ஐந்து உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்த நான்கு மாத குழந்தைக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R. ஸ்ரீனிவாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசியை சேர்ந்த தம்பதியினரின் லயா என்ற குழந்தையானது தனது 4 மாதத்தில் 5 உலக சாதனை விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அந்த குழந்தையிடம் இரண்டு புகைப்படங்களை காட்டி அதில் உள்ள பெயர்களை சொல்லி எடுக்க சொல்லும் போது சரியாக எடுத்தும், உலக அதிசயங்கள், காய்கறிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான புகைப்படங்களை […]
Category: மாநில செய்திகள்
தென்காசி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய விவசாயி..
பட்டாவில் பெயர் சேர்க்க ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறி விவசாயி கண்ணையா தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியை சேர்ந்தவர் கண்ணையா. விவசாயியான இவர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் தன்னுடைய மனைவியான கோமதி அம்மாள் பெயரை பட்டாவில் சேர்ப்பதற்காக மனுநீதி நாள் முகாமில் மனு அளித்ததாகவும், அந்த மனு மீதான விசாரணையானது தற்போது […]
அரசு தடை செய்ய புகையிலை பொருள் விற்பனை : 3 கடைகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம்…
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவிற்கு இணங்க, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார் வழிகாட்டல் படி ராமேஸ்வரம் நகரில் அரசு தடை செய்த புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் விதமாக உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், சார்பு ஆய்வாளர் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிர்வேல், காவலர்கள் சரவணன், முனியசாமி பாண்டி, விநாயகம், கோபி, திக்விஜயன் உள்ளிட்டோர் ராமேஸ்வரம் நகர் முழுவதும் 38 […]
குயவன்குடி ஊராட்சி பகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிர பணி..
இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு படி, மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் அர்ஜுன் குமார் ஆலோசனை படி குயவன்குடி ஊராட்சி சமயன்வலசை, சாய்பாபா நகர், முல்லை நகர், முத்தமிழ் நகர், சாத்தான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் கொசுப்புழு ஒழிப்பு பணி நேற்று (டிச.3) தொடங்கி 2 வது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட மலேரியா அலுவலர் வேலுச்சாமி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் […]
ரூ.5000/- லஞ்சமாக வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பால்பாண்டி கையும் களவுமாக பிடிபட்டார்..
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒப்பந்ததாரர் முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புளியங்குடி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலணியில் ரூ.7.50 லட்சம் மதிப்பில் நாடகமேடை அமைக்கும் பணியை தனது நண்பர் பெயரில் வேலை எடுத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முழூவேலையும் முடித்துள்ளார். மேற்படி வேலைக்கான தொகையில் பகுதி தொகையாக ரூ. 3.36 லட்சம் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது, மீதிதொகையான ரூ.4.2 லட்சம் நீண்ட நாட்களாக விடுவிக்கப்படாமல் இருந்துள்ளது. எனவே புகார்தாரர் இன்று 04.12.2024 ஆம் தேதி காலை […]
தாமோதரன் பட்டினத்தில் பாமக கிளைகள் துவக்க முடிவு..
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஒன்றியம் தாமோதரன்பட்டினம் கிளை பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருவாடானை ஒன்றிய செயலாளர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்தானதாஸ் முன்னிலை வகித்தார். தாமோதரன் பட்டினத்தில் 2 கிளைகள் அமைக்கவும், பொறுப்பாளர்கள் நியமனம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிச.6 ல் கட்சி கொடியேற்றுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய துணைச் செயலாளர் அஜித், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அய்யப்பன், மீனவர் அணி ஒன்றிய தலைவர் ராகவேந்திரன், […]
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல் துறையின் வழிகாட்டுதல்கள்..
தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் பின்வரும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சபரிமலை பக்தர்கள் அதிக கூட்ட நெரிசலை தவிர்க்க தரிசன வரிசைக்கான டிஜிட்டல் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மேலும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், இதனால் சபரிமலையில் அதிக நெரிசலைத் தவிர்க்கலாம் என்றும் கேரள காவல்துறை அறிவித்துள்ளது. நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து […]
தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்; காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தல்..
