தென்காசி மாவட்டம் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட ஆயாள்பட்டி டிடிடிஏ துவக்க பள்ளியில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் புற்றுநோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா, தலைமை வகித்தார். தென்காசி எம்பி ஸ்ரீ ராணி குமார் முகாமை துவக்கி வைத்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பெரியதுரை, ஊராட்சி மன்ற தலைவர் கோதையம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேர்ந்தமரம் நிலையம் வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில், […]
Category: மாநில செய்திகள்
தென்காசி தலைமை மருத்துவமனையில் தேசிய குருதி கொடையாளர் தின விழா..
தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், தென்காசி மற்றும் சங்கரன்கோவில் குருதி மையங்கள் சார்பாக குருதி கொடையாளர் தினம் 08.11.2024 வெள்ளிக்கிழமை மாலை 3.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம் தேதி தேசிய தன்னார்வ இரத்ததான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் “இந்தியாவில் இரத்த மாற்ற மருத்துவத்தின் தந்தை” என்று கருதப்படும் ஒரு இந்திய மருத்துவர் டாக்டர் ஜெய் கோபால் ஜாலியின் பிறந்தநாளை நினைவு கூறுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் […]
அலிகர் பல்கலைக் கழக சிறுபான்மை அந்தஸ்து வழக்கு; உச்சநீதி மன்ற தீர்ப்பிற்கு மமக வரவேற்பு..
அலிகர் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அந்தஸ்து வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது என்பதாக கூறி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா இத்தீர்ப்பை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்த அவரது அறிக்கையில், சர் சையத் அகமது கான் அவர்களின் மாபெரும் முயற்சியினால் 1875ல் உருவாக்கப்பட்டது ஆங்கிலோ ஓரியெண்டல் கல்லூரி. பிறகு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் என மாறி, 150 ஆண்டுகளுக்கு மேல் செயல்படுகிறது. இப்பல்கலைக் கழகத்தில் மாணவர் சேர்க்கை, வேலை வாய்ப்புகளில் முஸ்லிம்களுக்காகத் […]
நெல்லை அறிவியல் மையத்தில் “வேதிவினைகள்” எனும் தலைப்பில் பணிமனை மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு சிறப்பு போட்டி..
திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் “வேதி வினைகள்” எனும் தலைப்பில் பணிமனை (workshop) மற்றும் குழந்தைகளுக்கு “Still life painting” உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற உள்ளதாக நெல்லை மாவட்ட அறிவியல் மையம் அறிவித்துள்ளது. இது பற்றிய செய்திக்குறிப்பில், சர்வதேச அறிவியல் மையம் மற்றும் அறிவியல் அருங்காட்சியக தினத்தை (International Science Centre & Science Museum Day) முன்னிட்டு வருகின்ற 10.11.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் 8ஆம் வகுப்பு முதல் 10ஆம் […]
தென்காசியில் 3-வது புத்தக திருவிழா; இலச்சினை வெளியீடு..
தென்காசி மாவட்டத்தில் 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு அதற்கான இலச்சினை மாவட்ட ஆட்சித்தலைவரால் வெளியிடப்பட்டது. தென்காசி மாவட்டத்தில் 15.11.2024 முதல் 24.11.2024 வரை தென்காசி இ.சி.ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ள 3-வது பொதிகை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு பொதிகை புத்தகத் திருவிழாவின் இலச்சினையை 07.11.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. […]
ரியாத்தில் மரணித்த கட்டுமான பணியாளர் ஐயப்பன்; உடலை தாயகம் அனுப்பி வைத்த இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் தமுமுகவினருக்கு உறவினர்கள் நன்றி..
ரியாத்தில் மரணம் அடைந்த கட்டுமான பணியாளர் ஐயப்பன் உடலை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கு அவரது உறவினர்கள் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் வட்டம் புக்கலம் கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் சவுதி அரேபியா ரியாத்தில் கட்டுமான பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த 27.10.2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மரணம் அடைந்தார். இந்த தகவலை இறந்து போன ஐயப்பனின் உறவினர் கஜேந்திரன், ரியாத் மண்டல இந்தியன்ஸ் […]
தென்காசியில் புறவழி ரயில் பாதை அமைக்க வேண்டும்; தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் தீர்மானம்..
