உங்களில் ஒருவனான நானும் சூளுரை ஏற்கிறேன்!-அண்ணா வழியில் அயராது உழைப்போம்! ஆதிக்க ஒன்றிய அரசை அகற்றியே தீருவோம்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

“அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம்…” – உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்! மக்களிடம் செல் என்றார் பேரறிஞர் அண்ணா. உங்களில் ஒருவனான நான் அதை வழிமொழிவதுடன், ‘மக்களிடம் செல் மக்களிடம் சொல்’ என்று ஒவ்வொரு உடன்பிறப்பையும் கேட்டுக்கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்.. அண்ணா வழியில் அயராது உழைப்போம் என்பதே முத்தமிழறிஞர் கலைஞர் வழங்கிய ஐம்பெரும் முழக்கங்களில் முதல் முழக்கம். அதனை முன்னெடுத்து, அயாராது உழைத்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்தியா […]

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு..

இராயப்பன்பட்டி சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா:அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்பு.. தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா இராயப்பன்பட்டியில் சவரியப்ப உடையார் நினைவு மேல்நிலைப்பள்ளி வைரவிழா சிறப்பாக நடைபெற்றது .இதில் சிறப்பு விருந்தினராக தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி வளாகத்தில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை திறந்து வைத்து உரையாற்றினார்.அவர் பேசும் போது, இந்த முக்கியமான ஒரு வரலாற்று மைல்கல் […]

இஸ்லாமிய சிம்மாசனங்கள்…!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..! பகுதி -1 கப்ளிசேட் உமைய்யாக்களின் பேரரசு -34 (கி.பி 661-750) கவர்னர் அஸ்ரஸ் ஒரு பைத்திய காரத்தனமான உத்தரவை பிறப்பித்தார். முஸ்லீம்களாக மாறிய மக்கள் கத்னா செய்திருக்கிறார்களா தொழுகிறார்களா, குர்ஆன் ஓதுகிறார்களா என்று சோதித்து சரியாக இவைகளை செய்யவில்லை எனில் அவர்களிடம் ஜிஸ்யா வரியை வசூலிக்க உத்தரவிட்டார். அதிகாரிகளின் அராஜகங்களால், சோதனை அழுத்தங்களால், நிறைய மக்கள் மீண்டும் காஃபிர்களாக மாறினர். உமைய்யா அரச குடும்பத்தினர் மிகுந்த அராஜகத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்களை கண்டு கொள்ளவில்லை. […]

முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?”

“முழுநேர நேரடி, நேர்மை அரசியலை மேற்கொண்டால் நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு வெற்றிக்கனியை பரிசளிக்கும், அல்லது…?” திரைப்பட நட்சத்திர இயக்குனரின் மகன் என்கிற அடையாளத்தோடு திரையுலகில் அடிபதித்து, தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி, தனது திறமைகளை படிப்படியாக வளர்த்துக் கொண்டு, இளம் தலைமுறையினரின் மனதில் “இளைய தளபதி”, “தளபதி” என “விஸ்வரூபம்” எடுத்தவர், பல ஆண்டுகளுக்கு முன்பே தனது பெயரிலேயே மக்கள் இயக்கத்தை தொடங்கி அதன் மூலம் தொடர்ந்து பல்வேறு நிவாரண உதவிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும் […]

சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு..

சிறப்பாக செயல்பட்டதாக விசிகவின் திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல் திருமாவளவன் பாராட்டு.. வெள்ளிக்கிழமை (2.02.2024) அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சென்னை தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சிப் பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டதாக திண்டுக்கல் மாநகர் மாவட்ட செயலாளர் க.மைதீன் பாவா வுக்கு தொல். திருமாவளவன் பாராட்டு சான்றிதழ் […]

விஜய் தொடங்கிய கட்சியில் கழகம் என்று இருப்பது தி.மு.க., அ.தி.மு.க கட்சிகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் போட்டு கொடுக்கவில்லை. கழகம் என்பது ஓர் கூட்டமைப்பிற்கு கூறப்படும் சொல்; சீமான் கருத்து..

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய அரசியல் கட்சியில் திராவிடம் என்ற சொல் இல்லாததே மகிழ்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை பதிவு செய்துள்ளார். இதன்மூலம் தனது அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்க்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றனர். அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் நடிகர் விஜய்யின் இந்த செயல் குறித்து கருத்து […]

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி! நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அறிக்கை..

என்னைப் பொறுத்த வரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: “‘விஜய் மக்கள் இயக்கம்’பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர […]

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

கோவில் கும்பாபிஷேகத்திற்கு மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இஸ்லாமிய ஜமாத்தார்களுக்கு அழைப்பிதழ் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கலை முத்தூர் ஸ்ரீ ஜகோர்ட் பத்ரகாளியம்மன் கோயிலில் வருகின்ற 15- 2 -2024 -ஆம் அன்று 12 வருடங்களுக்குப் பின்பு மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பத்திரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் நடைபெறும் திருவிழாவில் ஜல்லிக்கட்டு மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் […]

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் அறிவிப்பு !

இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த 2023-ம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த இரண்டாம் நிலை காவலர் (ஆண் மற்றும் பெண்) சிறைக்காவலர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற 737 ஆண் விண்ணப்ப தாரர்களுக்கு இராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்திறன் மற்றும் உடற்தகுதித் தேர்வு வருகின்ற 06.02.2024-ஆம் தேதி முதல் காலை 06.00 மணிக்கு நடைபெறவிருக்கிறது. உடற்திறன் , சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதித் தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் […]

இராமநாதபுரத்தில் 6-வது புத்தக திருவிழா ! பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மாணவ, மாணவியர்கள் புத்தகங்களை நேசிக்க வேண்டுகோள் !!

