அரசு பேருந்துகள் இரவு நேரத்தில் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்குச் செல்லாமல் பயணிகளை பைபாஸில் இறக்குவதால் அவதி.! மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை .!!

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு கமுதி அருப்புக்கோட்டை பெருநாழி பசும்பொன் போன்ற ஊர்களுக்கு செல்லும் பிரதான அரசு பேருந்துகள் வந்து செல்கின்றது. அவ்வூர்களுக்கு செல்லக்கூடிய கிராம மக்கள் மற்ற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாகவும் ராமநாதபுரம் வழியாகவும் பார்த்திபனூர் பேருந்து நிலையத்துக்கு அரசு பேருந்தில் பயணிக்கின்றனர். ஆனால் இரவு நேரங்களில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் மதுரையில் இருந்து பரமக்குடி வழியாக ராமநாதபுரம் செல்லக்கூடிய அரசு பேருந்துகள் பார்த்திபனூர் பேருந்து நிலையத்திற்கு […]

பட்டாவில் பெயர் மாற்ற லஞ்சம்; VAO கைது..

தென்காசி மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் S.குமாரவேல் (52), த.பெ.சுப்பையா. தனக்கு பூர்வீக பாத்தியமான தனது தந்தையின் பெயரில் உள்ள இராஜ கோபாலப்பேரி கிராம நத்தம் சர்வே எண்.30-ல் உள்ள 1.27 ஏர் பரப்பில் உள்ள வீட்டிற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வது சம்பந்தமாக 06.01.2025 ஆம் தேதி அன்று குமாரவேல் இராஜகோபாலப் பேரி […]

கடம்பன்குடி கிராமத்தில் சுடுகாட்டிற்கு சாலை வசதி செய்து தரக் கூடிய மாவட்ட ஆட்சியரிடம் மனு .!

ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்திரகோசமங்கையை அடுத்த  கடம்பன்குடி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் அதுமட்டுமல்லாது தங்களது கிராமத்தில் உயிரிழந்த நபர்களை சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல மயான சாலை வசதி இல்லாததால் தனியார் வயல்களுக்குள் தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் குறிப்பாக தற்போது விவசாயக் காலம் இறுதி கட்டத்தை எட்டி பயிர்கள் விளைந்து முற்றி அறுவடைக்கு தயாராக இருக்கும் நிலையில் அந்த […]

ராமநாதபுரத்தில் கேண்டி கஃபே திறப்பு விழா.! ராமநாதபுரம் எம்பி மற்றும் எம்எல்ஏ பங்கேற்பு .!!

ராமநாதபுரம் மாவட்டம் பட்டின காத்தான் பகுதியில் திருச்சி செல்லும் இ சி ஆர் சாலை அருகே கேண்டி கஃபே மற்றும் கேண்டி ஆட்டோ மொபைல் சர்வீஸ் திறப்பு விழா இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொருளாளர் ஷாஜஹான் தலைமையில் அமீரக காயிதே மில்லத் பேரவை துணைத்தலைவர் அபுதாஹிர் ஃபைஜி , முகம்மது அபூபக்கர், ஹசன், ஆரிஃப் , அஹமது அப்துல் காதர் , சேக் இஸ்மாயில் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ராமநாதபுரம் […]

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி .!எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு .!!

சட்டம் ஒழுங்கு நிர்வாகிப்பதில் திமுக அரசு முழு தோல்வி: எஸ்டிபிஐ கட்சி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் பகிரங்க குற்றச்சாட்டு தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு, காவல்துறையின் பணியை செய்ய விடாமல் தடுக்கும் ஆளும் கட்சியின் தலையீடே காரணமாக உள்ளது.  பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இன்றைய தமிழ்நாடு மாறியுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுக்குள் வைப்பதிலும், மக்களை பாதுகாப்பதிலும் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தோல்வியை சந்தித்துள்ளது. தமிழகத்தில் குறிப்பாக இராமநாதபுரம் மற்றும் பல இடங்களில், பெண்களுக்கு […]

அரசு பஸ் டெப்போ அமைத்திட பொதுமக்கள் கோரிக்கை..

தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் அரசு பஸ் டெப்போ அமைத்திட வேண்டும் என நீண்ட காலமாக பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். தென்காசி தொகுதியின் 10 முக்கிய கோரிக்கைகளில் “சுரண்டையில் பஸ் டெப்போ” என்ற கோரிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுரண்டை பகுதியில் பஸ் டெப்போ அமைத்திட ஏதுவாக சுரண்டை அரசு கல்லூரி சாலையில் போதிய அரசு புறம்போக்கு நிலம் உள்ளது எனவும், தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தென்காசி எம்எல்ஏ எஸ். பழனி நாடார் […]

சுரண்டையில் இருந்து சிறப்பு பேருந்து..

தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 18.01.2025 அன்று சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு தாங்கள் வசிக்கும் பகுதிக்கு திரும்பி செல்ல வசதியாக சுரண்டை மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு நவீன (பக்கெட் சீட்) அரசு போக்குவரத்து […]

சிறந்த மருத்துவ சேவைக்கான விருது பெற்ற தென்காசி தலைமை மருத்துவமனை..

தென்காசி தலைமை மருத்துவ மனைக்கு சிறந்த மருத்துவ சேவைக்கான விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனை தமிழகத்தில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில், தொடர்ந்து பல சாதனைகள் புரிந்து தமிழகத்தில் சிறந்த மருத்துவ மனைகளில் ஒன்றாக தென்காசி தலைமை மருத்துவ மனை உள்ளது. இந்நிலையில், கடந்த […]

தமிழகத்தில் பனிப்பொழிவு அதிகரிக்கும்; வெதர்மேன் ராஜா தகவல்..

தமிழ்நாட்டில் கடுமையான குளிரும், பனிப் பொழிவும் அதிகரிக்கும் என தென்காசி வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது குறித்த வானிலை அறிக்கையில், கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் சாரல் மழை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.   இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலையே நிலவும். ஓரிரு இடங்களில் மட்டும் சாரல் மழை பெய்யும். வறண்ட வாடைக் காற்றின் ஊடுறுவல் காரணமாக இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் அதிகரிக்கும். வேலூர், […]

அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) 18வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டி துவக்கம்..

இராமநாதபுரம் கீழக்கரையை மையமாக கொண்டு பல ஆண்டுகளாக  செயல்பட்டு வரும்அல்-ஜதீத் வாலிபால் கிளப் (JVC) சார்பாக நடத்துப்ஙனும் 18 வயதிற்குட்பட்டவர்களுக்கான கைப்பந்து போட்டி இன்று (14/01/2025) கீழக்கரையில் உற்சாகமாக தொடங்கியது. இந்த போட்டியில் பல் வேறு இடங்களில் இருந்து போட்டியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

தென்காசியில் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கல்..

தென்காசி மாவட்ட தலைமை மருத்துவ மனையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் மகிழ்ச்சியுடன் பங்கேற்ற பல விதமான சிறப்பு விளையாட்டுப் போட்டிகள் மருத்துவ மனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பரிசுகளையும், தற்காலிக பணியாளர்களுக்கு மஞ்சள் பையில் பொங்கல் பரிசு தொகுப்பினையும் மருத்துவ மனை கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் வழங்கினார். மஞ்சள் பை பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் […]

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம்.!

இராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தந்தை பெரியாரின் 51 ஆவது நினைவு நாள் மற்றும் அண்ணல் அம்பேத்கரின் 68 வது நினைவு நாளை முன்னிட்டு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார் . ஆதித்தமிழர் கட்சியின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாஸ்கரன் வரவேற்புரை […]

“போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” மொபைல் செயலி துவக்கம்..

தமிழ்நாடு அரசால் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற புதிய அலைபேசி செயலி (Mobile App) தொடங்கப்பட்டு உள்ளது. இச்செயலியை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம் துவங்கி வைத்து அதன் இலட்சினையை (Logo) அறிமுகப்படுத்தினார். இது பற்றிய தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, தமிழ்நாடு அரசு போதைப் பொருட்கள் புழக்கத்தினை கட்டுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. 10 ஆகஸ்ட் 2022 அன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மாநாடு […]

ரயில்வே துறையை கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்..

