அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]

கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த  கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]

பயிர்களுக்கு இழப்பீடு வழங்க கோரி கருகிய பயிரோடு மாவட்ட ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள் .!

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு லட்சத்து எழுபத்தி ஐயாயிரம் ஹெக்டேர் அளவிற்கு நெல் விவசாயம் சாகுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக 60 முதல் 70 விழுக்காடு விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் தரப்பில் தொடர் கோரிக்கைகள் இருந்து வருகின்றன. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பயிர்களை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வலுவான கோரிக்கை இருந்து வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா சாம்பல் குளத்தை அடுத்த […]

திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் .! கீழக்குளம் கிராம பொதுமக்கள் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார் மனு .!! 

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதுகுளத்தூர் தாலுகா கீழகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர் திமுக ஒன்றிய செயலாளர் மீது மோசடி புகார் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ளனர். அந்த மனுவில் கீழக்குளம் அருந்ததியர் காலணியில் 50 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் கடந்த 2012 ஆம் ஆண்டு அருந்ததிய மக்களுக்கு 36 பேருக்கு தலா 1.80 லட்சம் மதிப்புள்ள இலவச காலனி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டதாகவும் இந்த திட்டத்தின் படி […]

ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கூடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ.!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமியர்களின் தொழுகை கட்டிடத்தை திறந்து வைத்த திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இஸ்லாமியர்கள் நடத்திய தொழுகையிலும் பங்கேற்று சிறப்பித்தார். இந்த தொழுகை இடமானது சர்வதேச நாடுகளுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்று திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ தெரிவித்தார். திருச்சி செய்தியாளர் H.பஷீர்

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.!

திருச்சி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் வைர விழா நடக்கும் வளாகத்தை ஆய்வு செய்த அமைச்சர் அன்பில் மகேஷ்.  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் / தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்க தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சிராப்பள்ளி மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா பெருந்திரளணி (JAMBOREE) மற்றும் கலைஞர் நூற்றாண்டு பெருந்திரளணி விழா (28.01.2025) அன்று முதல் 03.02.2025) வரை நடைபெறுவதை முன்னிட்டு அங்கு […]

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி .!எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு .!!

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது.  பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு […]

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து துவக்கிய தமிழ்நாடு துணை முதலமைச்சர் .!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் P.T.பழனிவேல் தியாகராஜன் மதுரைமாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா தேனி நாடாளுமன்ற உறுப்பினர்தங்க தமிழ்ச்செல்வன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் அலங்காநல்லூர் சேர்மன் ரேணுகா ஈஸ்வரி திமுக கட்சி நிர்வாகிகள் […]

புதுமடம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா.!

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் புதுமடம் ஊராட்சிக்கு உட்பட்ட அருள் ஒளி நகரில் அமைந்துள்ள பூன் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில்    அலங்கரித்து வண்ண கோலமிட்டு, கரும்பு தோரணம் கட்டி, பானையில் பச்சரியில் பொங்கல் வைத்து பால் பொங்கி வரும்போது பொங்கலோ, பொங்கல் என சத்தம் எழுப்பி உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.   பள்ளி தலைமை ஆசிரியர் சரண்யா தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் காதர் மைதீன் அனைவரையும் வரவேற்றார்.   அதனைத் […]

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]

பெரியாரை கொச்சைப்படுத்தும் சீமானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் வைகோ அறிக்கை.!

.திராவிடர் இயக்கம் குறித்தும், திராவிட இயக்கத் தலைவர்கள் குறித்தும், அவதூறுகளையும், இழிவுகளையும் தொடர்ந்து அள்ளி வீசி வருகிற நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான், எல்லை மீறி, வெறி உணர்ச்சியோடு, மனம் போன போக்கில் தந்தை பெரியார் எனும் மாமனிதரை கொச்சைப்படுத்தி பத்திரிகையாளர்களிடம் பேசி உள்ளார். தந்தை பெரியார் அவர்களைப் பற்றி பேசிய கருத்துகளுக்கு ஆதாரம் என்ன? என்று கேட்டால், சிறிதும் பொறுப்பின்றி கோமாளித்தனமாகவும், ஆணவமாகவும், அநாகரிகமாக மேலும் மேலும் நடந்து கொள்கிறார். இதற்கு எதிரிவினையாக கட்சி வேறுபாடு […]

கல்வியின் தரத்தை சீர்குலைக்க மத்திய அரசு முயற்சி திருச்சியில் தமீமுன் அன்சாரி பேட்டி.!