இராமநாதபுரம் மாவட்டம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலை இலக்கிய ஆர்வலர்கள் சங்கம் இணைந்து நடத்திய 6வது புத்தக திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தனர்.துவக்க நாள் நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் காணொளிக்காட்சி வாயிலாக பங்கேற்று விழாப்பேருரை வழங்கினார்அவர் கூறியதாவது :-இராமநாதபுரத்தில் 6வது புத்தக திருவிழா […]

என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வேதனை..

என் பெயரில் ஃபேக்(போலி) ஐடி உருவாக்கி பண மோசடி யாரும் நம்ப வேண்டாம்; பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேலராமமூர்த்தி வேதனை.. சமீப காலங்களில் சமூக வலைதளங்களில் வேறொரு புகைப்படம் மற்றும் விபரங்களைக் கொண்டு போலியாக ஐடி உருவாக்கி அந்த நபரின் நண்பர்களுக்கு அவரைப் போல குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டு ஏமாற்றும் மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல எழுத்தாளரும் நடிகருமான வேலராமமூர்த்தி நேற்று தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். தன் பிறந்த நாளுக்கு […]

கடையம் ஒன்றியத்தில் பகுதிநேர ரேஷன் கடைகள் வேண்டும்; மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை அமைத்திட வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன் தமிழக அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட திமுக செயலாளர் வே. ஜெயபாலன், தமிழக உணவு (ம) உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணியை நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ராஜாங்கபுரம், வாகைக்குளம், பாப்பான்குளம், பெரியத்தெரு, […]

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணிமற்றும் கண் பரிசோதனை முகாம்..

மாபெரும் 35 வது சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாம்.. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 35 ஆவது சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு, மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு பேரணி மற்றும் கண் பரிசோதனை முகாமை, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆ.ஆறுமுகம் , தலைமையேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்கள், பின்பு அவர் பேசும் […]

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு..

வீட்டுமனை பட்டா வேண்டி முடி திருத்தும் தொழிலாளர்கள் வாடிப்பட்டி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு.. மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா முடி திருத்தும் தொழிலாளர்கள் மத்திய சங்கம் சார்பாக வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார்மூர்த்தியிடம் இலவச வீட்டு மனை பட்டா வேண்டி கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட துணை தலைவர் செல்வம், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன்,வாடிப்பட்டி நகர தலைவர் முத்துப்பாண்டி,நகரச் செயலாளர் கோபி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். […]

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 66,67,500 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட 66,67,500 ரூபாய் மதிப்பிலான 1 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்.. துபாயில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது துபாய் பயணி ஒருவர் உள்ளாடை மற்றும் ஜீன்ஸ் பேண்டிற்குள் பேஸ்ட் வடிவிலான 1 கிலோ 50 கிராம் தங்கம் கடத்தி […]

மதுரை அட்சய பாத்திரத்தின்1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா; திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பங்கேற்பு..

மதுரை அட்சய பாத்திரத்தின் 1,000 ஆவது நாள் உணவு வழங்கும் விழா; திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன் பங்கேற்பு.. மதுரையில் கொரோனா காலம் முதல், தற்போதுவரை ஆயிரம் நாட்களாக தொடர்ச்சியாக சாலையோரம் வசிக்கும் வறியோர், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஆதரவற்றோர்க்கு தினம்தோறும் மதுரையின் அட்சயப்பாத்திரம் மதிய உணவை வழங்கி வருகிறது. நேற்று ஆயிரமாவது நாளை முன்னிட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. அட்சய பாத்திரம் நிறுவனர் நெல்லை பாலு தலைமையில், திரைப்பட […]

16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி துபாய் விமானத்தில் மதுரை வந்தபோது கைது..

16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி துபாய் விமானத்தில் மதுரை வந்தபோது கைது.. மதுரை விமான நிலையத்திற்கு துபையில் இருந்து பயணிகள் விமானம் பிற்பகல் 11.45 மணிக்கு மதுரை வந்தது. அதில் வந்த பயணிகளின் விபரங்களை விமான நிலைய சுங்க இலாக மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில் மதுரை ஆத்தி குளம், மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரது மகன் மணிசங்கர் என்ற பயணியிடம் அவரது கடவுச்சீட்டை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்மீது மதுரை […]

கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் நாடாளுமன்ற தேர்தல் சிறப்பு பேரவை கூட்டம் !

கோவை மாவட்டம் தனியார் மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சிறப்பு பேரவை நடைபெற்றது. சிறப்பு பேரவையில் கலந்து கொண்ட தலைவர்கள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் இன்றிலிருந்து பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்து இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து இந்திய கூட்டணியை வெற்றி பெற அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர். மார்க்சிஸ்ட் […]

“உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மக்களின் குறைகள் மீது விரைவில் நடவடிக்கை; தென்காசி மாவட்ட கலெக்டர் உறுதி..

தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் ஆகியவற்றின் செல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் களஆய்வு மேற்கொண்டார். பின்பு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பொதுமக்கள் குறைகளின் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தை அறிவித்து அதில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் இனி ஒவ்வொரு […]

ராமேஸ்வரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம் ! நடிகர் விஜய்யின் புதிய கட்சி !!

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக குறிப்பாக தமிழக வெற்றிக்கழகம் என்று பிப்ரவரி 2ஆம் தேதி இன்று அறிவித்துள்ளார் இது அவரது மக்கள் இயக்க தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய் மக்கள் இயக்க தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் இணைந்து இன்று ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் பொது மக்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!