தென்காசியில் ஜாக்டோ ஜியோ சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டத்தில் ஜாக்டோ ஜியோ சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதிய பேருந்து நிலையம் வரை பேரணியாக வலம் வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த […]
Category: மாநில செய்திகள்
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -28 (கி.பி 661-750) வலீத் இப்னு அப்துல் மலீக் அவர்களின் ஆட்சியில் மிகுந்த செல்வாக்குடன் இருந்த ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்கள் ஈராக்கின் கவர்னராக இருந்தார்.தனது செல்வாக்கால் உமையாக்களின் கிழக்கு எல்லை முழுமையிலும்(ஆப்கானிஸ்தான் ,இந்தியா, இலங்கை) தனதுஅதிகாரத்தைசெலுத்தினார். இலங்கையிலிருந்துஹஜ் செய்வதற்காகபெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு குழுவும், ஹஜ்ஜாஜ் இப்னு யூசுப் அவர்களுக்குஇலங்கை மன்னர் இடமிருந்து ஏராளமான பரிசு பொருட்களுமாக எட்டுக்கப்பல்கள் அரபிக்கடலில் மிதந்து சென்றன. சிந்துப்பகுதியின் […]
கீழக்கரையில் உங்களை தேடி, உங்கள் ஊரில் புதிய திட்டம் ! மாவட்ட ஆட்சியர் மக்களை நேரில் சந்திப்பு !!
தமிழ்நாடு முதலமைச்சர் உங்களை தேடி, உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின் படிக்க ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், “உங்களை தேடி உங்கள் ஊரில்” […]
ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள்; பொருநை இலக்கிய வட்டத்தில் கவிஞர் பேரா பேச்சு..
திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் […]
யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரானது!- எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்..
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; அரசியலமைப்பு உரிமைகளின் நெறிமுறைகளுக்கு எதிரான யுஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் குறித்து எஸ்டிபிஐ கட்சி தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துவதோடு, அதற்கெதிராக தனது கண்டனத்தையும் பதிவுசெய்கிறது. உயர்கல்வி நிறுவனங்களில் (HEIs) எஸ்.சி., எஸ்.டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான காலியிடங்களை குறைப்பதற்கும், போதுமான இடஒதுக்கீடு பிரிவு விண்ணப்பதாரர்கள் கிடைக்கவில்லை என்றால், அந்த காலி பணியிடங்களை பொதுப் பிரிவின் கீழ் நிரப்புவதற்கும் பல்கலைக்கழக மானியக் […]
திருவண்ணாமலை, செங்கம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது .
திருவண்ணாமலை, செங்கம் பாரத சாரண சாரணிய இயக்கத்தின் சார்பில் எஸ்.கே.வி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் பள்ளி சாரண சாரணிய மாணவர்களுக்கு இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் நடைபெற்றது . மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அறிவுறுத்தலின்படி மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ஆலோசனையன் படியும் இராஜ்ய புரஸ்கார் தேர்வு முகாம் மூன்று நாட்கள் நடைபெற்றது. முகாமினை எஸ் கே வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் மணி முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது செங்கம் சாரண […]
சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. […]
பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது..
பணியின் போது வாகன விபத்தில் உயிரிழந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு விபத்து காப்பீட்டு தொகை ரூ.78,00,000/- வழங்கப்பட்டது.. மதுரை தெற்குவாசல் போக்குவரத்து காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக முருகன் (52) என்பவர் பணியாற்றி வரும் நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹாரம் விழா நடைபெறுவதால் திருப்பரங்குன்றம் ஆர்ச் அருகே அன்று இரவு 7.40 மணியளவில் போக்குவரத்தை நெரிசலின்றி சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது நகர பேருந்து மோதியதில் […]
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்..
மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் சாலை மறியல்.. பழைய ஓய்வு திட்டத்தை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரா செல்வம் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், 2003 க்கு பிறகு அரசு […]
திருப்பரங்குன்றம் பெரியரத வீதியை திடீரென இரு புறமும் அடைத்து ஒரு வழி பாதையாக மாற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..
திருப்பரங்குன்றம் பெரியரத வீதியை திடீரென இரு புறமும் அடைத்து ஒரு வழி பாதையாக மாற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.. திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் பெரிய ரத வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறி உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை திடீரென இருபுறமும் போக்குவரத்து துறை சார்பில் எந்த ஒரு வாகனங்களுக்கும் அனுமதி இல்லை என முன்னறிவிப்பின்றி பாதை அடைக்கப்பட்டது. இதனால் கோவில் சுற்றி உள்ள உள்ளூர் மக்கள் மற்றும் கடை வியாபாரிகள் இருசக்கர […]
எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு..
எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினருக்கான அடையாளம் என ராமநாதபுரம் கலெக்டர் பேச்சு.. எல்லோரும் சேர்ந்து வாழ்வதே சிறந்த சமுதாயத்தினர் அடையாளமாக திகழும் என ராமநாதபுரத்தில் நடந்த மனிதநேய வார விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேசினார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (30.01.2024) மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வார விழா நிறைவு விழா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தலைமையேற்றார். மனிதநேய வார விழா போட்டிகளில் […]
இராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்..
