கீழக்கரையில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது.! சட்டவிரோதமாக செயல்படும் நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எஸ்பி அறிவிப்பு.!!

இராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டவிரோதமாக நடைபெறும் கடத்தல்கள் குறித்து தீவிர நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல்துறையினருக்கு  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் 11.07.2025-ம் தேதி அன்று சட்டவிரோத போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக கீழக்கரை சார்பு ஆய்வாளர் தலைமையில் குழு ரோந்து மேற்கொண்டபோது கீழக்கரை தாசிம்பீவி மகளிர் கல்லூரி அருகே சங்குளிகார தெருவை சார்ந்த செய்யது கருணை மகன் முகைதீன் ராசிக் அலி என்பவர் சந்தேகிக்கும்படி நின்று கொண்டிருந்த அவரை சோதனை செய்தபோது அவரிடமிருந்து சுமார் […]

மேட்டுப்பாளையம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தை ஆய்வு  மேற்கொண்ட ரயில்வே கோட்ட மேலாளரிடம் சி ஐ டி யு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் சேலம் ரயில்வே கோட்ட மேலாளராக ஸ்ரீபன்னா லால் ஆய்வில் ஈடுபட்டார். இவரிடம், ரயில்வே சம்பந்தமான கோரிக்கைகளை சிஐடியு பொதுத் தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை மனுவில் மேட்டுப்பாளையம்- கோவை இடையேயான பய ணிகள் ரயில் சேவையினை தினமும் ஏழு முறை இயக்க வேண்டும், கூட்ட நெரிசலை […]

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்: பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நுகர்வோர் நலச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், சங்கத் தலைவர் செய்யது இப்ராஹிம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024–2025 ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், கீழக்கரை நுகர்வோர் நலச்சங்கம் மாநில முகவரிப் பட்டியலில் இடம் பெற்றதை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் மற்றும் சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கூட்டத்தில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. முக்கிய தீர்மானங்கள்: 1. […]

திருவாடானை அருகே குடிநீர் குழாய் உடைப்பு: பல மாதங்களாகியும் நடவடிக்கை இல்லை!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பல இடங்களில் குடிநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு மாதக்கணக்கில் குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். திருவாடானையில் இருந்து பாண்டுகுடிக்கு பாரதிநகர் பகுதியில் இருந்து குடிநீர் நீரேற்றம் செய்யப்படுகிறது. இந்தக் குடிநீர் குழாய் திருவாடானை, பண்ணவயல், எல்.கே. நகர், அஞ்சுகோட்டை, வாணியேந்தல், டி. கிளியூர் வழியாகச் செல்கிறது. இதில் எல்.கே. நகர் பகுதியில் […]

அடிப்படை வசதிகள் இல்லாத திருவாடானை சந்தை ரூ. 65 லட்சத்திற்கு ஏலம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான வாரச் சந்தை, போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலேயே ரூ. 65.11 லட்சத்திற்கு 2025-26 ஆம் ஆண்டிற்கான ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இந்தச் சந்தை மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வணிக மையமாக இருந்தாலும், மின்சார வசதி, கொட்டகைக் கட்டிடம், கழிப்பறை, மற்றும் குடிநீர் வசதிகள் போன்ற அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வருகிறது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, மழைக் […]

தொண்டி அருகே தென்னந்தோப்பில் தீ விபத்து: பத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நாசம்!

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி அருகே உள்ள படப்புவயல் கிராமத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை ஓரம் அமைந்துள்ள ஒரு தென்னந்தோப்பில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அபுல்ஹசம் என்பவரின் மகன் அக்பர்அலி (67) என்பவருக்குச் சொந்தமான இந்தத் தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், பத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் ஐந்துக்கும் மேற்பட்ட பனை மரங்களும் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் […]

திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.!