கூடுதல் ரயில்கள் இயக்குவதில் உள்ள சிக்கலை போக்க தென்காசியில் புறவழி ரயில்பாதை அமைக்க வேண்டும் என தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தின் மூன்றாவது முக்கிய ஆலோசனை கூட்டம் சங்க தலைவர் பாண்டியராஜா தலைமையில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், சங்க செயலாளர் ஜெகன் முன்னிலை வகிக்க தென்காசி மாவட்டம் சார்ந்த பல்வேறு ரயில்வே கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]
செங்கோட்டை பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் வழங்கிய சமூக ஆர்வலர்கள்..
செங்கோட்டை நகர பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி சுமார் 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்களை சமூக ஆர்வலர்கள் காவல் ஆய்வாளர் பாலமுருகனிடம் வழங்கினர். தென்காசி மாவட்டத்தில் மாவட்ட எஸ்.பி உத்தரவின் பேரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு முக்கிய பகுதிகளில் காவல் துறையினரால் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் சமூக நல ஆர்வலர்கள், கல்வி நிறுவனத்தினர் மற்றும் சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட பலரும் தங்களை இணைத்துக் கொண்டு தேவையான […]
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி; பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி..
அய்யாபுரம் காவல் நிலையத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட தென்காசி மாவட்ட எஸ்.பி V.R.ஸ்ரீனிவாசன், பெண் காவலரின் செயலை பாராட்டி வெகுமதி வழங்கி கெளரவித்த நிகழ்வு காவல் துறையினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், அய்யாபுரம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஸ்ரீனிவாசன் திடீர் ஆய்வினை மேற்கொண்டார். இதில் காவல் நிலையத்தின் முக்கிய கோப்புகள் மற்றும் ஆயுதம் வைப்பறை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பொதுமக்களிடம் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், பணியின் போது […]
தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடந்தது. தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 04.11.2024 திங்கள் கிழமையன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.13,500 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட […]
பயணியை கன்னத்தில் அறைந்த நடத்துனர் சஸ்பெண்ட்..
நெல்லையில் பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், இன்று காலை 8.30 மணிக்கு பயணி ஒருவர் லக்கேஜ் உடன் ஏற வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தின் நடத்துனர் அந்த பயணியை ஏறக்கூடாது என்றும், உனது டிக்கெட் வேண்டாம் என்றும், ஆபாச வார்த்தை பேசி பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் […]
மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிய ராகுல்காந்தி..
தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் மற்றும் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் (நவ.02) மின்தடை..
நெல்லை, தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 02.11.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய செய்திக்குறிப்பில் பின்வரும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், […]
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவர்-கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு..
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் […]
சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகள்; நெல்லை சரக டிஐஜி பரிசுகள் வழங்கி பாராட்டு..
நெல்லையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி குழந்தைகளை நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். நெல்லை செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் […]
தென்காசியில் புறவழி ரயில் பாதை; பாவூர்சத்திரத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கை -தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..
தென்காசி ரயில் நிலையத்தில் புற வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான பாண்டியராஜா இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் ரயில் தேவைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்யக்கூடிய வசதிகள் […]
மோசமான நிலையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவை; பொதுமக்கள் அவதி..
தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒன்றிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜி.பே, போன்பே போன்ற மூன்றாம் தர செயலிகளின் பணப் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை இன்றியமையாததாக உள்ளது. அனைவரிடமும் 5ஜி ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் […]
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்.பி
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து, பொது மக்களிடையே மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் முன்னிலையில், செங்கோட்டை காவல் நிலைய பெண் […]
தென்காசி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள தென்காசி மாவட்டத்தில் 169 கால்நடை […]
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பதா?; வைகோ எம்.பி கண்டனம்..
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என கூறி வைகோ எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை இரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என 22.10.2024 அன்று தினமலர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. இரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை […]