திருப்புல்லாணி வேளாண் துறை சார்பாக விவசாயிகளுடன் கலந்துரையாடல் !

இராமநாதபுர மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் மாநில விரிவாக்க திட்டம் இணைந்து சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் என்ற தலைப்பில் சமுதாய அறிவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் விவசாயிகளை அழைத்து வரப்பட்டு விவசாயிகளுக்கு சமுதாய அறிவியல் கல்லூரி இணை பேராசிரியர் கலைச் செல்வன் தலைமை வகித்து பேசுகையில் : விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் விளைப் பொருட்களில் அறுவடைக்கு பின் ஏற்படும் சேதத்தினை தவிர்க்க, பல்வேறு புதிய தொழில் நுட்பங்களை […]

பாம்பன் புதிய கட்டுமான பணியின் ராட்சத இரும்பு கிரேன் முறிந்து இருவர் காயம் !

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் பால கட்டுமான பணியினை குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள், கடந்த சில மாதங்களாக விரைவு படுத்தப்பட்ட நிலையில் கப்பல்கள் செல்லும் வகையில் பாலத்தின் நடுவே தூக்குப் பாலம் அமைக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த தூக்குப் பாலத்தினை தாங்கி நிற்ககூடிய தூண்கள் அமைக்கும் பணி ஒரு புறம் முடிந்த நிலையில், தற்போது மறுபுறம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ராட்சத […]

ராமேஸ்வரம் கோவில் உண்டியல் வருமானம் ! ரூ.1.58 கோடி உண்டியல் வசூல் !! லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் !!!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ.1.58 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. கடந்த மாதம் 6ந்தேதி உண்டியல் எண்ணப்பட்ட போது 1.51 கோடி கிடைத்திருந்த நிலையில் 24 நாட்களில் மீண்டும் உண்டியல் வசூல் கோடியை தாண்டியுள்ளது. பொங்கல் பண்டிகை மற்றும் குடியரசு தின விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் வருகை அதிகரித்ததால் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்தினர். கோவில்களில் […]

அரசின் விசாரணை ஏஜென்சிகளால் எதிர்க்கட்சிகளை ஒடுக்கிஎதிரிகள் இல்லாத தேர்தலை எதிர்கொள்வது தான் பாஜகவின் குறிக்கோள்! – எஸ்டிபிஐ கடும் கண்டனம்..

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் இலியாஸ் தும்பே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டிருப்பது, வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் சங்பரிவாரின் சமீபத்திய திட்டமிட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாட்டின் சட்டத்தை மீறுபவர்கள் மீது கட்சிகளைக் கடந்து வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த […]

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று காலை முதல் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.பிறநாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்பினர் இந்தியாவில் ஊடுருவல் செய்துள்ளனரா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை, கோவை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.கோவை ஆலாந்துறை ஆர் ஜி நகரில் ரஞ்சித் என்பவரது வீட்டில் காலை 6 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.தடை […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -32 (கி.பி 661-750) உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணித்தபிறகு அடுத்த உமைய்யா ஆட்சியாளராக யஜீத் இப்னு அப்துல் மலீக் அவர்கள் பொறுப்பேற்றார். உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் அற்புதமான ஆட்சியின் தாக்கத்தால் அவர்களைப்போலவே இவரும் தனது ஆட்சியின் ஆரம்பகாலங்களை துவக்கினார். உமர்இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களை நினைவு கூறும் வகையில், அவர்களின் நற்செயல்கள் பேசப்பட்டன. தினசரி ஊதியமாக இரண்டு திர்ஹம்களையே […]

கல்லா கட்ட யாரும் வராததால் எடப்பாடிக்கு தேர்தலில் வேலை இல்லை!ஓபிஎஸ்க்கே வெற்றி கிடைக்கும்; அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி..

