தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நெல்லையைச் சேர்ந்த செல்வி. சூடாமணி எழுதிய எம்மண்ணின் நட்சத்திரங்கள் என்ற கட்டுரை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் மற்றும் இணைச் செயலாளர் செண்பகக் குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் செல்வி. சூடாமணி சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் எழுத்தாளர் […]
Category: மாநில செய்திகள்
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடல் தமுமுக-காவல்துறை இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததன் அடிப்படையில், அவரின் உடலை திருநெல்வேலி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் […]
சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி..
சாலை விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.25 இலட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி […]
தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கிவைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (25.10.2024) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் […]
போக்சோ எனும் என்கவுண்டர்; கருணையாளர்கள் காக்கப்பட வேண்டும்-சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன்..
சகித்துக் கொள்ள முடியாத ஒருவருக்கு முடிவு கட்டவோ, தற்காப்புக்காகவோ, தப்புவதை தடுக்கும் போதோ என்கவுண்டர் நடைபெறுகிறது. எனினும் தவறான என்கவுண்டரில் இருந்து கருணையாளர்கள், சமூக சேவை புரிபவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன். இது குறித்து அவர் விவரித்துள்ளதாவது, அமைதி, ஒழுக்கம், அப்பழுக்கற்ற அன்பு நிறைந்திருந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. யுத்த சப்தம், […]
முதலியார்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திமுக ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, கிளைச் செயலாளர் நவாஸ் கான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன், தென்பொதிகை […]
மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாப்போம்; மஜக மாநில துணைச் செயலாளர் நெல்லை பிலால் அறிக்கை..
நெல்லை மாவட்டத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாக்க பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பது அவசியம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள பதிவின் காரணமாக ஏற்பட்ட மோதல், மாணவர்களுக்கிடையே பகையை உருவாக்கி இதில் ஒரு […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை இன்று (23.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் […]
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி நடைபெறுவதாகவும், இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் நடைபெறும் இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது, இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி, இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் […]
தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனர்; மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல். இவர், கடந்த 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க செயினை எடுத்து உரிய முறையில் ஊத்துமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பேச்சியம்மாள் […]
கெமிக்கல் ஆலை கழிவுகளால் விவசாயம் பாதிப்பு; ஆலையை மூட தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை..
சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலையின் நச்சுக் கழிவுகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நச்சு ஆலையை விரைவில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தெரிவித்துள்ளதாவது, சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலை உள்ளது. இந்த கெமிக்கல் ஆலையின் கழிவுகள் அனைத்தும் ஓடையிலும், உபயோகமற்ற கிணற்றிலும் […]
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், எந்த அரசமைப்புச் சட்டத்தின் […]
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின் படி, தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரம் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, குலசேகரமங்கலம் பஞ்.யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில் […]
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்பு; உதவும் பணியில் பசியில்லா தமிழகம்..
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக காவல்துறை மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் சங்கரன்கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். சங்கரன்கோவிலுக்கு விரைந்து […]
தமிழ் மண்ணில் விஷக்கருத்தை விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு..
விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றிய தனது முகநூல் பதிவில், இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு தனது கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்கு சில கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் […]
விபத்தில்லா மாசற்ற தீபாவளி கொண்டாட தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடனிருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் […]
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை; கவிஞர் பேரா பாராட்டு..
சென்னை மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா பாராட்டியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களை குறிப்பாக சென்னை மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான முன்னெச்சரிக்கைகளால் பாதிப்புகள் ஏதும் இன்றி சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பாராட்டி இருப்பதும் பெருமைப்படத் […]
கடையம் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு..
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இந்திரா நகரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்திரா நகரில் உள்ள, 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாட்டர் டேங்கின் பில்லர்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தினால், அதனை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாட்டர் […]
“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டிய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்பதை வடிவமைத்த மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் […]
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு எண் 191 சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடந்தது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். மாணவி அபிதா பெல்சியா வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அலுவலர் உ.ரமேஷ் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினார். அவருடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் […]