இராமநாதபுரத்தில் போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நலச் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.. இராமநாதபுரம், ஜன.30 – தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது. தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வைத்தார். காரைக்குடி மண்டல துணைத்தலைவர் மணிக்கண்ணு, நிர்வாகிகள் விஜயபாண்டி, சாத்தையா, மனோகரன் ஆகியோர் பேசினர் புறநகர் கிளை […]
பார்த்திபனூர் அருகே ரேசன் பெருள் கடத்திய இருவர் கைது
இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் நான்கு ரோடு சந்திப்பில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனை ஈடுபடும் பொழுது. சந்தேகப்படும்படி வந்த (TN59 BX 5584 ) என்ற சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் 25 மூட்டைகளில் சுமார் 750 கிலோ ரேசன் துவரம் பருப்பு கண்டறியப்பட்டது. அதை கடத்தி வந்த இரு நபர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் விருதுநகர் மாவட்டம் […]
மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் வடமாநில ஊழியரை அதிரடியாக பணிநீக்கம் செய்த நிர்வாகம்..
மதுரை விமான நிலையத்தில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலித்த விவகாரத்தில் வடமாநில ஊழியரை அதிரடியாக பணிநீக்கம் செய்த நிர்வாகம்.. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்கு இருந்த டோல்கேட்டில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்று வெளியிட்டு இருந்தார் இது குறித்து இன்று காலை விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் விமான நிலைய இயக்குனரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளதாகவும் அவர் நடவடிக்கை […]
சட்டவிரோத புகையிலை பொருட்கள்; பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..
சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த K. ரெட்டியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்கல் பேட்டை […]
வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடி சென்ற ஈரான் நாட்டை சேர்ந்தவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர்..
வெளிநாட்டு கரன்சிகளை மாற்றுவதாக கூறி வெளிநாட்டு பணத்தை திருடி சென்ற ஈரான் நாட்டை சேர்ந்தவரை கைது செய்த தனிப்படை காவல்துறையினர்.. 3 ஆண்டுகளாக இந்தியாவில் ஆதார், பான்கார்டு வாங்கி பயன்படுத்தி சட்டவிரோதமாக சுற்றி திரிந்து வெளிநாட்டு பணத்தை திருடி வந்தது விசாரணையில் அம்பலம். மதுரை மாநகர் நேதாஜிரோடு பகுதியில் உள்ள SRS Forex என்ற நிறுவனத்தில் வெளிநாட்டு கரன்சி மாற்றுவது போல் நடித்து அங்கிருந்து வெளிநாட்டு பணம் திருடி சென்றதாக கடந்த 26 ஆம் தேதி மதுரை […]
அதிமுக முன்னாள் அமைச்சரின் பிடியில் பரவை பேரூராட்சி: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு..
அதிமுக முன்னாள் அமைச்சரின் பிடியில் பரவை பேரூராட்சி: நாடாளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என, திமுக கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு.. ஆளும் கட்சியாக திமுக இருந்தும் முழுமையாக அதிமுக பிடியில் சென்று விட்ட பரவை பேரூராட்சியில், எதிர் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வாக்கு வங்கி பாதிப்பை ஏற்படுத்தும் என, பேரூராட்சியைச் சார்ந்த திமுக கவுன்சிலர்கள் நேரடியாக குற்றம் சாட்டியுள்ளனர். எப்படியாவது இந்த தகவலை தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில், […]
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் X தலத்தில் பதிவு..
மதுரை விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் X தலத்தில் பதிவு.. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள தோல்வியுற்றில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் பார்க்கிங்கிற்கு கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது. இந்த நிலையில் இது குறித்து மதுரை எம்பி சு வெங்கடேசன் தனது X தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: மதுரை விமானநிலையத்தில் பார்க்கிங் […]
மதுரை விமான நிலையத்தில் டோல்கேட்டில் உள்ள வட மாநில ஊழியர்கள் கூடுதல் பணம் வசூல் குறித்து; எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்..
மதுரை விமான நிலையத்தில் டோல்கேட்டில் உள்ள வட மாநில ஊழியர்கள் கூடுதல் பணம் வசூல் குறித்து; எம்பி மாணிக்கம் தாகூர் ட்வீட்.. மதுரை விமான நிலையத்திற்கு நேற்று வந்த பயணி ஒருவரிடம் அங்குள்ள டோல்கேட்டில் வேலை செய்யும் தனியார் வட மாநில ஊழியர் கூடுதல் பணம் கேட்பதாக அந்த பயணி காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார் இது வைரலானது. *இந்த நிலையில் இது குறித்து விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் தனது X தலத்தில் பதிவிட்டுள்ளதாவது:* இந்த […]
கேலோ இந்தியா வாலிபால் போட்டி!தமிழக அணியில் முதல் இடம் பிடித்த சித்தார்கோட்டை பள்ளி மாணவருக்கு பாராட்டு..
கேலோ இந்தியா வாலிபால் போட்டி! தமிழக அணியில் முதல் இடம் பிடித்த சித்தார்கோட்டை பள்ளி மாணவருக்கு பாராட்டு.. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில், இளைஞர் நலன், விளையாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜன.19 ல் தொடங்கி வைத்தார். இதில் நடந்த ஆடவர் வாலிபால் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி ஹரியானா அணியை வீழ்த்தி கோப்பை வென்றது. தமிழக அணியில் ராமநாதபுரம் மாவட்டம் சித்தார் […]
You must be logged in to post a comment.