தமிழ்நாட்டிற்கான இடைக்கால நிவாரண நிதியை ஒன்றிய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெஞ்சல் புயலால் செங்கற்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் தஞ்சை டெல்டா மாவட்டங்கள் கடும் மழையினால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு குடியிருப்பு பகுதிகளில் விழுந்ததால் ஒரே குடும்பத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. […]
திருப்புல்லாணி அருகே 705 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்:3 பேர் கைது..
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே தினைக்குளம் அருகே அத்தியட்சபுரம். பகுதியில் திருப்புல்லாணி போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 705 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. தமிழக அரசு தடை செய்த அப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பெரியப்பட்டினத்தைச் சேர்ந்த செய்யது இப்ராஹிம் 42, செய்யது ஜமால் 38, சரக்கு வாகன டிரைவர் சேலத்தைச் சேர்ந்த ராஜா(39) ஆகியோரை போலீசார் […]
ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் “KEELAI COMMUNITY CENTRE” அறிமுக நிகழ்ச்சி..
ஜக்கிய அரபு அமீரகம் துபாயில் தேராவில. உள்ள கராச்சி தர்பார் உணவகத்தில் “KEELAI COMMUNITY CENTRE’ ரின் அறிமுக நிகழ்ச்சி 01/12/2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கீழக்கரையை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு, இறந்தவர்களுக்கான உதவி மற்றும் பல விஷயங்களை வருங்காலங்களில் எவ்வாறு கையாளரவது மற்றும் கீழக்கரை சமுதாய மக்களுக்கு எப்படி உதவிக்கரம் நீட்டுவது போன்ற விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. இந்நிகழ்வினை கீழக்கரையைச் சார்ந்த அப்துர் ரஹ்மான், SKV ஷேக், ஜெய்னுலாப்தீன், ஃபயாஸ், […]
தென் மாவட்டங்களில் பலத்த காற்று: செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு; தென்காசி வெதர்மேன் ராஜா தகவல்..
தென் மாவட்டங்களில் இன்று (02.12.2024) பலத்த காற்று வீசும் எனவும், செங்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய அவரது வானிலை அறிவிப்பில், புயல் சின்னமானது அரபிக்கடல் ஈரப்பதத்தை இழுப்பதால் கேரளா மற்றும் தமிழக மலை மாவட்டங்களில் மேற்கு திசை காற்று வலுவடைந்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக உள்ள காலத்தில் காற்று வீசுவது போல இன்று தென் மாவட்டங்களில் பலத்த காற்று வீசும். குறிப்பாக கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மணிக்கு 55 […]
பகுதி நேர வேலை (PART TIME JOB) எனும் பெயரில் மோசடி; இருவர் கைது..
ஆன்லைன், சமூக வலைதளங்கள் மற்றும் போலியான இணையதளங்கள் மூலம் ஆஃபர் எனும் பெயரில் தினமும் பல்வேறு வகையான மோசடிகள் நடைபெற்று வருகிறது. ஆன்லைன் விளம்பர ஆஃபர்களை நம்பி பலர் மோசடி கும்பல்களிடம் சிக்கிக் கொள்வதும், தொடர்ந்து சைபர் கிரைம் பிரிவில் புகாரளிப்பதும் தொடர்கிறது. இந்நிலையில், சைபர் கிரைம் காவல்துறை சார்பில், பொதுமக்கள் அளிக்கும் மோசடி குறித்த புகார்களை விசாரித்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், பகுதி நேர வேலை என்ற பெயரில் முதலீடு செய்ய […]
சட்ட விதிகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை..
சட்ட விதிமுறைகளை மீறி கால்நடைகளை கடத்துவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போதும் இறைச்சிக் கூடங்களில் கால்நடைகள் வெட்டப்படும் போதும் பின்பற்றப்பட வேண்டிய சட்டப்பூர்வமான விதிமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் ஆறு கால்நடை சந்தைகளும், இரண்டு சோதனை சாவடிகள் புளியரை மற்றும் மேக்கரை பகுதிகளில் அமைந்துள்ளன. இம்மாவட்டத்திலுள்ள கால்நடை சந்தைகளில் விற்கப்படும் மற்றும் வாங்கப்படும் […]
பல கோடி மதிப்புமிக்க திருமங்கை ஆழ்வார் சிலை லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது..
