ஒன்றிய அரசை கண்டித்து டெல்லியில் நடைபெற உள்ள போராட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாணவர் அணியினர், மாவட்ட பொறுப்பாளர் வே. ஜெயபாலன் வழிகாட்டுதலின் படி பயணம் மேற்கொண்டனர். ஒன்றிய பாஜக அரசின் பல்கலைக் கழக நிதிக்குழு வெளியிட்டுள்ள வரைவு நெறி முறைகள் 2025-ஐ திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி, ஜந்தர் மந்தரில் திமுக மாணவர் அணி சார்பில், வருகிற (06.02.2025) அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் திமுக […]
Category: கீழக்கரை செய்திகள்
ஆதாய கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் அடிதடி வழக்கில் இருவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு..
சிவகிரியில் ஆதாய கொலை வழக்கின் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் செங்கோட்டையில் அடிதடி வழக்கின் இரண்டு குற்றவாளிகளுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு பெண்ணை கொலை செய்து அவரிடம் இருந்து நகைகளை திருடி சென்ற வழக்கில் குமரபுரம் சமுத்திரவேல் என்பவரின் மகன் தங்கமாரி (34) என்பவரை சிவகிரி காவல் துறையினர் […]
ராமநாதபுரத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பெற்றோர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் . ! மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்பி எச்சரிக்கை .!!
இராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பாக ஆய்வு மேற்கொண்டதில் பள்ளிகளுக்கு குழந்தையை விடுவதற்காக இருசக்கர வாகனங்களில் அழைத்து வரும் பெற்றோர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் பள்ளி குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வருகின்றனர் இதனால் குழந்தைகள் எதிர்காலத்தில் 18 வயதை கடந்தவுடன் இது போன்று தலைக்கவசம் அணியாமலும், மோட்டார் வாகன விதிகளை கடைபிடிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது. எனவே இருசக்கர வாகனங்களில் வரும் பெற்றோர்கள் குழந்தைகளின் புத்தகப்பை மற்றும் உணவுப்பைகளை […]
வன உயிரினங்களை வேட்டையாடியவர் கைது.!
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வனச்சரக வனதுறையினருக்கு கமுதி டீ.கல்லுப்பட்டி, புதுகுடியிருப்பு பகுதியில் தொடர்ந்து வன உயிரின வேட்டை நடப்பதாகவும் வன உயிரனங்களின் இறைச்சி விற்பனை செய்வதாகவும் ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து. சாயல்குடி வனச்சரக அலுவலர் தலைமையில் விருதுநகர் வனபாதுகாப்புபடை உடன் தனிப்படை அமைக்கப்பட்டு வன உயிரினங்களை வேட்டையாடி விற்பனை செய்யும் கும்பலை தேடும் பணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து டீ. கல்லுப்பட்டி புதுகுடியிருப்பு பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட ஆட்காட்டி பறவையை சுட்டு […]
திருவாடானை வட்டச்சட்ட பணிகள் குழு சார்பில் புகைப்பட கண்காட்சி .! நீதி அரசர்கள் பங்கேற்பு .!!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா அலுவலக அருகில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வரும் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் சட்டப் பணிகள் பற்றியும் வழக்கறிஞர்கள் செய்த தொண்டுகளை பற்றியும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது புகைப்படக்கண்காட்சியில் நீதிபதி மனிஷ்குமார் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஆண்டனி ரிசாட் சேவ் கலந்து கொண்டு சட்டம் பற்றியும், வட்டச் சட்டப் பணிகள் குழு ஆற்றிய தொண்டுகள் பற்றியும் எடுத்துரைத்தனர். எந்தவித பிரச்சினையாக இருந்தாலும் இலவசமாக வழக்குகள் நடத்தி […]
மேட்டுப்பாளையம்தலைமை அஞ்சல் நிலையத்தில்அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் வளாகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா தலைமை அஞ்சலக அதிகாரி நாகஜோதி தலைமையில் நடைபெற்றது இவ்விழாவில் அஞ்சலகத்தில் வழங்கப்படும் சேவைகள் குறித்து தலைமை அதிகாரி விளங்கிக் கூறினார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா மற்றும் முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆனந்தகுமார் கலந்து கொண்டு அஞ்சல் துறை சேவைகளையும் தாங்கள் அடைந்த பயன்களையும் எடுத்துரைத்தனர் மேலும் பொதுமக்கள் சேமிக்க அஞ்சலகம் மட்டுமே சிறந்தது […]
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் நாடார்வலசை டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக்கோரி பெண்கள் போராட்டம் .!
