அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற தஞ்சை மாநகர பேரவை அலுவலக கட்டடத்தில் நடைபெற்றது . இந்த பேரவைக்கு யூ. காதர் உசேன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ் பேரவையை துவக்கி வைத்து உரையாற்றினார். மாவட்ட தலைவர் சுதந்திர பாரதி நிறைவுறையாற்றினார். மாநில தலைவர் இப்ராஹிம் சிறப்புரை வழங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ,பேராசிரியர் பாஸ்கர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட துணை செயலாளர் சக்திவேல். விஜய கம்யூனிஸ்ட் கட்சி மாநகர செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் […]
Category: மாநில செய்திகள்
அடவிநயினார் அணையிலிருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் கோவில் நீர்த்தேக்கத்தில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்வரின் ஆணையின்படி தென்காசி மாவட்டம் செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்களுக்கு உட்பட்ட அடவிநயினார் அணையில் இருந்து கார் பருவ சாகுபடிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) அமிர்தலிங்கம் 19.07.2024 இன்று தண்ணீர் திறந்து வைத்தார். அடவிநயினார் பாசன திட்டத்தின் கீழுள்ள மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம் கால், இலத்தூர் கால், நயினாகரம் கால், […]
தென்காசி ஆக்ஸ்ஃபோர்டு பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்..
தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த தினவிழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. ஆக்ஸ்ஃபோர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த காமராஜர் திருவுருவப்படத்திற்கு பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான கே.திருமலை தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான தி.மிராக்கின் பால் சுசி, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள் ஆகியோர் […]
தென்காசி மாவட்டத்தில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு..
தென்காசி மாவட்டத்தில், ஒரே நாளில் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு மாவட்ட எஸ்.பி. சுரேஷ்குமார் பரிந்துரையின் பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருட்டு, வழிப்பறி, போக்சோ தொடர்புடைய பின்வரும் இரண்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய போக்சோ வழக்கின் குற்றவாளியான கரிவலம்வந்தநல்லூர் பெரியூர் […]
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2024 ஆம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 31.07.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், தென்காசி, கடையநல்லூர் மற்றும் வீரகேரளம்புதூர் அரசுதொழிற்பயிற்சி நிலையங்களில் 2024-ம் கல்வி ஆண்டிற்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கு (Spot Admission) 31.07.2024 வரை இணையதளம் (www.skilltraining.tn.gov.in) வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்நிலையங்களில் ஈராண்டு தொழிற்பிரிவுகளான Fitter (பொருத்துநர்), Electrician (மின்சாரப்பணியாளர்), […]
திருப்புல்லாணி வேளாண்மை துறையின் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாட்டு சாணம், மாட்டு சிறுநீர், கழிவு வைக்கோல் மற்றும் இதர பால் கழிவுகளைப் பயன்படுத்தி […]
நல்லிருக்கை கிராமத்தில் ரசாயன உரங்கள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே நல்லிருக்கை கிராமத்தில் வேளாண்மை துறையின் சார்பில் கலைஞர் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை திட்டத்தின் மூலம் ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி இராமநாதபுரம் வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் எம். கே. அமர்லால் மற்றும் வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. வேளாண்மை துணை இயக்குநர் உழவர் பயிற்சி நிலையம் முருகேசன் பேசுகையில் விவசாயிகள் மண் பரிசோதனை […]
ஆர்.எஸ்.மங்கலம் முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி விழா
ராமநாதபுரம் மாவட்டம், ஆர். எஸ்.மங்கலம் கீழத்தெரு முத்துமாரியம்மன் கோயில் விழாவை முன்னிட்டு, முளைப்பாரி விழா நடைபெற்றது. இக்கோயில் விழா ஜூலை 9ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் இரவில் பெண்களின் கும்மியாட்டமும் ஆண்களின் ஒயிலாட்டமும் நடைபெற்று வந்தது. விழாவின் தொடர்ச்சியாக வீடுகளில் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் கோவிலுக்கு எடுத்துச் சென்று, வழிபாடு செய்தனர். பின்பு முளைப்பாரிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்ற பக்தர்கள், அரசாள வந்த அம்மன் கோயிலில் வைத்து வழிபாடு செய்து, பின்பு […]
கீழக்கரையில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றிய வட்டாட்சியர்.!
ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை நகராட்சியில் வள்ளல் சீதக்காதி சாலையில் இருந்து கடற்கரை சாலை வரை சாலையோர ஆக்கிரமிப்புகள் இன்று அகற்றப்பட்டது. முன்னதாக, வட்டாட்சியர் ஜமால் முஹம்மது, தலைமை நில அளவர் வினோத் ஆகியோர் தலைமையிலான வருவாய்த்துறையினர் ஆக்ரமிப்புகளை சரியான முறையில் அளவீடு செய்து, ஆக்ரமிப்பு செய்தவர்கள் தாமாக முன் வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளுமாறு வியாபாரிகள், பொதுமக்களை அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் யாரும் அகற்ற முன்வராததால் இன்று கீழக்கரை போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலை […]
சக்கரக்கோட்டை ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாம் ! ஏராளமானோர் பங்கேற்பு !!
ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பெறக்கூடிய மனுக்களுக்கு 30 தினங்களுக்குள் உரிய தீர்வு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இன்று ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர் முகாமில் மாவட்டத்தின் 17 துறை சார்ந்த அதிகாரிகள் மக்களிடம் மனுக்களை பெற்றனர். ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் கடந்த வாரம் துவங்கப்பட்டது. அதனடிப்படையில் […]
அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம்; தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் 2,23,536 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாளான (15.07.2024) அன்று உலகிற்கே முன்னோடியான முதலமைச்சரின் காலை […]
சீமான் மீது நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி டிஎஸ்பியிடம் திமுகவினர் புகார்..
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில், முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் குறித்து பாடிய பாடல் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுகவினரால் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கலைஞரை அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி மாவட்ட துணைக் கண்காணிப்பாளரிடம் தென்காசி நகர திமுக செயலாளர் ஆர்.சாதிர் மனு அளித்தார். அந்த மனுவில், நாம் தமிழர் கட்சியின் […]
தென்காசி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சர் காலை உணவு திட்டம்; நாளை துவக்கம்..
தமிழக முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் 354 அரசு பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் 17,349 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது 15.07.2024 முதல் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்தில் கீழச்சேரி கிராமத்தில் உள்ள […]
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்..
கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையானூர், பொடியனூர், சின்னநாடானூர், சாலடியூர், கோட்டை விளையூர் ஆகிய பகுதிகளில் 15 முதல் 25 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சீரான குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகேஸ்வரி முருகன், வார்டு உறுப்பினர்கள் தலைமையில் பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகையிட்டு […]
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் துண்டு பிரசுரம் வழங்கல்..
மதுரை மாவட்டம் சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பழக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், போதை பொருட்களின் கூடாரமாக மாறிவரும் தமிழக அரசை கண்டித்தும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் முன்பு முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர் பி உதயகுமார் தலைமையில் பொதுமக்களிடம் […]
ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர்; விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை..
சோழவந்தான் அருகே முள்ளி பள்ளத்தில் ஆபத்தான நிலையில் பள்ளியின் சுற்று சுவர் உள்ளது. விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் முள்ளிபள்ளம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் சுற்று சுவர் சேதமடைந்து இடிந்து விழுந்துள்ள நிலையில், பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகள் ஒருவித அச்சத்துடன் கல்வி பயின்று வருகின்றனர். […]
கலைஞர் குறித்த அவதூறு பாடல்; சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே-டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை..
கலைஞர் கருணாநிதி அவர்களைப் பற்றி, அவதூறுப் பாடல் பாடிக் காட்டியவர்களின் மனோநிலை; அதன் தொனி, சாதாரண மனிதர்களின் தொனியல்ல! அடாவடி சாதிய மனப்பான்மையின் வெளிப்பாடே.! என புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிக்கையில், கலைஞர் கருணாநிதி அவர்களை சிறுமைப்படுத்துகின்ற ஒரே நோக்கத்தில் என்றோ எவராலோ எதற்காகவோ புனையப்பட்டதாகக் கூறும் அவதூறுப் பாடல் வரிகளை தற்போது விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஒரு இயக்கத்தின் இரண்டு முக்கிய நிர்வாகிகள் வலிந்து பயன்படுத்தி இருப்பது […]
கடையம் பகுதியில் விவசாய சேவை நிலையம்; கலெக்டர் கமல் கிஷோர் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையம் திறப்பு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையம் வட்டாரத்தில் உள்ள கடையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின் விவசாய சேவை நிலையத்தை 13.07.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் திறந்து வைத்து விவசாயிகளுக்கு கால்நடை தீவன விற்பனையை தொடங்கி வைத்தார். தென்காசி மாவட்ட கூட்டுறவுத் துறையின் தயாரிப்புகளான […]
தென்காசி மாவட்டத்தில் யானை மிதித்து தோட்ட காவலாளி உயிரிழப்பு..
தென்காசி மாவட்டத்தில் யானை மிதித்து தோட்ட காவலாளி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், யானைகளை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது. தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த குருவையா என்பவரின் மகனான மூக்கையா (வயது 60). சொக்கம்பட்டி பிள்ளையார் பாண்டி என்பவரது தோட்ட காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், மூக்கையா மற்றும் பிள்ளையார் பாண்டி […]
சங்கரன்கோவில் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு; பசியில்லா தமிழகம் குழுவினருக்கு பொதுமக்கள் பாராட்டு..
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மறுவாழ்வு அளித்த தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் பசியில்லா தமிழகம் தன்னார்வ அமைப்பின் நிர்வாகிகளுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் சாலையோரம் ஆதரவின்றி எந்தவித பராமரிப்பும் இன்றி சுற்றித் திரிவதாக சங்கரன்கோவில் கோட்டாட்சியர் மூலம் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷூக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனைத் […]