொட்டி கிடந்த ஏப்ரல் 28 தேதி கொடியேற்றதலுடன் விழா துவங்கியது. அன்றிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து மது குடம் தலையில் ஏந்தி மீதி உலா வந்தனர் முன்னதாக கோவில் பூசாரி மற்றும் பக்தர் கையில் தீச்சட்டி உடன் வீதி உலா வந்தனர். இன்று […]
கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்:
கடல்பாசி உலர் தளம் கட்டிட பணி தரமற்ற முறையிலும் பணிகள் மந்தமாகவும் நடைபெறுவதாக புகார்: தரமாகவும் விரைந்தும் கட்டித்தர கோரிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டி அருகே எம்.ஆர். பட்டினம், பாசிப்பட்டினம், உள்ளிட்ட கடலோர பகுதிகளில் பெருமளவிலான மீனவ மக்கள் பாசி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருவாய் ஈட்டி வருகின்றனர். இந்த பாசிகள் கடல் மணற் பரப்பில் உலர்த்தப்பட்டு விற்பனை செய்யப்படுவதால் குறைவான விலைக்கே விற்பனையாகிறது. இதனால் இந்தப்பகுதியில் கடற்பாசி உலர்தளங்கள் அமைத்து அதன் மூலம் […]
ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து தப்பிக்க இளைஞர்களுக்கு மாணவர்களுக்கும் பயிற்சி .!
போதைக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு ஒரு ‘அடிக்சன் கில்லர்’ இருப்பது போல் ஃபோன் அடிக்க்ஷனில் இருந்து மீள்வதற்கு தொடங்கப்பட்ட நல்ல ஒரு பயிற்சி முகாம் ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள அரிய ஒரு வாய்ப்பு. இளைஞர்கள், பள்ளி மாணவர்களுக்கு பெரியபட்டினம் கால்பந்து குழு சார்பாக கோடை கால கால்பந்து மற்றும் விளையாட்டு பயிற்சி முகாம் – போன் அடிக்க்ஷனில் இருந்து விடுபடலாம் என நம்பிக்கை..! ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் […]
திருவாடானை பண்ணவயல் கிராமத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா..!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகில் அமைந்துள்ள பண்ணவயல் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் இருந்து வருகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முத்துமாரியம்மன் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டு திருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் மங்களகரமாகத் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், மலர் அலங்காரம், தீபாராதனை போன்றவை பக்தி சிறப்புடன் நடைபெற்றன. மேலும், ஒவ்வொரு நாளும் இரவு நேரங்களில் கிராம மக்கள் ஒன்றுகூடி கும்மி, கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளை […]
ஆலங்குளம் கல்லூரி குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நெல்லை எம்.பி வலியுறுத்தல்..
ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியனை நேரில் சந்தித்து ராபர்ட் புரூஸ் எம்.பி மனு அளித்தார். அந்த மனுவில், திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா, ஆலங்குளத்தில் இயங்கி வரும் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தற்போது 892 மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். ஆசிரியர் மற்றும் பணியாளர்கள் […]
நெல்லையில் கடும் வெயில் பதிவாகும்..
தென் மாவட்டங்களில் இன்று (04.05.2025) கடுமையான வெயில் சுட்டெரிக்கும் எனவும், மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அறிக்கையில், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். கடந்த சில நாட்களாக வெப்பநிலை குறைவாக பதிவாகி வந்த நிலையில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும். தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் அதிக புழுக்கம் காணப்படும். எனவே இன்று நெல்லை, தூத்துக்குடி மக்கள் வெளியே செல்வதை […]
சிறந்த கல்வி அளித்து வரும் டிரஸ்ட் இந்தியா பள்ளி..
