மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு.!

மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இளம் காட்டு யானை சடலமாக கண்டுபிடிப்பு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரக எல்லைக்குள் உள்ள வனப்பகுதியில் 13 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் வனத்துறைக்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கோவை மாவட்ட வன பாதுகாவலர் வெங்கடேஷ் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, வனசரக அலுவலர் சசிகுமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர், வன […]

பெரியநாயக்கன்பாளையத்தில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம்.!

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சார்பில் மக்களின் அடிப்படை வசதிகளை கோரி பெரிய அளவில் மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான சாலை, சாக்கடை, மேம்பாலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுவதால் மக்கள் பெரும் […]

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அகப்பயிற்சி தொடக்கம்

மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு அகப்பயிற்சி தொடக்கம் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி  மேல் நிலைப்பள்ளி தொழிற்கல்வி பிரிவில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கான பத்து நாள் அகப்பயிற்சி (Internship Programme) மாநிலம் முழுவதும் இன்று துவங்கியது. அதன் ஒருபகுதியாக, மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கான அகப்பயிற்சி  காலை சுபா மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டது. தொடக்க நிகழ்வில் சுபா மருத்துவமனை உரிமையாளரும் மருத்துவருமான மகேஸ்வரன்  பயிற்சியைத் துவக்கி வைத்து, “மாணவிகள் கல்வியறிவை நடைமுறை வழியில் சமூக நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும்” எனக் […]

மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம் சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு.!

சாலையோர சிறு வியாபாரிகளுக்கு புதிய கடைகள் ஒதுக்க மனு – மேட்டுப்பாளையம் தொழிலாளர் சங்கம கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், சாலையோர சிறு வியாபாரிகளுக்காக புதியதாக கட்டப்பட்ட கடைகள் ஒதுக்கப்பட வேண்டும் என நகராட்சி ஆணையாளர் அமுதா அவர்களுக்கு இன்று மனு வழங்கப்பட்டது. மார்க்கெட் பகுதியில் நீண்ட காலமாக தினசரி வாழ்வாதாரத்திற்காக சாலையோரத்தில் சிறு வியாபாரம் செய்து வரும் ஏழை மக்களுக்கு, நகராட்சி கட்டியுள்ள புதிய கட்டடங்களில் அமைந்துள்ள கடைகள் ஒதுக்கப்பட்டால், அவர்கள் […]

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு இருக்கைகள் வழங்கிய ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழு.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அமர்வதற்காக ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் சார்பில் இருக்கைகள் வழங்கப்பட்டன. அத்துடன், ஹஜ் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகள் குறித்தும் குழுவினரால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோவை மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் டாக்டர் லட்சுமி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் கார்த்திக் மகாராஜா, டாக்டர் விஜய், ஹஜ் பயணிகள் வழிகாட்டி குழுவினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

மேட்டுப்பாளையத்தில் பசுமை தமிழ்நாடு இயக்க தினம் – மரக்கன்றுகள் நடும் விழா

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படியும், உதவி வனப்பாதுகாவலர் அறிவுறுத்தலின் படியும், மேட்டுப்பாளையம் வனச்சரகர் அலுவலர் ஆலோசனையின் படியும், இன்று மேட்டுப்பாளையம் வனச்சரகம், மேட்டுப்பாளையம் பிரிவு, ஜக்கனாரி சுற்று நிர்வாக எல்லைக்குட்பட்ட தென்திருப்பதி நால்ரோடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வனத்துறை பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் […]

பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா.!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகத்சிங் மணி மண்டபத்தில், கே.எம்.எஸ் சிந்தனைச் சோலை சார்பில் பாரதியார் நினைவு நாள் விழா மற்றும் வ.உ.சி பிறந்த நாள் விழா நடைபெற்றது. பேராசிரியர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நிறுவனர் கே.எம்.எஸ் தெய்வசிகாமணி வரவேற்றார். கவிஞர் மான கிரி கனவு தாசன் தலைமையில் “வையத்தைப் பாலிக்கும் பாரதியார் குரல்கள்” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. மருத்துவர் கனியன் பூங்குன்றன் “நெஞ்சு பொறுக்குதில்லையே”, மருத்துவர் செந்தில்குமார் “வான்புகழ் கொண்ட தமிழ்நாடு”, சேவுகன் அண்ணாமலை கல்லூரி […]

மேட்டுப்பாளையத்தில் அண்ணா பிறந்தநாள் விழா.!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில், அமமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நகர அம்மா மக்கள் முன்னேற்றக் கூட்டம் சார்பில், கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் P. சரவணன் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் JH. ஹக்கீம், நகரச் செயலாளர் PS. கார்த்திகேயன், அவைத் தலைவர் சந்திரன், ஒன்றிய செயலாளர் ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் […]

மாநில நல்லாசிரியர் விருது .!மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா.!!