ராமநாதபுரத்தை அடுத்த அழகன்குளம் நாடார்வலசையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபான கடையால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஊருக்குள் செயல்படும் அந்த டாஸ்மாக் மதுபான கடையால் பலரின் குடும்பம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கும் கோயிலுக்கு செல்வோருக்கும் இடையராக இருந்து வருவதாகவும் இதற்காக ஏற்கனவே பலமுறை போராட்டங்கள் நடத்தியும் மதுபான கடையை அகற்றுவதாக வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இன்று வரை அந்த டாஸ்மாக் மதுபான கடையை அங்கிருந்து அகற்றவில்லை […]
பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல்; கனிமொழி எம்.பி பேச்சு..
“பெரியாரை இழிவுபடுத்தும் கூலிக் காரர்களை எதிர்த்து அரசியல் செய்யும் சூழல் உள்ளது” என தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி தெரிவித்துள்ளார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பில் திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு […]
பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.!
அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் கண்டித்து பெண் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே கருங்கவயல் கிராமத்தில் அரசு புறம்போக்கு இடம் சுமார் மூன்று ஏக்கர் நிலம் உள்ளதாகவும் அந்த இடத்தை யாரும் ஆrக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டு இருந்த நிலையில் கடந்த காலங்களில் இருந்த கிராம நிர்வாக அலுவலர் யாரும் ஆக்கிரமிக்காத அளவில் நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது […]
தாய்க்கு மணிமண்டபம் கட்டிய மகன்கள்.! ராமநாதபுரத்தில் மனம் நெகிழவைத்த சம்பவம்..!!
ராமநாதபுரம் வ.உ.சி நகர் கணிக்கர் தெருவைச் சேர்ந்த முத்து மனைவி ராஜாத்தி (55). இவர் கடந்தாண்டு ஜன.26 அன்று உடல் நலக்குறைவால் இறந்தார். இவரது மகன்கள் ரவி ராவுஜி, ஹரி ராவுஜி, சுதன் ராவுஜி ஆகிய 3 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர். ராஜாத்தி தனது பிள்ளைகளுடன் சிறிய வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். ராஜாத்தியின் மூன்று மகன்களும் ஜோதிடம் பார்க்கும் தொழில் செய்கின்றனர். இவர்கள் தாயின் நினைவாகவும், தாய் இந்த இவ்வுலகில் எவ்வளவு முக்கியமானவர் […]
அரசு பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் பற்றிய விழிப்புணர்வு..
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள முதலியார் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி கற்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை முத்து லட்சுமி நாச்சியார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர் சங்கரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் முத்துராஜா அனைவரையும் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு தலைவி ஃபரீதா அப்துல் காதர், தென் பொதிகை […]
முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் 153 மாணவர்கள் தேர்வு.!
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் ஒசுரில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனமான அசோக் லேலாண்ட் லிமிடெட் மற்றும் கல்லுாரியின் வேலைவாய்ப்பு பிரிவு சார்பாக 2025 ல் டிப்ளேமா முடிக்க இருக்கும் இயந்திரவில் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல்துறை மாணவர்களுக்கு வேலை அளிக்கும் விதத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. துவக்க விழாவில் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் அ.சேக்தாவுது தலைமையுரையாற்றி பேசுகையில் கடந்த 10 வருடமாக 100%வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்ததாகவும் […]
ராமநாதபுர மாவட்டத்தில் குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றி வைத்து சிறப்பாக பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.!
ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76 வது குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தேசிய கொடி ஏற்றினார்.! இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, 96 பயனாளிகளுக்கு ரூ.55.70 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், ராமநாதபுரம், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடைபெற்ற 76-வது குடியரசு […]
ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த எதிர்ப்பு: குடியரசு தின சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்..!
