தென்காசி மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (06.08.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தார். மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். மேலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து கடையநல்லூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்த அமைச்சர் […]
Category: மாநில செய்திகள்
தென்காசி உழவர் சந்தை அருகே கழிவுநீர் அகற்றும் வாகனங்களால் சுகாதாரக்கேடு..
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருக்கும் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் நள்ளிரவில் பல இடங்களில் சேகரித்து வந்த கழிவுநீரை தென்காசி உழவர் சந்தை எதிரே உள்ள குளத்தில் விட்டு விடுவதால் பெரும் சுகாதாரக் கேடும் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் துர்நாற்றத்தால் அப்பகுதியை கடந்து செல்ல பெரும் சிரமம் ஏற்படுகிறது. நேற்று இரவு மேற்கண்ட இரு வாகனமும் சுமார் 11:30 மணியளவில் பல இடங்களில் அகற்றி […]
தென்காசியில் முடநீக்கியல் மருத்துவர் சங்கம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி..
தென்காசியில் இந்திய எலும்பு மற்றும் மூட்டு தினத்தை தமிழ்நாடு முட நீக்கியல் மருத்துவர் சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட முடநீக்கியல் மருத்துவர் சங்கம், குற்றாலம் சாரல் ரோட்டரி சங்கம், சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தமிழ்நாடு முடநீக்கியல் மருத்துவர் சங்கம், நெல்லை முடநீக்கியல் மருத்துவர் சங்கம், மற்றும் ரோட்டரி கிளப் குற்றாலம் சாரல் இணைந்து நடத்திய சாலைப் பாதுகாப்பு மற்றும் முதலுதவி சிகிச்சை முறைகள் குறித்த செயல்முறை விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. […]
முதலியார் பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசளிப்பு..
தென்காசி மாவட்டம் முதலியார்பட்டியில் அமைந்திருக்கும் கடையம் ஊராட்சி ஒன்றிய அரசு மேல்நிலைப் பள்ளியில் 2023 -2024ஆம் கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு, 12ஆம் வகுப்பில், சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு, சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு ஆயத்தக் கூட்டம் நடந்தது, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் […]
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கல்..
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு ரூ.1,00,680 மதிப்பில், மின்மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் ஆகியோர் வழங்கினர். தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் இன்று (05.08.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் […]
மேலூர் சுங்கச்சாவடி அருகே கோர விபத்து; மதிமுக நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழப்பு..
மேலூர் சுங்கச்சாவடி அருகே நிகழ்ந்த விபத்தில், மதிமுக மாநில நிர்வாகிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பெண்கள் உட்பட இரண்டு பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிய நிலையில் இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்தவர் பச்சைமுத்து, இவர் மதிமுக மாநில தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளார். மேலும் இவரது சகோதரர் […]
தென்காசியில் நடைபயிற்சி மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் கீழ் செயல்படும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் செயல்பாடுகளில் ஒன்றான “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதை அடிப்படையாக கொண்டு 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மையம் தென்காசி குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள மின்நகர் பகுதியினை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் போன்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் […]
மதுரையில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகை மூட்டத்தால் பரபரப்பு..
மதுரை வெள்ளைக்கல் பகுதியில் திடீரென வானளவிற்கு கிளம்பிய புகையால் பரபரப்பு ஏற்பட்டது. விமான நிலைய சாலை அருகே ஏற்பட்ட இந்த புகையால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். மதுரை அவனியாபுரம் பகுதியை அடுத்துள்ள வெள்ளைக்கல் பகுதியில் மதுரை மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. சமீபத்தில் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி கிட்டத்தட்ட மூன்று நாட்களுக்கு தீ எரிந்த நிலையில் போராடி தீயணைப்பு துறையினர் அனைத்தனர். இந்த நிலையில் வெள்ளைக்கல் குப்பை கிடங்கு அருகே […]
மதுரையில் ஆன்லைனில் மோசடி; வாங்காத லோனிற்கு பணத்தை கட்டக்கூறி இளம் பெண்ணை மிரட்டிய கும்பல்..
மதுரையில் ஆன்லைன் லோன் எனும் பெயரில் வாங்காத லோனிற்கு பணத்தை கட்டகூறி, வாட்ஸ்அப்பில் முகத்தை மார்பிங் செய்து ஆபாசமாக படம் அனுப்பி இளம்பெண்ணை மிரட்டிய கும்பல் மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. 42வயது நிரம்பிய பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் Kredit bee app என்ற ஆன்லைன் கடன் செயலி மூலம் ரூ.20 ஆயிரம் வாங்கியுள்ளார். அதனை மாதாந்திர அடிப்படையில் முழுவதுமாக லோனை கட்டி முடித்துள்ளார். […]
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து..