கல்லா கட்ட யாரும் வராததால் எடப்பாடிக்கு தேர்தலில் வேலை இல்லை!ஓபிஎஸ்க்கே வெற்றி கிடைக்கும்; அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேட்டி.. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் 73வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் அவரது ஆதரவாளரான உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். முன்னதாக எம்எல்ஏ ஐயப்பன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். தொடர்ந்து கோவில் திருவாச்சி […]

குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம்

மதுரை சுகாதார துணை இயக்குனர் அலுவலகமும் சாத்தி தொண்டு நிறுவனமும் யுஎஸ்எய்ட் மொமன்டம் .குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும் அதனை தொடர்ந்து இன்றுஜம்புரோபுரம் HWC, நரிமேடு UPHC,நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், நகர் புற நலவாழ்வு மையத்திலும் குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தாய்மார்கள் தங்கள் குழந்தையுடன் வந்து தடுப்பூசி செலுத்திவிட்டு சென்றனர் .குழந்தைகளுக்கான தடுப்பூசி முகாம் நடக்கும் இடத்தை நேரடியாக சாத்தி தொண்டு நிறுவனத்தின் மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் பார்வையிட்டார் […]

ராமநாதபுரத்தில் அதிமுக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் மாவட்டம் பாரதி நகர் அருகில் அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் மருது பாண்டியன் முன்னிலையில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதி மகன் மருமகள் இருவரும் சேர்ந்து பட்டியலின பெண்ணை கையில் சூடு வைத்து கொடுமைப்படுத்திய சம்பவத்தில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், திமுக எம்பி ஆ. ராசா முன்னாள் முதல்வர் எம்ஜிஆரை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்ததை கண்டித்தும், […]

திருச்செந்தூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்”திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததை தொடர்ந்து,திருச்செந்தூர் அ/மி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வளாக நுழைவு வாயில் அருகில் உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் செயல்படும் ஆவின் பாலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி ஆய்வு செய்து பொது மக்களுக்கு வழங்கப்படும் பாலின் தரம் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர்களுடன் சோதனை செய்தார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குருச்சந்திரன் ,ஆவின் பொது மேலாளர் ஆகியோர் உடன் […]

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது..

மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் நடைபெற்றது.. கட்சியின் கொள்கை விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு தமிழ் முன் அன்சாரி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ததாக திருவத்தினர். பிப்ரவரி 28 இல் சென்னையில் பிரம்மாண்ட மக்கள் திரள் பொதுக்கூட்டம் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு வாரத்தில் அமல்படுத்துவோம் என்ற ஒன்றிய அரசு இணை அமைச்சரின் பேச்சை இப்போது குழு வன்மையாக கண்டிக்கிறது என்று தெரிவித்துள்ளனர். மீண்டும் […]

பாம்பன் மீனவர்கள் 18 பேர் விடுதலை! மன்னார் நீதிமன்றம் உத்தரவு!!

ராமநாதபுரம்  மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த  16 ந்தேதி மீன்பிடிக்க சென்று மன்னார் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு வவுனியா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 18 மீனவர்களின்  வழக்கு இன்று மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது மன்னார்  மீன்வளத்துறை அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததால்  மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்து மன்னார  நீதிமன்ற நீதிபதி தீர்பளித்தார். இதனையடுத்து பாம்பன்   மீனவர்கள் 18 பேரும் யாழ்பாணத்தில் உள்ள […]

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை ஏமாற்றி விட்ட ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை-! சா.அருணன் சாடல்..

2024 ஆண்டிற்கான ஒன்றிய அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தனிபர் வாருமானவரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை என்ற அறிவிப்பும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான அறிவிப்பும் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றம் – தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் – நிறுவனத் தலைவர் – சா.அருணன் – அறிக்கை. 2024ம் ஆண்டிற்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை இன்று ஒன்றிய நிதி அமைச்சர் மாண்புமிகு நிர்மலா சீத்தாராமன் அவர்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் […]

ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவரின் சேவை ! பாராட்டிய பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் !!

