திருவாடானை தீயணைப்பு நிலையம் அருகே புதிய சாலை சேதமடைந்ததாக புகார்.

.   ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலத்தில் சேந்தினி செல்லும் சாலையில் பிரிவு சாலை சுமார் 200 மீட்டர் தூரத்தில் தீ அணைப்பு மீட்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. புதிதாக கட்டப்பட்ட இந்த நிலையத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது. அமைக்கப்பட்ட போதே தரமற்ற முறையில் அமைக்கப்பட்டதால் தற்போது ஆங்காங்கே சாலை முற்றிலும் சேதமடைந்து மண்சாலையாக மாறிவிட்டது.சாலை மோசமாக இருப்பதால் அவசர காலங்களில் பாதிப்பிற்குள்ளாகும் இடத்திற்கு  உரிய நேரத்தில் செல்ல இயலாத அவலநிலையுடன் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். […]

பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்.! போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.!!

*பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி அபராதம் விதிப்பு* கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்அதிக ஒலி எழுப்பக் கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்ட தனியார் பேருந்துகளில் இருந்து ஹாரன்களை அப்புறப்படுத்தி வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேட்டுப்பாளையம்  நிலையத்தில் அரசு மற்றும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் மற்றும் சவுண்ட் பாக்ஸ்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பேருந்துகளில் செல்லும் பயணிகளுக்கும் சாலைகளில் பொதுமக்கள் […]

காவல் உதவி ஆய்வாளர் பணிக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு..

தென்காசி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் அறிவித்துள்ளார். இது பற்றிய செய்திக் குறிப்பில், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையால் தென்காசி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், கதவு எண்:168, முகமதியா நகர் (எபினேசர் டைல்ஸ் பின்புறம்), குத்துக்கல் […]

ஆதரவற்ற மூதாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்கள்.. 

ஆதரவற்ற நிலையில் இறந்த மகமாயி பாட்டியின் உடலை இந்து முறைப்படி தகனம் செய்த இஸ்லாமிய பெண்களை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர். தென்காசி மாவட்டம் குற்றாலம் குடியிருப்பு பகுதியில் பசியில்லா தமிழகம் மூலமாக பெண்களால் பெண்களுக்காக நடத்தப்படும் ஆதரவற்ற முதியவர்களுக்கான கட்டணமில்லாத இல்லம், அன்னை பாத்திமா அலி அன்பு இல்லம் என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்த அன்பு இல்லத்தில் தென்காசி மாவட்டத்தைச் சார்ந்த ஆதரவற்ற பெண்கள் தங்க வைக்கப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு […]

சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீத்தொண்டு தியாகி நாள் அனுசரிப்பு..

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகளின் போது வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களின் தியாகத்தை போற்றும் விதமாக, ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீத்தொண்டு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தென்காசி மாவட்டம் சுரண்டை தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் நிகழ்ச்சி திருநெல்வேலி மண்டல துணை இயக்குனர் சரவணபாபு உத்தரவுபடியும், தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா ஆலோசனைப் படியும் அனுசரிக்க பட்டது. நிகழ்ச்சியில் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் போக்குவரத்து பாலசந்தர் தலைமையில் […]

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்ட திருத்தத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பொதுக் கூட்டம்..

ஒன்றிய அரசின் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து தென்காசியில் நடைபெற்ற கண்டன பொதுக் கூட்டத்தில், தென்காசி எம்பி மற்றும் எம்எல்ஏக்கள், நகர்மன்ற தலைவர்கள், அரசியல் கட்சிகளின் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சமூக நல அமைப்புகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று கண்டனத்தை பதிவு செய்தனர். தென்காசி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வக்பு சட்ட திருத்தத்தை எதிர்த்து கண்டன பொதுக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் தென்காசி கொடி மரத்திடலில் உலமா சபை மாவட்ட தலைவர் […]

நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் பொதுமக்கள் இறங்கத் தடை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலைய தடுப்பணை பகுதியில் நீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் நீர் நிலையில் இறங்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தின் அருகில் பவானி ஆற்றில் இருந்து திருப்பூர் குடிநீர் திட்டத்திற்காக தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது தடுப்பணையில் பொதுமக்கள் விளையாடியும் நீந்தியும் வருகின்றனர் நீரேற்று நிலையத்தின் பகுதி ஆழம் அதிகமாக உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது எனவே அசம்பாவிதம் ஏற்படா வண்ணம் தடுப்பணை பகுதியில் […]

மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலயத்தில் ஈஸ்டர் பண்டிகை.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சி.எஸ்.ஐ, தூய யோவான் ஆலய மக்கள் மேட்டுப்பாளையம் வீதிகள் வழியாக குருதோலைகளை கையில் ஏந்தி பவனி வந்தனர் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதன்கிழமை அன்று தொடங்கியது. தொடர்ந்து 7 வாரங்கள் கிறிஸ்தவ மக்கள் தவக்காலத்தை கடைபிடிக்கின்றனர் கிறிஸ்து உயிர்த்தெழுந்த பண்டிகைக்கு முந்தைய வாரம் குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுகிறது இந்த நாளில், கிறிஸ்தவ மக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தி பவனியாக சென்று தேவாலயங்களில் வழிபடுவது வழக்கம். […]

வேளாண் துறை மூலம் விழிப்புணர்வு  நிகழ்ச்சி.!

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றுக்கு உட்பட்ட உத்தரகோசமங்கை திருப்புல்லாணி உட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு அரசு வேளாண் துறையின் மூலம் விவசாயிகளுக்கு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகளுக்கு வேளாண் தொழில்நுட்ப பற்றி தெருக்கூத்து மூலம் விழிப்புணர்வு நடத்தினர். மேலும் விவசாயிகளுக்கு மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் அரசு நல திட்டங்களையும், அரசு வழங்கக்கூடிய விவசாய அடையாள அட்டைகளையும் பற்றி எடுத்துரைத்தனர் விவசாய அடையாள எண்ணை பெறுவதற்கு, தங்களுடைய ஆதார் அட்டை, ஆதார் எண்ணுடன் […]

சமூக நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக எச்சரிக்கை..!

ராமநாதபுரத்தில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தினர் இன்று மாநில அளவிலான செயற்குழு ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூறிய தேர்தல் வாக்குறுதிகளை இதுவரை ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருட காலங்களாகியும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற  தவறிவிட்டதாக திமுக அரசின் மீது குற்றச்சாட்டு வைத்தனர்.இதை கண்டித்து நடந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு, 40 ஆண்டுகளாக, 2,000 ரூபாய்தான் ஓய்வூதியம் தரப்படுகிறது. […]

திரு உத்தரகோசமங்கை ஆலயத்தில் 45 பவுன் நகை திருட்டு.!

திரு உத்தரகோசமங்கை ஆலய கும்பாபிஷேகத்தன்று கூட்ட நெரிசலை பயன்படுத்தி பக்தர்களிடம் சுமார் 45 பவுன் நகை திருட்டு; கொள்ளையர்கள் கைவரிசை செய்த அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி உள்ளது   ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகப் பிரசித்தி பெற்ற மங்களேஸ்வரி சமேத மங்களநாதர் ஆலய மஹா கும்பாபிஷேக விழா கடந்த நான்காம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது    இதில் தமிழக மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான […]

பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் புகார்..!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், ஓரிக்கோட்டை அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை செயல்பட்டு வருகிறது இங்கு 60 லட்சம் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வரும் இப்பள்ளிக்கு அதங்குடி, நெய்வயல், அல்லிக்கோட்டை, இளங்குன்றம், டி நாகனி, மாவிளங்கை, பூவாணி மற்றும் சாந்திபுரம், ஒரிக்கோட்டை சின்ன ஓரிக்கோட்டை சேந்தனி பல கிராமங்களில் உள்ள மாணவர்கள் இப் பள்ளியில் பயின்று வருகின்றனர். ஆனால், பள்ளிக்கு அருகே […]

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.!