தென்காசி மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள வெள்ளாளன் குளத்தில் பூலுடையார் கோவில் ஆடி கொடை விழா இன்று நடைபெற்றது. அதனை முன்னிட்டு பந்தல் மற்றும் மின் அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிலையில், பகலில் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிந்தது. உடனடியாக அருகில் இருந்தவர்கள் சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதில் 20க்கும் […]
மலையிட பகுதியில் உள்ள அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்; தென்காசி மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் மலையிட பகுதியில் அமைந்துள்ள வரன்முறை செய்யப்படாத அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்து கொள்ள இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில் தென்காசி மாவட்டத்தில் மலையிடப்பகுதியில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ விற்பனை செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை அரசாணை எண்.66, வீட்டு வசதி மற்றும் […]
தென்காசி மாவட்டத்தில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தமிழ்நாடு முதலமைச்சரால் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டம் தனி மாவட்டமாக பிரிந்து செயல்பட்டு வந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கான புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ரூ.11.64 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தினை […]
தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் மூதாட்டிக்கு உயர்தர எலும்பு முறிவு அறுவை சிகிச்சை; அரசு மருத்துவ குழுவினர் சாதனை..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 97 வயது மூதாட்டிக்கு, உயர்தரமான எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து மருத்துவர். ஜெஸ்லின் தலைமையிலான மருத்துவ குழுவினர் சாதனை படைத்துள்ளனர். தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் இரத்தினம்மாள். வயது 97. வாகன விபத்தில் காயம் ஏற்பட்டு தென்காசி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சேர்ந்தார். அவருக்கு வலது கால் தொடை எலும்பு முறிந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்யும் நிலையில் இருந்தார். ஆனால் அவருக்கு இருதய […]
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பட்டமளிப்பு விழா..
மதுரை அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அண்ணா தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தின் மதுரை மண்டல உறுப்புக் கல்லூரிகளான மதுரை, திண்டுக்கல் மற்றும் ராமநாதபுரம் பொறியியல் கல்லூரிகளின் 2022 – 2023 ஆம் ஆண்டிற்கான பட்டம் வழங்கும் விழா மதுரை கீழக்குயில் குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகத்தில் நடைபெற்றது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை அமைப்பின் தலைமைச் செயல் […]
இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் கல்லூரியில் இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை..
இலஞ்சியில் டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகளை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் இலஞ்சி டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் கார்கில் போர் வெற்றி தின விழா நடந்தது. இதில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்புகள் மற்றும் தியாகங்களை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், கல்லூரி முதல்வர் (பொ) தங்கம் தலைமை வகித்தார், உதவி பேராசிரியர் ஷீலா […]
இளைஞர்களை குறி வைக்கும் போதை ஆசாமிகள்; இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த மஜக வலியுறுத்தல்..
இளைஞர்களை குறி வைத்து தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விநியோகம் செய்யும் சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் பாளை ஃபாரூக் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் அலிஃப் பிலால் ராஜா, மண்டல இளைஞர் அணி அஷ்ரப், மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, மாவட்ட துணை செயலாளர் முருகேசன், […]
மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்த மகத்தான திட்டங்கள்; மனிதநேயமிக்க முதல்வருக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்த தென்காசி மாவட்ட பயனாளிகள்..
தமிழ்நாடு அரசின் மகத்தான திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் மனதில் மகிழ்ச்சியை விதைத்துள்ளன. மனிதநேயமிக்க தமிழ்நாடு முதல்வருக்கு தென்காசி மாவட்ட பயனாளிகள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழக மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி பொருளாதாரத்தில் உயர எடுக்கும் எல்லா முயற்சிகளுக்கும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் மூலம் உறுதுணையாக நிற்கும் மக்கள் அரசாக திகழ்கிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோர் தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து […]
கேரள மாநில நிலச்சரிவு; தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிதியிலிருந்து ரூ.5 கோடி நிவாரண உதவி..
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட கேரளா மாநிலத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்த ரூ.5 கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்புகொண்டு தம்முடைய ஆழ்ந்த வருந்தங்களையும் இரங்கலையும் தெரிவித்ததுடன், தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக […]
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி..
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ரூபாய் 3 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சூரல்மலையில் பணியாற்றிவந்த நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டம், சேரங்கோடு 1 கிராமம், கொல்லிஅட்டி, அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாணகுமார் (வயது 52) த/பெ. முருகையா என்பவர் நேற்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் […]
மண்டபம் அருகே வேளாண்மைத் துறையின் கலந்துரையாடல் கூட்டம்
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே குயவன்குடி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் தொழில் நுட்ப மேலாண்மை முகமை மூலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் சார்பில் விவசாயிகள் விஞ்ஞானிகள் என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராமநாதபுரம் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா தலைமை தாங்கினார். வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டம் எம்.கே.அமர்லால் முன்னிலை வகித்தனர். திருப்புல்லாணி வேளாண்மை உதவி இயக்குனர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் கண்ணையா பேசுகையில் தென்னையில் குரும்பைகள் […]