தென்காசி மற்றும் கடையநல்லூர் கோட்டத்தில், பணிபுரியும் மின்வாரிய களப்பணியாளர்களுக்கான பாதுகாப்பு வகுப்பு மற்றும் தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்றது. திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளர், டேவிட்ஜெபசிங், பாதுகாப்பு வகுப்பிற்கு தலைமை தாங்கி பேசுகையில், விநியோகத்தில் பணிகள் மேற்கொள்ளும் போதும் இயற்கை இடர்பாடுகளான சூறைக்காற்று, இடி, மின்னல், தீடிர் மழை, நேரங்களில் பாதுகாப்புடன் பணிபுரிவதற்கான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கிக் கூறினார். மேலும் விநியோகத்தில் பணி புரியும் பொழுது பாதுகாப்புக்காக உபயோகப்படுத்த […]
Category: மாநில செய்திகள்
முதலியார்பட்டி அரசு பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள முதலியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்புக்குழு சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமிற்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ஜன்னத், உறுப்பினர் சுலைஹாள் பீமா, கல்விக்குழு உறுப்பினர்கள் ராஜா, துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை முத்துச்செல்வி நாச்சியார் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் மாரிமுத்து நன்றி கூறினார். நிகழ்ச்சியில் போதை பொருட்களின் தீமைகள் பற்றியும், […]
வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்; தென்காசி மாவட்ட எஸ்.பி அறிவுறுத்தல்..
தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர கூட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் அறிவுறுத்தினார். தென்காசி மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்டத்தில் இயங்கி வரும் காவல் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் விரைந்து முடிக்கப்பட வேண்டிய வழக்குகள் குறித்தும் […]
தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை கூட்டம் முறைப்படி நடத்தப்பட வேண்டும்; பாண்டியராஜா வலியுறுத்தல்..
தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனை குழு கூட்டம் முறைப்படி நடத்த வேண்டும் என்றும், ஒன்றிய ரயில்வே அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தெற்கு ரயில்வே மண்டல ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜா வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாண்டியராஜா கூறுகையில், “ரயில்வே துறைக்கான வளர்ச்சி, அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பயணிகளுக்கான தேவைகள் குறித்து விவாதிப்பதற்கான மிக முக்கியமான குழுவாக மண்டல ரயில்வே ஆலோசனைக் குழு உள்ளது. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட சென்னை, திருச்சி, […]
நாம் தமிழர் கட்சி பிரமுகர் சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது..
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் அவதூறு வழக்கில் குற்றாலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், வீராணம் பகுதியில் கட்டப்படும் தனது வீட்டினை பார்த்துவிட்டு தனியார் விடுதியில் தங்கி இருந்துள்ள நிலையில், இன்று (ஜூலை 11) திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தின் போது நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து சாட்டை துரைமுருகன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திமுக தலைவர்கள் […]
தென்காசியில் ரூ. 3.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் ரூ.3.21 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்; தென்காசி மாவட்ட கலெக்டர் வழங்கினார்.. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.3,21,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் பயனாளிகளுக்கு வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட […]
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்; தமிழ்நாடு அரசு உத்தரவு..
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசின் முதன்மைச் செயலர் பி.அமுதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவின் படி, தாம்பரம் காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் அமலாக்கப் பணியகம் சிஐடி, ஏடிஜிபியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி அபின் தினேஷ் மோதக் தாம்பரம் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எச்.எம். ஜெயராம் மாநில குற்ற ஆவணப்பிரிவு ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி மகேஷ் குமார் அகர்வால் ஆயுதப்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி […]
மேட்டுப்பாளையத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்ட ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கல்லூரி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மணிநகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உரிய பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடந்தது. இதனால் புழு, பூச்சிகள், பாம்புகள் இருக்கும் என அருகில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன், மேலும் விளையாடுவதற்கு இடமில்லாமல் குழந்தைகள் வேதனையில் இப்பூங்காவை பயன்படுத்தாமல் இருந்தனர்.மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களின் பரிந்துரையின் படி, பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், நம்ம மேட்டுப்பாளையம் […]
குற்றாலத்தில் படகு சவாரி; மாவட்ட கலெக்டர் கொடியசைத்து துவக்கி வைத்தார்..
குற்றாலம் வெண்ணமடை குளத்தில் படகு சவாரி துவக்க விழா.. தென்காசி மாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் உள்ள வெண்ணமடை குளத்தில் படகு சவாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் படகு சவாரி துவக்கவிழா இன்று (06.07.2024) தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. […]
கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பெயருக்கு மாற்றியதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்..