மாநில நல்லாசிரியர் விருது பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு மேட்டுப்பாளையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் – மாநில அளவிலான “நல்லாசிரியர்” விருதைப் பெற்ற தொழில் கல்வி ஆசிரியர் ஆனந்தகுமார் அவர்களுக்கு, இன்று மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் தினமான செப்டம்பர் 5 அன்று, சென்னை நகரில் நடைபெற்ற மாநில விழாவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும், பள்ளிக்கல்வித் துறை […]

மேட்டுப்பாளையம் ஆசிரியர் ஆனந்தகுமாருக்கு லயன்ஸ் இன்டர்நேஷனல் நல்லாசிரியர் விருது.!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கோயம்புத்தூர் கோஇன்டியா வளாகத்தில் லயன்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் சிறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில், மேட்டுப்பாளையம் நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆனந்தகுமார்  “நல்லாசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றதற்காக சென்னை சென்றிருந்ததால், அவரின் சார்பில் மனைவி  நர்மதா ஆனந்தகுமார் கலந்து கொண்டு விருதைப் பெற்றுக் கொண்டார். இந்த விழா கோவை மாவட்ட கவர்னர் Ln. ராஜசேகர் தலைமையில் நடைபெற்றது. விருதை அண்ணா பல்கலைக்கழக சேர்மன்  […]

மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா .!

  கோவை மாவட்டம்மேட்டுப்பாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாவது பட்டமளிப்பு விழா நேற்று காலை 10 மணிக்கு சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ. மாரிமுத்து (மு.கூ.பொ.) தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் வ. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். தமது உரையில் அவர், மாணவர்களின் எதிர்கால வளர்ச்சி, அறம் காப்பது மற்றும் உழைப்பின் மேன்மையை வலியுறுத்தி, “விதைத்தவன் உறங்கினாலும் […]

கோவை காரமடையில் இளம் வாக்காளர்கள் சேர்க்கை பிரச்சாரம்.!

கோவை மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் கீழ் காரமடை பகுதியில் அமைந்துள்ள கிரைஸ் த கிங் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் பட்டியலில் இளம் வாக்காளர்களை சேர்ப்பதற்கான பிரச்சாரம் மற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கி வைத்தனர். மாணவ-மாணவிகளிடம் சிறப்பு விருந்தினர்கள் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றினர். இளம் வாக்காளர்கள் தங்களது பெயர்களை […]

மேட்டுப்பாளையத்தில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம்

கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் கோவை கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் சார்பில் “அன்னை சாரதா நடமாடும் மருத்துவ முகாம்” என்ற தலைப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சியில் பணிபுரியும் சங்கர் நகர் பகுதியில் உள்ள தூய்மை பணியாளர்களுக்காக சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில், கோவை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானந்தர் தலைமை தாங்கினார். மருத்துவர் நந்தா கிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் குழுவினர் கலந்து கொண்டு, […]

சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா

அரசு பள்ளி முன்னாள் மாணவர்களின் அன்பு சிறுமுகைப்புதூர் பள்ளி ஆசிரியர் பழனிக்கு பாராட்டு விழா மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கல்வித் துறையில் 25 ஆண்டுகள் பணி புரிந்து வெள்ளி விழா கண்ட கணினி பயிற்றுநர் மற்றும் உயர் கல்வி வழிகாட்டி மைய ஒருங்கிணைப்பாளர் பழனி அவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சார்பில், பெரும் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பள்ளியின் முன்னாள் மாணவர் ஹரி பிரகாஷ் வரவேற்புரை வழங்கிய இந்நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் செல்வ […]

இராஜசிங்கமங்களம் ஒன்றிய தேசியக்கொடி யாத்திரை.!

  ராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி இராஜசிங்கமங்களம் ஒன்றிய தலைவர் S.M.A. வடிவேலன் தலைமையில் தேசியக்கொடி யாத்திரை சிறப்பாக நடைபெற்றது. யாத்திரை ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் ஆரம்பித்து, ஸ்ரீ சமயா கோவில், ஸ்ரீ காளியம்மன் கோவில், காந்திநகர் நூலகம் வழியாகச் சென்று ஸ்ரீ பாண்டிகோவிலில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் சிந்தனையாளர் பிரிவு மாநில செயலாளர்  சௌந்தரபாண்டியன், முன்னாள் வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவர் சிவசங்கர், திரங்கா யாத்திரை பொறுப்பாளர் முன்னாள் ஒன்றியத் தலைவர் சசிகனி, மற்றும் M.R. […]

கமுதியில் லஞ்சம் வாங்கிய விஏஓ ப்ரோக்கர் கைது.!

கமுதியில் லஞ்சம் கேட்ட VAO, ரசாயனம் தடவிய ரூ.4,000-உடன் கையும் களவுமாக சிக்கினார்! இராமநாதபுரம்: வாரிசு சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பித்த ஒருவரிடம், கமுதி தாலுகா தவசிக்குறிச்சி VAO பிரேமானந்தன் ரூ.4,000 லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அவர், நேராக இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசை அணுகினார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.4,000-ஐ ஏற்பாடு செய்தனர். VAO-வின் உத்தரவுப்படி, அந்த பணத்தை கமுதியை சேர்ந்த S.P. டிரேடர்ஸ் உரிமையாளர் […]

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் விழா.!

ராமநாதபுரம் மாவட்டம் தெற்கு காட்டூரில் முத்துமாரியம்மன் முளைக்கொட்டு உற்சவம் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியத்துக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் முளைக்கொட்டு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த 5-ம் தேதி முத்து பரப்புடன் தொடங்கிய விழா ஏழு நாட்கள் பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 11 வகை அபிஷேகங்களுடன் நடைபெற்றது. இரவு கும்மியாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் மக்களை மகிழ்வித்தன. செவ்வாய்க்கிழமை வழுதூரில் இருந்து கரக ஊர்வலம் கொண்டு […]

நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழா.!

கள்ளக்குறிச்சி மாவட்டம்  சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில், நண்பர்கள் கால்பந்தாட்டக் குழுவின் 60ஆம் ஆண்டு விழாவையொட்டி, 29ஆம் தென்னிந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் பகல்-இரவு கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 7 முதல் 10 வரை நடைபெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலிருந்து பல்வேறு அணிகள் பங்கேற்று ஆட்டத்தை சிறப்பிக்கின்றன. வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.1,00,060, இரண்டாம் பரிசு ரூ.75,060, மூன்றாம் பரிசு ரூ.50,060, நான்காம் […]

ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா.!

உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வழுதூர் பகுதியில் ஏராளமான ஆண்கள் பெண்கள் முளைப்பாரிகள் தலையில் சுமந்து ஊர்வலம் ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ளது வழுதூர் கிராமம் இந்த பகுதியில் உலக நன்மை வேண்டியும் நல்ல மழை பெய்து கிராமப் பகுதிகளில் விவசாயம் செழிக்கவும் ஸ்ரீ மாரியம்மனை கடந்த பத்து நாட்களாக வழிபட்டு முளை கொட்டு உற்சவ விழா நடைபெற்றது கடந்த 27 ஆம் தேதி காப்பு கட்டுகளுடன் விழா துவங்கியது ஞாயிற்றுக்கிழமை […]

ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்.!

கள்ளக்குறிச்சி நகர ஆர்ய வைஸ்ய சமூகத்தை சேர்ந்தவர்கள் கோமுகி நதிக்கரையில் உள்ள ஸ்ரீ அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்தும் , புது வஸ்திரம் சாற்றியும் , பொங்கல் வைத்தும் வழிபாடு செய்தனர். ஆரிய வைஸ்ய சமூகத்தை சேர்ந்த தலைவர் ஜெகந்நாதன் , செயலாளர் தாமோதரன் , பொருளாளர் ராகவன் மற்றும் முன்னாள் சங்க நிர்வாகிகள் , மற்றும் சங்க ஆலோசகர்கள் இன்னர் வீல் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு, மேள தாளம் முழங்க […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!