கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைச்சாலையில் குஞ்ச பண்ணை அருகே உதகைக்கு சுற்றுலா சென்று விட்டு திரும்பிய சுற்றுலா வாகனம் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது . இந்த விபத்தில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தததாகவும் சிறுவன் பலியானதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை வியாசர்பாடி பெரம்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஒரு குழுவாக 16 பெரியவர்கள் 15 குழந்தைகள் மற்றும் என 31 பேர் கடந்த 30 ஆம் தேதி நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் புறப்பட்டு 1 ம் தேதி மேட்டுப்பாளையம் […]
Category: தேசிய செய்திகள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்ட சிறைச்சாலை, பரமக்குடி மகளிர் தனிச்சிறைச்சாலை மற்றும் முதுகுளத்தூர் சிறைச்சாலையில் கைதிகள் அறை, சமையல் கூடம், குளியல் அறை, குடிநீர், நூலகம், பார்வையாளர் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு, மாவட்ட ஆட்சித்தலைவர் பா விஷ்ணு சந்திரன்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஷ் ஆகியோர் இன்று (03.052024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் சிறைகளிலுள்ள கைதிகளின் எண்ணிக்கை, குற்றங்களுக்கான காரணங்கள், பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நேரம், […]
கோவில் திருவிழா நடத்துவதை தடுத்து நிறுத்த கோரி கிராம மக்கள் மாவட்ட எஸ்பியிடம் கோரிக்கை !
இராமநாதபுரம் அருகே உள்ள தேர்போகி கிராமத்தில் 150 குடும்பங்கள் இருந்து வருவதாகவும் இந்த நிலையில் இவர்களுக்கு சொந்தமாக சுடலைமாடசாமி என்ற ஆலயம் ஒன்று அமைத்து காலங்காலமாக வழிபட்டு வந்துள்ளனர் . இந்த சூழ்நிலையில் அங்கு பூசாரியாக இருந்தவரை பணி நீக்கம் செய்ததை தொடர்ந்து அவர் கிராமத்திற்கு எதிராக தனியாக ஊருக்கு வெளியே இந்தக் கோயில் போன்று சிலைகள் அமைத்து கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்த சென்றதாகவும் அதனை கிராம மக்கள் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு […]
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு.
சேலம் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல்: கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே நடந்த கோயில் திருவிழாவில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரிவினரை கோயில் திருவிழாவில் அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு. இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம்; கடைகள், வாகனங்களுக்கு தீ வைப்பு. கல்வீச்சு, பெட்ரோல் குண்டு வீச்சு என அடுத்தடுத்து அரங்கேறும் சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் இன்று […]
பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி..
பாம்பு கடித்தவரை கங்கை நதியில் கட்டி வைத்த கொடூரம்!மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்! அநியாயமாக ஓர் உயிர் பலி.. உத்தரப் பிரதேசத்இல் மோகித் குமார்(20) என்ற இளைஞரை பாம்பு கடித்துள்ளது. ஓடும் கங்கை நீரில் உடலை வைத்தால் விஷம் நீங்கும் என்று கூறப்பட்டதால் அவரது உடலை 2 நாட்களாக அவரது குடும்பத்தினர் கங்கையில் மிதக்க வைத்திருந்தனர் இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
ராமேஸ்வரம் திருக்கோயிலில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு !
இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ ராமநாத ஸ்வாமி திருக்கோவில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாத பாக்கெட்டுகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் விற்பனை செய்யப்படுவதாக பெறப்பட்ட புகார் அடிப்படையில் இன்று ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல் ஆய்வு செய்தார் . ஆய்வில் முகப்பு சீட்டு இல்லாத பாக்கெட்டுகள் அப்புறபடுத்தப்பட்டது. மேலும் முறையான பேக்கிங் தேதி, காலாவதி தேதி உணவு பாதுகாப்பு உரிமம் கண்டிப்பாக அச்சிடப்பட்டு விற்பனை செய்ய வேண்டும் என்றும், உணவு தயார் செய்யும் இடத்தில் […]
அமலாக்கத்துறையை கடுமையாக விளாசிய டெல்லி கோர்ட்..
பீகார் முன்னாள் துணை முதல் மந்திரி தேஜஸ்வி யாதவின் நெருங்கிய கூட்டாளியான தொழிலதிபர் அமித் கட்யால் நில மோசடி தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.நில மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட தொழிலதிபர் அமித் கத்யால் இடைக்கால ஜாமீன் கோரி டெல்லி ரோஸ் அவென்யு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை நேற்று நடந்தது. அப்போது, டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே அமலாக்கத் துறைக்கு கடும் கண்டனம் […]
முதுகுளத்தூரில் மாவட்ட ஊராட்சி செயலரை கண்டித்து ஆர்ப்பாட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக மாவட்ட ஊராட்சி செயலாளர் சந்தோசத்தை கண்டித்து டி என் ஆர் ஓ ஏ சங்க பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் வட்ட கிளை தலைவர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளரின் தொடர்ச்சியாக ஊழியர்கள் விரோதப் போக்கை கண்டித்தும், மாவட்ட ஊராட்சி அலுவலக பணியாளர் துர்கா மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்காமல் அவர் மீது காவல்துறையில் புகார் அளித்ததை திரும்ப பெற […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விழிப்புணர்வு நிகழ்ச்சி ! விவசாயிகள் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் என்ற தலைப்பில் பாரம்பரியமான விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் விவசாயம் செய்வது எப்படி என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஒருங்கிணைந்த பண்ணை நிர்வாகம் முறையினை எவ்வாறு மானாவாரி நிலங்களில் (1 எக்டர்) அமைப்பது பற்றியும் , ஆடு மாடு வளர்ப்பு […]
திருப்பாலைக்குடியில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த புள்ளிமான் ! பொதுமக்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பு !!
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வறட்சியின் காரணமாக கண்மாய், குளம், குட்டைகளில் தண்ணீர் வற்றி வருவதால் குடிப்பதற்காக தண்ணி தேடி நேற்று அதிகாலை 11 வயது உள்ள ஒரு புள்ளிமான் திருப்பாலைக்குடி கடற்கரைக்கு தண்ணீர் தேடி வந்துள்ளது. மானை கண்ட சமூக ஆர்வலர் பஸருல் ஹக் மற்றும் நண்பர்கள் மானை பத்திரமாக மீட்டு வனத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். ஊருக்குள் வந்த மானை சிறுவர்களும் பாெதுமக்களும் ஆர்வமாக பார்த்து சென்றனர்.
வேளாண் கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்ட பள்ளி மாணாக்கர்களின் பேரணி !
இராமநாதபுர மாவட்டம் உச்சிபுளி அருகிலுள்ள இரட்டையூரணி அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உழைப்பாளர் தினத்தை (மே 1) முன்னிட்டு “நாளைய சமுதாயம் விண்தொடும் விவசாயம்” என்னும் தலைப்பில் பள்ளி மாணவர்களோடு இணைந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.. இப்பேரணியில் பாரம்பரிய விவசாயத்தில் நவீன தொழில்நுட்பத்தைக் கையாண்டு விவசாயத்தை மேம்படுத்த தொழில்நுட்பத்தை துணையெடு என்னும் கரகோசம் எழுப்பப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. மதுரை வேளாண் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகளான அபிநயா , ஐஸ்வர்யா, ஆனி ஹிங்கிஸ், ஆர்த்தி ஸ்ரீ, ஆஷிகா,தனுஷ்யா, திவ்யதர்ஷினி, எழிலரசி […]
தஞ்சையில் மாபெரும் கல்வி கண்காட்சி ! மாணவ மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகள் !!
தஞ்சாவூர் ராமநாதன் ரவுண்டானா அருகே தனியார் திருமண மண்டபத்தில் 40க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இணைந்து மாபெரும் கல்வி கண்காட்சி நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் உள்ள எல்லா கல்லூரிகளுக்கும் மாணவர்கள் சென்று அங்கு இருக்கும் பாடத்திட்டங்கள், பாடபிரிவுகள், கல்விகட்டணம் தெரிந்து கொள்ளும் வகையில் வரும் ஏப்ரல் 27, 28 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு தினங்கள் நடைபெறுவதால் மாணவர்கள் கலந்து கொண்டு எல்லா விபரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு ஸ்கூட்டர், […]
கீழக்கரையில் போதைப் பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பிரச்சாரம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இளைஞர்கள் ஒன்றிணைந்து போதை புழக்கம் இல்லாத கீழக்கரையை உருவாக்கிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கீழை கிழக்குநகர் பொதுநல சங்கம் என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்று கீழக்கரை பட்டாணியப்பா பகுதியில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்து முக்கிய சாலைகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி போதைப் பொருளினால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தனர் .மேலும் பெற்றோர்கள் பிள்ளைகளை கவனமாக கண்காணிக்க வேண்டும் என்றும் 18 வயதிலிருந்து 25 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் […]
இராமநாதபுரம் தோட்டக்கலைத்துறை தென்னை நாற்றுகள் விநியோகம் ! பொதுமக்கள் பயன்பெற வேண்டுகோள் !!
இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் தேவிபட்டினத்தில் தோட்டக்கலைத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு தென்னை நாற்று பண்ணைகளில் நெட்டை மற்றும் நெட்டை x குட்டை இரக தென்னை நாற்றுகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும் அவர்கள் கூறுகையில் உச்சிப்புளி வட்டாரம் உச்சிப்புளி தென்னை நூற்று பண்ணையில் 10000 எண்கள் நெட்டை இரக நாற்றுகளும் 8000 எண்கள் நெட்டை x குட்டை இரக நாற்றுகளும், இராமநாதபுரம் வட்டாரம் தேவிப்பட்டிணம் தென்னை நாற்று பண்ணையில் 3500 எண்கள் […]
ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் திட்டம் அறிமுகம் !அடுத்த 3 ஆண்டுகளில் 41 ஆயிரம் வீடுகளுக்கு வழங்க திட்டம்..!!
இந்தியாவின் நகர எரிவாயு வினியோகத் தொழில்துறையில் முன்னணி நிறுவனமாக தனியார் ஏஜிகபி பிரதம்)நிறுவனம் அனைத்து மக்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயுவை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிரமாக பணியாற்றி வருகிறது. அந்த வகையில் பசுமையான மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்கும் விதமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்கான அதன் லட்சியத் திட்டங்களை இன்று வெளியிட்டது. ராமேஸ்வரம், பரமக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு வழங்கும் விரிவாக்க திட்டம் குறித்து இந்நிறுவனம் இன்று அறிவித்தது. இதன் மூலம் […]
பா.ஜனதா தனக்கு எதிராக பேசுபவர்களை கொலை செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ விரும்புகிறது. அவர்களை இந்த உலகத்தை விட்டே அப்புறப்படுத்த நினைக்கிறது! மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு..
மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தன் மீதும், தன் மருமகன் அபிஷேக் பானர்ஜி மீதும் பா.ஜனதா குறி வைத்திருப்பதாக சமீபத்தில் குற்றம் சாட்டினார். இதற்கிடையே, அபிஷேக் பானர்ஜியின் வீட்டையும், அலுவலகத்தையும் உளவு பார்த்ததாக, மும்பையை சேர்ந்த ராஜாராம் ரிஜ் என்பவரை கொல்கத்தா போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர், மும்பை தாக்குதல் குற்றவாளி டேவிட் ஹெட்லியை ஏற்கனவே சந்தித்தவர் என்றும் போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி, மம்தா பானர்ஜி பேசினார். ஹசன் […]
வேளாண் கல்லூரி மாணவிகளின் காலநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமடை ஊராட்சி கருக்காத்தி கிராமத்தில் உலக புவி தினத்தை முன்னிட்டு கிராம மக்களிடத்தில் மதுரை வேளாண் கல்லூரி மாணவிகள் நடத்திய கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மதுரை வேளாண்மை கல்லூரி மாணவிகள் தாமரைச்செல்வி, சிந்துபிரியா, சுகந்தி, சுமதி, தமிழ்ச்செல்வி, சூரியலட்சுமி, சுவாதி, வைஷ்ணவி ஆகியோர் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் விவசாய முறைகள் பற்றி கிராம விவசாயிகளிடம் எடுத்துக் கூறியது பின்வருமாறு: காலநிலை அழுத்தத்தை சமாளிக்க சகிப்புத்தன்மை கொண்ட […]
சாயல்குடியில் கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சாயல்குடி சமுதாயக்கூடத்தில் ரூரல் வொர்க்கர்ஸ் டெவலப்மெண்ட் சொசைட்டி (RWDS) நிறுவனம் சார்பாக மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டி கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பள்ளி மற்றும் கல்லூரிகளில் எந்தெந்த பாடத்தகட்டங்கள் தேர்வு செய்யலாம் என்று விவாதங்கள் மூலம் சிறந்த கல்வியாளர்களை கொண்டு Need exam எப்படி படிக்கனும், தொழில் நுட்பம் சார்ந்த கல்விகளை பயிலும் வழிமுறைகள், என அனைத்து வகையான […]
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் சீல் வைப்பு !
இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றதையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் மற்றும் இராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பார்வையாளர் (பொது) பண்டாரி யாதவ் ஆகியோர் தலைமையில் வேட்பாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட பிரமுகர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி இன்று (20.04.2024) நடைபெற்றது. இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட இராமநாதபுரம்- 338, பரமக்குடி (தனி) -303, முதுகுளத்தூர்- 386, திருவாடானை -347, திருச்சுழி- 276, அறந்தாங்கி-284 என மொத்தம் […]
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 25 வாக்கு சதவீதம் பதிவு ! வாக்குச்சாவடி மையத்தில் வேட்பாளர் ஜெயபெருமாள் ! !
ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் நடைபெறுவதையொட்டி அதிகாலை முதல் வாக்காளர் தங்கள் வாக்குகளை செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதன்படி இந்த நிலையில் 12 மணி நிலவரப்படி 25% வாக்கு பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவின் பாராளுமன்ற வேட்பாளர் ஜெயபெருமாள் ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டார் மேலும் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெண்கள் வாக்குச்சாவடி மையத்தை […]