சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலையின் நச்சுக் கழிவுகளால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும், இந்த நச்சு ஆலையை விரைவில் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ் விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தெரிவித்துள்ளதாவது, சிவகாசி தாலுகா காக்கி வாடன் பட்டி கிராமத்தில் கெமிக்கல் ஆலை உள்ளது. இந்த கெமிக்கல் ஆலையின் கழிவுகள் அனைத்தும் ஓடையிலும், உபயோகமற்ற கிணற்றிலும் […]
Category: மாநில செய்திகள்
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்; தமிழ்நாடு காங்கிரஸ் வலியுறுத்தல்..
ஆளுநர் ஆர்.என். ரவியை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது பற்றிய காங்கிரஸ் கமிட்டியின் அறிக்கையில், தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றது முதற்கொண்டு, தமிழ்நாட்டிற்கு விரோதமாகவும், தமிழர்களின் கலாச்சாரம், பண்பாட்டிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் முக்கியத்துவத்தை குலைக்கின்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார். அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்ட மதச்சார்பின்மையே வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இதன்மூலம், எந்த அரசமைப்புச் சட்டத்தின் […]
கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்..
தென்காசி மாவட்ட சுகாதார அலுவலர் உத்தரவின் படி, தென்காசி மாவட்டம் மேலநீலிதநல்லூர் வட்டாரம் சேர்ந்தமரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக, குலசேகரமங்கலம் பஞ்.யூனியன் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் வைத்து கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில் குலசேகரமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை தலைமை வகித்தார். மேலநீலிதநல்லூர் ஒன்றிய கவுன்சிலர் முத்துமாரி மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார மருத்துவ அலுவலர் புரோஸ்கான் தலைமையில் […]
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்பு; உதவும் பணியில் பசியில்லா தமிழகம்..
சங்கரன்கோவில் பகுதியில் ஆதரவற்ற மனநலம் பாதித்த பெண் மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான முதலுதவி செய்யப்பட்டு வடகரை அன்பு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லை உட்பட்ட பகுதியில் சாலையோரம் ஆதரவற்ற நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருப்பதாக காவல்துறை மூலமாக பசியில்லா தமிழகத்திற்கு தகவல் வந்தது. பசியில்லா தமிழகம் குழுவினர் தென்காசி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் அனுமதியின் பேரில் சங்கரன்கோவில் பகுதிக்கு விரைந்து சென்றனர். சங்கரன்கோவிலுக்கு விரைந்து […]
தமிழ் மண்ணில் விஷக்கருத்தை விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு..
விஷக் கருத்துகளைத் தமிழ்மண்ணில் விதைக்க நினைத்தால் அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவார்கள் தமிழ்நாட்டு மக்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது பற்றிய தனது முகநூல் பதிவில், இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியைப் பாடாமல் விட்டதற்கு தனது கண்டனத்திற்குப் பதிலளித்துள்ள ஆளுநருக்கு சில கேள்விகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன் வைத்துள்ளார். ‘தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்திச்சிரத்தையோடு பாடுவேன்’ எனச் சொல்லும் நீங்கள், முழுமையாகப் […]
விபத்தில்லா மாசற்ற தீபாவளி கொண்டாட தென்காசி மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்..
தென்காசி மாவட்டத்தில் வருகின்ற 31.10.2024 அன்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை வெடித்து மாசற்ற, விபத்தில்லா தீபாவளியை கொண்டாட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், அதிக அளவில் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள், அதிக ஒலி எழுப்பும் பட்டசுகளை வெடிப்பதை தவிர்க்க வேண்டும், பட்டாசுகளை கவனமாகவும் விபத்தில்லாமலும் வெடிக்க வேண்டும். பெரியவர்கள் உடனிருக்கும் போது பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் […]
தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை; கவிஞர் பேரா பாராட்டு..
சென்னை மழையின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்த தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க தலைவர் கவிஞர் பேரா பாராட்டியுள்ளார். இது பற்றிய அவரது அறிக்கையில், பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களை குறிப்பாக சென்னை மக்களை காப்பதற்காக தமிழ்நாடு அரசு எடுத்த துரிதமான முன்னெச்சரிக்கைகளால் பாதிப்புகள் ஏதும் இன்றி சென்னை மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளனர். தமிழ்நாடு அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பாராட்டி இருப்பதும் பெருமைப்படத் […]
கடையம் யூனியன் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் திரண்டதால் பரபரப்பு..
கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தண்ணீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்திருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இந்திரா நகரில் சுமார் 200 குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு இந்திரா நகரில் உள்ள, 60000 லிட்டர் கொள்ளளவு கொண்ட வாட்டர் டேங்க் மூலம் தினந்தோறும் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அந்த வாட்டர் டேங்கின் பில்லர்கள் மிகவும் பழுதடைந்த காரணத்தினால், அதனை சரி செய்வதற்காக கடந்த ஒரு மாத காலமாக வாட்டர் […]
“வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டிய தென்காசி மாவட்ட எஸ்.பி..
தென்காசி தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாவட்ட எஸ்.பி ஸ்ரீனிவாசன், தலைக்கவசம் அணிந்தால் மட்டுமே இருசக்கர வாகனம் இயங்கும் என்பதை வடிவமைத்த மாணவரின் அறிவியல் திறமைகளை பாராட்டி பரிசு வழங்கினார். தென்காசி மாவட்டம் தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற “வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி” என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் […]
சுரண்டை காமராஜர் அரசு கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை
தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு எண் 191 சார்பாக பேரிடர் மேலாண்மை பயிற்சிப் பட்டறை நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடந்தது. என்எஸ்எஸ் திட்ட அலுவலர் வீரபுத்திரன் முன்னிலை வகித்தார். மாணவி அபிதா பெல்சியா வரவேற்றார். சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை நிலைய அலுவலர் உ.ரமேஷ் தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்த சிறப்புரை மற்றும் பயிற்சி வழங்கினார். அவருடன் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் […]
மேலகரம் அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டி; தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழங்கினார்..