ராமநாதபுரம் அருகே பிரசித்தி பெற்ற திருப்புல்லாணி மாரியம்மன் ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வடக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ புல்லாணி மாரியம்மன் ஆலயத்தின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது கோவை ரவி சாஸ்திரி குருக்கள் தலைமையில் யாக பூஜைகள் துவங்கப்பட்டு சிறப்பு வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு துவங்கியது அதனை தொடர்ந்து ஆன்மீக பக்தர்கள் குழுவையிட்டு மேள தாளத்துடன் கடம் […]

கீழக்கரையில் நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு.! காரசார விவாதம் .!! சட்டமன்ற உறுப்பினர் நிதி ஒதுக்கீடு .!!!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி வளாகத்தில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானாஸ் ஆபீதா தலைமையில் துணைத் தலைவர் ஹமீது சுல்தான் மற்றும் ஆணையாளர் ரங்கநாயகி முன்னிலையில் நடைபெற்றது .  கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு உட்பட்ட அடிப்படை பிரச்சனைகளான குடிநீர் குழாய் பதித்தல் பேவர் பிளாக் அமைத்தல் வார்க்கால் அமைத்தல் கழிவு நீர் குழாய் உட்பட அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.    கடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரிடம் […]

ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்.!

ஜிம் மற்றும் பார் உரிமையாளர் மீது நடந்த கொலை வெறி தாக்குதல்: உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு! ராமநாதபுரம் அருகே சூரங்கோட்டை பகுதியைச் சேர்ந்த நிர்மல் (34) என்பவர், கிருஷ்ணா நகர் பகுதியில் ஜிம் மற்றும் பார் நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, அவரது பாரில் மது அருந்த வந்த ஆர்.எஸ்.மடை பகுதியைச் சேர்ந்த சிலருக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மதியம், நிர்மல் தனது பாரிலிருந்து வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் […]

சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா .!

சசிவர்ண முத்துவடுகநாத தேவரின் 253வது குருபூஜை விழா இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக முதன்முதலில் சுதந்திர பிரகடனம் செய்து உயிர் நீத்த வீரரும் சிவகங்கை சமஸ்தானத்தின் இரண்டாவது மன்னரும் சுதந்திர போராட்ட வீராங்கனை வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் கணவருமான சசிவர்ண முத்து வடுகநாதரின் 253 வது நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துச் சென்று மரியாதை செலுத்தினர். விழாவில் சிவகங்கை […]

தேவகோட்டை அருகே கண்டதேவி குங்கும காளியம்மன் திருக்கோவில் தேரோட்டம்.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை கண்டதேவி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குங்கும காளியம்மன் திருக்கோவில் ஆணி உற்சவ திருவிழா ஜீன்- 17 ஆம் தேதி காப்பு கட்டுடன் திருவிழா தொடங்கப்பட்டு தினந்தோறும் மாலையில் அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் எழுந்தருள செய்யப்பட்டு புறப்பாடு நடைபெற்று வந்தது இன்று ஒன்பதாம் திருநாளில் மூலவர் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடைபெற்றது உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பூஜைகள் செய்தி தேரில் எழுந்தருள செய்யப்பட்டு பக்தர்கள் பொதுமக்கள் தேர் வடத்தை […]

கீழக்கரை முழுவதும் மலேரியா மருந்து தெளிக்கும் பணி.!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி மற்றும் நோய் தடுப்பு மற்றும் பொது சுகாதார துறை இணைந்து  நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் வீடுகளிலும் தெருக்களிலும் மலேரியா டெங்கு போன்ற கொசுக்கள் மற்றும் முதிர் கொசுக்களை ஒழிக்க வீட்டின் உட்புறங்களிலும் மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நோய் பரவலை தடுப்பதற்காக நகராட்சி பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை பணியாளர்கள் வீடுகளிலும் தெருக்களிலும் மருந்துகள் […]

அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் அமைக்க கோரிக்கை.!

ராமநாதபுரம் அடுத்துள்ள அழகன்குளம் கிராமத்தில் நாவாய் அருங்காட்சியம் இடம் மாற்றம் செய்ய உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு அரசு அறிவித்து இடத்திலே அமைக்க கோரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர் ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை சட்டப்மன்ற தொகுதிக்கு உட்பட்ட அழகன் குளம் ஊராட்சியில் உள்ள அரசுப்பளியில் பழங்கால பொருட்கள் கிடைத்து. இதனைதொடர்ந்து 1984 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை 8 கட்டங்களாக ஆகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.    இதில், ரோமானிய நாட்டுமது குடுவைகள், மீன், […]

ராமநாதபுரம் மீன்வளத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை.! மீன் வளத்துறை ஆய்வாளர் விசாரணை.!!

இராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் பகுதியை சேர்ந்த மீனவர் தனது இயந்திரம் பொறுத்திய நாட்டு படகுகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதியை பெற மீன் வளத்துறை ஆய்வாளர் சகுபர் சாதிக் என்பவரிடம் கடந்த வாரம் மனு கொடுத்துள்ளார். அதற்கு மீன் வளத்துறை ஆய்வாளர் புகார்தாரரிடம் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகிற்கான உரிமம் மற்றும் கடலில் மீன் பிடிப்பதற்கான அனுமதி பெறவேண்டுமெனில் ரூ.5100/- கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு புகார்தாரர் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.3500/- […]

கீழக்கரையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியினர் நலத்திட்ட உதவி .!

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் தமிழக வெற்றி கழகம் தலைவர் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையில் கீழக்கரை நகர் செயலாளர் அகமது ஜலாலுதீன் மற்றும் நிர்வாகிகள் பரோஸ்கான், சதாம் உசேன், நிஹாதா, ஹாபீஸ், நிஷார் ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அரிசி, பருப்பு, சேலை, வேஷ்டி உள்ளடக்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் நைனா முகம்மது, […]

ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழா.!

ராமேஸ்வரத்தில் சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழ சுதந்திர போராட்ட தியாகி விஸ்வநாத தாஸ் 139 பிறந்த நாள் விழாவை முன்னிட்டு  மருத்துவ சமுதாய மக்கள் சார்பில் இராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் நடைபெற்ற விழாவில்  நகர் மன்ற தலைவர் நாசர் கான்  கலந்து கொண்டு  விஸ்வநாததாஸ் திருஉருவ படத்திற்கு  மலர் தூவி மரியாதை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கொண்டேஸ்வர் மடத்தில் இந்திய சுதந்திரத்திற்காக  தனது பாடல்கள் மூலம் சுதந்திர போராட்டத்தின் போது […]

ராமநாதபுரம் நகரமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களுக்கு இடையே சலசலப்பு.!

ராமநாதபுரத்தில் ஜல் ஜீவன் திட்டப் பெயர் மாற்றம் குறித்த சர்ச்சை: கொடுமையாக எதிர்த்த பாஜக நகர்மன்ற உறுப்பினர்! ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில், மத்திய அரசின் ‘ஜல் ஜீவன்’ குடிநீர் திட்டத்தின் பெயரை ‘சிறப்பு கூட்டு குடிநீர் திட்டம்’ என மாற்றியதற்கு நகராட்சி கவுன்சிலர்கள் கண்டனம் தெரிவித்தனர். ராமநாதபுரம் நகராட்சித் தலைவர் ஆர்.கே. கார்மேகம் தலைமையில், துணைத் தலைவர் பிரவீன் தங்கம் மற்றும் ஆணையாளர் அஜிதா பர்வீன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மொத்தம் 63 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இந்த […]

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கு படாத பாடுபடும் சுற்றுவட்டார பொதுமக்கள்!

கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்காக பதிவு செய்துள்ள பொதுமக்கள் நீண்டகால காத்திருப்புக்கு ஆளாவதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் இணையதளத்தில் பதிவேற்ற மிகவும் காலதாமதம் செய்து வருவதாக குற்றச்சாட்டு வைக்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் பட்டா வழங்குவதில் முறைகேடுகள் நடப்பதாகவும், இணையதள பதிவேற்றம் மிகவும் தாமதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. கீழக்கரை தாலுகாவில் தில்லையேந்தல், காஞ்சிரங்குடி, மாயாகுளம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிகள் அடங்கியுள்ளன. ஆனால் பட்டா உள்ளிட்ட அரசு ஆவணங்கள் பெறவும் சான்றிதழ்கள் […]

கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலை மறுப்பு: ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.!

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோவிந்தமங்கலம் ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டப் பணிகள் வழங்கப்படாததை கண்டித்து, 100க்கும் மேற்பட்ட பெண்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மற்ற ஊராட்சிகளில் பணிகள் நடைபெறும் நிலையில், கோவிந்தமங்கலம் ஊராட்சி செயலாளர் மட்டும் பணி வழங்க மறுப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பெண்கள் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகத் […]

திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம்!

திருப்புல்லாணியில் திமுக இளைஞர் அணி சார்பில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பேருந்து நிறுத்தம் அருகே திமுக இளைஞர் அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு 4 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் திருப்புல்லாணி கிழக்கு ஒன்றியம் இளைஞர் அணி அமைப்பாளர் விவேக் ஆதித்தன் தலைமையில் கழக மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் ஒன்றிய கழக […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!