ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம்; சமூக நல்லிணக்க கூட்டமைப்பு அதிகாரிகளுக்கு நன்றி..

ரவண சமுத்திரம் ரயில் நிலைய அதிகாரியாக தமிழர் நியமனம் செய்யப்பட்டதற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் ரயில்வே மேலதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள ரவணசமுத்திரம் ரயில் நிலையத்தை, ரவணசமுத்திரம், பொட்டல்புதூர், வீராசமுத்திரம், மந்தியூர், தர்மபுரம் மடம், கோவிந்தப்பேரி, வாகைகுளம், நாணல்குளம், முதலியார்பட்டி, திருமலையப்பபுரம், உள்ளிட்ட பல கிராம மக்கள், ரயில் பயண தேவைகளுக்காக, பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் தெரியாத நபர், ரயில் நிலைய அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருந்ததால் […]

தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்கள்; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

தென்காசி மாவட்ட காவல் துறையில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாடு முதலமைச்சரின் பதக்கங்களை பெற்ற சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் நேரில் அழைத்து பாராட்டினார். சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள்,  ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை, […]

மதுரையில் அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் சாலை மறியல்..

மதுரை அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர்கள் 500க்கும் மேற்பட்டோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், மதுரை அரசு போக்குவரத்து கழக மண்டல தலைமை அலுவலகம் முன்பாக ஓய்வூதியர்களுக்கான 105 மாத DA நிலுவை தொகை வழங்க வேண்டும், 20 மாத பணபலன்களை உடனடியா விடுவிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்டோர் […]

முக்கிய சரித்திர குற்றவாளியை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசார்; மாவட்ட எஸ்.பி பாராட்டு..

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முக்கிய சரித்திர பதிவேடு குற்றவாளியை தென்காசி மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பல சீறிய முயற்சிகளை முன்னெடுத்து குற்றவாளி பாலமுருகனை கைது செய்த தென்காசி மாவட்ட தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R ஸ்ரீனிவாசன் வெகுவாக பாராட்டினார். தென்காசி மாவட்டம், கடையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கடையம் கல்யாணிபுரம் ஊரைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மகன் பாலமுருகன். சரித்திர பதிவேடு ரௌடியான பாலமுருகன் தமிழ்நாடு […]

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது விழுந்த உயர் அழுத்த மின்கம்பி; அதிக பயணிகள் இல்லாததால் உயிர்பலி தவிர்ப்பு..

திருப்பரங்குன்றம் பசுமலை அருகே அரசு பேருந்து மீது உயர் அழுத்த மின் கம்பி விழுந்தது. பயணிகள் அதிக அளவு இல்லாததால் உயிர்பலி தவிர்க்கப்பட்டது. மதுரையிலிருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பசுமலை,  மூலக்கரை அருகில் வடக்கு மற்றும் தெற்கு திசைகளை இணைக்கும் நோக்கில் உயிர் அழுத்த மின்சார கம்பிகள் சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலையில் அந்த வழியாக  வந்த தமிழ்நாடு அரசு மாநகர  பஸ் மீது  மின்சார கம்பி தாழ்வாக இருந்ததால் அதன் மீது மோதியதில் மின்சாரக் கம்பி  […]

ஒன்றிய அமைச்சருக்கு நன்றி தெரிவித்த மதுரை எம்.பி..

மதுரை துவரிமான் பகுதியில் மேம்பாலம் அமைக்க ரூ 46 கோடி ஒதுக்கீடு செய்த ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரிக்கு சு. வெங்கடேசன் எம்பி நன்றி. தெரிவித்துள்ளார். திண்டுக்கல் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிற இடமாக துவரிமான் – மேலக்கால் சந்திப்பு இருக்கிறது. எனவே துவரிமான் சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலமும் , சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டுமென ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் மூலமும், நேரில் சந்தித்தும் சு. வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தினார். […]

சமயநல்லூர் அருகே தனியார் ஆலையை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்..

மதுரை சமயநல்லூர் அருகே 6 கோடி நிலுவைத் தொகையை வழங்கக்கோரி தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே தேனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கட்ட புலி நகர் பகுதியில் உள்ள சீலா ராணி டெக்ஸ்டைல் தனியார் மில்லில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றிய சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய தொகையான 6:45 கோடியை உடனடியாக வழங்க கோரி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு […]

தாம்பரம் ரயில் கீழக்கடையம் பகுதியில் நின்று செல்ல வேண்டும்; நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை..

தாம்பரம் ரயில் கீழக்கடையத்தில் நின்று செல்ல வேண்டும் என நெல்லை எம்பியிடம் சமூக நல்லிணக்க கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸிடம், சமூக நல்லிணக்க கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் பல முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அதில், தட்கல் உள்ளிட்ட அனைத்து டிக்கெட்களையும், மக்கள் தாமதமின்றி பெற டிக்கெட் கவுண்டரில் தமிழ் பேசும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். மேலும் ரவணசமுத்திரம், ரயில் நிலையத்தில் நெட்வொர்க் பிரச்சனைகள் காரணமாக டிக்கெட் […]

தென்காசியில் கொல்கத்தா மாணவிக்கு நீதி வேண்டி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொல்கத்தா மருத்துவ மாணவியின் கொலைக்கு நீதி கேட்டு மருத்துவர்கள் தர்ணா மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா முதுநிலை மருத்துவ மாணவி பணியின் போது கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூர சம்பவத்தில் சம்பந்தப்பட்ட உண்மை குற்றவாளிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தென்காசி மாவட்டம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையும் இணைந்து தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் […]

கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்கப்படுத்திய வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை..

