நெல்லையில் பயணியை கன்னத்தில் அறைந்த அரசு பேருந்து நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் மூலக்கரை பட்டியிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில், இன்று காலை 8.30 மணிக்கு பயணி ஒருவர் லக்கேஜ் உடன் ஏற வந்துள்ளார். அப்போது அரசு பேருந்தின் நடத்துனர் அந்த பயணியை ஏறக்கூடாது என்றும், உனது டிக்கெட் வேண்டாம் என்றும், ஆபாச வார்த்தை பேசி பொது இடத்தில் வைத்து கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த காட்சி வாட்ஸப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் […]
Category: மாநில செய்திகள்
மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் தீபாவளி கொண்டாடிய ராகுல்காந்தி..
தீபாவளி பண்டிகையின் போது அகல் விளக்குகளை தயார் செய்யும் ஒரு குடும்பத்தினரை சந்தித்து பேசிய வீடியோ ஒன்றை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் மற்றும் முகநூல் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, இந்த தீபாவளியை சில பெயிண்டர் சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்தும், மட்பாண்டங்கள் செய்யும் குடும்பத்துடன் சேர்ந்து மண் பாண்டங்களை தயார் செய்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினேன். அவர்களின் வேலையை அருகில் இருந்து பார்த்து, கற்றுக் கொள்ள முயற்சித்தேன். அவர்கள் சந்திக்கும் சிரமங்களையும், சிக்கல்களையும் […]
நெல்லை தென்காசி மாவட்டங்களில் (நவ.02) மின்தடை..
நெல்லை, தென்காசி மாவட்ட உபமின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 02.11.2024 அன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மின்வாரிய செய்திக்குறிப்பில் பின்வரும் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தென்காசி, செங்கோட்டை, சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை உப மின் நிலையங்களில் 02.11.2024 சனிக்கிழமை அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் செய்திட உத்தேசிக்கப்பட்டுள்ளதால் தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல் வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகர், […]
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி; தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவர்-கலெக்டர் கமல் கிஷோர் பாராட்டு..
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்று தென்காசி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இருவரை மாவட்ட கலெக்டர் ஏ.கே.கமல் கிஷோர் பாராட்டினார். இளைஞர் நலன் (ம) விளையாட்டு மேம்பாட்டுத்துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடந்த தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில், மாவட்ட அளவிலான போட்டிகள் செப்டம்பர் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்களில் நடைபெறும் […]
சிறந்த மதிப்பெண் பெற்ற பள்ளி குழந்தைகள்; நெல்லை சரக டிஐஜி பரிசுகள் வழங்கி பாராட்டு..
நெல்லையில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பள்ளி குழந்தைகளை நெல்லை சரக டிஐஜி பா.மூர்த்தி பரிசுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி பாராட்டினார். நெல்லை செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. முதல் வகுப்பில் மாணவர் சபரி இஷாந்த் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் பரிசு பெற்றார். இரண்டாவது வகுப்பில் மாணவர் ரியோ மார்வினும், மூன்றாவது வகுப்பில் மாணவி மீரஜாவும், நான்காவது வகுப்பில் மாணவி பிளெஸ்ஸியும், ஐந்தாவது வகுப்பில் […]
தென்காசியில் புறவழி ரயில் பாதை; பாவூர்சத்திரத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கை -தென்காசி எம்எல்ஏ வலியுறுத்தல்..
தென்காசி ரயில் நிலையத்தில் புற வழி ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினரும் தென்காசி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவருமான பாண்டியராஜா இணைந்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், தென்காசி மாவட்டத்தில் ரயில் தேவைகள் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரித்துக் கொண்டே வருகிறது. நெல்லை ரயில் நிலையத்தில் ரயில்களை பராமரிப்பு செய்யக்கூடிய வசதிகள் […]
மோசமான நிலையில் ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் சேவை; பொதுமக்கள் அவதி..
தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் ஒன்றிய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் சேவை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவையை பயன்படுத்தி வரும் பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். தற்போது வங்கி கணக்குகள் மற்றும் வர்த்தக கணக்குகள், ஏடிஎம், ஜி.பே, போன்பே போன்ற மூன்றாம் தர செயலிகளின் பணப் பரிமாற்றத்திற்கு இன்டர்நெட் மற்றும் மொபைல் சேவை இன்றியமையாததாக உள்ளது. அனைவரிடமும் 5ஜி ஆண்ட்ராய்டு மொபைல் போன் உள்ள நிலையில், தற்போது தான் பிஎஸ்என்எல் […]
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட எஸ்.பி
செங்கோட்டையில் புதிதாக 50 CCTV கேமராக்கள் இயக்கத்தினை துவங்கி வைத்து, பொது மக்களிடையே மாவட்ட எஸ்.பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் குற்ற செயல்கள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கவும், நடைபெற்ற குற்ற சம்பவங்களின் குற்றவாளிகளை கண்டறியும் விதமாக பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் இணைந்து செங்கோட்டையில் பல்வேறு பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.R.ஶ்ரீனிவாசன் முன்னிலையில், செங்கோட்டை காவல் நிலைய பெண் […]
தென்காசி மாவட்டத்தில் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது; மாவட்ட கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறையினரால் கால்நடை கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது பற்றிய செய்திக்குறிப்பில், இந்தியாவில் கால்நடை கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுகிறது. இதுவரை 20 கால்நடை கணக்கெடுப்புகள் நடைபெற்றுள்ளன. விரைவில் 21வது கால்நடை கணக்கெடுப்பு நாடு முழுவதும் தொடங்க உள்ளது. தென்காசி மாவட்டத்திற்கும் இந்தப்பணி கால்நடை பராமரிப்புத் துறையினரால் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பணியினை மேற்கொள்ள தென்காசி மாவட்டத்தில் 169 கால்நடை […]
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பதா?; வைகோ எம்.பி கண்டனம்..
திருவனந்தபுரம் இரயில்வே தேர்வு வாரியத்துடன் மதுரையை இணைப்பது தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் என கூறி வைகோ எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை இரயில்வே கோட்டத்தை திருவனந்தபுரம் தேர்வு வாரியத்துடன் இணைப்பதன் விளைவாக தமிழர்களின் வேலைவாய்ப்பு கேரள இளைஞர்கள் வசம் செல்ல வாய்ப்புள்ளது என 22.10.2024 அன்று தினமலர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது. இரயில்வே நிர்வாகத்தின் இச்செயல் கடும் கண்டனத்திற்கு உரியது. இது குறித்து ஏற்கனவே நான் பலமுறை […]
செங்கோட்டை அரசு நூலகத்தில் நூல் திறனாய்வு மற்றும் நூல் வெளியீடு..
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் நெல்லையைச் சேர்ந்த செல்வி. சூடாமணி எழுதிய எம்மண்ணின் நட்சத்திரங்கள் என்ற கட்டுரை நூல் திறனாய்வு செய்யப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஆதிமூலம் மற்றும் இணைச் செயலாளர் செண்பகக் குற்றாலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். பொருளாளர் தண்டமிழ் தாசன் பா.சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலாசிரியர் செல்வி. சூடாமணி சிறந்த திறனாய்வு செய்த 10 நபர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். தமிழ் ஆசிரியர் சங்கர சுப்பிரமணியன் எழுத்தாளர் […]
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடலை நல்லடக்கம் செய்த தமுமுகவினர்..
புளியங்குடி பகுதியில் ஆதரவற்றவரின் உடல் தமுமுக-காவல்துறை இணைந்து நல்லடக்கம் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அடையாளம் தெரியாத நபர் நோய்வாய்ப்பட்டு இருப்பதாக தகவல் வந்ததன் அடிப்படையில் அவரை மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. தென்காசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததன் அடிப்படையில், அவரின் உடலை திருநெல்வேலி சவக்கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்தவரின் […]
சாலை விபத்தில் உயிரிழந்த வீரவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிதியுதவி..
