இராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி அருகே நயினார் கோவில் ஆர்.எஸ் மங்களம் சாலையில் காடடர்ந்தகுடியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் விதமாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் வாகனச் சோதனையில் ஈடுபட்ட பொழுது அவ்வழியாக புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கிஷோர் என்பவர் TN 72 BS 6979 பதிவெண் கொண்ட நான்கு சரக்கு வாகனத்தில் 23 மூட்டைகளில் 575 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. உடனே கடத்திய ரேசன் […]
Category: தேசிய செய்திகள்
ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா
ராமநாதபுரம் நண்பர்கள் உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழாவை ஒட்டி நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா ராமநாதபுரத்தில் இன்று நடந்தது. இதில் கணவரை இழந்த பெண்களுக்கு தையல் இயந்திரம், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள், விசைத்தெளிப்பான், சலவைத் தொழிலாளர்களுக்கு இஸ்திரி, தந்தை இறந்த சோகத்திலும் + 2 அரசு பொதுத்தேர்வு எழுதி அதிக மதிப்பெண்களுடன் தேறிய காட்டூரணியைச் மாணவி ஆர்த்திக்கு கல்வி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், மகளிர் , ஆடவர் […]
டூவீலர்கள் தொடர் திருட்டு ! 3 வாலிபர்கள் அதிரடி கைது..!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பல்வேறு இடங்களில் டூவீலர்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக, கீழக்கரை டி.எஸ்.பி., சுதிர்லால் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, தொண்டி உடையார் தெருவை சேர்ந்த முகமது வாசிம் 21, எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த அப்துல் ரகுமான் 25, எஸ்.பி.பட்டினம் கிழக்கு தெரு முகமது முஸ்தபா 19, ஆகியோர் டூவீலர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, மூன்று வாலிபர்களையும் ஏர்வாடியில் வைத்து தனிப்படை போலீசார் பிடித்தனர். மேலும், […]
ராமநாதபுரத்தில் பயன்பாட்டுக்கு வந்த இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள்..!
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் இணைந்து நடத்தும் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் திறந்து வைத்தார்.அப்போது இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தில் விரைவில் சிஎன்ஜி எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு நிரப்பும் வசதி துவங்கப்படும் என்றும் அரசு பஸ்களில் சிஎன்ஜி வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்திருந்தார். […]
கீழக்கரையில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை ! உலக மக்கள் அமைதிக்காக கூட்டுப் பிராத்தனை !
, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஓடக்கரை பள்ளி ஜமாத் சார்பில் 18 வாலிபர்கள் தர்கா அருகில் அமைந்துள்ள திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும் சகோதரத்துவத்துக்காகவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சகோதரத்துவத்தை பகிர்ந்து கொண்டனர். பக்ரீத் திருநாள் என்பது இறைத் தூதர் இப்ராகீம் நபியின் தியாகத்தை நினைவுகூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இசுலாமிய நாட்காட்டியின் பன்னிரண்டாவது மாதமான துல் ஹஜ் மாதம் 10 ஆம் […]
அரியமானில் மாபெரும் கடற்கரை திருவிழா ! பொதுமக்கள் பங்கேற்று மகிழ்ந்திட மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் !!
