ராமநாதபுரத்தில் இருந்து பாரதி நகர் பட்டணம் காத்தான் ராம்நகர் குயவன்குடி சாத்தான்குளம் வாலாந்தரவை வழுதூர் விளக்கு ரோடு ஆகிய பகுதிகளில் காவேரி குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்றது இதனை தொடர்ந்து உடைச்சியார்வலசை அருகே அய்யன் கோவில் பகுதியில் காவிரி குடிநீர் குழாய் பதிக்கும் பணியின் போது ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பணி நடைபெற்ற பின்பு முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாததால் சாலையின் ஓரத்தில் பள்ளம் ஏற்பட்டது. இதனால் தினந்தோறும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி […]
Category: தேசிய செய்திகள்
சுதந்திர போராட்ட தியாகி நாகூர்கனி உடலுக்கு அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கமுதி வட்டாட்சியர் வ.சேதுராமன்!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள பெருநாழியை சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான் மகன் நாகூர்கனி(99). இவர் முன்னாள் இந்திய தேசிய ராணுவ வீரர்(ஐஎன்ஏ). நேதாஜி ஆரம்பித்த ஐஎன்ஏ}வில் சேர்ந்து பர்மாவில் இருந்து கொண்டு இந்திய விடுதலைக்காக போராடியவர். பின்னர் இந்திய சுதந்திரத்திற்க்கு பின் இந்தியாவில் குடியேறியுள்ளார். இவர்ருக்கு தமிழக அரசு விடுதலைப் போராட்ட வீரர் ஓய்வூதியம் அளித்து வந்தது. இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் உத்தரவின் பேரில் […]
பரமக்குடியில் இடி மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை !
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அக்னி நட்சத்திரம் அதாவது கத்திரி கோடை வெயில் என்பதால் மக்களை வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பரமக்குடியில் சுமார் ஒரு மணி நேரம் கரு மேகங்கள் இருள் சூழ இடி, மின்னல் சூறைக்காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்கு களை எரியவிட்டபடியும், மற்றொருபுறம் வாகனங்களை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்திருக்கும் காட்சியையும் நம்மால் காணப்படுகிறது மேலும் இந்த […]
பரமக்குடியில் மக்களின் தாகத்தை நீக்கிய மருந்து நிறுவனம்! மோர் அருந்தி தாகம் தணிந்த பொதுமக்கள் !!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் திருப்பதி மொத்த மருந்து விற்பனை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை நீக்கும் வகையில் 15 நாட்கள் குறிப்பாக ஒவ்வொரு நாளும், மோர், சர்பத் உள்ளிட்ட பானங்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர் மேலும் இன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு என்பதால் அவ்வழியாகச் சென்ற மாணவர்கள்,பெற்றோர்கள், உள்ளிட்ட பலரும் தங்களின் தாகத்தை நீக்கி சென்று தங்களது பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பார்க்கச் சென்றனர் […]
இலங்கை பொருளாதரத்தில் நலிவடைந்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது ! இலங்கை அமைச்சர் அஹ்மத் சாதிக் பேட்டி !!
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த போது இந்தியா தான் அதிக நிதி உதவிகளை வழங்கியது என்று இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் கூறினார்.தஞ்சை பூக்கார 1-ம் தெருவைச் சேர்ந்தவர் பாரத சிற்பி டாக்டர் இரா.பிரனேஷ் இன்பென்ட் ராஜ். இவர் ஐக்கிய நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் அமைப்பின் இந்திய தேசிய இயக்குனராக இருந்து வருகிறார். இவரது இல்லத்திற்கு இலங்கை இளைஞர் பாராளுமன்றம்வெளிவிவகார மற்றும் இராஜதந்திர உறவுகள் பிரதி […]
மதுரையில் பெய்த கனமழையால் மின்சாரம் தாக்கி இருவர் பலி !
மதுரையில் இன்று மாலை முதல் இரவு வரை பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்தது இந்த நிலையில் TVS நகர் துரைசாமி ரோடு பகுதியில் வசித்து வரும் முருகேசன் அவருடை, மனைவி பாப்பத்தி மற்றும் இவர்களுடை மகன் சிறுவன் உன்னால் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் பின்னால் குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்து வருகின்றனர் இவர்கள் அதே பகுதியில் பலசரக் கடை நடத்தி வரும் நிலையில் கடையை அடைத்து வீட்டுக்கு TVS X ட இருசக்கர வாகனத்தில் […]
சிவகங்கை மாவட்டத்தில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த இரு மாணவர்கள் 414 மற்றும் 412 மதிப்பெண்கள் எடுத்து சாதனை
சிவகங்கை மாவட்டத்தில் 17,707 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். அதில் 8271 மாணவர்கள், 8908 மாணவிகள் உள்பட மொத்தம் 17, 179 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒட்டு மொத்த தேர்ச்சி விகிதம் 97.02% ஆகும். இது மாநில அளவிலான தர வரிசையில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டிலும் இதே இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. சிவகங்கை அருகே பழமலை நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் 500 -க்கு 414 மற்றும் 500 […]
கோனேரி கிராமத்தில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்து வேளாண் கல்லூரி மாணவியின் விழிப்புணர்வு நிகழ்ச்சி !