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே குசவன் குண்டு கிராம கோயிலுக்கு சொந்தமான நிலத்தை தனியார் பெயருக்கு மாற்றியதை கண்டித்து சாலை மறியல் நடந்தது. இதில் 92 வயது முதாட்டி மற்றும் 20 பெண்கள் உள்பட 80 பேர் கலந்து கொண்டனர். தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட குசவன் குண்டு கிராமத்தில் பில்லத்தி கருப்பசாமி கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு உரிய வாரிசுகள் குசவன் குண்டு, குதிரை […]
கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி, தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கடனா நதியில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர், இன்று (05.07.2024) தண்ணீர் திறந்து வைத்தார். கடனாநதி பாசனத் திட்டத்தின் கீழுள்ள அரசபத்துகால், வடகுருவபத்துகால், ஆழ்வார்குறிச்சி தென்கால், ஆம்பூர் பெருங்கால், மஞ்சம்புளிகால், காக்கநல்லூர்கால், காங்கேயன்கால் ஆகிய கால்வாய்களின் கீழ் உள்ள 3987.57 ஏக்கர் […]
கீழக்கரையை சார்ந்தவருக்கு துபாயில் சாதனையாளர் விருது !
ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் அல் பர்சா பகுதியில் அமைந்துள்ள தனியார் மஹாலில் துபாய் தமிழ் மன்றம் சார்பில் “Business Excellence” விருது நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமீரகத்தை சேர்ந்த இந்திய தொழிலதிபர்கள் , இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் தொழிமுனைவோர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகின்றது அதனைத் தொடர்ந்து 2024 ம் ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவில் 50 வருடத்திற்கு மேல் தொழில்துறையிலும் சமூக சேவைகளிலும் சிறப்பாக […]
தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை..
தென்காசி எம்.பி ராணி ஸ்ரீகுமார் ஒன்றிய அமைச்சரை சந்தித்து முக்கிய கோரிக்கை.. தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார், தென் மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளான ரயில்வே சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பதவி ஏற்ற ஓரிரு நாட்களில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். அந்த மனுவில், கோவையிலிருந்து மதுரை வரை இயங்கும் விரைவு ரயிலை ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய […]
புதிய கிரிமினல் சட்டங்கள் வீண் வேலை.. அரசியலமைப்புக்கு எதிரானது!-பா.சிதம்பரம் குற்றச்சாட்டு..
இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை […]
பத்திரதரவா கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் பயிற்சி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பத்திரதரவா கிராமத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின கீழ் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு என்ற தலைப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது .இப்பயிற்சியில் துணை வேளாண்மை அலுவலர் சையது முஸ்தபா கலந்து கொண்டு தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றுவது எப்படி என்றும் சாகுபடி பரப்பை அதிகரிக்க செய்வது எப்படி என்று விளக்க உரை விவசாயிகளுக்கு வழங்கினார். தவமுருகன் உதவி வேளாண்மை அலுவலர் […]
நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு..
நிலக்கோட்டை அருகே புதூர் கிராமத்தில் சாக்கடை நீர் தேக்கம்! நோய் பரவும் அபாயம்! எஸ்டிபிஐ பரபரப்பு குற்றச்சாட்டு.. திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை கோட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 500 -க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சாக்கடை நீர் செல்வதற்கு போதிய வழியில்லாமல் தேக்கம் அடைந்து பல வீடுகளின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதனால் சிலர் நோய் வாய்ப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இம்ரான் என்பவரின் குடும்பமே சிகிச்சை […]
கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் பயிற்சி முகாம்
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே கும்பரம் கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட 2024-25ஆம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் முன்னேற்றக் குழு காரீப்பருவ பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் உதவி வேளாண்மை அலுவலர் மோகன்ராஜ் விலை ஆதரவுத் திட்டத்தின் (Price Support Scheme)கீழ் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது இத்திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு உரிய தொகையானது […]
திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு..
திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு.. மதுரை திருப்பரங்குன்றம் ஒன்றிய அலுவலகத்தில் வாயில் கருப்பு துணியுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட ஒன்றிய கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது. விரகனுார் ஊராட்சி பகுதியில் காவேரி கூட்டு குடிநீர், சாலை, சாக்கடை போன்ற முக்கிய பிரச்சனைகள் குறித்து பலமுறை கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. இது குறித்து விரகனூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட வட்டார […]
பெரியபட்டினத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு !
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் கெட்டுப்போன மீன்கள் வியாபாரம் செய்வதாக வந்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட நியமன அலுவலர் விஜயகுமார் அறிவுறுத்தலின் பேரில் கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ் மற்றும் மீன்வள ஆய்வாளர் சாகுல் ஹமீது. சாகர் மித்ரா பணியாளர் இலக்கிய வேந்தன் ஆகியோர் இணைந்து பெரியபட்டினம் மீன் மார்க்கெட்டில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது கெட்டுப்போன மீன்கள் சுமார் 11 கிலோ கண்டறியப்பட்டு அவற்றை பினாயில் ஊற்றி அளிக்கப்பட்டது. மேலும் மீன் விற்பனை செய்யும் […]
ராமநாதபுரத்தில் நுகர்வோர் உரிமைகள் தின விழா ! மாவட்ட ஆட்சியருக்கு நினைவு பரிசு !!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.கோவிந்தராஜலு முன்னிலையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி வரவேற்புரை வழங்கினார் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் பாலசுப்பிரமணியம் , கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் செயலாளர் செய்யது இப்ராஹீ ஆகியோர் சிறப்புரையாற்றினார், அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் […]