 ராமேஸ்வரம் திருக்கோவிலில் வெளியில் யாசகம் ( பிச்சை )எடுத்துக் கொண்டிருந்த செல்லமுத்து வயது 63 என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு சிறுநீர் வெளியே செல்லாமல் அவதிப்பட்டு இருந்த நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனை செய்வதற்கு சென்றுள்ளார் . அவரை மருத்துவர் பரிசோதனை செய்த பொழுது உடலில் இருந்து நீர் செல்லும் பகுதியில் கற்கள் அடைப்பு இருப்பதை கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரிடம் கூறியுள்ளனர்.  அவர் […]

அதிமுக ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் உடனடியாக பேனர்களை அகற்ற சொன்ன போலீசார்; அதிமுகவினர் அதிருப்தி..

அதிமுக ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் உடனடியாக பேனர்களை அகற்ற சொன்ன போலீசார்; அதிமுகவினர் அதிருப்தி.. மதுரை மாவட்டம், சோழவந்தானில் திமுக அரசை கண்டித்து ,மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, சோழவந்தான் பேருந்து நிலைய வளாகத்திற்குள் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கி 11:30 மணி அளவில் நடைபெற்று முடிந்தது. ஆர்ப்பாட்டம் […]

சோழவந்தானில், திமுக அரசை கண்டித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில்கண்டன ஆர்ப்பாட்டம்..

சோழவந்தானில், திமுக அரசை கண்டித்து, முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.. பட்டியலிபெண் மீது, வன்கொடுமை ஏவி கொடூர தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சார்பில் தமிழக முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், சோழவந்தான் பேருந்து நிலையத்தில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. […]

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை..

சோழவந்தானில் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள மின்கம்பங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.. மதுரை மாவட்டம் சோழவந்தானில் பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு புதிய பேருந்து நிலையத்தை கடந்த ஜனவரி 6ஆம் தேதி காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் இந்த நிலையில் பேருந்து நிலையம் எந்த நோக்கத்திற்காக திறக்கப்பட்டதோ அந்த நோக்கம் தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது குறிப்பாக சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டிய பேருந்துகள் பல்வேறு இடர்பாடுகளால் பேருந்து […]

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..

திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரத்தில் அதிமுக ஆர்ப்பாட்டம்..  பட்டியலின பெண் மீது வன்கொடுமை தாக்குதலில் ஈடுபட்ட பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதி மகன், மருமகள் ஆகியோரிடம் நேர்மையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் பாரதி நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதிமுக மாவட்ட செயலர் எம்ஏ முனியசாமி தலைமை வகித்தார். ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் எம். அசோக்குமார் வரவேற்றார். […]

நம்ம மேட்டுப்பாளையத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு திட்டம் உங்களைத் தேடி உங்கள் ஊரில்

கோவை மாவட்டம் மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு திட்டம் இன்று செயல்பட்டு வருகிறது கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் அனைவரும் இன்றும் நாளையும் மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி இருந்து பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதுடன் நேரடியாக அனைத்து அரசுத்துறை அலுவலகங்களையும் ஆய்வு செய்து அங்குள்ள குறைகளை சரி செய்து தருவதற்காக முகாமிட்டுள்ளார்கள் நிகழ்ச்சியின் துவக்கம் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் இன்று காலை 9 […]

தவறவிட்ட செல்போனை முப்பது நிமிடத்தில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை..

கடையநல்லூர் பகுதியில் தவறவிட்ட செல்போனை 30 நிமிடத்தில் காவல்துறையினர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் என்பவரின் மகன் துரைராஜ். இவர் சொந்த வேலை காரணமாக இருசக்கர வாகனத்தில் கடையநல்லூர் வந்த போது வழியில் அவரது செல்போன் தவறி கீழே விழுந்தது தொலைந்து விட்டதாகவும், தொலைந்த செல்போனை மீட்டுத் தருமாறும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜா […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!