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், அரியமான் கடற்கரையில் இன்று (15.06.2024) மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் கடற்கரை திருவிழா நிகழ்ச்சி நடைபெறுகின்றன. இவ்விழா இன்று துவங்கி 17.06.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் கடற்கரை கைப்பந்து போட்டிகள், கால்பந்து போட்டிகள், இரவு மின்னொளி விளையாட்டு போட்டிகள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள், வகை வகையான உணவு கூடாரங்கள், படகு சவாரி, டிஜே மியூசிக், தண்ணீர் விளையாட்டுகள் போன்ற எண்ணற்ற பொழுதுபோக்கு அம்சங்களுடன் இன்று 15.06.2024, 16.06.2024, […]
பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தேசிய நெடுஞ்சாலை கோட்டப்பொறியாளர் அலுவலத்தில் காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்ச பணம் பெறுவதாக இராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கணக்கில் இருந்து வராத ரூ.1,38,000 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சுரேஷ்பாபு, மேலாளர் , ஹரிஹரன் , தற்காலிக பணியாளர் சதீஸ், இளநிலை உதவியாளர் , அருளானந்தம் அலுவலக கண்காணிப்பாளர் ஆகிய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு […]
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழப்பு
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஏராளமானோர் தீயில் கருகி உயிரிழந்ததாக கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் அந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக வந்துள்ள தகவல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் ராமு என்பவர் பல ஆண்டுகளாக குவைத்தில் தங்கி சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் குவைத்தில் தீ விபத்து ஏற்பட்டு ஏராளமானோர் […]
பெரிய பட்டினத்தில் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் ! அனைத்து மதத்தினருடன் திமுக எம்.எல்.ஏ பங்கேற்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் புகழ்பெற்ற மகான் செய்யதலி ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு மதநல்லிணக்க சந்தனக்கூடு கந்தூரி விழா 123 ஆவது ஆண்டு விழாவையொட்டி தொடக்க நிகழ்ச்சியாக இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டார். இதற்காக ஜலால் ஜமால் பள்ளி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. குதிரைகள் நடனம், வாணவேடிக்கையுடன் தர்காவை மூன்று முறை வலம் வந்த […]
தஞ்சையில் பாலதமிழ்செல்வன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி
தஞ்சையில் பாலதமிழ்செல்வன் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆன்மீக செம்மல் ,மனிதநேய பண்பாளர் பாலதமிழ்செல்வன் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்குதல், இரத்த தானம் வழங்குதல், முதியோர்களுக்கு உதவி , நலிவுற்ற ஏழைகளுக்கு தொழில் தொடங்க நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்குவது வழக்கும் அதே போல் இந்த ஆண்டு தஞ்சை மேம்பாலத்தில் உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு […]
பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் திருமண விழா !
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் எஸ்டிடியூ தொழில் சங்கத்தில் மாவட்ட செயலாளர் இஜாஸ் அகமது திருமண விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் SDPI கட்சியில் மாவட்டத் தலைவர் ரியாஸ் அஹமது , மாவட்ட பொருளாளர் அசன் அலி , ஒன்றிய செயலாளர் பீர் மைதீன் , ராமநாதபுரம் மேற்கு சட்டமன்ற தொகுதி முன்னாள் பொருளாளர் கீழை அஸ்ரப் , தமிழ்நாடு கட்டுமான உடல் உழைப்பு சங்க மாவட்ட செயலாளர் பாரூக் ராஜா முஹம்மது , எஸ்டிடியூ தொழிற்சங்கத்தின் முன்னாள் மாவட்ட […]
உச்சிப்புளியில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகாம் !
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே மானாங்குடி கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் கிராம வேளாண் முன்னேற்றக் குழு காரீப் பருவ பயிற்சியில் விவசாயிகள் பங்கேற்றனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி தெரிவிக்கையில் , முதலமைச்சரின் மண்னுயிர் காத்து மண்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது மற்றும் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். மேலும் விவசாயிகளுக்கு […]
பரமக்குடியில் ஜமாபந்தி கூட்டம் !
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1433-ம் பசலிக்கான ஆண்டு வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு குறித்த ஜமாபந்தி கூட்டம் இராமநாதபுரம் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் மாரிச்செல்வி தலைமையின் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம மக்களிடம் கோரிக்கைகள் குறித்த மனுக்கள் புறப்பட்டு தீர்வு வழங்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு நாளும் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுத்து ஜமாபந்தி நிறைவு நாள் அன்று மனுதாரர்களுக்கு தீர்வு வழங்கப்படுகிறது. […]
தாடை முடியில் கட்டி இழுத்த 60 வயது இளைஞரின் சாகசத்தை கண்டு வியந்த மக்கள் !
*சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தை தனது தாடியினால் 510 மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.சோழன் உலக சாதனை முயற்சிக்காக இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 60 வயதான இளைஞர் செல்லையா திருச்செல்வம். இவருடைய தாடையில் உள்ள முடியில் ( தாடியில்) கயிற்றை கட்டி அந்த கயிற்றை 1700 கிலோ எடையுள்ள டாடா ஏஸ் வாகனத்தில் கட்டப்பட்டு சிங்கம்புணரி கிருங்காக்கோட்டை விலக்கு சாலையில் இருந்து தாடியினால் […]
கீழக்கரையில் ஜமபந்தி முகாம் ! பொதுமக்களுக்கு வட்டாட்சியர் அழைப்பு !!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 11.06.2024 முதல் ஜமபந்தி முகாம் துவங்கப்பட்டது. இதில் திரு உத்திரகோசமங்கை உள் வட்டத்தை சார்ந்த எக்ககுடி , பனைக்குளம் , மாலங்குடி ,மள்ளல், ஆலங்குளம் , திரு உத்தரகோசமங்கை , நல்லிருக்கை போன்ற கிராமங்களுக்கு முகாம் நடைபெற்றது . ஜமாபந்தி, ஆண்டு தோறும் ஜுன் மாதத்தில் வருவாய்த் துறையினரால் கிராமந்தோறும் நடத்தப்படும் . இதில் கிராம கணக்குகள் குறித்து தணிக்கை முறையாகும். இந்த வருவாய் தீர்வாயத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர், […]
இராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ! 220 மனுக்கள் பெற்று மனுக்களை விசாரணை செய்த ஆட்சியர் !!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 220 மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக […]
இராமநாதபுரம் (ஜமாபந்தி) மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
இராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) 2023-2024-ம் ஆண்டு 11.06.2024 தேதி முதல் 20.06.2024ம் தேதி முடிய (சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை நீங்கலாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. 1433-ம் பசலி ஆண்டு (2023-2024) கோரிக்கை தொடர்பான மனுக்களை ஜமாபந்தி அலுவலரிடம் நேரடியாகவும் https://cmhelpline.tnega.org/support/iipgcms ஆகிய இணைத்தளம் அல்லது இ சேவை மையங்கள் மூலமாக 11.06.2024 முதல் 20.06.2024 வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனவும், பதிவேற்றம் செய்யப்படும் மனுக்கள் உரிய […]
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
.ராமநாதபுரம் மாவட்டம் வனத்துறை சார்பாக ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையை பாதுகாக்கவும் வன உயிரினங்களை பாதுகாக்கவும் நீர் ஆதாரங்களை பெருக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரை வன சரக அலுவலகத்தில் இருந்து தொடங்கி கீழக்கரை வழியாக திருப்புல்லாணி மேங்குரோ காடுகள் வரை பேரணியாக சென்றனர். வன உயிரினங்களை காப்போம் என்று முழக்கத்தோடு பொது […]
கீழக்கரையில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கடற்கரை வனச்சரகத்தின் சார்பாக கீழக்கரை வனவர் கனகராஜ் தலைமையில் கீழக்கரை வன சரக அலுவலர் செந்தில்குமார் முன்னிலையில் கீழக்கரையில் சிவகாமி புறத்தின் அருகில் இருக்கக்கூடிய குனியம்மன் கோவில் பொதுமக்கள் பயன்படும் வகையில் மரக்கன்றுகள் நடப்பட்டு உலக சுற்றுச்சூழல் தினம் பற்றி பொது மக்களுக்கு மற்றும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வனத்துறை அதிகாரிகள் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மூன்றாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க இருக்கும் மோடிக்கு, உலக தலைவர்கள் வாழ்த்து..
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்தது. ஆளும் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என இரு பெரும் தேசிய கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தன.இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. வாக்கு எண்ணிக்கை முழு விவரங்கள் இன்று வெளிவந்தன.பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றிபெற்றது. இதனால் ஆட்சி அமைக்க தேவையான 272 என்ற எண்ணிக்கையை விட 32 தொகுதிகள் குறைவாக பெற்றுள்ளது. ஆனாலும் […]