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோனேரி கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவி வீ.தாமரைச்செல்வி மண்புழு உரம் தயாரித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூலம் செய்முறை விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மண்புழு உரம் தயாரித்தல் குறித்த செயல்முறை விளக்கப் பயிற்சிகள் குறித்தும் , மண்புழு உரம் திடக்கழிவு மேலாண்மையில் எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறித்தும், இயற்கையில் கிடைக்கும் விவசாயக் […]
தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் !
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வளாகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணி துறை மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து கோடைகால தீத்தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் மாவட்ட தீயணைப்பு பணித் துறை தலைவர் குமார் தலைமையேற்று தீத்தடுப்பு விழிப்புணர்வு குறித்த விளக்கவுரை அளித்தார், இதனை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் முருகேசன் மற்றும் குழுவினர்களால் பணியாளர்களுக்கு ஆதார் தீத்தடுப்பு குறித்தும், தீயணைப்பான்களை கையாளுவது குறித்தும், சமையல் எரிவாயு தீத்தடுப்பு குறித்த செயல்முறை […]
ராமநாதபுரத்தில் குரூப் 4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு ! மாவட்ட கலெக்டர் பங்கேற்பு !!
இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தொகுதி IV க்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் துவக்கி வைத்து பேசுகையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு நிலைகளில் உள்ள பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. தற்பொழுது தொகுதி-IV க்கான போட்டி தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்தவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இப்பயிற்சியின் நோக்கம் தேர்வில் பங்கேற்கவுள்ளவர்கள் எளிதாக […]
இராமநாதபுரத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 7761 மாணவர்களும், 7931 மாணவிகளும் என மொத்தம் 15,692 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதியுள்ளார்கள். இன்று வெளியிட்ட தேர்வு முடிவுகளின்படி 7372 மாணவர்களும், 7749 மாணவிகளும் என மொத்தம் 15,121 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் 96.36% தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 138 அரசு பள்ளிகளில் 64 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு உதவி பெறும் 49 பள்ளிகளில் 17 பள்ளிகள் 100% தேர்ச்சி […]
மதுரை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கம் ! சுங்க இலக்கா அதிகாரிகள் கைது செய்து விசாரணை !!
துபாயிலிருந்து மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகம்மது தஸ்தகீர் (வயது 21) சந்தேகத்திற்குரிய வகையில் சென்றதை கண்டு அவரை மதுரை விமான நிலைய சுங்கா இலாக்கா அதிகாரிகள் ஸ்கேன் கருவி சோதனை செய்தனர். அப்போது முகமது தஸ்தகீர் தனது ஆசனவாயில் ஒரு பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை 14 வயது சிறுமிக்கு மேம்பட்ட சிகிச்சை முறை
மீனாட்சி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட மேம்பட்ட சிகிச்சை. எலிக்கொல்லி விஷத்தில் இருந்து 14 வயது சிறுமியை காப்பாற்றியுள்ளது பல்துறை சார்ந்த முக்கிய சிகிச்சை மற்றும் பிளாஸ்மாஃபெரிசிஸ் எனப்படும் மேம்பட்ட சிகிச்சை முறையின் வருகையால், டெல்டா பகுதியில் கடந்த 15 முதல் 2 ஆண்டுகளாக எலிக்கொல்லி விஷத்தால் ஏற்படும் இறப்பு விகிதம் மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. தஞ்சாவூர் தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் பலதுறை முக்கிய சிகிச்சை பிரிவைக் கொண்ட முதல் மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, மிகவும் கொடிய எலிக்கொல்லிய […]
தஞ்சாவூர் கூத்தூர் கிராமத்தில் ஆஸ்மா விழிப்புணர் நிகழ்ச்சி !