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் பகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரயில்வே துறையை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அமைப்பாளர் கட்டி அப்துல் காதர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ரவண சமுத்திரம் மஸ்ஜிர் ரஹீம் பள்ளிவாசல் தலைவர் செய்யது நாகூர் ஹாஜி தலைமை தாங்கினார். ரவணசமுத்திரம் பிரைமரி தலைவர் முகமது இக்பால், செயலாளர் காசியார், பொருளாளர் பீர் முகம்மது, துணைச் செயலாளர் […]

கடையநல்லூர் காவலர்களுக்கு விருது வழங்கி பாராட்டு..

கடையநல்லூரில் சிறப்பாக பணிபுரிந்த காவலர்கள் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலையத்தில் புளியங்குடி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பொது நல சேவை அமைப்பு சார்பில் கடையநல்லூர் காவல் நிலையத்தில் 2024 ஆம் ஆண்டு சிறப்பான முறையில் பணியாற்றிய சிறந்த காவலர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ஆடிவேல் தலைமை தாங்கினார். அப்துல் கலாம் பொது நல அமைப்பின் தலைவர் சின்னராஜ், செயலாளர் பாக்யராஜ், பொருளாளர் காந்தி, ஆலோசகர் […]

ஜனநாயக வழி நடைபயண நிகழ்வு.. அமைதியான முறையில் தீர்வு எட்டபட்டதால் கைவிடப்பட்டது..

கீழக்கரை இராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களால் தொடர்ந்து விபத்துகள் நடந்த வண்ணம் இருந்தது. இந்த சாலையை சீரமைப்பு செய்ய பல்வேறு சமூக, சமுதாய அமைப்புகள் தொடர்பு குரல் கொடுத்து வந்த நிலையில் இந்த பணி தாமதம் செய்யப்பட்ட வந்தது. இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இந்த சாலையை சீரமைப்பு செய்ய சம்பந்தப்பட்ட துறையிரை வலியுறுத்தி நாளை 11/01/25 சனிக்கிழமை காலை 6.45 மணிக்கு கீழக்கரை முக்கு ரோட்டில் இருந்து […]

கீழக்கரையில் தொழில்நுட்ப திறன் மேம்பாடு பயிற்சி முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில், தொழில் துறை தேவைகளுக்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திறன் மேம்பாடு’ என்ற தலைப்பில் தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் (TNSCST) சார்பாக மூன்று நாட்கள் நடைபெற்ற பயிற்சி முகம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் கணேஷ் குமார் ஆகியோர் வரவேற்புரை வழங்கினார். இதில் இராமநாதபுரம். சிவகங்கை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இறுதியாண்டு பயிலும் பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்றார்கள். . விழாவில் […]

கீழக்கரையில் கள்ளத்தனமாக மது விற்பனையை தடுக்க கோரி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கீழக்கரை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளதனமாக மது பாட்டில் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய கோரியும் கள்ள சந்தையில் போதை பொருள் விற்பனை செய்யும் கும்பல்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இதற்கு துணை போகும் அதிகாரிகளை பணியிடை மாற்றம் செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.     ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் பொறுப்பாளர் ரவி தலைமை […]

மதுரையில் தலைமை ஆசிரியர்கள் நடத்திய குழந்தைகளுக்கான தற்காப்பு பாதுகாப்பு நிகழ்ச்சி.!

  மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் HCL foundation மற்றும் OFERR நிறுவனமும் இணைந்து எனது பள்ளி நிகழ்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி கல்வி குழு தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். OFERR நிறுவனத்தின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். மதுரை மாநகராட்சி கல்வி அதிகாரி ஜெய்சங்கர், HCL foundation program officer ராஜலட்சுமி, ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 24 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் […]

70 வயசுல டைவர்ஸ் பொய்யா ஏமாத்தி மோசடி எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை.!

‘ ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் 70 வயசுல என் புருஷன் என்னை டைவர்ஸ் பண்ணிட்டாருன்னு பொய்யா ஏமாத்தி மோசடி செஞ்ச பாவிங்க.. 250 சவரன் நகையவும் பணத்தையும் ஏமாத்திட்டாங்க..- எஸ்.பி. அலுவலகத்தில் புலம்பித் தள்ளிய கமுதி மூதாட்டியின் சோகக் கதை… ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் போஸ் தேவர். இவருக்கு பஞ்சவர்ணம் மற்றும் பாக்கியம் என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். போஸ் கடந்த 2022 டிசம்பர் 1ஆம் […]

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!