மதுரையில், கலைத்திறன் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை ஊக்கப்படுத்தியுள்ளது. மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவிகளின் கலைத்திறனை ஊக்கப்படுத்தி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. சிம்மக்கல் கஸ்தூரிபாய் காந்தி மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகளின் ஆடல் பாடல் மற்றும் பாரதமாதா, வேலுநாச்சியார் போன்ற வேடமிட்டு சுதந்திர வீர உரை நிகழ்த்தினர். மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி […]

இலஞ்சி டிஎஸ் டேனியல் கல்லூரியில் தேசிய கொடியேற்றி பரிசுகள் வழங்கல்..

தென்காசி மாவட்டம் இலஞ்சியில் உள்ள டிடிடிஏ டிஎஸ் டேனியல் ராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் தாளாளர் ராஜகுமார் தலைமையில் நடந்தது. கல்லூரி முதல்வர் தங்கம், ஒருங்கிணைப்பாளர் உடற்கல்வி ஆசிரியர் ஐசக் ஜான்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாணவ ஆசிரியர் ஜெஸ்லின் அமிர்தா வரவேற்று பேசினார். ஜான்சி ராணி திருமறை பகுதி வாசித்தார். இலஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் சின்னத்தாய் தேசிய கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றினார். ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை பொறியாளர் ஜெயக்குமார் […]

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றி மரியாதை..

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், இந்தியாவின் மூவர்ண தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகிலுள்ள  முதலியார்பட்டியில் தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் தேசியக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், செயலாளர் நவாஸ் கான் வரவேற்றார். துணைத் தலைவர் பழக்கடை சுலைமான் வாழ்த்தி பேசினார். சுதந்திரம் என்பது பல தலைவர்கள் தங்களுடைய இன்னுயிரை தியாகம் செய்து பெற்றதை தற்போதுள்ள ஆட்சியாளர்கள் ஜாதி, […]

சுரண்டை பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்கள்; பயணிகள் அவதி..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் தனியார் வாகனங்களால் பயணிகளும் ஒட்டுனர்களும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தென்காசி மாவட்டத்தில் சுரண்டை மிக முக்கியமான வர்த்தக நகரமாக உள்ளது. சுரண்டையிலிருந்தும் சுரண்டை வழியாகவும் 90 அரசு மற்றும் தனியார் பஸ்கள் 400 தடவைகள் வந்து செல்கின்றன. இவற்றின் மூலம் தினமும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் வியாபாரிகள் என சுமார் 20 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர்.   ஆனால் இப்பேருந்து நிலையத்தின் வடக்கு பகுதியில் […]

சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு பாராட்டு சான்று; நெல்லை சரக காவல்துறை துணைத்தலைவர் வழங்கினார்..

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தினை தொடர்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S. சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு சான்றுகள் வழங்கி பாராட்டினார். தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் பா.மூர்த்தி I.P.S., தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் முன்னிலையில் மாவட்டத்திலுள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பின்னர் ஆழ்வார்குறிச்சி காவல் […]

குற்றாலத்தில் சாரல் திருவிழா; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் குற்றாலம் சாரல் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி கலைவாணர் அரங்கத்தில் 16.08.2024 முதல் 19.08.2022 வரை ஆகிய 4 நாட்கள் நடைபெறவுள்ள குற்றாலம் சாரல் திருவிழாவின் துவக்க விழா 16.08.2024 அன்று தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு.சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் […]

குற்றாலத்தில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர் கண்காட்சி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..

குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க் கண்காட்சியினை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சி அரசு சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலைத் திருவிழா மற்றும் மலர்க்கண்காட்சி துவக்க விழா தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனி நாடார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது.    இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் […]

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு பயணம்; வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும்..

இந்திய ஜனாதிபதியின் திமோர் நாட்டு அரசு முறை பயணம் வெளிநாட்டு மருத்துவக் கல்விக்கு புதிய வழியை ஏற்படுத்தும் என திமோர் நாட்டு பீஸ் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியின் இந்திய இயக்குநர்கள் தெரிவித்தனர். பல்வேறு ஒப்பந்தங்கள் நிமித்தம் அரசு முறை பயணமாக திமோர் நாட்டிற்கு வருகை புரிந்த இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை இந்திய பிரமுகர்கள் ஐசக் பாஸ்கர், பூ. திருமாறன், டாக்டர் ஐசலின், சேலம் ஆபிரகாம் திமோர் தலைநகர் டிலியில் சந்தித்தனர். ஆசிய கண்டத்தின் ஒரு அங்கமாகத் […]

மதுரை விமான நிலையத்தில் இந்தியாவின் 78வது சுதந்திர தினவிழா..

இந்தியாவின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை துணை கமாண்டன்ட் விஸ்வநாதன் தேசிய கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதை ஏற்று கொண்டார். மதுரை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் தேசிய கொடியேற்றி மத்திய தொழிற் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு வழியாக ஏற்றுக் கொண்டார். மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைந்துள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை மைதானத்தில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை சார்பில் […]

தென்காசியில் ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக ஆர்ப்பாட்டம்..

தென்காசியில் மதிமுக சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டடம் நடந்தது. ஒன்றிய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாததைக் கண்டித்தும், சமூக நீதிக்கும் சமத்துவத்திற்கும் எதிரான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பத்து ஆண்டு காலம் ஒன்றிய பா.ஜ.க., அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகின்றது, 18-ஆவது மக்களவைத் […]

தென்காசி மாவட்டத்தில் இந்திய தேசத்தின் 78வது சுதந்திர தின விழா; நற்சான்றுகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர் தலைமையில் 78 வது சுதந்திர தின விழா நடந்தது. தென்காசி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இ.சி.ஈ. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் கமல்கிஷோர், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையினை ஏற்றுக் கொண்டார். சிறப்பாகப் பணியாற்றிய பல்வேறு துறைகளைச் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!