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கூத்தூர் கிராமத்தில் உள்ள எச்எஸ்சி யில் உலக ஆஸ்மா தினத்தை முன்னிட்டு ஆஸ்மா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர் நிகழ்ச்சி சில்டரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கிராம சுகாதார செவிலியர் சந்தோஷ் மேரி கலந்து கொண்டு ஆஸ்துமா நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துக் கூறினார். இடைநிலை சுகாதாரப் பணியாளர் மீனா கற்பகம் ஆஸ்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு முறையில் […]
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து ! கீழக்கரை தாசில்தார் விரைந்து வந்து உதவி !!
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை நோக்கிச் சென்ற ஒன்றாம் நம்பர் அரசு பேருந்து திருப்புல்லாணி அருகே சென்று கொண்டிருந்தபோது டிராக்டர் ஒன்று சைடு கொடுக்காமல் சென்றதால் அதனை முந்த முற்பட்ட அரசு பேருந்து சருக்கலில் நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கீழக்கரை வட்டாட்சியர் பழனி தலைமையிலான அதிகாரிகள் மற்றும் கிராம மக்கள் ஒன்றிணைந்து கவிழ்ந்த பேருந்தில் இடுபாடுகளுக்குள் சிக்கி இருந்த பொதுமக்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ்க்காக காத்திருக்காமல் வட்டாட்சியர் வாகனத்தில் […]
கீழக்கரையில் தொடர் குற்றச்செயலில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தின் கைது !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சீனி முகம்மது என்பவரின் மகன் கை என்ற முகமதுகான் (வயது 32) இவரும் கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் மகன் சதாம் என்ற சதாம் உசேன் (34) என்பவரும் தொடர்ந்து கீழக்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மேற்கண்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு […]
பனையடியேந்தல் கிராமத்தில் வேளாண்மை கல்லூரி மாணவி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி !
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பனையடியேந்தல் கிராமத்தில் பருத்தி விளைவிக்கும் விவசாயிகளுக்கு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் இளங்கலை இறுதி ஆண்டு மாணவி மூ.சூரிய லட்சுமி தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாணவி மூ.சூரிய லட்சுமி தெரிவிக்கையில் :- விவசாயிகள் நெல் அறுவடைக்கு பிறகு கண்மாய், குளம், ஊரணிகளில் தேங்கி உள்ள தண்ணீரை பயன்படுத்தி பருத்தி நடவு செய்து விவசாயம் செய்து வருகின்றனர் . பருத்தி செடியை பொறுத்தவரை லேசான ஈரப்பதத்திலும், கடும் வறட்சி […]
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு..
பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் நாங்குநேரி மாணவர் சின்னதுரை ஆகியோரை முதலமைச்சர் நேரில் அழைத்து பாராட்டு.. தங்கள் உயர்கல்வி செலவை முழுமையாக அரசே ஏற்றுக்கொள்ளும் என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக முதலமைச்சரை சந்தித்த பின் மாணவர்கள் பேட்டி. பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கையான மாணவி நிவேதா மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் சக மாணவர்களால் வெட்டுப்பட்ட மாணவர் சின்னதுரை ஆகியோர் முதலமைச்சரை தலைமை செயலகத்தில் […]
ராமநாதபுரம் அமாவாசை முன்னிட்டு வழுதூர் ஸ்ரீ அருளொளி விநாயகர் பெருமான் ஆலயத்தில் புனித நீர் வைத்து சிறப்பு வழிபாடு !
ராமநாதபுரம் அருகே வழுதூர் அருளொளி நகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் பெருமான் ஆலயத்தில் அமாவாசையை முன்னிட்டு ஆலய வளாகப் பகுதியில் உள்ள கிணற்றில் புனித நீர் எடுத்து விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது ஒவ்வொரு அமாவாசை அன்று புனித நீர் எடுத்து அபிஷேகம் செய்து ஆன்மீக பக்தர்களுக்கு வழங்கினால் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம் ஆகவே ஆன்மீக முறைப்படி தீர்த்த கிணற்றுக்கு ஈஸ்வர சரவணன் முன்னிலையில் வழுதூர் கிராம பொதுமக்கள் மற்றும் அருளொளி மன்றத்தினர் […]
கோடைவிடுமுறை எதிரொலி; மெரினா, மாமல்லபுரம், வண்டலூருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள் இயக்கம்..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் குறையாமல் வாட்டி வதைத்து வருகிறது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலாலும், இரவு நேரத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் புழுக்கத்தாலும் மக்கள் தவித்து வருகிறார்கள். மாலை நேரங்களில் வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க சென்னை நகர மக்கள் மெரினா, பெசன்ட்நகர், மாமல்லபுரம் கடற்கரைக்கு படையெடுத்து வருகின்றனர்.தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் வண்டலூர் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணி களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. தினந்தோறும் கடற்கரை மற்றும் மாமல்லபுரம், வண்டலூர் […]