திருச்சியில் மனிதநேய மக்கள் ஜனநாயக கட்சியின் வேர்கள் இணையும் விழா திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஹோட்டலில் நடந்தது நிகழ்ச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், முன்னால் எம்எல்ஏ வுமான தமிமுன் அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது  ஈரோடு இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு என்னுடைய முழுமையான ஆதரவை தெரிவித்து களப்பணி ஆற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.திராவிட மாடல் அரசு செய்து வரக்கூடிய மக்கள் நல பணிகளுக்கு கிடைக்கக்கூடிய மற்றொரு அங்கீகாரமாக வெற்றி […]

பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பினை வழங்கிய அமைச்சர் .!

தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு தமிழகம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி வருகிறது மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள நியாய விலை கடையில் 953 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் இலவச பொங்கல் பரிசு தொகுப்பினை பொதுமக்களுக்கு […]

தஞ்சாவூரில் துப்புரவு பணியாளர்களுக்கு சீர்வரிசையுடன் பொங்கல் பரிசு.!

  தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை கரும்பு , புத்தாடை , பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் 500 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது  தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று வழங்கினார்கள் .  தஞ்சை மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு பணியாளர்கள் 263 பேர் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் 347 பேர் என மொத்தம் 610 பேர் தினமும் தஞ்சை மாநகர் முழுவதும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர் . […]

தஞ்சாவூரில் நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் விழா.!

விழிம்பு நிலை நரிக்குறவர் குடும்பங்கள் சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ தஞ்சையை அடுத்துள்ள பூதலூர் நரிக்குறவர் காலனியில் கோலப்போட்டியுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது தஞ்சாவூர் ஜோதி அறக்கட்டளை. தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில் மற்றவர்களை களை போல் விழிம்பு நிலை நரிக்குறவர் இன மக்களும் பொங்கல் கொண்டாட தஞ்சை ஜோதி அறக்கட்டளை ஏற்பாடில் கோலப்போட்டி நடைபெற்றது 30 பேர் கோலப்போட்டியில் பங்கேற்று வண்ணக்கோலமிட்டு அசத்தினர். […]

மதுரை மாநகராட்சி அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப்  பணி அடிக்கல் நாட்டு விழா.!

 மதுரை மாநகராட்சி உத்தங்குடியில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு, மதுரை தெற்கு சட்டமன்ற தொகுதிகளில் ரூ.471.89 கோடி மதிப்பீட்டில் புதிய பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.  இந்நிகழ்வில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையேற்றனர். மேயர் இந்திராணி பொன்வசந்த் நகராட்சி […]

பாப்பாகுடி கிராமத்தில் சமத்துவ பொங்கல் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் பாப்பாகுடி கிராமத்தில் பாவை பவுண்டேசன் சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் தமிழர்களின் கலாச்சார போட்டிகள் மற்றும் நடனங்கள் நடைபெற்றன. போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பெண்கள் சேவை மையம் ஒருங்கிணைந்த நிர்வாகி மோகனப்பிரியா கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். விழாவில் மகளிர் சுய உதவி குழுக்கள் மற்றும் கிராம பொது மக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை பாவை பவுண்டேசன் மண்டல ஒருங்கிணைப்பாளர் கோபுதாஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இதயா மகளிர் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா.!

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையத்தில் இதயா மகளிர் கலை கல்லூரியில் சமத்துவ பொங்கல் திருவிழா கல்லூரி செயலாளர் அருட்சகோதரி சம்பூர்ணமேரி தலைமையில் கல்லூரி முதல்வர் அருட்சகோதரி முனைவர் லூர்துமேரி , அருட்சகோதரி மேரிசந்தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சிறப்பு அழைப்பாளராக செங்கம் வழக்கறிஞர் சென்னம்மாள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய குறித்தும் சட்டங்கள் பற்றியும் மாணவிகளிடம் சிறப்புரையாற்றினார்

தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் .!

 மதுரை உத்தங்குடி பகுதியில் உள்ள ரோஜாவனம் முதியோர் இல்லத்தில், தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் மற்றும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் தலைவர் ஸ்டார் குரு அவர்கள் தலைமையிலும், சமூக ஆர்வலரும், வழக்கறிஞர் கரும்மான முத்துக்குமார் அவர்கள் முன்னிலையிலும் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது, இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மதுரை காவல்துறை குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஐஸ்டின்பிரபாகரன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார், மேலும் இந்நிகழ்ச்சியில் ரோஜாவனம் முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்களுக்கு ஸ்டார் குரு அவர்களால் நலத்திட்ட […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!