மேலகரம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் 11ஆம் வகுப்பு படிக்கும் 73 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். தென்காசி மாவட்டம், மேலகரம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூராட்சி மன்ற தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். பேரூர் கழக செயலாளர் சுடலை வரவேற்புரை ஆற்றினார். […]
பீடித் தொழிலாளர் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்; நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் கோரிக்கை..
நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் பீடித் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை 800 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என நெல்லை எம்.பி ராபர்ட் புரூஸ் ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து டெல்லியில் ஒன்றிய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன் ஷுக் மாண்டவியாவை 16.10.2024 அன்று நேரில் சந்தித்து எம்.பி. ராபர்ட் புரூஸ் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் நெல்லை, தென்காசி மாவட்டங்களை உள்ளடக்கிய நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இடம் […]
வல்லநாடு மலைப்பகுதியில் விதைப்பந்துகள் மூலம் பசுமை பாதுகாப்பு பணி; பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
பூமியில் பசுமையை ஏற்படுத்தும் விதமாக வல்லநாடு மலையில் பள்ளிச் சிறுவர், சிறுமியர்களால் விதைப்பந்துகளை தன்னார்வத்துடன் வீசும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் இயற்கை மற்றும் சமூக நல ஆர்வலர்கள், கல்வித்துறை, வனத்துறை, காவல்துறையினர் மற்றும் பத்திரிகையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பசுமையை பாதுகாக்கும் பணியில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் குமரகுருபர சுவாமிகள் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகள் காலாண்டு விடுமுறையில் தாம் செய்த விதைப் பந்துகளுடன் வந்திருந்தனர். 21,000 விதைப்பந்துகளை இந்த […]
தென்காசியில் இளைஞர் எழுச்சி தின பேரணி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்…
தென்காசியில் இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியை மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் பிறந்த நாளினை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் அணிவகுப்பு பேரணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தியாவின் ஏவுகணை நாயகன், இளைஞர்களின் எழுச்சி நாயகன் என என்றும் போற்றப்படும் பன்முகத்தலைவர் பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்த தினமான அக்டோபர் மாதம் 15 ஆம் […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் நாளை மின்தடை..
திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உபமின் நிலையங்களில் நடைபெற உள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.10.2024) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன் படி, திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் G.குத்தாலிங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மானூர் உப மின் நிலையத்தில் 16.10.2024 புதன் கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் மேற்கண்ட உபமின் நிலையத்தில் காலை […]
ஸ்கேட்டிங் மூலம் சாதனை படைத்த மூன்றரை வயது சிறுமி; தென்காசி எம்எல்ஏ பரிசுகள் வழங்கி பாராட்டு..
தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் மூன்றரை வயது சிறுமி 5 கிலோ மீட்டர் தூரத்தை ஸ்கேட்டிங் மூலம் 50 நிமிடத்தில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். சாதனை சிறுமியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார், சுரண்டை நகரமன்ற தலைவர் வள்ளிமுருகன் உள்ளிட்ட பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியை சேர்ந்தவர் அகஸ்டின் செல்வராஜ். இவர் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு கேடன்ஸ் மார்ஷியா என்ற மூன்றரை […]
தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டுகள் தாமதமின்றி வழங்க வேண்டும்; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
தென்காசி மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு தாமதமின்றி ரேஷன் கார்டுகள் வழங்கிட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் புதிய ரேசன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரேசன் கடை எண், ரேசன்கடை ஊழியர் பெயர் உள்ளிட்ட விவரங்களுடன் மண்டல / தாலுகா அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள உங்கள் ஸ்மார்ட் கார்டு (333XXXXXX034) பெற்று கொள்ளவும் என விண்ணப்பதாரரின் கைபேசிக்கு குறுஞ்செய்தி வருகிறது. இந்த குறுஞ்செய்தி வந்தவுடன் தாலுகா அலுவலகத்திற்கு […]
ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தகவல்..
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையின் கீழ் அனைத்து துறை முதல் நிலை அலுவலர்களும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் என்ற திட்டத்தின்படி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம்” ஏழாம் கட்டமாக எதிர் வரும் 16.10.2024 புதன்கிழமை முற்பகல் […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.24 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்; மாவட்ட கலெக்டர் வழங்கினார்..
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 67 பயனாளிகளுக்கு ரூ.24 இலட்சத்து 91 ஆயிரத்து 200 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வழங்கினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டத்திற்குட்பட்ட நகரம் (ம) இராமசாமியாபுரம் கிராமம் ஜெயராம் திருமண மண்டபத்தில் 09.10.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் தலைமையில், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணி ஸ்ரீகுமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் […]
கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” நூலினை வெளியிட்ட தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர்..
கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” எனும் நூலை தமிழ்நாடு சட்டப் பேரவைத் தலைவர் மு.அப்பாவு வெளியிட்டார். நூலின் முதல் படியை நியூஸ் -18 தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் ச. கார்த்திகைச் செல்வன் பெற்றுக் கொண்டார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா எழுதிய “கூழாங்கற்கள்” சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நடைபெற்றது. நெல்லையில் கவிஞர் பேரா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படுவர் கவிஞர் பே.இராஜேந்திரன். நெல்லை பொதிகை தமிழ்ச்சங்க நிறுவுநரும், தமிழ் […]