தென்காசி மாவட்டம் கடையம்- பாவூர்சத்திரம் அருகே அமைந்துள்ளது வெங்காடம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில், சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன் சிறந்த கல்விச் சேவை அளிப்பதை நோக்கமாக கொண்டு “டிரஸ்ட்-இந்தியா” எனும் பள்ளியை நிறுவினார். கடந்த 14 ஆண்டுகளாக கல்வி சேவை வழங்கி வரும் இப்பள்ளியின் முதல்வராக சாந்தி திருமாறன் இருந்து வருகிறார். “எட்டு வருடங்கள் உங்கள் குழந்தை எங்கள் பள்ளியில் படிக்கட்டும் – அதன் மாற்றம், ஏற்றம், வளர்ச்சி, முன்னேற்றம் உங்களுக்குப் புரியும்” என்கிறார் இப்பள்ளி நிறுவனர் […]
மே தின விழா..
நெல்லையில் மனிதநேய ஜனநாயக தொழிற் சங்கம் சார்பாக பாளை மார்க்கெட் பகுதியில் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு இனிப்பு வழங்கி மே தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு பாளை பகுதி மஜக செயலாளர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். மாநில துணை செயலாளர் அலிஃப் A..பிலால் ராஜா அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். தொடர்ந்து மே தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பாளை மண்டல செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார். செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்
மையோனைஸ் விற்பனைக்கு தடை; கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் முட்டையில் இருந்து தயார் செய்யப்படும் மையோனைஸ் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் மாசுபடுவதால், மையோனைஸை தயாரிக்க மற்றும் விற்பனை செய்ய தமிழக அரசு ஓராண்டு தடை விதித்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு அரசிதழ் எண்: 161, ஏப்ரல் 8, 2025 இன் படி, முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மையோனைஸ்க்கு ஓராண்டு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரேபிய வகை உணவுகளான தந்தூரி சிக்கன், பார்பிகியூ ஷவர்மா போன்றவை […]
குறைதீர் கூட்டத்தில் காதொலி கருவிகள் வழங்கல்..
தென்காசியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2,29,500 மதிப்பிலான காதொலி கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 28.04.2025 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் […]
வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது
மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டியில் தமிழக வெற்றி கழகத்தின் மாநகர் மாவட்ட செயலாளர் விஜய் அண்பன் கல்லாணை அறிவுறுத்தலுக்கிணங்க நடைபெற்ற நீர்மோர் பந்தல் திறப்பு விழாவிற்கு மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஷால் கிருஷ்ணா தலைமை வகித்தார் .வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் தாமு முன்னிலை வகித்தார் .வாடிப்பட்டி மாதா கோவில் முன்பாக பந்தல் மூலம் கோடை வெப்பத்தை தவிர்க்கும் பொருட்டு நீர், மோர் ,சர்பத் தர்ப்பூசணி வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர் […]
தென்காசி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கனரக வாகனங்கள்..
தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதாகவும், இதற்கு விரைவில் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் எனவும் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இயற்கை வள பாதுகாப்பு சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் வெளி மாநில கனிம வள லாரிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. கனிம வள லாரிகளில் கொள்ளளவை அதிகரித்து ஓவர் லோடு குவித்து […]
வரிவிதிப்பிற்கு ரூ.15000 லஞ்சம் பெற்ற நகராட்சி உதவியாளர் கைது..
தென்காசி மாவட்டத்தில் வரி விதிப்பிற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற நகராட்சி வருவாய் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், புளியங்குடி நகராட்சியில் வருவாய் உதவியாளராக பணியாற்றி வருபவர் அகமது உமர். இவர் சிவகிரி பகுதியைச் சேர்ந்த காளிராஜன் என்பவரிடம் புதிய வீட்டிற்கு வரிவிதிப்பு செய்வதற்காக ரூபாய் 20,000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத காளிராஜன் லஞ்ச ஒழிப்புத் துறையினரை தொடர்பு கொண்டு ரசாயனம் தடவிய ரூபாய் 15 ஆயிரத்தை வாங்கி […]
NMMS-தேர்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்கள்..
தென்காசி இ.சி.ஈ.அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேசிய வருவாய் வழி திறனாய்வுத் தேர்வு (NMMS Exam) எழுதி சிறப்பிடம் பிடித்து ஒன்றிய அரசின் உதவித் தொகை பெற இருக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை / உயர் நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளைச் சார்ந்த மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் […]