சாலை விபத்தில் உயிரிழந்த திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து ரூ.25 இலட்சம் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பையா (வயது 57) என்பவர் கடந்த 21.10.2024 அன்று பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக திருநெல்வேலி […]
தென்காசி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி; மாவட்ட கலெக்டர் துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் துவக்கிவைத்தார். தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு செந்தில் ஆண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (25.10.2024) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புத்தாக்க மேம்பாட்டு திட்ட பயிற்சி 3.0 ஆசிரியர் பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், முன்னிலையில் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் […]
போக்சோ எனும் என்கவுண்டர்; கருணையாளர்கள் காக்கப்பட வேண்டும்-சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர் பூ.திருமாறன்..
சகித்துக் கொள்ள முடியாத ஒருவருக்கு முடிவு கட்டவோ, தற்காப்புக்காகவோ, தப்புவதை தடுக்கும் போதோ என்கவுண்டர் நடைபெறுகிறது. எனினும் தவறான என்கவுண்டரில் இருந்து கருணையாளர்கள், சமூக சேவை புரிபவர்கள் காக்கப்பட வேண்டும் என்ற அழுத்தமான சிந்தனையை முன் வைக்கிறார் தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டியை சேர்ந்த சமூக நல ஆர்வலர் பூ.திருமாறன். இது குறித்து அவர் விவரித்துள்ளதாவது, அமைதி, ஒழுக்கம், அப்பழுக்கற்ற அன்பு நிறைந்திருந்த நம் முன்னோர்கள் வாழ்ந்த பூமியின் இப்போதைய நிலை மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. யுத்த சப்தம், […]
முதலியார்பட்டி அரசு பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே.ஜெயபாலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கினார். பள்ளி தலைமை ஆசிரியை முத்துலட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, திமுக ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அகமது, கிளைச் செயலாளர் நவாஸ் கான், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் அலாவுதீன், தென்பொதிகை […]
மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாப்போம்; மஜக மாநில துணைச் செயலாளர் நெல்லை பிலால் அறிக்கை..
நெல்லை மாவட்டத்தில் மாணவ சமூகத்தின் எதிர்கால நலனை பாதுகாக்க பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், அரசியல் தலைவர்கள், சமூக நல அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் துணை நிற்பது அவசியம் என மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் அலிஃப் பிலால் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தனியார் பள்ளி மாணவர்களின் சமூக வலைதள பதிவின் காரணமாக ஏற்பட்ட மோதல், மாணவர்களுக்கிடையே பகையை உருவாக்கி இதில் ஒரு […]
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள்; தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்தனர்..
தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.இராமச்சந்திரன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்கள். தென்காசி மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களை இன்று (23.10.2024) மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் […]
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி; சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை..
ஆன்லைனில் பட்டாசு விற்பனை எனும் பெயரில் மோசடி நடைபெறுவதாகவும், இது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆன்லைனில் நடைபெறும் இந்த மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளதாவது, இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் தள்ளுபடி விலையில் பட்டாசுகள் விற்பனை செய்வதாகக் கூறி, இந்த பண்டிகை காலத்தை பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகின்றனர். இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் பேஸ்புக் […]
தென்காசி மாவட்டத்தில் நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனர்; மாவட்ட எஸ்.பி நேரில் அழைத்து பாராட்டு..
தென்காசி மாவட்டத்தில் கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நேர்மை மிக்க ஆட்டோ ஓட்டுனரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டி பரிசு வழங்கி கெளரவித்தார். தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சக்திவேல். இவர், கடந்த 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க செயினை எடுத்து உரிய முறையில் ஊத்துமலை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பேச்சியம்மாள் […]