திருநெல்வேலியில் நடந்த பொருநை இலக்கிய வட்ட நிகழ்வில் பேசிய கவிஞர் பேரா ஒப்பனையின்றி யதார்த்தங்களையே பேசுகின்றன ஹைக்கூ கவிதைகள் எனக் குறிப்பிட்டார். நெல்லையில் பொருநை இலக்கிய வட்டத்தின் 2049-வது வார நிகழ்வு நடந்தது. இந்நிகழ்வுக்கு புரவலர் அருணாசல காந்தி தலைமை வகித்தார். மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும், தமிழ்நாடு தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் தொடர்ந்து பேசி வரும் நிலையில், இந்நிகழ்வில், கோவில்பட்டியில் […]
Category: கீழக்கரை செய்திகள்
சிவகிரி வட்டத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்; தென்காசி கலெக்டர் தகவல்..
தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் தமிழ்நாடு அரசின் உங்களைத்தேடி, உங்கள் ஊரில் என்ற புதிய திட்ட முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையின் படி “உங்களைத்தேடி உங்கள் ஊரில்” என்ற திட்ட முகாம் தென்காசி மாவட்டம் சிவகிரி வட்டத்தில் 31-01-2024 காலை 9.00 மணி முதல் 01.02.2024 காலை 9.00 மணி வரை ஆகிய இரண்டு தினங்கள் மாவட்ட ஆட்சியர் ஏ.கே. […]
சட்டவிரோத புகையிலை பொருட்கள்; பதுக்கி வைத்திருந்த இருவர் கைது..
சங்கரன்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த இரண்டு நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனை அருகே சார்பு ஆய்வாளர் சுரேஷ் கண்ணன் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த K. ரெட்டியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் மணிகண்டன் (41) மற்றும் கீழக்கலங்கல் பேட்டை […]
புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும்; சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவர் அமைச்சரிடம் வலியுறுத்தல்..
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பகுதியில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் அமைத்து தர வேண்டும் என வலியுறுத்தி சாம்பவர் வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவனிடம் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், தென்காசி மாவட்டம், சாம்பவர் வடகரை பேரூராட்சிக்கு உட்பட்ட மாஞ்சோலைதெரு அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிவாசல் தெரு அங்கன்வாடி மைய கட்டிடங்கள் மிக மோசமான நிலையில் இருந்தது. ஆகையால் அந்த கட்டிடங்கள் குழந்தைகளின் நலன் […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.45 அடி, கொள்ளளவு: 5097.00 மி.க.அடி, நீர் வரத்து : 225.93 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 144.98 அடி, கொள்ளளவு: 1015.31 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 116.99 அடி, கொள்ளளவு: 5410.02 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; மாற்றுத் திறனாளிகளுக்கு தங்க நாணயம் வழங்கல்..
தென்காசி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29.01.2024 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன், தலைமையில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக் கொண்டார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 21 மாற்றுத்திறனாளிகளுக்கு 8 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். மேலும், இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள் […]
தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கமல் கிஷோர் பொறுப்பேற்பு..
தமிழ்நாடு அரசு மாற்றுதிறனாளிகள் நல இயக்குனராக பணியாற்றிய ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக ஏ. கே.கமல் கிஷோர் தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா ஜன.27 அன்று பிறப்பித்திருந்தார். இந்நிலையில் […]
கீழக்கரையில் எஸ் டி பி ஐ கட்சியின் பொதுக்குழு கூட்டம் !
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் பொதுக்குழு கூட்டம் நகர் தலைவர் செய்யது அபுதஹிர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் அப்துல் ஜெமில், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் அக்பர் ,விம் மாவட்ட துணை தலைவி முபீனா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மாநில செயற்குழு உறுப்பினர் ஜஹாங்கிர் அருஸி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி நடக்கும் மீனவர் களுக்கான ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் […]
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மாவட்ட கலெக்டர்..
தென்காசி மாவட்டத்தில் செய்தியாளர்களுடன் பயணம் செய்து தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கத்தின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஒரே தொழில் செய்யக்கூடிய மகளிர் குழு உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குறுந்தொழில் தொகுப்புகளாக உருவாக்கி மேம்படுத்தப்படும் என்று இளைஞர் நலன் மற்றும் […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 136.95 அடி, கொள்ளளவு: 5127.00 மி.க.அடி, நீர் வரத்து : 248.831 கன அடி வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.34 அடி, கொள்ளளவு: 1053.70 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.19 அடி, கொள்ளளவு: 5430.00 மி.க.அடி, நீர் […]
தென்காசி மாவட்டத்தில் நடந்த கோர விபத்து; உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதிஉதவி..
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஆறுதல் மற்றும் நிதிஉதவி அறிவித்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில், தென்காசி மாவட்டம், கடையநல்லூர் வட்டம், சொக்கம்பட்டி கிராமம், மஜரா புன்னையாபுரத்தில் உள்ள பெரியபாலம் அருகில் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் 28-01-2024 அதிகாலை சிமெண்ட் ஏற்றி வந்த லாரியும், கார் ஒன்றும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த தென்காசி […]
சமூக நல்லிணக்கத்தை குலைக்க நினைப்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்… கீழக்கரையை குறி வைப்பவர்களுக்கு அரசாங்கம் பாடம் கற்பிக்க வேண்டும்…
இந்தியாவில்… அதுவும் அமைதி பூங்காவாக இன்றும் விளங்கி வரும் தமிழகத்தில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல் வேறு விஷமிகள் தோன்றி சமூகநல்லிணக்கத்தை குலைக்க முயல்வதும் ஆனால் சமூகத்தால் நிராகரிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதேபோல் தேர்தல் நெருங்கி விட்டால் அமைதியை விரும்பும் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயரால் மக்களை பிரித்தாழ்வதும், ஓட்டு வங்கிக்காக தரம் தாழ்வதும் தொடர் கதையாகி வருகிறது. அதற்கு உதாரணமாக சில தினங்களுக்கு முன்பு கீழக்கரையில் அமைந்திருக்கும் ஜும்ஆ பள்ளி ஒன்றை முந்தைய காலத்தில் பிறமத […]
கலைஞரின் புகழுக்கு காரணம் பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? : சிறப்பு பட்டிமன்றம்..
முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடத்தப்படும் இலக்கிய கூட்டங்கள் வரிசையில் கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. நெல்லை அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி நிகழ்விற்கு தலைமை தாங்கினார். கலை பதிப்பகத்தின் ஆசிரியர் கவிஞர் பாப்பாக்குடி இரா. செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கலைஞரின் பெரும் புகழுக்கு காரணம் அவரது பேச்சாற்றலா? எழுத்தாற்றலா? எனும் தலைப்பில் […]
தென்காசி தொகுதி ராஜகோபாலப்பேரி ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி; பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார்..
தென்காசி மாவட்டம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை பழனிநாடார் எம்எல்ஏ துவக்கி வைத்தார். தென்காசி தொகுதிக்குட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ராஜகோபாலப்பேரி ஊராட்சியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை தென்காசி எம்எல்ஏ பழனிநாடார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில், திமுக தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன், கீழப்பாவூர் ஒன்றிய குழு தலைவர் காவேரி சீனித்துரை, மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணியன், ஒன்றிய […]
புளியங்குடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் ஆறுதல்..
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நடந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களை நேரில் சந்தித்து மதிமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். புளியங்குடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக், வேல் மனோஜ், போத்திராஜ், சுப்பிரமணியன் உள்ளிட்ட 6 பேர் இன்று அதிகாலை குற்றாலத்தில் குளித்துவிட்டு காரில் திரும்பும் வழியில் புன்னையாபுரம் அருகே லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் சிக்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். அதிகாலை 3:30 மணி அளவில் நடந்த இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பெரும் பரபரப்பை […]
மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம்; தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார்..
சென்னை மாநகர காவல் துறையில் மூத்த குடிமக்களுக்கு உதவும் வகையில் ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களை தடுக்க 3 புதிய செயலிகளை தமிழக டிஜிபி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் சங்கர் ஜிவால், ஜன.24 ஆம் தேதி வேப்பேரி கலந்தாய்வு கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மூத்த குடிமக்களுக்கு உதவ ‘பந்தம்’ திட்டம் அறிமுகம் செய்தார். சென்னை பெருநகர காவலில் குற்றங்களை குறைப்பதற்கும், குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கவும் உருவாக்கப்பட்டுள்ள “பருந்து”, ஒருங்கிணைந்த […]
நெல்லை – தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்
நெல்லை மாவட்டம் பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143.00 அடி, நீர் இருப்பு : 137.40 அடி, கொள்ளளவு: 5154.00 மி.க.அடி, நீர் வரத்து : 329.398 கன அடி, வெளியேற்றம் : 804.75 கன அடி. சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156.00 அடி, நீர் இருப்பு : 145.70 அடி, கொள்ளளவு: 1026.09 மி.க.அடி. மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118.00 அடி, நீர் இருப்பு : 117.36 அடி, கொள்ளளவு: 5447.00 மி.க.அடி, நீர் […]
புளியங்குடி அருகே லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஆறு பேர் பலி; மாவட்ட எஸ்.பி. நேரில் ஆய்வு..
புளியங்குடி அருகே சிமெண்ட் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து ஏற்பட்டு ஆறு பேர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் புளியங்குடி பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சார்ந்தவர்கள் கார்த்திக், வேல், மனோஜ், சுப்பிரமணி, மனோகரன், போத்திராஜ் உள்ளிட்ட ஆறு பேர் நேற்று இரவு ஷிப்ட் டிசைர் காரில் குற்றாலத்திற்கு குளிக்க புறப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளித்துவிட்டு அதிகாலை 3.30 மணி அளவில் புளியங்குடி நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது புளியங்குடி […]
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சட்டம் வேண்டும்; தென்காசி மாவட்ட சங்கத்தினர் வலியுறுத்தல்..
தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு கருதி பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தென்காசி மாவட்ட கிளை சார்பில் பத்திரிகையாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட பத்திரிகையாளர் சங்கத் தலைவர் சு. இராசேந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட செயலாளர் எம். முத்துசாமி, முன்னிலை வகித்தார். தென்காசி […]
தென்காசி மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்; பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு..
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் இராஜகோபாலப்பேரி ஊராட்சியில் குடியரசு தினத்தன்று கிராம சபைக்கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சியின் முதல் 3 காலாண்டிற்கு வரவு செலவு மற்றும் கிராம ஊராட்சியின் கடந்த ஆண்டு தணிக்கை அறிக்கை மற்றும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள் ஜல்ஜீவன் மிசன் திட்டப்பணிகள், தூய்மை பாரத இயக்கம், பிரதமமந்திரி ஊரக குடியிருப்புத்திட்டம், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டம், அமைப்பு […]