ராமநாதபுரம் மாவட்டத்தில் புனித தளமாக அறியப்படும் ஏர்வாடி தர்கா அமைந்துள்ள ஏர்வாடி ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏர்வாடி ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதைத் தொடர்ந்து பொங்கலுக்கு வழங்கிய பொங்கல் தொகுப்பு பொருட்கள் எதுவும் முழுமையாக கிராமங்களுக்கு வரவில்லை எனவும் கிராம சபை கூட்டத்தில் கண்டம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது ஊராட்சி அந்தஸ்து உள்ள […]
கீழக்கரையில் ரத்த தான முகாம் .!
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அரசு தாலுகா மருத்துவமனையில் 76வது குடியரசு தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்கம் இணைந்து இரத்த தான முகாம் நடத்தினர். ஆம்புலன்ஸ் டுவின்ஸ் நண்பர்கள் சங்க தலைவர் முகமது நசுருதீன் தலைமை தாங்கினார். வழக்கறிஞர் காளீஸ்வரன் கலந்துகொண்டு துவங்கி வைத்தார். முகாமில் கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரியதர்ஷினி , மருத்துவர் அனீஸ் பாத்திமா, அஹமது பசீர்தீன் , கஃபார்கான் ஆகியோர் […]
ராமநாதபுரத்தில் சிறப்பாக பணியாற்றிய சார்பு ஆய்வாளருக்கு பாராட்டுச் சான்றிதழ்.!
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 76 ஆவது குடியரசு தின விழாவையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய கமுதி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சக்திவேல், கேணிக்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெங்கடேஷ், ராமேஸ்வரம் துறைமுகம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பட்டு ராஜா, அபிராமம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார், தொண்டி காவல் நிலைய […]
தென்காசியில் இந்தியாவின் 76வது குடியரசு தினவிழா..
தென்காசி தலைமை மருத்துவ மனையில் இந்திய தேசத்தின் 76-வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. குடியரசு தின விழாவில், மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின், இந்தியாவின் மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசு தின உரையாற்றினார். அவர் பேசும் போது, தென்காசி மருத்துவ மனை அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ மனைகளில் சிறப்பான உயர்ந்த இடத்தில் இருப்பதற்கு காரணமான, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக குடியரசு […]
சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் கல்வி உபகரணங்கள் வழங்கல்..
தென்காசி மாவட்டம் கீழச் சுரண்டை பகுதியில் உள்ள இயேசு அழைக்கிறார் ஜெப மையத்தில் சீஷா தொண்டு நிறுவனம் சார்பில் மாலை நேர வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை ஞான சிகாமணி தலைமை வகித்தார். பகத்சிங் முன்னிலை வகித்தார். மேலாளர் ஜெசி வரவேற்றார். தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கல்வி உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில், இலஞ்சி […]
சூரியன் காணப்படாத தென் மாவட்டங்கள்..
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை மலைப் பகுதியில் சற்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர் வெதர்மேன் ராஜா தெரிவித்துள்ளார். இது பற்றிய வானிலை அறிவிப்பில், நீண்ட நாட்களாக சூரியனை பார்க்காத தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் நீண்ட நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்களில் வெயில் இல்லாத குளிர்ந்த சூழல், வானம் எப்போதும் மேக […]
தாது உப்புகள் அதிகம் நிறைந்த கடற்பாசிகளுக்கு ஏற்றுமதி தேவை அதிகரிப்பால் இத்தகைய பாசிகள் சந்தைகளில் நல்ல வரவேற்பு : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பேச்சு.!
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம், மீனவர் நலத்துறை சார்பில் கடற்பாசி வளர்ப்போர் (ம) உற்பத்தியாளர் நிறுவனங்கள் அமைப்பதற்கான கருத்தரங்கு நடந்தது. மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் கருத்தரங்கை துவக்கி வைத்தார். ஆட்சியர் பேசுகையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 40 ஆயிரம் மீனவ குடும்பங்களுக்கு மீன்பிடி தொழில் மூலம் வருவாய் கிடைக்கிறது. இக்கருத்தரங்கு மூலம் தாங்கள் செய்யும் உற்பத்தியை கடற்பாசியை விற்பனை செய்து தொழில் புரிய முடியும் என அறிந்து கொள்ளலாம். கடற்பாசி சாகுபடியாளர்களுக்கு கடனுதவி […]