சமயநல்லூர் அருகே தனியார் ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்..

மதுரை சமயநல்லூர் அருகே 6 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு […]

தாம்பரம் ரயில் கீழக்கடையம் பகுதியில் நின்று செல்ல வேண்டும்; நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை..

தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் […]

தென்காசியில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின் போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் […]

கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

மதுரையில், கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை ஊக்கப்படுத்தியுள்ளது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் பாரதமாதா, வேலுநாச்சியார் போன்ற வேடமிட்டு சுதந்திர வீர உரை நிகழ்த்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் தேசிய கொடியேற்றி பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வரவேற்று பேசினார். ஜான்சி ராணி திருமறை பகுதி வாசித்தார். இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயக்குமார் […]

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றி மரியாதை..

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள  முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான் வாழ்த்தி பேசினார். சுதந்திரம் என்பது பல தலைவர்கள் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து பெற்றதை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஜாதி, […]

சுரண்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்; பயணிகள் அவதி..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் பயணிகளும் ஒட்டுனர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சுரண்டை மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது. சுரண்டையிலிருந்தும் சுரண்டை வழியாகவும் 90 அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400 தடவைகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் வியாபாரிகள் என சுமார் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.   ஆனால் இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் […]

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு சான்று; நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S. சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பின்னர் ஆழ்வார்குறிச்சி காவல் […]

குற்றாலத்தில் சாரல் திருவிழா; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா 16.08.2024 அன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

குற்றாலத்தில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர் கண்காட்சி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க் கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.    இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் […]

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு பயணம்; வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும்..

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு அரசு முறை பயணம் வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும் என திமோர் நாட்டு பீஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் இந்திய இயக்குநர்கள் தெரிவித்தனர். பல்வேறு ஒப்பந்தங்கள் நிமித்தம் அரசு முறை பயணமாக திமோர் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இந்திய பிரமுகர்கள் ஐசக் பாஸ்கர், பூ. திருமாறன், டாக்டர் ஐசலின், சேலம் ஆபிரகாம் திமோர் தலைநகர் டிலியில் சந்தித்தனர். ஆசிய கண்டத்தின் ஒரு அங்கமாகத் […]

மதுரை விமான நிலையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழா..

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு வழியாக ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை சார்பில் […]

தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் மதிமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டடம் நடந்தது. ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 78வது சுதந்திர தின விழா; நற்சான்றுகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் […]

“தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” ஜெ.பி கல்லூரியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சி..

தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அருகே உள்ள ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு இலக்கு இதழும், ஜெ.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து “தேசத்தில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது எப்படி” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் 13 அன்று நடைபெற்றது. இதில், ஜெ.பி.பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரியின் நிர்வாகி ப. ஹேம்லெட் தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. மைக்கேல் மரியதாஸ், […]

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும்; புதிய எஸ்பி உறுதி..

தென்காசி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டம் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், ஜாதி மத மோதல்கள், ரெளடிகளின் செயல்பாடுகள் அனைத்தும் ஒடுக்கப்படும் எனவும் புதிதாக பதவியேற்றுள்ள எஸ்.பி வி.ஆர்.சீனிவாசன் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் 5வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வி.ஆர்.சீனிவாசன் இன்று (14.08.2024) பதவி ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் முன்னதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், திருநெல்வேலி மாநகர கிழக்கு துணை ஆணையராகவும், திருவாரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகவும், சென்னை பெருநகர […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற 16வது அமைச்சரவை கூட்டம்; 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்..

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் 16-வது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தில் தொழில் துறை சார்பில் 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 24,700 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.44,125 கோடி முதலீட்டிற்கான 15 புதிய தொழில் திட்டங்களுக்கு ஒப்புதல்: இந்த அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் புதிய தொழில்கள் தொடங்குவதற்கான 15 முதலீட்டுத் திட்டங்களுக்கு […]

தென்காசியில் போதை தடுப்பு உறுதி மொழியேற்ற அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழி ஏற்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் போதை தடுப்பு உறுதிமொழியினை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.  இதில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் போதிய சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மருத்துவர் மூலம் வழங்கப்படுவதாகவும், பொதுமக்கள் அதனை பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் […]

குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும்; மஜக கூட்டத்தில் வலியுறுத்தல்..

குற்றாலம் சுற்றுலா வாகனங்கள் அதிவேகமாக இயக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாக குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் நெல்லை பிலால் கலந்து கொணடார். மாவட்ட பொருளாளர் சையது அலி மாவட்ட துணை செயலாளர்கள் சிக்கந்தர், சங்கை இஸ்மாயில் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வக்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் […]

ஆன்லைன் ஷாப்பிங்க் தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி பயன்பெற வேண்டும்; தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் வேண்டுகோள்..

ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதை தவிர்த்து உள்ளூர் வியாபாரிகளிடம் பொருட்கள் வாங்கி பயன்பெறுமாறு தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. கடையம் அருகிலுள்ள முதலியார் பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச் செயலாளர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச்செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். கூட்டத்தில் உள்ளூர் வியாபாரிகளின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் தங்களுக்கு தேவையான […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!