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கருப்பு சட்டை அணிந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . அதனை தொடர்ந்து இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்டத் தலைவர் மற்றும் மாநிலத் துணைத் தலைவர் தினகரன் தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது பொது விநியோகத் திட்டத்தில் தனித்துறையை உருவாக்கிடவும் உணவுப்பொருள் அனைத்தையும் பொட்டலமாக வழங்கிடவும் எடை தெராசுடன் பி ஓ எஸ் மிஷின் […]

வக்பு சட்டம் திருத்த மசோதாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!

ராமநாதபுரம், ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்பபெறக் கோரி ராமநாதபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் சிறுபான்மை மக்களின் சொத்துக்களை பறிக்கும் விதமாக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு சட்டம் திருத்த மசோதாவை கண்டித்தும் இந்த சட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக்கோரியும் ராமநாதபுரம் போக்குவரத்து பணிமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். […]

ரயிலை மறிக்க முயன்ற விவசாயிகள் 500 பேர் கைது..!

ராமநாதபுரத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடத்த முயன்ற வைகை விவசாயிகள் சங்கத்தினர் 500 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கம் சார்பில் மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதற்காக ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஒன்று கூடிய 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் மழையால் நோய் பாதி கருகல் நோய் தாக்கி பாதிக்கப்பட்ட மிளகாய் செடிகளில் முளைத்த மிளகாய் வற்றல்களை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக ராமநாதபுரம் […]

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கைது..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே உள்ள ‘கட்டிவயல்’ ஊராட்சி தலைவராக முத்துராமலிங்கம் (45) என்பவர் கடந்த 5 வருடமாக ஊராட்சித் தலைவராக இருந்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில்  எட்டுகுடி கிராமத்தைச் சேர்ந்த துரைமாணிக்கம் (42) என்பவரிடம் தனது தேவைக்காக 3 லட்சத்து 50 ஆயிரம் கடனாக பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக காசோலை ஒன்றை கொடுத்து அந்த காசோலை மூலம் இரண்டு மாத காலத்திற்குள் பணத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று உறுதி அளித்துள்ளார். அதை நம்பிய […]

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா.!

முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் 45வது ஆண்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 வது ஆண்டு விழா  மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது  தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குனர் ஹமீது இப்ராஹிம், இயக்குனர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தூக்கத்தில் கல்லூரியின் வளர்ச்சி குறித்து உடற்கல்வி இயக்குநர் […]

நீலகிரிக்கு வருகை புரிந்த முதலமைச்சர்.! திமுகவினர் உற்சாக வரவேற்பு.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக நீலகிரி மாவட்டம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் உதகமண்டலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்தல் அதன்பின்னர் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் சிறப்புரையாற்ற உள்ளார் , தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது

முதலமைச்சர் உடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள் .!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகமண்டலம் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்கு குஞ்சப்பண்ணை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் காவல்துறை, தீயணைப்புத்துறை, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது வரவேற்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட முதலமைச்சர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் மகிழ்ச்சி ஆரவாரத்தினால் தனது பாதுகாப்பு வாகனத்திலிருந்து இறங்கி குழந்தைகளிடம் அன்பாக பேசி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார் குழந்தைகள் மகிழ்ச்சி பொங்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் […]

ராமேஸ்வரத்திற்கு வருகை புரியும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை அறிவிப்பு.!

இந்தியப் பிரதமர் வருகின்ற ஏப்ரல் 06, 2025 அன்று  இராமேஸ்வரத்திற்கு வருகை தருவதை முன்னிட்டு காலை 11.00 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை இராமநாதபுரத்திலிருந்து இராமேஸ்வரம் (NH) செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால்  இராமேஸ்வரத்திற்கு வரும் வாகனங்கள் குறித்த நேரத்தில் அனுமதி கிடையாது என்றும் இராமேஸ்வரம் நகரத்திற்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வண்ணம் வாகனங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும் அவசர சேவைகள் எதுவும் பாதிப்பு ஏற்படாது என்றும் மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனை கருத்தில் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!