பலகோடி மதிப்புள்ள திருமங்கை ஆழ்வார் சிலையானது, தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் அயராத முயற்சியால் லண்டனில் இருந்து விரைவில் மீட்கப்பட உள்ளது. இது குறித்த தமிழ்நாடு காவல்துறையின் செய்திக்குறிப்பில், கடந்த 1957 மற்றும் 1967 ஆண்டுகளுக்கு இடையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சௌந்திரராஜ பெருமாள் கோவிலில் இருந்து நான்கு விலை மதிப்பில்லாத சிலைகள் திருடுபோனது. இது சம்பந்தமாக சென்ற 2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருடுபோன சிலைகள் […]
செங்கோட்டை பகுதியில் அரசு பள்ளி வகுப்பறை கட்டிடத்தை ஆர்வத்துடன் திறந்து வைத்த பள்ளிக் குழந்தைகள்..
செங்கோட்டை பகுதியில் சமூக நல ஆர்வலர்களால் புணரமைப்பு செய்யப்பட்ட அரசு பள்ளி வகுப்பறை கட்டிடம் பள்ளி குழந்தைகளால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் அரசு நடுநிலைப் பள்ளியில் வகுப்பறை கட்டிட புணரமைப்புப் பணி முடிவுற்று அவ்வகுப்பறை மாணாக்கர் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர் ஜான் பிரிட்டோ, ஆசிரியர் பயிற்றுனர் சுப்புலெட்சுமி, குழு ஒருங்கிணைப்பாளர் வெங்காடம்பட்டி […]
தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசியலமைப்பு தின உறுதி மொழியேற்பு..
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் இந்திய அரசியலமைப்பு முகப்புரை உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர். மக்களாட்சித் தத்துவத்தின் மாண்பினை உள்ளடக்கி இந்தியத் திருநாட்டினை வளமான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஓர் உன்னத உருவாக்கம், அண்ணல் அம்பேத்கர் வடிவமைத்துத் தந்த நமது அரசியலமைப்புச் சட்டமாகும். அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் […]
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா?; கேள்வி எழுப்பிய காந்தியவாதி..
பாலம் கட்டச் சொன்னால் பாம்பு கிடக்கும் என்று பயப்படுகிறாரா? என வடகரை பகுதி சமூக செயற்பாட்டாளர் வாவாமைதீன் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து மனுநீதி நாளில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுவில், தென்காசி மாவட்டம் வடகரை பகுதியில் கல்குளம் சாலை மற்றும் ஒச்சான் ஓடையில் பாலம் கட்டுவதற்காக 2018 இல் இருந்து ஆறு ஆண்டுகளாய் பல மனுக்கள் கொடுத்திருக்கிறேன். 2019-ல் தென்காசி கோட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து வருவாய்த்துறை பொதுப்பணித்துறை நில அளவு துறை அனைத்து துறைகளும் களப்பணி […]
தென்காசியில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணி; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், தென்காசி மாவட்டத்தில் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் 3.0 நிகழ்வு 25.11.2024 முதல் 24.12.2024 வரை மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும், அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பாலியல் வன்முறைக்கு எதிரான மாபெரும் கையெழுத்து இயக்கம் மற்றும் பாலியல் வன்முறைக்கு […]
சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகள் அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேரூராட்சியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் அமைத்திட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாம்பவர் வடகரை ஊரின் மேற்கில் அனுமன் நதி ஆற்றுப்படுகை அமைந்துள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் குப்பை கழிவுகள், பிளாஸ்டிக் பைகள் அனைத்தும் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் சுகாதாரக்கேடு மற்றும் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் இப்பகுதி சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சாம்பவர் வடகரை பகுதியில் கழிவுகளை அகற்றும் சுத்திகரிப்பு நிலையம் […]
தமிழ்நாடு முதலமைச்சரின் ஊட்டச்சத்தினை உறுதி செய் திட்டம்; தென்காசி மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி..
“ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் தென்காசி மாவட்ட பயனாளிகள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறையின் மூலம் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நம் தாய் திருநாடாம் தமிழக மண்ணில் பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள ஒவ்வொரு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தி அனைவரும் சரியான ஊட்டச்சத்து நிலையில் உள்ளனர் என்பதை உறுதி செய்கிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் […]